என் மலர்
நீங்கள் தேடியது "Gutka scam"
- குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதற்கான சில ஆவணங்கள் சிக்கின.
- 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு ஜூலை 19-ந்தேதி அனுமதி வழங்கியது.
சென்னை:
சென்னை செங்குன்றம் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதற்கான சில ஆவணங்கள் சிக்கின. அதில், அப்போதைய அமைச்சர்கள், சென்னை போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பெயர்கள் இருந்தன.
இதுகுறித்து, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து, குட்கா வியாபாரிகள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் என்று 6 பேரை முதலில் கைது செய்தது.
இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை முதலில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், குட்கா விற்பனைக்கு லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்பட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு ஜூலை 19-ந்தேதி அனுமதி வழங்கியது.
இதன்படி தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் குறைபாடுகள் இருப்பதாக கூறி திருப்பிக்கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி மலர் வாலன்டினா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ. அதிகாரி ஆஜராகி, "அமைச்சர்கள், ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசு இன்னும் அனுமதி தரவில்லை. அதனால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்" என்றார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை ஆகஸ்டு 11-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந்தேதி முதல் நேற்று வரை 11 முறை வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- 6 பேருக்கு எதிராக சென்னை சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- அனைவரும் செப்டம்பர் மாதம் 9-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை:
தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேருக்கு எதிராக சென்னை சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கின் கூடுதல் குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ. அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.
அதில், மத்திய, மாநில அதிகாரிகள் ஆர்.சேஷாத்ரி, குல்சார் பேகம், அனீஷ் உபாத்யாய், வி.இராமநாதன், ஜோஸ் தாமஸ், பி.செந்தில்வேலவன் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா என்ற பி.வெங்கடரமணா, வி.எஸ்.கிருஞ்சிச்செல்வன், எஸ்.கணேசன், முன்னாள் அமைச்சர் டாக்டர். சி, விஜயபாஸ்கர், அ.சரவணன், டாக்டர். லக்ஷ்மி நாராயணன், பி.முருகன் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், வி.கார்த்திகேயன், ஆர்.மன்னர்மன்னன், வி.சம்பத், ஏ.மனோகர், அ.பழனி கே.ஆர்.ராஜேந்திரன் ஆகிய 21 பேர் மீது கூடுதல் குற்றபத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் முன்னாள் மற்றும் இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதால் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றி சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த வழக்கு சி.சஞ்சய் பாபா முன்பு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 5 பேர் ஆஜராகி இருந்தனர்.
இதனையடுத்து நீதிபதி வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகை தற்பொழுது தாக்கல் செய்யப்பட்டு புதிதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதால் அனைவருக்கும் சம்மன் அனுப்புவதாகவும் அவர்கள் அனைவரும் செப்டம்பர் மாதம் 9-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
வெளி ஊர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ளவர்களுக்கு சம்மன்களை சி.பி.ஐ. காவல்துறை வழங்கவும் உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 9-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்குன்றம் அருகே செயல்பட்டு வந்த குட்கா குடோன் அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீஸ் அதிகாரிகளின் பக்கம் சி.பி.ஐ.யின் கவனம் திரும்பியது.
இதனைத் தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக குட்கா ஊழலில் தொடர்பு இருப்பதாக கருதப்படும் போலீஸ் அதிகாரிகள் பட்டியலை சேகரித்த சி.பி.ஐ. அதிகாரிகள் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
புழல் உதவி கமிஷனராக பணியாற்றிய மன்னர் மன்னன், செங்குன்றத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சம்பத் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
குட்கா ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் காலகட்டத்தில் சென்னையில் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் அனைவரும் சி.பி.ஐ. பிடியில் சிக்கினர்.
இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் பணியாற்றி வரும் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் வெளி மாவட்டத்தில் உள்ள டி.ஐ.ஜி. ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணை ஒரே நாளில் நடத்தப்படவில்லை. 3 பேரையும் தனித்தனி நாட்களில் வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது 3 அதிகாரிகளும் அளித்த தகவல்கள் வாக்கு மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்ட 2 உயர் போலீஸ் அதிகாரிகளிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை நடத்தியுள்ளது. சென்னை திருமங்கலத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து இந்த விசாரணை நடைபெற்றுள்ளது.
