என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Idli"

    கறிவேப்பிலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கறிவேப்பிலை பொடி இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மினி இட்லி - 40
    நெல் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

    அரைக்க :

    கறிவேப்பிலை - 3 கப்
    கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 4
    உளுந்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
    மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கடுகு - அரை டேபிள்ஸ்பூன்

    தாளிக்க  :

    கடுகு - சிறிதளவு,
    உளுந்தம் பருப்பு - சிறிதளவு,
    காய்ந்த மிளகாய் - 2.



    செய்முறை :

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வாணலியில் எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். இப்போது கறிவேப்பிலை பொடி ரெடி.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி உருகியதும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் மினி இட்லி, கறிவேப்பிலை பொடி சேர்த்து மீதம் இருக்கும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கறிவேப்பிலை பொடி இட்லி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் கேழ்வரகை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகு, காய்கறிகள் சேர்த்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1 கப்,
    தோசை மாவு - கால் கப்,
    உப்பு - தேவைக்கு,
    தயிர் - அரை கப்,
    துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ் கலந்தது - 1 கப்,
    வெங்காயம் - 2,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    இஞ்சி, பச்சைமிளகாய் விழுது - 1/4 டீஸ்பூன்,
    முந்திரிப்பருப்பு - 4,
    கடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவு,
    நெய் - 1 டீஸ்பூன்.



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் சிறிது நெய் விட்டு கேழ்வரகு மாவை வறுத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வறுத்த கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் தோசை மாவு, தயிர், உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.

    கடாயில் சிறிது நெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்த பின் இஞ்சி, பச்சைமிளகாய் விழுது போட்டு வதக்கி, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் கேரட் துருவல், பீன்ஸ் கலவையை சேர்த்து வதக்கவும்.

    காய்கறிகள் நன்கு வதங்கியதும் கொத்தமல்லி, பொடித்த முந்திரிப்பருப்பை சேர்த்து கலந்து, ஊறவைத்த கேழ்வரகு மாவில் கொட்டி நன்றாக கலந்து கொள்ளவும்.

    இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து மாவை இட்லிகளாக ஊற்றி வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

    சத்தான சுவையான கேழ்வரகு வெஜிடபிள் இட்லி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் ஓட்ஸ், சம்பா ரவையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று இந்த இரண்டையும் சேர்த்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஓட்ஸ் - 1 கப்
    சம்பா ரவை - அரை கப்
    தயிர் - கால் கப்
    சோடா மாவு - கால் டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு

    தாளிக்க

    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு - தலா அரை டீஸ்பூன்
    ப.மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    இஞ்சி - சிறிய துண்டு



    செய்முறை

    கொத்தமல்லி, ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் ஓட்ஸை போட்டு 5 நிமிடங்கள் வறுத்து ஆறியதும் கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்த பின்னர்  சம்பா ரவையை போட்டு 5 நிமிடங்கள் வறுக்கவும்.

    அடுத்து அதில் பொடித்த ஓட்ஸ் சேர்த்து சிறிது கிளறிய பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

    பிறகு அதில் சோடா மாவு, தயிர், 1 1/2 தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். கலவை இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

    அடுத்து அதில் உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

    இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவிய பின்னர் அதில் மாவை ஊற்றி ஆவியில் 20 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

    சாம்பார், புதினா சட்னியுடன் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கீரை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கீரையில் இட்லி செய்து கொடுக்கலாம். இன்று இந்த இட்லியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    இட்லி மாவு - 1 கிலோ,
    சிறுகீரை - 1 கட்டு,
    சிறுபருப்பு - 100 கிராம்,
    காய்ந்த மிளகாய் - 6,
    தக்காளி - 1,
    பெரிய வெங்காயம் - 2,
    உப்பு - தேவைக்கு,
    பூண்டு - 4 பல்.



    செய்முறை

    சிறுகீரையை சுத்தம் செய்து கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பொடியாக நறுக்கிய கீரையுடன் சிறுபருப்பு, காய்ந்தமிளகாய், தக்காளி, வெங்காயம், பூண்டு, சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரில் 1 விசில் விட்டு எடுக்கவும்.

    பின்பு ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    இட்லி மாவில் உப்பு, அரைத்த கீரை கலவையை சேர்த்து கலந்து இட்லி தட்டில் ஊற்றி வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான சிறுகீரை இட்லி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×