என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hanged"

    • அதிகாரத்தை பல தருணங்களில் ஜனாதிபதிகள் முறையாக பயன்படுத்துவதில்லை.
    • தூக்குமேடைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பலர் சுப்ரீம் கோர்ட்டின் தலையீட்டால் காப்பாற்றப்பட்டனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குற்றவழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கடைசி நம்பிக்கையாக இருப்பது ஜனாதிபதியிடம் தாக்கல் செய்யப்படும் கருணை மனுக்கள் தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72-ம் பிரிவின்படி, ஒருவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு. ஆனால், இந்த அதிகாரத்தை பல தருணங்களில் ஜனாதிபதிகள் முறையாக பயன்படுத்துவதில்லை.

    கருணை மனுக்கள் மீதான ஜனாதிபதியின் முடிவே இறுதியானது என்று புனிதப்படுத்துவதன் மூலம், குற்றவழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களின் வாழும் உரிமையை மத்திய அரசு பறிக்க நினைக்கிறது. பல தருணங்களில் ஜனாதிபதிகளால் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் போது அதை எதிர்த்து செய்யப்படும் மேல்முறையீடுகளின் போது, அதை கனிவுடன் பரிசீலிக்கும் சுப்ரீம் கோர்ட்டு, தண்டிக்கப்பட்ட மனிதர்களின் தண்டனையை குறைத்தோ, ரத்து செய்தோ ஆணையிடுகின்றன. அண்மைக்காலங்களில் கூட தூக்குமேடைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பலர் சுப்ரீம் கோர்ட்டின் தலையீட்டால் காப்பாற்றப்பட்டனர்.

    எனவே இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் இது தொடர்பாக செய்யப்பட உள்ள திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு உயிரை மாய்த்த பரிதாபம்
    • கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் நேரு நகரை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 32) பிளம்பர் வேலை செய்து வந்தார். இவரது மனைவி வனிதா (36) இவர்களுக்கு 2 குழந்தைகள உள்ளனர்.

    வனிதா வீட்டிலேயே பெட்டிகடை வைத்து நடத்தி வருகிறார். இதற்கிடையே கலிய பெருமாள் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்தார்.

    இதனால் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கலியபெருமாள் கடந்த 3 மாதத்துக்கு முன்பு 2 முறை அரளி விதை அரைத்து குடித்தும், தூக்குபோட்டும் தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்றினர்.

    இந்த நிலையில் நேற்று காலை வேலைக்கு சென்றுவிட்டு மதியம் கலியபெருமாள் வீட்டுக்கு வந்தார். அப்போது வனிதா வீட்டின் கதவை உள்பக்க மாக பூட்டிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார். இதனை அறியாமல் கலியபெருமாள் அருகில் உள்ள வனிதாவின் தாய் வீட்டுக்கு சென்று விசாரித்தார்.

    அங்கு மனைவி இல்லாததால் மீண்டும் கலியபெருமாள் வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு வனிதா வீட்டில் இருந்ததால் அவரை எங்கு சென்றாய் என கேட்டு அவரது நடத்தையில் சந்தேக மடைந்தார்.

    இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வனிதா பள்ளிக்கு சென்று குழந்தைகளை அழைத்து வர சென்றார். அந்த நேரத்தில் கலியபெருமாள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.

    பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்த வனிதா கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இது குறித்து நெட்டப்பாக்கம் போலீசில் வனிதா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிபோதையில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குடும்பத்தினரை மிரட்டி வந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் சுந்தர மூர்த்தி விநாயக புரம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் அசோக். இவர் புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது தந்தை சங்கர் வயது 48 இவர் அங்குள்ள பூக்கடையில் பூக்கட்டும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் உள்ள சங்கர் அடிக்கடி மது குடித்து விட்டு குடிபோதையில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குடும்பத்தினரை மிரட்டி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை அசோக்கும் அவரது மனைவியும் கோவிலுக்கு சென்றனர். பின்னர் வீடு திரும்பிய போது படுக்கை அறையில் மின் விசிறியில் சங்கர் சேலையால் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அசோக் அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கிலிருந்து சங்கரை மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சங்கர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    • தீபக் மாலை 5 மணி ஆகியும் கீழே வராததால் சந்தேகம் அடைந்த தீபக்கின் அண்ணன் ஆனந்த் மாடிக்கு சென்று கதவை தட்டினார்.
    • தீபக்கின் அண்ணன் ஆனந்த் அளித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை திருமுடி சேதுராமன் நகர் பகுதியை சேர்ந்தவர் தீபக் (வயது 26). இவர் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வந்தார்.

    கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்தே தீபக் வேலை செய்து வந்தார். இதற்கிடையே தீபக்கை திருமணம் செய்து கொள்ளும்படி அவரது பெற்றோர் வற்புறுத்தி வந்தனர்.

    ஆனால் தீபக் தான் வேறொரு பெண்ணை காதலிப்பதாகவும் அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி தனது பெற்றோரிடம் கூறினார். ஆனால் அவரது பெற்றோர் அதற்கு சம்மதிக்க வில்லை. இதனால் அடிக்கடி தீபக்குக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்து கொண்டே இருந்து வந்தது.

    பின்னர் தீபக்கின் பெற்றோர் சமாதானம் அடைந்து அந்த பெண்ணையே திருமணம் செய்து தருவதாகவும் ஆனால் சில காலம் பொறுத்து கொள்ளும்படி தெரி வித்தினர்.

    ஆனால் தீபக் தனது பெற்றோர் வெறும் வார்த்தையால் சொல்கி றார்கள் என்று தவறாக நினைத்து மன உளைச்சலுடன் இருந்து வந்தார். வழக்கம்போல் தீபக் நேற்று காலை வீட்டின் மாடி அறைக்கு சென்றார்.அவர் கம்பெனி வேலை செய்ய செல்கிறார் என்று பெற்றோர் நினைத்து கொண்டனர்.

    ஆனால் தீபக் மாலை 5 மணி ஆகியும் கீழே வராததால் சந்தேகம் அடைந்த தீபக்கின் அண்ணன் ஆனந்த் மாடிக்கு சென்று கதவை தட்டினார்.

    நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கப்படாததால் ஆனந்த் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது தீபக் தனது வேட்டியால் மின்விசிறியில் தூக்கில் தொங்குவைதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீபக்கை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிேசாதித்த டாக்டர்கள் தீபக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தீபக்கின் அண்ணன் ஆனந்த் அளித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் அருண்குமார் (35), டிரைவர் இவரது மனைவி உஷா

    இருவரும் 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    தற்போது இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக அருண்குமாருக்கு சரியாக வேலை இல்லாததால் குடும்பத்தை நடத்த போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார்.

    மேலும் அருண்குமார் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் கணவன், மனைவிடையே சண்டை ஏற்பட்டு வந்தது. கடன் தொல்லையும் அதிகமாகியுள்ளது. இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அருண்குமாரின் மாமியார் லீனாதேவி நேற்று வீட்டிற்கு வந்து இருவரையும் சமாதானம் செய்துவிட்டு சென்றார். இந்த நிலையில் நேற்று இரவு உஷா தனது குழந்தை களுடன் படுக்கை அறையிலும் அருண்குமார் வீட்டு வராண்டாவிலும் தூங்கினர்.

    இந்த நிலையில்  குழந்தை அழும் சத்தம் கேட்டு அருண்குமார் எழுந்து பார்த்தபோது, படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில்

    உஷா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அருண்குமார் உஷாவை மீட்டு புதுவை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உஷா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து முத்தியால் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வில்லியனூரில் சுற்றுலா வாகன டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதற்கிடையே கிருஷ்ணசாமி வேலைக்கு செல்லாமல் இருந்ததால் மது குடிக்க பணம் இல்லாமல் திண்டாடிவந்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் சுற்றுலா வாகன டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர் கணுவா பேட்டை புது நகரை சேர்ந்தவர் கிருஷ்ண சாமி (வயது 66). இவர் சுற்றுலா வாகன டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு மாலதி என்ற மனைவியும் 2 மகளும் மற்றும் ஒரு மகன் உள்ளனர். வயது முதிர்ச்சி காரணமாக கிருஷ்ண சாமி கடந்த சில ஆண்டுகளாக டிரைவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். மேலும் கிருஷ்ணசாமிக்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்தது. இதனால் குடும்பத்தை நடத்த மாலதி துத்திப்பட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.

    இதற்கிடையே கிருஷ்ணசாமி வேலைக்கு செல்லாமல் இருந்ததால் மது குடிக்க பணம் இல்லாமல் திண்டாடிவந்தார்.

    இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த கிருஷ்ணசாமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அவரது மனைவி வேலைக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமையல் அறையில் உள்ள இரும்பு பைப்பில் கயிற்றால் தூக்கு போட்டு தொங்கினார்.

    அப்போது வீட்டுக்கு வந்த அவரது மகன் பார்த்த சாரதி தந்தை தூக்கில் தொங்கு வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை தூக்கில் இருந்து மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கிருஷ்ணசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி மாலதி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மடுகரையில் கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • 2 ஆண்டுகளுக்கு முன்பு முருவனின் வலது காலில் ஈச்சமுள் குத்தி விட்டது.

