என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Governor Tea Party"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுதந்திர தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைத்திருக்கிறார். அவரது அழைப்பிற்கு நன்றி.
    • ஆளுநர் பதவிக்காலம் முடிந்தும் அந்தப் பதவியில் தொடர்வது அரசமைப்புக்கு எதிரானது.

    சென்னை:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,

    சுதந்திர தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைத்திருக்கிறார். அவரது அழைப்பிற்கு நன்றி.

    ஆனால், கடந்த எழுபதாண்டுகளில் இல்லாத அளவிற்கு நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில் ஆளுநர்களின் செயல்பாடுகள் கட்சி அரசியல் சார்ந்ததாக அமைவதில் மக்களாட்சியின் மாண்புகள் சீர்குலைக்கப்படுகிறது.

    அவ்வகையில் தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்ற நாளிலிருந்து தமிழ்நாட்டின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராகவே தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.

    மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிப்பதில் முட்டுக்கட்டை போடுவதால், பட்டப்படிப்பு முடிந்தும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு நிகழ்வு நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும், ஆளுநர் பதவிக்காலம் முடிந்தும் அந்தப் பதவியில் தொடர்வது அரசமைப்புக்கு எதிரானது.

    அதனால், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக புறக்கணிக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அறிவித்துள்ளது.

    திமுக கூட்டணி கட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து மதிமுகவும் கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது.

    • ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நீடிக்கிற தகுதியை இழந்துவிட்டார்.
    • குடியரசு தின தேநீர் விருந்தை இந்திய கப்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புறக்கணிக்கிறது.

    குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை விசிக, சிபிஎம் ஆகிய கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக சிபிஎம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தின தேநீர் விருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புறக்கணிக்கிறது. அரசியலமைப்பு சாசனத்தையும், குடியரசின் விழுமியங்களையும், கூட்டாட்சி கோட்பாடுகளையும், சட்டமன்ற மாண்புகளையும் மதிக்காமல் தொடர்ந்து சிதைத்து வருகிற ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நீடிக்கிற தகுதியை இழந்துவிட்டார்.

    ஆகவே ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக் கூடிய குடியரசு தின தேநீர் விருந்தை இந்திய கப்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புறக்கணிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா? அல்லது புறக்கணிப்பாரா?
    • இன்று தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    வருகிற 26-ந்தேதி குடியரசு தினத்தன்று கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக அறிக்கை வெளியிட்டு உள்ளன.

    செல்வப் பெருந்தகை (காங்கிரஸ்)

    தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றதில் இருந்து தமிழர்களின் நலனுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுக்கும் எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதனை கண்டிக்கும் வகையில் கவர்னரின் குடியரசு தின வரவேற்பு தேநீர் விருந்தை தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பார்கள்.

    பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)

    அரசியலமைப்பு சாசனத்தையும், குடியரசின் விழுமியங்களையும், கூட்டாட்சி கோட்பாடு களையும், சட்டமன்ற மாண்புகளையும் மதிக் காமல் தொடர்ந்து சிதைத்து வருகிற கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் கவர்னராக நீடிக்கிற தகுதியை இழந்து விட்டார். ஆகவே கவர்னர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக் கூடிய குடியரசு தின தேநீர் விருந்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புறக்கணிக்கிறது.

    இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்டு)

    சட்டசபையில் நிறை வேற்றி அனுப்பும் மசோ தாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போடுவது, பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமனம் செய்வதில் மாநில உரிமையை மறுத்து, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிரான சிந்தனைகளை கவர்னர் திணித்து வருகிறார். எனவே கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி புறக்கணிக்கிறது.

    கு.கா.பாவலன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர்)

    தமிழ்நாட்டிற்கு கவர்னராக வருகின்றவர்கள் மாநில சுயாட்சி நிலைப் பாட்டிற்கும், இருமொழி கொள்கைக்கும் எதிராகவே செயல்பட்டு வருகின்றனர்.

    ஆகவே மக்களின் நலன் கருதி கொள்கை அளவில் கவர்னரோடு முரண் நடவடிக்கைகளில் தலைவர் திருமாவளவன் தலை மையில் வி.சி.க. ஈடுபட்டு வருவதால் கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்.

    (மனித நேய மக்கள் கட்சி)

    கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை மனிதநேய மக்கள் கட்சி புறக்கணிக்கிறது. சட்ட மன்றத்தில் தமிழ்நாடு அரசு இயற்றும் சட்டத்திற்கு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்துவது, சட்டமன்றத்தின் மரபைப் பேணாமல் வெளி நடப்பு செய்வது பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தில் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வது என்று தொடர்ந்து தமிழ்நாடு மக்களின் நலனுக்கு விரோத மாக நடந்து கொண்டிருக்கும் கவர்னரின் செயல்பாடு களுக்கு எங்களின் எதிர்ப்பை பதிவு செய்கிறோம்.

    கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா? அல்லது புறக்கணிப்பாரா? என்பது இன்று தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • முக்கிய நிகழ்வுகளின்போது முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு ராஜ்பவனில் கவர்னர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கமாக உள்ளது.
    • தேநீர் விருந்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

    சென்னை:

    இந்திய குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு ராஜ்பவனில் கவர்னர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கமாக உள்ளது.

    குடியரசு தினத்தை முன்னிட்டு ராஜ்பவனில் இன்று அளிக்கப்பட உள்ள தேநீர் விருந்தில் பங்கேற்க வேண்டும் என்று முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு கவர்னர் அழைப்பு விடுத்திருந்தார்.

    ஆனால் கவர்னரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் அவர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

    இந்நிலையில் கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஏற்கெனவே புறக்கணித்துள்ளனர்.

    ×