என் மலர்
நீங்கள் தேடியது "Jai"
- ‘அறம்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் கோபி நயினார்.
- இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான 'அறம்' படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் கோபி நயினார். இப்படத்தை தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'மனுஷி' படத்தை இயக்கினார். இப்படம் குறித்த தகவல் எதுவும் பின்னர் வெளியாகவில்லை.

கருப்பர் நகரம் போஸ்டர்
இயக்குனர் கோபி நயினார் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜேடி சக்கரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை ஆர்.ஆர்.பிலிம் மேக்கர்ஸ் மற்றும் ஏ.ஜி.எல் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'கருப்பர் நகரம்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும் இது தொடர்பான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- அன்னபூரணி படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருக்கிறார்.
- நயன்தாராவின் 75-வது படமாக அன்னபூரணி உருவாகி இருக்கிறது.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் அன்னபூரணி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் தலைப்பு மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

நயன்தாராவின் 75-வது படமாக உருவாகி இருக்கும் அன்னபூரணி தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த படம் டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.
சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
- நடிகை நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் 'அன்னபூரணி'.
- இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் அன்னபூரணி. இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நயன்தாரா தன்னை 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்காதீர்கள் என்று கூறியுள்ளார். அவர் பேசியதாவது, "திரையரங்கில் படம் பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால், எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. அதனால் முதல் நாள் காட்சியெல்லாம் பார்க்க தைரியம் இருக்காது. எப்போதும் முதல் நாள் இரவுக் காட்சி பார்ப்பேன்.

மேலும், லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லாதீர்கள். அப்படி சொன்னாலே திட்டுகிறார்கள். நான் இன்னும் அந்த இடத்திற்கு வரவில்லையா? இல்லை பெண் என்பதால் அப்படி இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. 'லேடி சூப்பர் ஸ்டார்' என்பதை நோக்கி என் பயணம் இல்லை" என்று கூறினார்.
- நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அன்னபூரணி’.
- இப்படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'அன்னபூரணி'. நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

அன்னபூரணி போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'அன்னபூரணி' திரைப்படம் வருகிற 29-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
Unga vayirum manasum neraika oru delicious movie oda varanga namma Lady Superstar?#Annapoorani is coming to Netflix on 29 Dec in Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi.#AnnapooraniOnNetflix pic.twitter.com/py82y1imn4
— Netflix India South (@Netflix_INSouth) December 24, 2023
- அருண்ராஜா காமராஜின் முதல் வெப்தொடரான 'லேபில்' .
- இந்த வெப்தொடர் நவம்பர் 10-ஆம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பானது.
பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான வெப் தொடர் 'லேபில்'. இதில் ஜெய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும், மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அருண்ராஜா காமராஜின் முதல் வெப்தொடரான 'லேபில்' தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைக்க ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். பி.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளனர். இந்த வெப்தொடர் நவம்பர் 10-ஆம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பானது.

இந்நிலையில், 'லேபில்' தொடரின் வெற்றியை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து அருண்ராஜா காமராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நவம்பர் 10, 2023 முதல் இன்று வரை 8 வாரங்கள். எங்கள் உள்ளுணர்வுகளின் ஒரு "ரோலர் கோஸ்டர் ரைட்"
எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினர்கள் மற்றும் தயாரிப்புக்குழுவினருக்கு மாபெரும் மற்றும் மறக்க முடியாத படைப்பு.
லேபிலின் கருவாக்கம், உருவாக்கம் மற்றும் வெளியீடு இவை அனைத்தும் எங்களின் சிற்சிறு "பெருங்கனா".

இப்படைப்பின் கரு நம் அனைவரின் ஏதோ ஒரு குரலற்ற இயலாமையின் குரலின் தொடக்கமாய் துவங்கி, கதை கண்டு, களம் கண்டு, வடிவம் கண்டு, இன்று முதல் அத்தியாயம் இன்னும் சில கேள்விகளுடனேயே நிறைவு பெறுவது நீண்ட நெடிய சுமத்தலுக்குப் பின் பிரசவிக்கும் ஓர் உணர்வு.
பிரசவித்தலுக்கான காலமே எட்டு வாரங்கள் !!! அதை ஒரு நாளும் உணர்விக்கத்தவறவில்லை இக்குழந்தை. ஒவ்வொரு அரை மணியும் ஒரு பெரும் வாரமாய் மாறி எட்டி உதைக்கவும் தவறியதில்லை உங்களின் அன்பு மட்டுமே இக்குழந்தையை வளர்த்து இதில் உழைத்த அனைவருக்கும் சுகமாய் முழுதாய் பிரசவித்துக் கொடுத்திருக்கிறது.
இதை உங்கள் குழந்தையாய் பாவித்து உடன் உரையாடி, சீராட்டி, ஊட்டமளித்து, ஊக்கமளித்து, ஆர்ப்பரித்து, ஆதங்கப்பட்டு, அரவணைத்து, புறந்தள்ளி, கொண்டாடி. பரிசீலித்து, பரிந்துரைத்து, தீதென அக்கறைப்பார்வையோடும், நன்றென ஏற்றுக்கொண்டும், இன்னும்.. இன்னும்.. என்று எண்ணி தேடி வந்த உள்ளங்கள் எத்தனை எத்தனை...
எப்பேறு!!! இப்பேறு...
மழலையின் மகிழ்ச்சி அதை ஏற்றுக்கொள்ளும் அளவிலேயே தீர்மானிக்கப்படும், ஆம் !! இம்மழலை உங்கள் அன்பின் முதல் விதை...
உங்கள் அன்பைப் பெற பாடுபட்ட என்னுடன் தோள் சேர்த்து அதை கோபுரம் ஆக்க, என் அன்புக்காக மட்டுமே அயராது சுழன்ற ஒவ்வொருவரும்ஒவ்வொருவரும்.... ஒவ்வொருவரும் என்றுமே எனக்கான பொக்கிஷங்கள். உங்களால் மட்டுமே "லேபில்" சாத்தியம் ஆகியுள்ளது.

