என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Alliance"

    • வக்பு திருத்த மசோதாவில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன.
    • வழிபாடு, சொத்துக்கள், சட்டங்களில் யாரும் தலையிடக்கூடாது.

    சென்னை:

    பிரதமர் மோடி தமிழகம் வருகையை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், இந்தியா கூட்டணி கட்சிகள் இதில் பங்கேற்கும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்து இருந்தார்.

    அதன்படி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகே போலீஸ் அனுமதி அளித்து இருந்தது. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மனித நேய மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.

    தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்க வந்து கொண்டு இருந்ததாகவும், வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இஸ் லாமியர்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வரு கின்றன. குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக உடைத்து மாநில அந்தஸ்தை பறித்தது.

    பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த முயற்சிப்பது என்று இஸ்லாமியர்களுக்கு எதிரான நட வடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    இப்போது கொண்டு வரப்பட்டுள்ள வக்பு திருத்த மசோதாவில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. இது முற்றிலும் அரசியல் சட்டத்துக்கு எதிராக அமைந்து உள்ளது.

    உதாரணமாக முன்பு மதரசாக்களுக்கு யார் வேண்டுமானாலும் நன்கொடை வழங்க முடியும். இதை சுப்ரீம் கோர்ட்டும் அங்கீகரித்தது.

    ஆனால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள திருத்த சட்டம் மூலம் 5 ஆண்டுகள் இஸ்லாமிய மதத்தை பின்பற்றி வருவது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே வழங்க முடியும்.

    இதே போல வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாதவர்களும் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் இந்து கோவில் அறங்காவலர்களாக இஸ்லாமியர்களை நியமிக்க முடியுமா?

    ஒரு மதத்தினர் வழிபாடு, சொத்துக்கள், சட்டங்களில் யாரும் தலையிடக்கூடாது. இப்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டு வந்தது போல வருங்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் தொடங்கி விடுவார்கள்.

    இந்து ராஷ்டிரம் என்ற தவறான கொள்கையை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் திணிக்க முயற்சிக்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் வக்பு திருத்த சட்டம் செல்லாது என்று நிச்சயம் அறிவிப்பு வரும்.

    இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.


    ஆர்ப்பாட்டத்துக்கு முத்தழகன் முன்னிலை வகித்தார். முன்னாள் காங்கி ரஸ் தலைவர் தங்கபாலு, கருணாஸ், பொன்குமார், வன்னியதேவன், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் அசன் மவுலானா எம்.எல்.ஏ., கோபண்ணா, உ.பலராமன், ரங்கபாஷ்யம், வக்பு வாரிய உறுப்பினர் எஸ்.கே. நவாஸ், தளபதி பாஸ்கர், ஹசினா சையத், பி.வி.தமிழ்ச்செல்வன், அகரம் கோபி, மயிலை தரணி உள்பட பலர் கலந்து கெண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களுக்கு எதிராக பிரதமர் மோடியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

    • தி.மு.க. இந்து மதத்துக்கு எதிரானது அல்ல.
    • ராகுல்காந்தியை பார்த்துவிட்டு, பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நடைபயணம் செல்கிறார்.

    திருப்பூர்:

    திருப்பூரில் தி.மு.க. சார்பில் முத்தமிழறிஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு பேசியதாவது:-

    சனாதன தர்மம் என்பது காலங்காலமாக மாறாமல் இருப்பதை அப்படியே பின்பற்றுவதாகும். தற்போதைய காலகட்டத்தில் அனைத்திலும் மாற்றங்கள் வந்துவிட்டது. மாறாமல் இருக்க முடியாது. ஏற்றதாழ்வுகளை முன்னிறுத்திய கோட்பாடுகளை கொண்டதே சனாதன தர்மம். பிறப்பில் ஏற்றதாழ்வுகளை பின்பற்ற சொல்கிறது.

    மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வுகளை அழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை, இந்து மதத்துக்கு எதிர்ப்பாளர் போல் திரித்து பரப்பிவிட்டனர். தி.மு.க. இந்து மதத்துக்கு எதிரானது அல்ல. தி.மு.க.வினரை இந்து விரோதிகள் போல் சித்தரிக்கிறார்கள்.