    புதுச்சேரி:

    மடுகரையில் கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நெட்டப்பாக்கம் அருகே மடுகரை ராம்ஜிநகரை அடுத்த புதுநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் முருவன் (வயது62). கூலி தொழிலாளி. இவருக்கு மொளவி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முருவனின் வலது காலில் ஈச்சமுள் குத்தி விட்டது. ஆனால் இதற்கு மருத்துவம் பார்க்காமல் முருவன் அலட்சியமாக இருந்து விட்டதால் அவருக்கு காலில் காயம் பரவியது. இதனால் தினமும் முருவன் அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில்  கால் வலி அதிகமானதால் முருவன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் வீட்டின் ஜன்னலில் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார். இதனை அக்கம் பக்கத்தினர் பார்த்து முருவனின் மகன் பழனிச்சாமிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து தனது தந்தையை தூக்கில் இருந்து மீட்டு மினிவேன் மூலம் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முருவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மகன் பழனிசாமி கொடுத்த புகாரின் பேரில் மடுகரை புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குயவர்பாளையத்தில் ஓட்டல் ஊழியர் தூக்கு போட்டு இறந்து போனார். இதனையறிந்த அவரது நண்பரும் வேதனையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இவர் கேட்டரிங் படித்து விட்டு புதுவை அண்ணா சாலையில் உள்ள ஒரு ரெசிடெண்சியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    புதுச்சேரி:

    குயவர்பாளையத்தில் ஓட்டல் ஊழியர் தூக்கு போட்டு இறந்து போனார். இதனையறிந்த அவரது நண்பரும் வேதனையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுவை குயவர்பாளை யம் புது அய்யனார் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பாலமுருகன் (வயது24). இவர் கேட்டரிங் படித்து விட்டு புதுவை அண்ணா சாலையில் உள்ள ஒரு ரெசிடெண்சியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    இதேபோல் கடலூர் தில்லைநாயகம் புரத்தை சேர்ந்த கார்த்திக்(25) என்பவர் புதுவை வண்ணான்குளத்தில் வாடகை வீட்டில் தங்கி ஓட்டலில் வேலை செய்து வந்தார். பாலமுருகனும், கார்த்திக்கும் நண்பர்கள் ஆவார்கள். அடிக்கடி கார்த்திக் வீட்டுக்கு வந்து பாலமுருகன் சாப்பிட்டு செல்வார்.

    இந்த நிலையில் பாலமுருகன் அவரது வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த கார்த்திக் ஆஸ்பத்திரிக்கு சென்று நண்பரின் உடலை பார்த்து கதறி அழுதார்.

    பின்னர் தான் தங்கியிருக்கும் வீட்டுக்கு வந்தார். அப்போது கார்த்திக் சோகத்துடன் இருந்ததால் பக்கத்து வீட்டில் வசிக்கும் கவுரி(51) என்பவர் கார்த்திக்கிடம் சோகத்துக்கான காரணத்தை கேட்டார். அதற்கு கார்த்திக் தான் உயிருக்கு உயிராக பழகிய நண்பர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி தேம்பிதேம்பி அழுதார். அவருக்கு கவுரி ஆறுதல் தெரிவித்து தூங்கினால் சோகம் குறையும் என்று சமாதானம் செய்து அவரை தூங்க வைத்து விட்டு கவுரி தன் வீட்டுக்கு சென்று தூங்கினார்.

    இந்த நிலையில் கவுரி தூங்கி எழுந்த போது வீட்டின் வராண்டாவில் கார்த்திக் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். நண்பர் பிரிவை தாங்க முடியாமல் மனவேதனையில் கார்த்திக் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து கவுரி முதலியார்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி கார்த்திக்கின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    அரியாங்குப்பம் அருகே எலக்ட்ரீஷியன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் அருகே எலக்ட்ரீஷியன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    அரியாங்குப்பம் அருகே மணவெளி மாஞ்சாலை ரோடு வரதராஜா கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது60). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தார். இவருக்கு ஜெயசித்ரா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன் ரமேஷ் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.

    ஜெயசித்ரா அரியாங்குப்பத்தில் ஆடை வடிவமைப்பாளராக வேலை செய்து வருகிறார். இதற்கிடையே 4 மாதங்களுக்கு முன்பு ராஜேந்திரன் விபத்தில் சிக்கி தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கால் பகுதியில் எரிச்சல் அதிகரித்ததால் அதற்காகவும் அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் வலி குறையாததால் மனவேதனையில் இருந்து வந்தார்.

