என் மலர்
நீங்கள் தேடியது "hormone problem"
- ரத்தத்தில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பது.
- ரத்தத்தில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பது. மனம் மற்றும் உணர்ச்சி மாற்றங்கள்.
டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு இரண்டு வகையாக பிரிக்கப்படும்.
முதல் வகை: இது விதைப்பையில் உள்ள பிரச்சினைகளால் ஏற்படும் டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு. அவை விதைப்பைக்குள் கீழிறங்காத விதைகள், வழக்கமாக உள்ள எக்ஸ்-ஒய் குரோமோசோம்களுக்கு பதிலாக இரண்டு எக்ஸ் குரோமோசோம்கள் காணப்படும் நிலை.

விந்தணுக்கள் உற்பத்தி செய்யும் செம்னிபெரஸ் குழல்களில் லீடிக் செல், டூபுலார் செல், செர்டோலை செல்கள் இருக்க வேண்டும். ஆனால் சிலருக்கு செர்டோலை செல்கள் மட்டுமே காணப்படும். லீடிக் செல்கள் தான் டெஸ்டோஸ்டிரோனின் சீரான உற்பத்திக்கு காரணம்.
சிஸ்டிக் பைப்ரோசிஸ், தட்டம்மை நோயால் விதைகளில் ஏற்படும் தொற்று. விதைகளில் வரும் புற்றுநோய். ரத்தத்தில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பது.
இரண்டாம் வகை: ஹைபோதாலமஸ் மற்றும் பிட்யூட்டரி சுரப்பி இவை டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி செய்ய விதைகளுக்கு சமிக்ஞை செய்யும் மூளையின் பாகங்கள் ஆகும். ஹைபோதாலமஸ் கோனாடோட்ரோபினை வெளியிடும் ஹார்மோனை உருவாக்குகிறது.

இது பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து சினைமுட்டை தூண்டுதல் ஹார்மோன் எப்.எஸ்.ஹெச் மற்றும் லுடினைசிங் ஹார்மோன் எல்.ஹெச் உருவாக்க சமிக்ஞை செய்கிறது.
லுடினைசிங் ஹார்மோன் பின்னர் லீடிக் செல்கள் மூலம் டெஸ்டோஸ்டிரோனை உற்பத்தி செய்ய விதைகளுக்கு சமிக்ஞை செய்கிறது.
இரண்டாம் வகையில் பிட்யூட்டரி சுரக்கும் ஆண் இனப்பெருக்க ஹார்மோன்கள் குறைபாடு டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருப்பதற்கு காரணமாகிறது.

அறிகுறிகள்:
தாம்பத்திய உறவில் ஆர்வமில்லாமை, விந்தணு குறைபாடு, முகம் மற்றும் உடலில் முடி வளர்ச்சி குறைவாக இருப்பது, மார்பக திசுக்களின் வளர்ச்சி, எலும்பு நிறை இழப்பு (ஆஸ்டியோபோரோசிஸ்), மனம் மற்றும் உணர்ச்சி மாற்றங்கள்.