இப்போது பணியில் இருக்கும் டி.ஜி.பி. ஒருவரும், டி.ஜி.பி. அந்தஸ்தில் இருந்து பணி ஓய்வு பெற்ற முன்னாள் போலீஸ் கமிஷனர் ஒருவரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இவர்கள் இருவருக்கும் கீழே பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையிலேயே விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே குட்கா முறைகேடு நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில் சென்னையில் பணியாற்றிய மேலும் 3 அதிகாரிகளிடமும் விரைவில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற உள்ளது.
ஐ.ஜி. அந்தஸ்தில் இருக்கும் அதிகாரியும், டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரியும் விரைவில் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சென்னையில் பணியாற்றி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
குட்கா விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தாலும் யாரும் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #GutkaScam #CBI
குட்கா ஊழல் வழக்கை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ. போலீசார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 35 பேரின் வீடுகளில் சோதனை நடத்தினார்கள்.
அதைத் தொடர்ந்து குட்கா வியாபாரியும், தொழில் அதிபருமான மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னையில் முகாமிட்டு தற்போது அடுத்த கட்ட விசாரணையை நடத்தி வருகிறார்கள். அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உதவியாளர் சரவணன், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
நேற்று முன்தினம் முதல் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை தொடங்கி விட்டது. குட்கா வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 7 போலீஸ் அதிகாரிகள் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு ஆஜரானார்கள்.
2016-ம் ஆண்டு சென்னை செங்குன்றத்தில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனில், அப்போதைய சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தலையீட்டின்பேரில், அந்த சோதனை முழுமையாக நடைபெறாமல் பாதியில் முடிக்கப்பட்டதாக தெரிகிறது.
அப்போது சோதனை முழுமையாக நடைபெற்று இருந்தால், குட்கா ஊழல் இவ்வளவு பெரிய விசுவரூபம் எடுத்திருக்காது. அதன் பிறகுதான் வருமானவரித்துறையினர் குறிப்பிட்ட குட்கா குடோனில் சோதனை நடத்தி, ரூ.40 கோடி லஞ்ச ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர்.
ஜெயக்குமார் தற்போது விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றுகிறார். சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது முதல் கட்ட விசாரணையிலேயே ஜெயக்குமாரிடம் விசாரித்து முடித்துவிட்டனர்.
குட்கா குடோனில் ஜெயக்குமார் சோதனை நடத்தியபோது, அவருடன் சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு, 2 போலீஸ்காரர்கள் உள்ளிட்ட 7 பேர் நேற்று சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
குட்கா குடோனில் நடந்த சோதனையை பாதியில் நிறுத்தச் சொல்லி உத்தரவிட்ட உயர் போலீஸ் அதிகாரி பற்றி நேற்றைய விசாரணையில் துருவி, துருவி சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. விரைவில் அந்த உயர் போலீஸ் அதிகாரியை சி.பி.ஐ. போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவார்கள் என்று தெரிகிறது. #Gutkascam #CBI
ரூ.40 கோடி குட்கா ஊழல் வழக்கை டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். முதலில் இந்த வழக்கை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர்.
பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், இந்த வழக்கை சி.பி.ஐ. போலீசார் கையில் எடுத்தனர். கையில் எடுத்தவுடன் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை போலீசின் முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், போலீஸ் ‘டி.ஜி.பி.’ டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 35 பேரின் வீடுகளில் சோதனை நடத்தினார்கள்.
அதைத் தொடர்ந்து குட்கா வியாபாரியும் தொழில் அதிபருமான மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். உடனடியாக அவர்கள் 6 பேர் மீதும் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்து விட்டனர்.
மேலும் 2-வது கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதை மையமாக வைத்து சி.பி.ஐ. அடுத்த கட்ட விசாரணையை நடத்தி வருகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உதவியாளர் சரவணன், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அடுத்து ஜனவரி மாதம் முதல் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்போவதாக தகவல் வெளியானது.

விசாரணைக்கு வந்த 7 போலீஸ் அதிகாரிகளின் பெயர் விவரங்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் வெளியிடவில்லை.