    இந்தநிலையில் வழக்கம் போல் ஜெயசித்ரா வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் ராஜேந்திரன் மட்டும் இருந்தார். ஜெயசித்ரா கணவருக்கு போன் செய்த போது அவர் போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    பின்னர் மீண்டும் போன் செய்து பார்த்தும் ராஜேந்திரன் போனை எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஜெயசித்ரா ஓடைவெளியில் வசிக்கும் தனது மகள் சாந்தலட்சுமிக்கு போன் செய்து வீட்டுக்கு சென்று பார்க்குமாறு தெரிவித்தார்.

    அதன்படி சாந்தலட்சுமி பெற்றோர் வீட்டுக்கு வந்தார். அங்கு வீடு உள்பக்கமாக பூட்டி இருந்ததால் ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது தந்தை ராஜேந்திரன் ஜன்னல் கம்பியில் சேலையால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து ஜெயசித்ரா கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சமைத்து வைத்த ஆட்டுக்கறி குழம்பை கணவர் தூக்கி வீசியதால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • குழப்பு காரமாக இருப்பதாக கூறி சமைத்து வைத்த ஆட்டுக்கறி குழம்பை சுந்தரமூர்த்தி வெளியே வீசி விட்டார்.

    புதுச்சேரி:

    சமைத்து வைத்த ஆட்டுக்கறி குழம்பை கணவர் தூக்கி வீசியதால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நெட்டப்பாக்கம் அருகே பண்டசோழநல்லூரை அடுத்த சிவன்படபேட் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மகள் கீதா(வயது26) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 மாத ஆண் குழந்தை உள்ளது.

    சம்பவத்தன்று கீதா ஆட்டுக்கறி குழம்பு சமைத்து வைத்திருந்தார். மதியம் கீதா கணவருக்கு அதனை பறிமாறினார். அப்போது குழப்பு காரமாக இருப்பதாக கூறி சமைத்து வைத்த ஆட்டுக்கறி குழம்பை சுந்தரமூர்த்தி வெளியே வீசி விட்டார். இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கி டையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படு கிறது. இதனால் கீதா மனவேதனை அடைந்தார்.

    பின்னர் சுந்தரமூர்த்தி அருகில் உள்ள கடைக்கு சென்றார். அந்த நேரத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த கீதா கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.

    கடைக்கு சென்று திரும்பிய சுந்தரமூர்த்தி வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக பார்த்ததார். அப்போது மனைவி தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று மனைவியை தூக்கில் இருந்து மீட்டு நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்து க்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கீதாவை அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கீதா நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதா பமாக இறந்து போனார்.

    இதுகுறித்து கீதாவின் தாய் வாசுகி கொடுத்த புகாரின் பேரில் நெட்டப் பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். #Bribe #maduraicourt
    சென்னை:

    லஞ்சம் தொடர்பான வழக்கின் விசாரணை ஒன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:- 

    லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும், சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். மின்வாரிய உதவி பொறியாளர் பணி நியமன விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும். லஞ்சம் வாங்குவோர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். கடுமையான தண்டனை வழங்கினால் தான் லஞ்சம் வாங்குவது குறையும்.

    கடும் தண்டனை அளித்தால் தான் லஞ்சம் வாங்குவது இயல்பானது என்ற நினைப்பை மாற்ற முடியும். லஞ்சம் வாங்கும் பழக்கம் முழுமையாக ஒழிய வேண்டும் என்றால் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 

    இவ்வாறு  உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன்-சுந்தர் அடங்கிய அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. #Bribe #maduraicourt
    பாகிஸ்தானில் 7 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற காமுகனுக்கு இன்று காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது கற்பழித்து கொல்லப்பட்ட சிறுமியின் தந்தை உடன் இருந்தார். #ImranAli
    லாகூர்:

    பாகிஸ்தானில் லாகூர் பகுதியை சேர்ந்தவன் இம்ரான் அலி (30). இவன் 9 சிறுமிகளை கற்பழித்தான்.

    அவர்களில் 7 வயது சிறுமியை கற்பழித்து கொன்று அவளது உடலை குப்பையில் வீசினான். இது குறித்து அவனை கைது செய்த போலீசார் லாகூர் தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த கோர்ட்டு அவனுக்கு தூக்கு தண்டனை விதித்தது. அத்துடன் 3 ஆயுள் தண்டனை மற்றும் 23 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

    அவன் லாகூரில் உள்ள காட் லாக்பாட் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். இந்த நிலையில் இன்று காலை 5.30 மணியளவில் மாஜிஸ்திரேட்டு அடில் சர்வார் முன்நிலையில் இம்ரான் அலி தூக்கில் போடப்பட்டான்.

    அப்போது கற்பழித்து கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் தந்தையும் உடன் இருந்தார். தூக்கில் போடப்பட்ட பின் இம்ரான் அலியின் உடல் அவரது சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டது. #ImranAli
    ×