என் மலர்
நீங்கள் தேடியது "High Commissioner"
பிரிட்டன் நாட்டுக்கான இந்திய உயர் தூதராக ருச்சி கனஷியாம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #RuchiGhanashyam
புதுடெல்லி:
லண்டன் நகரில் உள்ள பிரிட்டன் நாட்டுக்கான இந்திய உயர் தூதராக ஒய்.கே.சின்ஹா பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் புதிய உயர் தூதராக ருச்சி கனஷியாம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1982-ம் ஆண்டில் இந்திய அயல்நாட்டுப் பணி கல்வியில் தேர்ச்சி பெற்ற ருச்சி கனஷியாம் தற்போது வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் மேற்கத்திய நாடுகள் விவாகரத்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார்.
விரைவில் லண்டன் செல்லும் இவர் ஒய்.கே.சின்ஹாவிடம் இருந்து பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. #RuchiGhanashyam #HighCommissionerofIndia #UKHighCommissionerofIndia
லண்டன் நகரில் உள்ள பிரிட்டன் நாட்டுக்கான இந்திய உயர் தூதராக ஒய்.கே.சின்ஹா பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் புதிய உயர் தூதராக ருச்சி கனஷியாம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1982-ம் ஆண்டில் இந்திய அயல்நாட்டுப் பணி கல்வியில் தேர்ச்சி பெற்ற ருச்சி கனஷியாம் தற்போது வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் மேற்கத்திய நாடுகள் விவாகரத்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார்.
விரைவில் லண்டன் செல்லும் இவர் ஒய்.கே.சின்ஹாவிடம் இருந்து பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. #RuchiGhanashyam #HighCommissionerofIndia #UKHighCommissionerofIndia
பாகிஸ்தானில் பிரதமராக பதவியேற்க இருக்கும் இம்ரான் கானுடன் இந்தியாவின் உயர்தூதர் அஜய் பிசாரியா இன்று சந்தித்தார். #ImranKhan #AjayBisaria #Pakistan
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் அக்கட்சியின் தலைவர் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் ஆட்சியில் இருந்தபோது இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் பின்னடைவு காணப்பட்டது. இதனால் தற்போது வரும் பாகிஸ்தான் அரசு இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தும் வகையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்புவதாக இம்ரான் கூறியிருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கான இந்தியாவின் உயர்தூதரான அஜய் பிசாரியா இன்று இம்ரான் கானை சந்தித்தார். இந்த சந்திப்பில் பிரதமராக பதிவியேற்க உள்ள இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்த அஜய் பிசாரியா, இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் கையொப்பமிட்ட கிரிக்கெட் பேட்டை இம்ரான் கானுக்கு நினைவுப் பரிசாக வழங்கினார். #ImranKhan #AjayBisaria #Pakistan
பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் அக்கட்சியின் தலைவர் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் ஆட்சியில் இருந்தபோது இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் பின்னடைவு காணப்பட்டது. இதனால் தற்போது வரும் பாகிஸ்தான் அரசு இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தும் வகையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்புவதாக இம்ரான் கூறியிருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கான இந்தியாவின் உயர்தூதரான அஜய் பிசாரியா இன்று இம்ரான் கானை சந்தித்தார். இந்த சந்திப்பில் பிரதமராக பதிவியேற்க உள்ள இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்த அஜய் பிசாரியா, இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் கையொப்பமிட்ட கிரிக்கெட் பேட்டை இம்ரான் கானுக்கு நினைவுப் பரிசாக வழங்கினார். #ImranKhan #AjayBisaria #Pakistan
பாகிஸ்தானில் குருத்வாராவுக்கு சென்ற இந்திய சீக்கிய யாத்ரீகர்களை சந்திக்கச் சென்ற உயர் தூதருக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. #Pakistan #GurdwaraPanjaSahib
இஸ்லாமாபாத்:
19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய சீக்கிய அரசர் மகாராஜா ரஞ்சித் சிங்கின் நினைவு அஞ்சலி லாகூரில் உள்ள குருத்வாரா தேரா சாகிப் ஆலயத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜூன் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தியாவில் வாழும் சீக்கிய மதத்தினர் பாகிஸ்தான் சென்றுள்ளனர். அதற்காக 300 சீக்கிய யாத்ரீகர்களுக்கு விசாவும், சிறப்பு ரயில் சேவையும் பாகிஸ்தான் அரசு அறிவித்து இருந்தது.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறையின் உயர் அதிகாரி அஜய் பிசாரியா, இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்ற சீக்கிய யாத்ரீகர்களை காண குருத்வாரா சென்றுள்ளார். அங்கு செல்வதற்காக அவர் ஏற்கனவே அனுமதியும் பெற்றிருந்தார். ஆனால், சீக்கிய யாத்ரீகர்களை சந்திக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராகி பதிலளிக்குமாறு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணை உயர் தூதருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. #Pakistan #GurdwaraPanjaSahib
19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய சீக்கிய அரசர் மகாராஜா ரஞ்சித் சிங்கின் நினைவு அஞ்சலி லாகூரில் உள்ள குருத்வாரா தேரா சாகிப் ஆலயத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜூன் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தியாவில் வாழும் சீக்கிய மதத்தினர் பாகிஸ்தான் சென்றுள்ளனர். அதற்காக 300 சீக்கிய யாத்ரீகர்களுக்கு விசாவும், சிறப்பு ரயில் சேவையும் பாகிஸ்தான் அரசு அறிவித்து இருந்தது.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறையின் உயர் அதிகாரி அஜய் பிசாரியா, இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்ற சீக்கிய யாத்ரீகர்களை காண குருத்வாரா சென்றுள்ளார். அங்கு செல்வதற்காக அவர் ஏற்கனவே அனுமதியும் பெற்றிருந்தார். ஆனால், சீக்கிய யாத்ரீகர்களை சந்திக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராகி பதிலளிக்குமாறு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணை உயர் தூதருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. #Pakistan #GurdwaraPanjaSahib