அருண்ராஜா காமராஜ் அறிக்கை
உங்கள் அன்பிற்கு எங்களால் முடிந்தவரை உடல், பொருள், ஆவி அனைத்தையும் இப்படைப்பிற்காக சமர்ப்பித்துள்ளோம்.
இனி "லேபில்" உங்களின் "முழுதாய் பிரசவித்த அன்புக்குழந்தை".
ஒவ்வொரு வாரமும் !!! நீங்கள் உங்கள் பல்வேறு எண்ண ஓட்டங்களில் இருந்திருப்பீர்கள், ஆவலைக் கட்டுப்படுத்தியிருக்க கூடும். அப்படியே அள்ளித்தழுவவோ!! அப்படியே திட்டித் தீர்க்கவோ வழிவகை செய்ய இயலாது போனதில் சிறு வருத்தமே.. இதில் உங்களுடனேயே நான்!!! எனக்கும் அதே உள்ளுணர்வே!! ஏன் என்றால் கொஞ்சுதலுக்கானதை சுமந்து கொண்டே இருப்பதிலே தானே பெரிய வலியினை காலம் தந்திருக்கும்... ஆயினும் அதையும் எனக்கு சுகமாக்கித் தந்த அனைவரின் அன்பினாலேயே நான் பிரமித்து நிற்கிறேன்....
பல்வேறு சிந்தனைகள், பல்வேறு மனநிலைகள், பல்வேறு நிலைப்பாடுகள், நெருங்கிய ஆளுமைகளின் மறைவுகள் பல்வேறு காலநிலை மாறுதல்கள்.. தொடர் இடர்கள், நிலையற்ற சூழ்நிலைகள், அடுத்தடுத்த முன்னெடுப்புகள், மாபெரும் இழப்புகள், சவால்கள் இவை அனைத்திற்கும் மத்தியில் வந்து நின்ற பொழுது அப்போதைய மனநிலையில் இப்படைப்பு வீரியம் மாறி மாறி, தொடர்பற்று, உங்கள் அன்பை இழந்திருக்கக் கூட ஒரு வாய்ப்பிருந்திருக்கும். அல்லது முற்றிலும் பெற முடியாமல் தவித்திருக்கும். இவை எதுவும் நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாது போனதாலேயே இந்த நீண்ட நெடிய விளக்கம். உங்கள் அன்பு மட்டுமே என்னை இதை எழுத வைக்கிறது.