    மதசார்பற்ற இந்தியா கூட்டணியை கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார். இந்தியா என்ற சொல்லையே மாற்ற விரும்புகிறார். ஜி20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி முன்பு பாரத் என்ற பெயர்பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்தியா என்ற பெயரை மாற்றிவிட்டனர். 2024-ம் ஆண்டு இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். அந்த கூட்டணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடிவமைக்கிறார். ராகுல்காந்தியை பார்த்துவிட்டு, பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நடைபயணம் செல்கிறார். அதனால் ஒன்றும் ஆகப்போவது இல்லை. புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வகுப்புவாத, பிரிவினைவாத சிருலைவு சக்திகளுக்கு பாடம் கற்பிக்கின்ற வகையில் இந்த வெற்றி அமைந்திருக்கிறது.
    • தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினருக்கும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி பெற உள்ள வெற்றிக்கு அச்சாரம் இது என்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிட்ட, தி.மு. கழசு வேட்பாளர் திரு. வி.சி. சந்திரகுமார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரை விட தொன்னூறாயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றிருக்கிறார்.

    இது தமிழகத்தில் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறுகிற ஆட்சியின் சாதனைகளுக்கு கிடைத்த பரிசாகும். வகுப்புவாத, பிரிவினைவாத சிருலைவு சக்திகளுக்கு பாடம் கற்பிக்கின்ற வகையில் இந்த வெற்றி அமைந்திருக்கிறது.

    தமிழகத்தில் சமீபகாலமாக மதநல்லிணக்கத்தையும், சமூகநீதியையும் சீர்குலைக்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிற பிற்போக்கு சக்திகளுக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவு உரிய பாடத்தை வழங்கியிருக்கிறது. வெற்றி பெற்றுள்ள தி.மு. கழக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் அவர்களுக்கும், வெற்றிக்காக பாடுபட்ட தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினருக்கும் நனர்நியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பெற்ற வெற்றி 2026 சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி பெறப் போகின்ற வெற்றிக்கு அச்சாரமாக அமைய இருக்கிறது. இத்தகைய வெற்றியை பெறுவதற்கு காரணமாக இருந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
    • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசை செயல்படவிடாமல் முடக்கியது.

    டெல்லி தேர்தல் முடிவு இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    டெல்லி மாநிலத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி தோல்வி அடைந்து பாஜக ஆட்சி அமைக்கிறது. இது ஆம் ஆத்மி கட்சியின் தோல்வி மட்டுமல்ல இந்தியா கூட்டணியின் தோல்வி ஆகும். இதிலிருந்து இந்தியா கூட்டணி பாடம் கற்க வேண்டும். டெல்லி மாநிலத் தேர்தல் முடிவு இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக் காட்டுகிறோம்.

    இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி உடனடியாக இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.

    டெல்லியில் ஆட்சி நடத்தி வந்த ஆம் ஆத்மியை அதிகாரத்திலிருந்து இறக்குவதற்காக பாஜக தனது அத்தனை பலத்தையும் பயன்படுத்தியது. முதலமைச்சராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் மீதும் அமைச்சர்கள் மீதும் வழக்குகள் போடப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர்.

    அதிகாரிகள் நியமனம், அன்றாட நிர்வாகம் ஆகியவற்றைச் செய்வதற்கு டெல்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்தத் தீர்ப்பை ரத்து செய்வதற்காக நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தி உடனடியாக சட்டத்திருத்தத்தை பாஜக அரசு கொண்டு வந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசை செயல்படவிடாமல் முடக்கியது.

    இந்த அடாவடிகளுக்கு இந்தியா கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் கட்சி பெரிதாக எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சி தனக்கு போட்டியாக ஆம் ஆத்மியைப் பார்த்ததும், காங்கிரஸ் கட்சி பலவீனமாவது தனக்கு சாதகம் என ஆம் ஆத்மி கருதியதுமே இதற்குக் காரணம்.

    இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இடம் பெற்ற போதும் அது பொருந்தாக் கூட்டணியாகவே இருந்தது. டெல்லியில் இப்போது பாஜக ஆட்சி அமைப்பதற்கு ஆம் ஆத்மி- காங்கிரஸ் கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லை என்பதே முதன்மையான காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருதுகிறது.

    டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மியை விட சுமார் இரண்டு சதவீத வாக்குகளையே பாஜக கூடுதலாகப் பெற்றிருக்கிறது. அங்கு தனியாகப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி சுமார் ஏழு சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அர்விந்த் கெஜ்ரிவால் போட்டியிட்ட தொகுதி உட்பட 13 தொகுதிகளில் ஆம் ஆத்மியின் தோல்விக்கு காங்கிரஸ் பெற்ற வாக்குகளே காரணமாகியுள்ளன.

    டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு இந்தியா கூட்டணியில் இருக்கும் சமாஜ்வாதி, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆதரவு தெரிவித்த அந்தக் கட்சிகளுக்கு டெல்லியில் வாக்கு வங்கி எதுவும் இல்லை. எனவே அது காங்கிரஸ் அல்லாத அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியாகவே பார்க்கப்பட்டது.

