search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inconvenience to passengers"

    • மாநகர பஸ் பயணிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது.
    • பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்துவதால் பெரும் சிரமம்.

    சென்னை:

    சென்னையில் பஸ் நிறுத்தங்களில் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதால் மாநகர பஸ் பயணிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது.

    மாநகர பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லும் நிறுத்தங்களில் ஆட்டோக்களை நிறுத்துவதால் பஸ் டிரைவர்கள் பஸ்சை நிறுத்தும் இடத்தை கடந்தோ, அல்லது சாலையின் நடுப்பகுதிகளில் நிறுத்தும் நிலை உள்ளது.

    இதனால் பஸ்சின் பின்னால் வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னை நகரின் எல்லா பகுதியிலும் ஆட்டோ டிரைவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்துவதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

    இதனால் மாநகர பஸ்கள் சரியான இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் 110 பஸ் நிறுத்தங்களை கண்டறிந்து போக்குவரத்து போலீசார் ஆட்டோக்களை அகற்றினர். ஒவ்வொரு இடத்திலும் 6 முதல் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    சென்னை போக்குவரத்து போலீசுக்கு வந்த 2000 புகார்களில் 800 புகார்கள் போக்குவரத்து விதிமீறல் தொடர்பானவை. அவற்றில் கணிசமான எண்ணிக்கையில் சட்ட விரோத வாகன நிறுத்தம் சம்பந்தப்பட்டது.

    பரங்கிமலை-பூந்தமல்லி சாலை போன்ற இடங்களில் மெட்ரோ ரெயில் பணி நடைபெறுவதால் சாலை குறுகலாக உள்ளது. இந்த பகுதிகளில் ஆட்டோக்களை நிறுத்துவதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    ஷேர் ஆட்டோக்களில் ஆட்கள் வரும் வரை நிறுத்தி விடுகின்றனர். இதனால் பஸ் டிரைவர்களுக்கும், ஆட்டோ ஓட்டுனருக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. பொதுமக்கள் புகார் கூறினாலும் சண்டைக்கு வருகிறார்கள்.

    இதுகுறித்து மாநகர பஸ் டிரைவர் கூறும்போது, `பஸ் நிறுத்தங்களில் ஆட்டோவை நிறுத்துவதால் ஆட்டோ டிரைவர்களுக்கும் எங்களுக்கும் மோதல் ஏற்படுகிறது. பஸ் நிறுத்தங்களில் இருந்து 20 முதல் 30 மீட்டர் தொலைவில் நிறுத்துகிறோம் என்றனர்.

    இதுகுறித்து சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் கூறுகையில், பிரச்சினைக் குரிய இடங்களை கண்ட றிந்து அங்கு நிறுத்தப்படும் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

    இதில் கோடம்பாக்கம், கிண்டி, அண்ணாநகர், நுங்கம் பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள பஸ் நிறுத்தங்களும் அடங்கும். விதிகளை மீறி னால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.

    • பழைய கட்டண கழிப்பறையும் இடிக்கப்பட்டு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
    • துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி பழைய பேருந்து நிலைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்களுக்கான கட்டுமான பணி மந்தமான நிலையில் நடைபெற்று வருகிறது. இப்பேருந்து நிலையத்தில் இருந்த பழைய கட்டண கழிப்பறையும் இடிக்கப்பட்டு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. கழிவறையை இடித்த போதும், செப்டிக் டே ங்க் சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் பஸ் நிலையம் முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இங்குள்ள புத்து மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும், பஸ் ஏற வரும் பொது மக்களுக்கும் மூக்கை மூடிக் கொண்டு செல்லும் அவல நிலை தொடர்கிறது.

    குறிப்பாக, துர்நா ற்றத்தால் வயதானவர்களுக்கு மூச்சடைப்பு ஏற்படுகிறது, இங்கு பஸ் ஏற ஏராளமான பள்ளி மாணவர்கள் வருவதால், அவர்கள் தவறி செப்டிக் தொட்டியில் விழுவதற்கும் வாய்ப்புள்ளது. ஆகையால் உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு செப்டிக் டேங்க் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். செப்டிக் டேங்க்கை சுற்றிலும் இரும்பு வேலி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், மந்தமாக நடந்து வரும் பஸ் நிலைய கட்டுமான பணியினை விரைந்து முடிக்க வேண்டும். அதுவரை தற்காலிக கழிவறை ஏற்படுத்தி தரவேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
    • புதிய பஸ் நிலையம் கடந்த ஏப்ரல் மாதம் 2000-ல் திறக்கப்பட்டது.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட அன்னூர் புதிய பஸ் நிலையம் கடந்த ஏப்ரல் மாதம் 2000-ல் திறக்கப்பட்டது.

    இந்த பஸ் நிலையத்தில் இருந்து கோவை, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், மற்றும் அவினாசி போன்ற முக்கிய பகுதிகள் மற்றும் அன்னூரை சுற்றி உள்ள கிராம பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் என 500க்கும் அதிகமான பஸ்கள் சென்று வருகின்றன.

    இந்த பஸ் நிலையத்தில் வேலைக்கு செல்வோர் மற்றும் பஸ் நிலையம் வருவோர், மக்கள் நடக்கும் நடைபாதையில் தங்களது இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகவும் அவதியடைகின்றனர்.

    மேலும் மழைக்காலத்தில் பயணிகள் உள்ளே அமர்வதிலும் மற்றும் நிற்பதிலும் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.மழைக்காலம் என்பதினால் கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இங்கு வாகனங்களை உள்ளே நிறுத்த அனுமதி இல்லை என்ற வாசகத்தை எழுதி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×