குட்கா வழக்கில் தனக்கு தொடர்பு இல்லை என்றும், குட்கா ஊழல் நடந்த போது சென்னை போலீசில் பணியாற்றிய 30 பேரிடம் இதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சென்னை நகரின் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் இடம் பெற்றிருந்த 30 பேரின் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை களத்தில் தற்போது இறங்கி உள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரிடம் ஏற்கனவே சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #Gutkascam
தமிழகத்தில் குட்கா ஊழல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என பலருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் இந்த வழக்கு மிகவும் தீவிரமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாதவராவ் கிடங்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்பட்டது.
இந்நிலையில், மத்திய வருவாய்த்துறை அதிகாரியான செந்தில் வளவன் மற்றும் கலால்துறை அதிகாரி ஸ்ரீதர் வீட்டில் இன்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையை டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் நடத்தியதாக கூறப்படுகிறது. #GutkhaScam #CBI
சென்னை:
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்ய ரூ.40 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.
செங்குன்றம் அருகே குட்கா குடோன் வைத்துள்ள மாதவராவ் வீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது சிக்கிய டைரி மூலம் லஞ்சம் பெற்றவர்கள் முழு விபரமும் தெரிய வந்தது.
லஞ்சம் பெற்றவர்களில் அமைச்சர் ஒருவரது பெயரும் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனரின் பெயர்களும் முக்கிய இடம் பிடித்திருந்தன. இவர்கள் தவிர போலீஸ் உயர் அதிகாரிகள், சுகாதார துறை அதிகாரிகள், உணவு துறை அதிகாரிகளும் அதிக அளவில் லஞ்சம் வாங்கி இருப்பது அந்த டைரி மூலம் உறுதியானது.
வருமான வரித்துறை இதுபற்றி தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தது. ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ள வில்லை.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் குட்கா ஊழல் விவகாரம் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன் பேரில் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை வந்து குட்கா அதிபர் மாதவராவ் உள்பட பலரை அழைத்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது குட்கா விற்பதற்கு பல கோடி ரூபாய் லஞ்சமாக கைமாறி இருப்பது தெரிந்தது. லஞ்சம் வாங்கிக் கொடுத்த இடைத்தரகர்களிடமும் அதிரடி விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சமீபத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் 35 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
டி.ஜி.பி. அலுவலகம், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வீடு ஆகியவற்றில் நடந்த சோதனை மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களும் கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து குட்கா தயாரிப்பாளர்கள் மாதவ ராவ், சீனிவாசராவ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த 6 பேரில் 3 பேர் அரசு அதிகாரிகள் ஆவார்கள்.
இதற்கிடையே லஞ்சம் கொடுத்த தரகர்கள் 2 பேர் சி.பி.ஐ.யிடம் அப்ரூவர்களாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் கொடுத்த தகவல்களின் பேரில் சி.பி.ஐ. யின் அடுத்த பார்வை போலீஸ் உயர் அதிகாரிகள் மீது திரும்பி இருப்பது தெரிய வந்தது. எனவே குட்கா ஊழல் வழக்கில் சில போலீஸ் அதிகாரிகள் சிக்குவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் குட்கா ஊழலில் மேலும் 2 முக்கிய ஐ.பி.எஸ். அந்தஸ்துள்ள உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது. அந்த இரு போலீஸ் அதிகாரிகளையும் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். விரைவில் அவர்கள் இருவரும் சி.பி.ஐ.யின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகள் சிலரும் சி.பி.ஐ. கண்காணிப்பில் உள்ளனர். விரைவில் அவர்களில் சிலர் கைதாக வாய்ப்புள்ளது. எனவே சி.பி.ஐ.யின் அடுத்த அதிரடி எந்த நேரத்திலும் இருக்கும் என்று சொல்கிறார்கள்.
தற்போது 4 போலீஸ் அதிகாரிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் நெருங்கி உள்ளனர். அந்த போலீஸ் அதிகாரிகள் எப்போது கைது செய்யப்படுவார்கள் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அந்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டால்தான் தப்பு செய்த உயர் போலீஸ் அதிகாரிகளையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர முடியும் என்று கூறப்படுகிறது.
எனவே குட்கா ஊழலில் போலீஸ் அதிகாரிகள் கைது எப்போது இருக்கும் என்பதுதான் பிரதானமான கேள்வியாக உள்ளது. அந்த போலீஸ் அதிகாரிகள் கைதாகும் போது அரசு ஊழியர்கள் சிலரும் கைதாக வாய்ப்புள்ளது.