    டெல்லி தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் எப்படி காரணமாக அமைந்துவிட்டதோ, அப்படி இந்தியா கூட்டணியில் இருந்த பிற கட்சிகளின் இந்த அணுகுமுறையும் ஒருவிதத்தில் காரணமாகியுள்ளன.

    நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததற்குப் பிறகு இந்தியா கூட்டணி கூட்டத்தைக் கூட்டுவதில் காங்கிரஸ் கட்சி அக்கறை காட்டவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைப்பதைத் தடுத்த போதிலும் அதன் பிறகு நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறுவதற்கு இந்தியா கூட்டணியே வழி வகுத்தது என்பதே கசப்பான உண்மையாகும்.

    மக்கள் நலனை விடத் தத்தமது கட்சிகளின் வெற்றியையே இந்தியா கூட்டணி கட்சிகள் முதன்மையாகக் கருதுகின்றன என்பதையே இது காட்டுகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்தடுத்து பீகாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் நடைபெறவிருக்கும் தேர்தல்களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது சாத்தியமில்லாமல் ஆகிவிடும். மக்களும்கூட நம்பிக்கை இழந்து விடுவார்கள். எனவே டெல்லி தேர்தல் முடிவுகளை இந்தியா கூட்டணி கட்சிகள் ஒரு படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியா கூட்டணியின் கலந்தாய்வுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

    தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது. தொடர் வெற்றியை சாதித்திருக்கும் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இந்த இடைத்தேர்தலில் தமிழகத்தின் முதன்மையான எதிர்க்கட்சியாக விளங்குகிற அதிமுக போட்டியாடாமல் பின்வாங்கியது. பாஜகவும் அதே நிலைபாட்டை எடுத்தது. எதிர்க்கட்சிகளின் வாக்குகளைச் சிதறடிக்க விரும்பாமல், இவ்விரு கட்சிகளும் இணைந்து நாதகவுக்கு ஆதரவை நல்குவது என்கிற மறைமுக உடன்பாடு செய்துகொண்டனரோ என்கிற அய்யத்தை எழுப்புகிறது.

    அதாவது, நாதக மற்றும் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளிடையே மறைமுகமான கூட்டணி ஒரு சோதனை முயற்சியாக மேற்கொள்ளப் பட்டுள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது.

    இதுவரை தமிழ்நாட்டில் இல்லாத அளவுக்கு வெளிப்படையான வெறுப்பு அரசியலை நாதக முன்னெடுத்தது. குறிப்பாக, தந்தை பெரியாரை மிகவும் அநாகரிகமான முறையிலே பொது வெளியில் கொச்சைப்படுத்தியது. ஆனாலும் அதனை அதிமுக கண்டும் காணாமல் கடந்து சென்ற போக்கு அதிர்ச்சியளித்தது. அதேவேளையில், பாஜக வரிந்து கட்டிக்கொண்டு நாதகவின் வெறுப்பு அரசியலை வரவேற்றது. இவ்விரு கட்சிகளின் இந்தப் போக்கு அவர்களுக்கிடையிலான மறைமுக உடனபாட்டினை உறுதிப்படுத்துவதாகவே விளங்கியது.

    தந்தை பெரியாருக்கு எதிரான நாதக'வின் இந்த அணுகுமுறை பாஜகவின் ஃபாசிச அணுகுமுறையின் இன்னொரு வடிவமே என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது.

    பாஜக மற்றும் சங் பரிவார்களைப் பின்பற்றியே தந்தை பெரியார் அவர்களைக் கொச்சைப்படுத்தும் நடவடிக்கையில் நாதக இறங்கியது. அதன்மூலம் பாஜகவின் வாக்குகளை ஈர்ப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. அத்துடன், அதிமுகவின் திமுக எதிர்ப்பு வாக்குகளையும் இயல்பாக பெற்றுவிட முடியுமென நாதக கணக்குப் போட்டது.

    ஆனால், வழக்கம்போல அந்தக் கட்சிக்கு வைப்புத் தொகையைக் கூட கிடைக்க விடாமல் செய்துள்ளனர் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள்.

    இதன்மூலம், பாஜக, அதிமுக மற்றும் நாதக ஆகிய கட்சிகளின் சூது அரசியலை முறியடித்துள்ளனர். குறிப்பாக, தந்தைபெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோர் முன்னெடுத்த சமூகநீதிக்கான மண்ணே தமிழ்நாடு என்பதை உணர்த்தி, நாதகவுக்கு மறைமுகமாகத் துணைபோன பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு உரிய பாடத்தைப் புகட்டியுள்ளனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×