உணவுப் பழக்கவழக்கங்கள்:
டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும் அசைவ உணவுகளில், நாட்டுக்கோழி முட்டை, இறைச்சி வகைகள், ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த கடல் சிப்பிகள், சூரை மீன், மத்திச்சாளை மீன்கள்.
பருப்பு வகைகளில் பாதாம், பிஸ்தா, அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள். பழங்களில், செவ்வாழை, நேந்திரம், பேரீச்சம் பழம், திராட்சை பழம், பெர்ரி வகைகள், அவகோடா, பலாப்பழம், மாம்பழம், துரியன் பழம், அத்திப்பழம், நாட்டு மாதுளம்பழம்.
காய்கறிகளில் சின்ன வெங்காயம், பூண்டு, பசலைக்கீரை, தூதுவளை, நறுந்தாளி, முருங்கை, அறுகீரை, தக்காளி, புடலங்காய், அவரை பிஞ்சு, முருங்கை பிஞ்சு, முருங்கை காய், பீன்ஸ், பட்டர் பீன்ஸ், கேரட், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, உருளைக்கிழங்கு, பனங்கிழங்கு போன்றவை நல்ல பலன் தரும்.
சித்த மருத்துவம்:
சாலாமிசிரி லேகியம் 1-2 கிராம் வீதம் காலை, இரவு உணவிற்கு பின்.
மதன காமேஸ்வர லேகியம் 1-2 கிராம் வீதம் காலை, மாலை இரவு உணவிற்கு பின்.
நெருஞ்சில் விதை, பூனைக்காலி விதை, நீர்முள்ளி விதை, சாரப்பருப்பு, சாதிக்காய், நிலப்பனைக்கிழங்கு, பூமி சர்க்கரை கிழங்கு, அமுக்கரா கிழங்கு, சதாவரி கிழங்கு இவை சேர்ந்த மருந்துகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- சரியான மாதவிடாய் சுழற்சி முறையாக கர்ப்பத்தை எளிதாக்கும்.
- ஆண்கள் பருமனாக இருப்பதாலும் கருவுறுதல் பிரச்சினைகள் ஏற்படும்.
ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் தாய்மை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆனால் பல நேரங்களில் இந்த மகிழ்ச்சி எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை. சில காரணங்களால் கர்ப்பம் தரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆரோக்கியமான உடல் எடை
ஆரோக்கியமான உடல் எடை இல்லாமல் இருந்தால் அவை முட்டைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும். மேலும் கர்ப்பமடையும் சிக்கல்களை ஏற்படுத்தும். அதிக எடை கொண்ட பெண்கள் தான் குறிப்பாக கர்ப்பம் அடைய மிகவும் சிரமம் அடைகிறர்கள்.
அதேபோல் ஆண்கள் பருமனாக இருப்பதாலும் கருவுறுதல் பிரச்சினைகள் ஏற்படும். ஆரோக்கியமான உணவுமுறையுடன் தொடர்ந்து உடல் எடையை பராமரிக்கலாம்.

சரியான மாதவிடாய் சுழற்சி
சரியான மாதவிடாய் சுழற்சி முறையாக கர்ப்பத்தை எளிதாக்கும். உங்களின் அதிகபட்ச மாதவிடாய் நாட்கள் 3 நாட்கள் ஆகும்.
தைராய்டு பிரச்சனைகள்
தைராய்டு ஹார்மோன்களில், T3 மற்றும் T4 ஆகியவையே இனபெருக்கத்துடன் தொடர்புடையவை. உணவு செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்ற விகிதம் ஆகியவற்றின் மீது இவை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
தைராய்டு ஹார்மோன் சமநிலையற்று இருந்தால் கருத்தரிப்பதில் பிரச்சினைகள் ஏற்படலாம். கர்ப்பங்கள் மற்றும் கருச்சிதைவுகளுக்கு வழிவகுக்கும்.

பி.சி.ஓ.ஸ் பரிசோதனை
பி.சி.ஓ.எஸ் என்பது சினைப்பை நீர்க்கட்டி ஆகும். இதனால் ஹார்மோன் குறைபாடு, கருத்தரித்தலில் பிரச்சனை, மாதவிடாய் சுழற்சியில் சிக்கல் போன்ற பல பிரச்சனைகளை கொண்டு வரும்.
பி.சி.ஒ.எஸ் இருந்தால் உங்கள் சினைப்பையில் சிறிது சிறிதாக நீர்கட்டிகள் உருவாகும். அப்படி நடந்தால் கருமுட்டை உருவாவதில் சிக்கல் ஏற்படும். இதனால் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் ஏற்படும். சரியான சிகிச்சை எடுப்பதன் மூலம் இதனை கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்.
ஹார்மோன் குறைபாடு
பெண்களின் ஹார்மோன் அளவுகளில் மிகக் குறைந்த அளவில் மாறுதல் ஏற்பட்டால் கூட எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.
விந்தணுக்கள் பரிசோதனை
தம்பதிகள் கருத்தரிப்பதில் சிக்கல் இருக்கும்போது விந்து பகுப்பாய்வு பரிந்துரைக்கப்படுகிறது. இந்த பகுப்பாய்வு குறைந்த விந்தணு எண்ணிக்கை அல்லது விந்தணு செயலிழப்பு கருவுறாமைக்கு காரணமா என்பதை தீர்மானிக்க உதவுகிறது. மேலும் இந்த சோதனை செய்து கொள்வதன் மூலம் உங்கள் குறைகளை கண்டறிந்து அதனை சரிசெய்து விடலாம்.

