என் மலர்
நீங்கள் தேடியது "gunned down"
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகளை சிஆர்பிஎப் வீரர்கள் சுட்டுக்கொன்றனர். #ChhattisgarhNaxals #ChhattisgarhEncounter
ராய்ப்பூர்:

இந்நிலையில், சுக்மா மாவட்டம் பீமாபுரம் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சிஆர்பிஎப் வீரர்கள் அப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். சிஆர்பிஎப் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. #ChhattisgarhNaxals #ChhattisgarhEncounter
சத்தீஸ்கர் மாநிலத்தில் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வரும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏராளமான மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இன்னமும் உள்ளது.

இந்நிலையில், சுக்மா மாவட்டம் பீமாபுரம் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சிஆர்பிஎப் வீரர்கள் அப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். சிஆர்பிஎப் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. #ChhattisgarhNaxals #ChhattisgarhEncounter
ஆந்திர மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா ஆகியோர் உயிரிழந்தனர். #Andhra #MaoistKillsMLA
ஐதராபாத்:
ஒடிசா, சதீஸ்கர் மற்றும் ஆந்திர மாநில எல்லையோர பகுதிகளில் உள்ள மாவோயிஸ்டுகள் போலீசார் மீதும், அவர்களுக்கு எதிராக இருக்கும் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்துவது தற்போது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அவர்களை அழிப்பதற்காகவும், கைது செய்வதற்காகவும் அவர்களின் இருப்பிடமாக கருதப்படும் வனப்பகுதிகளில் போலீசாரும் அதிரடி தேடுதல் வேட்டையும் நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட எம்.எல்.ஏ. சர்வேஸ்வர ராவ் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சிக்கு சமீபத்தில் மாறியிருந்தார். இவரை கொல்ல மாவோயிஸ்டுகள் நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
அதேநிலையில், மாவோயிஸ்டுகளால் குறிவைக்கப்பட்ட எம்.எல்.ஏ.வுக்கு முறையான பாதுகாப்புகள் வழங்கப்பட்டதா? என்பது குறித்த கேள்வியும் தற்போது எழுப்பப்பட்டு வருகிறது. #Andhra #MaoistKillsMLA
ஒடிசா, சதீஸ்கர் மற்றும் ஆந்திர மாநில எல்லையோர பகுதிகளில் உள்ள மாவோயிஸ்டுகள் போலீசார் மீதும், அவர்களுக்கு எதிராக இருக்கும் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்துவது தற்போது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அவர்களை அழிப்பதற்காகவும், கைது செய்வதற்காகவும் அவர்களின் இருப்பிடமாக கருதப்படும் வனப்பகுதிகளில் போலீசாரும் அதிரடி தேடுதல் வேட்டையும் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள அரக்கு பகுதிக்கு இன்று தனது ஆதரவாளர்களுடன் எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா ஆகியோர் அப்பகுதி மக்களை சந்திக்கச் சென்றனர். அப்போது அவர்களை சுற்றி வளைத்த 50-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ், முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா ஆகியோர் கொல்லப்பட்டனர். இவர்களுடன் சென்ற உதவியாள் ஒருவரும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா
அதேநிலையில், மாவோயிஸ்டுகளால் குறிவைக்கப்பட்ட எம்.எல்.ஏ.வுக்கு முறையான பாதுகாப்புகள் வழங்கப்பட்டதா? என்பது குறித்த கேள்வியும் தற்போது எழுப்பப்பட்டு வருகிறது. #Andhra #MaoistKillsMLA
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். #JammuKashmir
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். அதேபோல், பாதுகாப்பு படையினரின் அதிரடி தாக்குதல்களில் பல பயங்கரவாதிகளும் பலியாகின்றனர்.
இந்நிலையில், ஜஜார் கோட்லி என்ற பகுதியில் நேற்று காரில் வந்த பயங்கரவாதிகள் வனத்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதையடுத்து அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால், அப்பகுதியை சுற்றிலும் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
2 நாட்களாக நடைபெற்ற இந்த தேடுதல் வேட்டையில் இன்று மதியம் பயங்கரவாதிகள் கண்டறியப்பட்டு, கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. #JammuKashmir
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். அதேபோல், பாதுகாப்பு படையினரின் அதிரடி தாக்குதல்களில் பல பயங்கரவாதிகளும் பலியாகின்றனர்.