உணவு பாதுகாப்புத் துறை, சுகாதாரத்துறை அதிகாரிகளில் பெரும்பாலானவர்கள் லஞ்சம் வாங்கியதை ஒப்புக் கொண்டுள்ளனர். ஆகையால் அவர்கள் மீது நடவடிக்கை பாய்வது உறுதியாகி விட்டது. அவர்களும் அப்ரூவர்களாக மாறினால் போலீஸ் உயர் அதிகாரிகள் மீதான பிடி இறுகும்.
ஏற்கனவே குட்கா தயாரிப்பாளர்கள் 2 பேரும் சி.பி.ஐ.யிடம் லஞ்சம் வாங்கிய போலீஸ் உயர் அதிகாரிகள் பற்றிய முழு தகவல்களையும் தெரிவித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Gutkha #GutkhaScam #CBIinquiry
தமிழகத்தில் குட்கா ஊழல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என பலருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் இந்த வழக்கு மிகவும் தீவிரமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த வழக்கில் மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் கடந்த 7-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அதில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் கலால் வரி கண்காணிப்புத்துறை அதிகாரிகளான செந்தில் முருகன், நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகிய இருவரும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்து இருந்தனர்.
இன்று, அவர்களின் மனுவை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுத்து, அவர்களது மனுவை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் மேலும் ஒரு உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி சிவக்குமார் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. #GutkhaScam #CBI
தமிழகத்தில் குட்கா ஊழல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என பலருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் இந்த வழக்கு மிகவும் தீவிரமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த வழக்கில் மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் கடந்த 7-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
பல நூறு கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக சொல்லப்படும் இந்த வழக்கில், தற்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சிவக்குமாரை அக்டோபர் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #GutkhaScam #CBI
அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏற்க முடியாதது. பெட்ரோல், டீசல் மீது மாநில அரசு விதிக்கும் வரியை குறைத்தால் மக்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்படும். எனவே அவற்றின் மீது தாங்கள் விதிக்கும் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும்.
ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. தற்போது சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்து இருக்கிறது.
குட்கா விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. சி.பி.ஐ. தனி அமைப்பு. இந்த வழக்கில் முகாந்திரம் இருக்கிறதா? இல்லையா? என்று சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தெரியும். இதில் என்ன சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை சி.பி.ஐ. எடுக்கும். சி.பி.ஐ.க்கு அரசியல் கட்சிகள் பாடம் நடத்தக்கூடாது.
தவறு செய்ததற்கான முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள். யாராக இருந்தாலும் தவறு செய்தால் தவறுதான். இதில் மாறுபட்ட கருத்து எதுவும் கிடையாது.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #GutkhaScam #Jayakumar
தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போதை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு குட்கா வியாபாரிகள் தங்கு தடையின்றி அதனை விற்பனை செய்து வந்தனர். இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக வருமானவரி துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் அருகே குட்கா வியாபாரி மாதவராவுக்கு சொந்தமான குடோனில் வருமானவரி துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு மூட்டை மூட்டையாக குட்கா போதைப் பொருட்கள் சிக்கின. ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதனை ஆய்வு செய்து பார்த்தபோது ரூ.250 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சோதனையின் போது சிக்கிய டைரி ஒன்றே, குட்கா ஊழலை முழுவதுமாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. போலீஸ் அதிகாரிகள், சுகாதார துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரூ.40 கோடி வரையில் லஞ்சம் கொடுக்கப்பட்டதும், யார்-யாருக்கு எவ்வளவு லஞ்சப்பணம் கைமாறியுள்ளது என்கிற விவரமும் அதில் இடம் பெற்றிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் இதுபற்றி தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பினர்.
அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், அப்போது சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ் ஆகியோரது பெயரும் டைரியில் இடம் பெற்றிருந்தது. இதுமட்டுமின்றி, போலீஸ், அரசு அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.
இது தொடர்பாக மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் முதலில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் குட்கா விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
குட்கா வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட பின்னர் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் தனியாக வழக்கு பதிவு செய்தனர். அதன் பின்னரும் குட்கா வழக்கு எந்த அசைவும் இல்லாமலேயே இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது அதிரடி ஆபரேஷனை தொடங்கினர்.
அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையுடன் விட்டு விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குட்கா அதிபர் மாதவராவிடம் திரட்டப்பட்ட தகவல்கள் இந்த வழக்கை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது.
குட்கா விற்பனைக்காக ரூ.40 கோடி லஞ்சம் கொடுத்தது தொடர்பாகவும், போலீஸ் அதிகாரிகள் மட்டுமின்றி, கலால் துறை உணவு பாதுகாப்புதுறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது பற்றியும் மாதவராவ் புட்டு, புட்டு வைத்தார். இதனை தொடர்ந்து குட்கா ஊழலில் தொடர்புடைய அதிகாரிகளும் சிக்கினர்.
மத்திய கலால் துறை அதிகாரியான கே.என்.பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களோடு குடோன் அதிபர் மாதவராவ், பங்குதாரர்களான உமா சங்கர் குப்தா, சீனிவாசராவ் ஆகியோரும் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் 5 பேரும் வருகிற 20-ந்தேதி வரையில் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குட்கா வழக்கில் மாதவராவே முக்கிய குற்றவாளியாக உள்ளார். அவரே, யார்-யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பதை பட்டியல் போட்டு அதனை செயல்படுத்தி உள்ளார். இதனை ஒப்புக் கொண்டுள்ள அவர் அப்ரூவராக மாறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து குட்கா விவகாரத்தில் அடுத்தடுத்து மேலும் பல திருப்பங்கள் ஏற்பட உள்ளன. மாதவராவ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் மட்டுமே இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாக இந்த கைது நடவடிக்கை போலீஸ் அதிகாரிகள் மீதும் பாய்கிறது.
குட்கா முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்ட கால கட்டத்தில் புழல் உதவி கமிஷனராக இருந்த மன்னர் மன்னன், செங்குன்றம் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத் ஆகியோரும் சி.பி.ஐ.யின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மன்னன் மன்னன் மதுரை ரெயில்வே டி.எஸ்.பி.யாகவும், இன்ஸ்பெக்டர் சம்பத் தூத்துக்குடியிலும் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் ‘‘விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது பெயரும் சிக்கி இருப்பது உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களில் கமிஷனர் ஜார்ஜ் ஓய்வு பெற்றுவிட்டார்.

அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோரிடமும் நேற்று முன்தினம் நடந்த சோதனையின் போதே சி.பி.ஐ. அதிகாரிகள் முழு அளவிலான விசாரணையை நடத்தி முடித்துள்ளனர். தேவைப்பட்டால் மீண்டும் அவர்களிடம் விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பது பற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதனால் சி.பி.ஐ.யின் அடுத்த குறி யார் மீது? என்கிற எதிர்பார்ப்பும் அதிகமாகி உள்ளது. குட்கா ஊழல் வழக்கில் போலீஸ் அதிகாரிகளை சி.பி.ஐ. நெருங்கி இருப்பது காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #GutkaScam
தமிழகத்தில் குட்கா புகையிலைப் பொருட்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. எனினும் சட்டவிரோதமாக குட்கா புகையிலை பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு குட்கா தயாரிப்பு ஆலைகள் இயங்க அனுமதிப்பதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் மாதவரத்தில் உள்ள குடோனில் போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்திய போது, மூட்டை, மூட்டையாக பான், மாவா போன்ற குட்கா பொருட்கள் சிக்கியது.
குட்கா தயாரிப்பு நிறுவனம் ரூ.250 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணையில் இறங்கினார்கள். அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டனர்.

குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பனார்ஜி தலைமையிலான அமர்வு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.
எனினும் சி.பி.ஐ. சார்பில் வழக்குப்பதிவு செய்ய காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை இயக்குனர் அலுவலகத்துக்கு கடிதம் மூலமும், சென்னையில் உள்ள சி.பி.ஐ. அதிகாரி அலுவலகத்துக்கு நேரில் சென்றும் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தினார். அதன்பேரில் சி.பி.ஐ. சார்பில் பெயர் குறிப்பிடாமல் கலால் வரித்துறை, உணவு பாதுகாப்புத்துறை, போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில் குட்கா ஊழல் வழக்கில் சட்டவிரோத பணி பரிவர்த்தனை தொடர்பான புகாரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குப்பதிவிலும் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை.
குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் தனித்தனியாக விரைவில் விசாரணையை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.