ஃபோலிக் அமிலம்
கருவுற்ற முதலில் குழந்தையின் முதுகெலும்பு மூளை, மற்றும் நரம்புக் குழாய் போன்றவைகள் உருவாகும். அதற்கு இந்த ஃபோலிக் அமிலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நரம்புக் குழாய் குறைபாடுகளிலிருந்து குழந்தையின் அதிகபட்ச பாதுகாப்பிற்காக ஃபோலிக் அமிலம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்பப்பை வாய் ஸ்கிரீனிங் சோதனை
நீங்கள் 35 முதல் 45 வயதிற்குட்பட்டவராக இருந்து கர்ப்பத்தை திட்டமிட்டால், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். கர்ப்பம் தரிப்பதற்கு முன் பரிசோதனையை மேற்கொள்வது நல்லது.

உடற்பயிற்சி
கர்ப்பம் தரிக்க செய்ய வேண்டியவை உடற்பயிற்சி செய்தல் தான். லேசானது முதல் மிதமான உடற்பயிற்சி மாதவிடாய் சுழற்சியை சரிசெய்து, ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களின் ஓட்டத்தை சீராக்கும்.
ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் பெண்களை வளர்க்கும் போக்கின் காரணமாக, பெண் குழந்தைகளிடம் ஆண் தன்மை அதிகம் காணப்படுகிறது. ஹார்மோன்கள் மாற்றம் நோய்களைத் தருகிறது.
உணவு முறை:
உணவில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் காரணமாகவும், ஹார்மோன் மாற்றம் அதிகம் நேருகிறது. இறைச்சி உண்போர், இறைச்சியைத்தரும் விலங்குகளின் எடையைக் கூட்டத் தரப்படும் செயற்கை பொருட்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவ்வகை உணவுகளை அதிகம் உண்ணும் சிறுமியர் சுலபமாக உடல் எடை கூடி விடுகின்றனர். மிகச்சிறு வயதிலேயே கருப்பைக் கட்டிகள் வந்து விடுகின்றன.
குழந்தைகள் ஆரோக்கியமாக, செழிப்பாக வளர வேண்டும் என்ற எண்ணமும், அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் தவிர தாங்கள் குழந்தைகளுக்கு இதைவிடச் சிறந்தது இருக்க முடியாது. இருக்கக் கூடாது என்ற எல்லைவரை போய் எதிலும் முதல், எல்லாவற்றிலும் சிறப்பிடம் வேண்டும் என்று பெற்றோர் மிகுந்த கவனம் எடுப்பதும் இன்று ஆபத்தாகியிருக்கிறது. அதிகக் கொழுப்புச்சத்து மிகுந்த உணவுகள், இனிப்புகள், துரித உணவு என்று உணவு முறை மாற்றங்கள் தவிர்க்க முடியாததாகி விட்டது. நோயும் தவிர்க்க முடியாததாகி விட்டது.
மனச்சிதைவு:
அன்று மிக எளிதான வாழ்க்கை வாழ்ந்தனர். வெளிப்படையான பேச்சும், உண்மையான அன்பும், நல்லொழுக்கமும், எதிலும் ஒரு முறையும் இருந்தன. இன்று சுயநலமும், ஆடம்பரமும், போலிவேடம் போட வைக்கின்றன. வாழ்வு எந்திரமாகிவிட்ட நிலையில் மனிதன் மனச்சிதைவுக்கு ஆளாகிறான். ஆண்களைவிட, பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
குடும்பம், குழந்தைகள், கணவன், பெற்றோர், உற்றார், சமூகம் எனப் பலமுகம் கொள்ள வேண்டிய மகளிர் அதிகம் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதும், எண்ணப்பகிர்வும் அரிதாகி விட்டதால், மாத விலக்கு நிற்கும் சமயத்தில் (மெனோபாஸ்) உள்ள பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தங்களைத் தேவையற்ற அங்கம் போல உணருகின்றனர். தன்னை யாரும் கவனிப்பதில்லை என்ற தாழ்வு மனப்பான்மை வந்துவிடுகிறது. இந்த எதிர்மறை எண்ணங்கள் கருப்பைக் கட்டிகள் வளரக் காரணமாகின்றன.
