என் மலர்
நீங்கள் தேடியது "illavarasi"
பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவும், இளவரசியும் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் கன்னடம் மொழி வகுப்பில் சேர்ந்துள்ளனர். #SasikalalearnKannada #SasikalaenrolBU
பெங்களூரு:
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சசிகலாவும், இளவரசியும் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் கன்னடம் மொழி பயில விண்ணப்பித்துள்ளனர். இளவரசி சமீபத்தில் 15 நாள் பரோலில் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.
இவர்களை தவிர பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள 257 கைதிகளும் பல்வேறு வகுப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களின் விண்ணப்பங்கள் இன்று (சனிக்கிழமை) பரிசீலிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தொலைதூர கல்வி வழியாக பயிலும் மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படும். மேலும், ஆசிரியர்கள் நேரடியாக சிறைக்கு பாடங்களை நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #SasikalalearnKannada #SasikalaenrolBU
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சசிகலாவும், இளவரசியும் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் கன்னடம் மொழி பயில விண்ணப்பித்துள்ளனர். இளவரசி சமீபத்தில் 15 நாள் பரோலில் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.
அவர் பரோலில் செல்வதற்கு முன்னர் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரின் விண்ணப்ப நடைமுறைகள் முடிவடைந்து, இருவரும் தொலைதூர கல்வி மூலம் கன்னடம் மொழி சான்றிதழ் வகுப்பில் இணைந்து விட்டதாக பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வித்துறை இயக்குனர் மயிலரப்பா தெரிவித்துள்ளார்.
தொலைதூர கல்வி வழியாக பயிலும் மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படும். மேலும், ஆசிரியர்கள் நேரடியாக சிறைக்கு பாடங்களை நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #SasikalalearnKannada #SasikalaenrolBU