என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Higher Education Minister"

    • 52 தொழில்நுட்பக் கல்லூரிகள், சிறப்பு நிறுவனங்கள், 162 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
    • அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்ட ஓர் உதவி மையம் கல்லூரியின் முதன்மையான இடத்தில் ஏற்படுத்தப்படும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரையின்படி உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர், பெற்றோர், பொதுமக்கள் ஆகியோருக்குத் தேவைப்படும் தகவல்களை வழங்கும் உதவி மையம் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அமைக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின்கீழ் 13 பல்கலைக் கழகங்கள், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 கல்வியியல் கல்லூரிகள், 10 பொறியியல் கல்லூரிகள். 52 தொழில்நுட்பக் கல்லூரிகள், சிறப்பு நிறுவனங்கள், 162 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

    இக்கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியருக்கு வெளிப்படையான, பதிலளிக்கக்கூடிய மற்றும் அணுகுவதற்கு எளிமையான ஒரு சூழலை ஏற்படுத்தும் விதமாக, அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கைக்காகவும் மற்றும் இதர காரணங்களுக்காகவும் மேற்குறிப்பிட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கு வருகை தரும் மாணவியர், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அந்நிறுவனங்களில் வழங்கப்படும்.

    பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், மாணவர் சேர்க்கை பற்றிய விவரங்கள், துறை அலுவலகங்களின் அமைவிடம், தனியார்களின் கோரிக்கை தொடர்பாக எந்த அலுவலரை அணுகுவது.

    அலுவலக நடைமுறைகள், தனியார்களின் கோரிக்கைகள் தொடர்பான முன்னேற்றம் போன்ற விவரங்களை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள ஏதுவாக மேற்குறிப்பிட்டுள்ள உயர்கல்வித்துறையின்கீழ் இயங்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அக்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து விவரங்களையும் நன்கு அறிந்த, அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்ட ஓர் உதவி மையம்" கல்லூரியின் முதன்மையான இடத்தில் ஏற்படுத்தப்படும்.

    இந்த மையம் பயனாளிகளுக்கு எளிதில் உதவும் வகையில் அமைக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கோவி.செழியன் கூறி உள்ளார்.

    • திமுக ஆட்சியில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.

    சென்னை அண்ணா பலகலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் கோவி. செழியன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    கிண்டி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக் கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும்.

    தனிப்பட்ட ஒரு மாணவி பாதிக்கப்பட்டுள்ள இச்சம்பவத்தை அரசியல் ஆக்க விரும்புகிறவர்கள் கடந்த ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அன்றைய ஆட்சியாளர்களின் அழுத்தத்தால் காவல்துறையில் புகார் அளிக்கக் கூட பாதிக்கப்பட்டவர்கள் பயந்தனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    திமுக ஆட்சியில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பொறியியல் கலந்தாய்வு விரைவில் தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #EngineeringCounseling

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர் கல்விதுறை அமைச்சர் கே.பி. அன்பழகன் நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    மருத்துவ படிப்பு கலந்தாய்வு முடிந்த பிறகு பொறியியல் கலந்தாய்வு தொடங்கும். மருத்துவ கலந்தாய்வு தள்ளிப் போனால் பொறியியல் கவுன்சிலிங்கை தொடங்கி விடுவோம்.

    நிர்மலாதேவி விவகாரத்தில் சந்தானம் குழு அறிக்கையும், அரசின் விசாரணை அறிக்கையும் ஒன்றாக வெளியிடப்படும்.

    யூ.ஜி.சி. விவகாரத்தில், மாநில அரசுகளின் கருத்துக்களை தெரிவிக்க வருகிற 20-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் தமிழக அரசின் கருத்தக்கள் அடங்கிய அறிக்கை சமர்பிக்கப்படும்.

    யூ.ஜி.சி.க்கு பதிலாக வேறு அமைப்பு வந்தாலும் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #EngineeringCounseling

    ×