ஹார்மோன் நிலைப்பாடு:
குழந்தை பெற்ற பின்பு மகளிர், இவ்வகை கட்டிகள் வந்துவிட்டால், அவை புற்றுநோய்க் கட்டியாக மாறிவிடும் என்ற பயத்தில், கருப்பை நீக்கம் செய்துவிடுகின்றனர். அப்பாடா! புற்றுநோயிலிருந்து தப்பித்துவிட்டோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். ஆனால் “எண்ணைய்ச்சட்டியிலிருந்து தப்பித்து, நெருப்பில் விழுவது” என்று சொல்வது போல, கருப்பை நீக்கத்தால், ஹார்மோன் சமநிலை பாதிக்கப்பட்டு, உடற்பருமன் ஆஸ்டியோ போராஸிஸ் என்னும் எலும்புத் தேய்மானம் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். கால்கள் வளைந்து போகின்றன.
மாதவிலக்கு சுழற்சி சரிவர இயங்கும் வரையில், ஈஸ்ட் ரோஜென் என்னும் ஹார்மோன் சுரக்கிறது. மாதவிலக்கு நின்றபின் இச்சுரப்பு சுரக்காததால் நிறைய பாதிப்புகள் வரும். ஈஸ்ட்ரோஜென் சுரக்காத நிலையில் உடன் “கால்சியம்” சத்தை உறிஞ்சுவது மிகமிகக் குறைவாகி விடும். அதனால்தான் எலும்புகள் பாதிக்கப்படுகின்றன.
இயற்கையாக எலும்புகளைக்காக்க உடலில் சதை அதிகமாகிறது, பருமன் கூடுகிறது. அத்தனை கால்சியத்தையும் உணவில் சேர்த்து எடுத்துக் கொண்டால் மட்டுமே, பருமனைத் தவிர்க்க முடியும்.
தவிர “ஈஸ்ட்ரோஜென்”, மனம் அமைதிப்படுவதற்கான காரணிகளில் ஒன்று. ஆனால் தான் மெனோபாஸ், மற்றும் மாதவிலக்கு வருவதற்கு முன் ஆகிய சமயங்களில் கோபம், தாழ்வு மனப்பான்மை மன உளைச்சல் ஆகிய உணர்வுகள் மேலோங்குகின்றனர்.
செரிமானக் கோளாறுகள் காரணமாக வருவது:
மகளிர் தம்மைக் கவனித்துக் கொள்ளாமல், நேரம் தவறி உணவு எடுத்துக் கொள்வதால், பாதிப்புகள் அதிகம் வருகின்றன. உணவைச் செரிக்கும் ஹார்மோன் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் அதன் வேலையைச் செய்யும். உணவைக் குறிப்பிட்ட பொருளாக (குளுக்கோஸ்) மாற்றி திசுக்களுக்கு அனுப்பும். நேரந்தவறும் போது உணவு உடைந்து மாறும் பொருள் வேறு வடிவமைப்பில் வேறு பொருளாக மாறுகிறது.
அதனை திசுக்கள் ஏற்காது. அவை கழிவாக திரும்ப ரத்தத்தில் எடுத்துச்செல்லப்படும். இந்த நிகழ்வு தான் நடக்குமே தவிர திசுக்களுக்குத் தேவையான சக்தி கிடைக்காது. அதனால் உடல் சோர்வு அடையும், போஷாக்கு குறைபாடு நேரும். நோய் வரும். ஹார்மோன் சூழ்நிலை மாறுவதால் கருப்பை கட்டிகள் போன்ற பாதிப்புகள் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.
எதிர்மறை எண்ணங்களால் ஏற்படுவது
மூளையின் முக்கிய அங்கம் ஹைப்போதாலமஸ் என்பது, அங்கு உருவாகும் ஹார்மோன்கள் உடலின் எல்லா ஹார்மோன்களையும் கட்டுப்படுத்தும். ஹைப்மோதாலமஸ் ஹார்மோன் எதிர்மறை எண்ணங்களில் பாதிக்கப்பட்டால் பிட்யூட்ரி சுரப்பு பாதிக்கப்படும். அதனால் கருப்பை ஹார்மோன்கள் பாதிக்கப்படும். அதனால் சீக்கிரம் மெனோபாஸ் வரலாம். கருப்பைக்குள்ளேயே கருக்கள் தங்கிவிடும் நிலை ஏற்படும். கரு உருவாகும் கருமுட்டை விரையில் அதிகம் உற்பத்தியாகி உருவாதல் நின்றுபோய் சீக்கிரம் மெனோபாஸ் வரும்.