இந்நிலையில், ஜஜார் கோட்லி என்ற பகுதியில் நேற்று காரில் வந்த பயங்கரவாதிகள் வனத்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதையடுத்து அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால், அப்பகுதியை சுற்றிலும் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
2 நாட்களாக நடைபெற்ற இந்த தேடுதல் வேட்டையில் இன்று மதியம் பயங்கரவாதிகள் கண்டறியப்பட்டு, கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. #JammuKashmir
அரியானா மாநிலத்தில் பேருந்தில் இருக்கைக்காக நடைபெற்ற சண்டையில் 24 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகர்:
அரியானா மாநிலம் மோகர் காஸ் கிராமத்தில் துணை ஆய்வாளராக பணிபுரிபவர் ஆனந்த் குமார். இவரது மகன் மிலன் குமார். இவர் காவல்துறை தேர்வுக்காக பயின்று வருகிறார். கடந்த புதன்கிழமை அன்று ரோக்தாக் கிராமத்தில் இருந்து பேருந்து மூலம் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது, பேருந்தில் இருக்கை பிடிப்பதில் மிலன் குமாருக்கும், மோகித் என்பவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வியாழன் கிழமை அன்று மிலனை சந்தித்த மோகித்தும் அவனது நண்பர்களும் மிலனை கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து, மிலன் அப்பகுதியில் இருந்த காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருப்பினும் காவல்துறை அதிகாரிகள் புகாரை வாங்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், வியாழன் அன்று இரவு மோகித்தின் நண்பர்கள் இருவர் மிலனின் வீட்டிற்கு வந்து மிலனை சந்திக்க வேண்டும் என அவரது தாயார் சரளாவிடம் கேட்டுள்ளனர். மேலும், மிலனுக்கும் மோகித்துக்குமான சண்டையை சரிசெய்யவே சந்திக்க வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மிலன் குமார் வெளியே வந்ததும், அவரது தாயாரிடம் அந்த நபர்கள் குடிக்க நீர் கேட்க, அவர் வீட்டிற்குள் சென்றுள்ளார். அடுத்த கணமே துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு வேகமாக வெளியே வந்து பார்த்துள்ளார். மிலன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி இருப்பதை கண்ட அவரது தாயார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
ஆனால், மருத்துவர்கள் மிலன் குமார் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து, மோகித் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், இதுவரை யாரையும் கைது செய்யவில்லை எனவும், கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அரியானா மாநிலம் மோகர் காஸ் கிராமத்தில் துணை ஆய்வாளராக பணிபுரிபவர் ஆனந்த் குமார். இவரது மகன் மிலன் குமார். இவர் காவல்துறை தேர்வுக்காக பயின்று வருகிறார். கடந்த புதன்கிழமை அன்று ரோக்தாக் கிராமத்தில் இருந்து பேருந்து மூலம் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது, பேருந்தில் இருக்கை பிடிப்பதில் மிலன் குமாருக்கும், மோகித் என்பவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வியாழன் கிழமை அன்று மிலனை சந்தித்த மோகித்தும் அவனது நண்பர்களும் மிலனை கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து, மிலன் அப்பகுதியில் இருந்த காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருப்பினும் காவல்துறை அதிகாரிகள் புகாரை வாங்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், வியாழன் அன்று இரவு மோகித்தின் நண்பர்கள் இருவர் மிலனின் வீட்டிற்கு வந்து மிலனை சந்திக்க வேண்டும் என அவரது தாயார் சரளாவிடம் கேட்டுள்ளனர். மேலும், மிலனுக்கும் மோகித்துக்குமான சண்டையை சரிசெய்யவே சந்திக்க வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மிலன் குமார் வெளியே வந்ததும், அவரது தாயாரிடம் அந்த நபர்கள் குடிக்க நீர் கேட்க, அவர் வீட்டிற்குள் சென்றுள்ளார். அடுத்த கணமே துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு வேகமாக வெளியே வந்து பார்த்துள்ளார். மிலன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி இருப்பதை கண்ட அவரது தாயார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
ஆனால், மருத்துவர்கள் மிலன் குமார் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து, மோகித் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், இதுவரை யாரையும் கைது செய்யவில்லை எனவும், கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.