அருண்ராஜா காமராஜ் அறிக்கை
'சரியென்றும் தவறென்றும் ஏதுமுண்டோ, அடங்கா அன்பின்பால் விளைந்த விதைக்கு"
அப்படியே இதை நானும் புரிந்து கொள்கிறேன்.. ஏனென்றால் அனைத்தையும் மாற்றும்,
முன்னெடுக்கும் சக்தி உங்களின் அன்பிலும், ஆதரவிலும் உள்ளது.
இதுவரை காத்திருந்து பார்த்தவர்களும், காண காத்திருப்பவர்களுக்கும் என்றுமே எங்கள் அனைவரின் அன்பையும் உரித்தாக்குகிறேன்.
எல்லா கலை படைப்புமே எல்லாரையுமே திருப்தி படுத்திவிடுமா அப்படி பண்ண முடியுமான்னு தெரியல.. ஆனா அத பண்ண ஒவ்வொரு முறையும் கலை தன்னை தயார் செய்து கொள்ளும். அதனை முடிந்தவரை முயன்று முடிப்போம், முடியும் வரை முயல்வோம்.
ஓர் பரிச்சார்த்த முயற்சிக்கான வெள்ளோட்டமாக, அன்பின் பதில்களோ, விருப்பு வெறுப்புகளோ அனைத்திற்கும் அப்பாற்பட்டு...தொடங்கிய நேரம் முதல் இன்று வரை எங்களோடு பயணிக்கும் என் உலகமென நான் பெரிதும் மதிக்கும் என் அன்பிற்கினிய திரைக்கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், படப்பிடிப்பு தள அலுவலர்கள், தயாரிப்பு நிறுவன அலுவலர்கள், உயிருக்கும், உணர்வுக்கும் நெருக்கமாக்கி ஆளுமை செலுத்தி படைத்து, உங்களுக்கு விருந்தளித்த அனைவருக்கும் அவர்களின் அயராது பணிச்சுமையைப் புரிந்து பின்னணியில் இருந்து முழுதாய் ஊக்கமளித்த அவரவர்தம் குடும்ப உறுப்பினர்களுக்கும் .... இக்கணத்தில், மனதார நன்றி கூறிக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Director Arunraja Kamaraj Thanks Note regarding his successful #Label Webseries @Arunrajakamaraj @teamaimpr pic.twitter.com/zHNIjwt6tV
— Team AIM (@teamaimpr) December 30, 2023
- 'அன்னபூரணி’ திரைப்படம் டிசம்பர் 29-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.
- இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.
அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், நயன்தாரா, ஜெய் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்த 'அன்னபூரணி' திரைப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இதையடுத்து இப்படம் டிசம்பர் 29-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

இதன்பின்னர், இப்படத்திற்கு பல எதிர்ப்புகள் வந்தது. அதுமட்டுமல்லாமல், மும்பையை சேர்ந்த சிவசேனா கட்சி முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர் 'அன்னபூரணி' திரைப்படம் இந்து மத உணர்வை புண்படுத்துவதாகவும், லவ் ஜிகாத்தை ஆதரிப்பதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக மும்பை காவல் நிலையத்தில் இப்படத்திற்கு எதிராக புகாராளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், தொடர்ந்து பலர் 'அன்னபூரணி' படத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வந்ததையடுத்து நெட்பிளிக்ஸ் தளத்திலிருந்து இப்படம் நீக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தொடர்ந்து, இந்து மதத்தையும் பிராமண சமூகத்தையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை இதனால் ஏற்ப்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
- நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் 'அன்னபூரணி'.
- இந்த படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கினார்.
அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், நயன்தாரா, ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்த 'அன்னபூரணி' திரைப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இதையடுத்து இப்படம் டிசம்பர் 29-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

இதன்பின்னர், இப்படத்திற்கு பல எதிர்ப்புகள் வந்தது. அதுமட்டுமல்லாமல், மும்பையை சேர்ந்த சிவசேனா கட்சி முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர் 'அன்னபூரணி' திரைப்படம் இந்து மத உணர்வை புண்படுத்துவதாகவும், லவ் ஜிகாத்தை ஆதரிப்பதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக மும்பை காவல் நிலையத்தில் இப்படத்திற்கு எதிராக புகாராளித்தார்.
இதையடுத்து இப்படம் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. தொடர்ந்து இப்படத்தை ஓடிடியில் இருந்து நீக்குவது சரியல்ல என சிலர் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் "இந்தியாவில் தணிக்கை செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என எதுவும் இல்லை. இது ஓடிடி-களுக்கும் பொருந்தும். தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை அழுத்தம் கொடுத்து ஓடிடி-யில் இருந்து நீக்கவைப்பது திரைத்துறைக்கே நல்லதல்ல. ஒரு படத்தை அனுமதிப்பதற்கும் தடை செய்வதற்கும் தணிக்கை குழுவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இத்தகைய நிகழ்வுகளே தணிக்கைக் குழுவின் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தும்" என்று கூறினார்.
- நடிகை பிரக்யா வரலாறு முக்கியம், என்4 போன்ற படங்களில் நடித்துள்ளார்.
- சிரிப்பால் பதில் அளித்து கடந்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
தமிழ் திரையுலகில் வித்தியாசமான படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ஜெய். திருமணம் பற்றிய கேள்விகளுக்கு தனது சிரிப்பாலேயே பதில் அளித்து கடந்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், ஜெய் மற்றும் நடிகை பிரக்யா நாக்ரா திருமணம் செய்து கொண்டதை உணர்த்தும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நடிகை பிரக்யா வரலாறு முக்கியம், என்4 போன்ற படங்களில் நடித்துள்ளார்.
வைரலாகி வரும் புகைப்படத்தில் பிரக்யா கழுத்தில் தாலி அணிந்துள்ளார். இவருடன் நடிகர் ஜெய் தனது கையில் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார். இதே புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நடிகை பிரக்யா "கடவுள் ஆசியுடன் புதிய வாழ்க்கை தொடங்கியது," என குறிப்பிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் நடிகர் ஜெய் திருமணம் செய்து கொண்டாரா என ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், சிலர் இந்த புகைப்படத்தின் பின்னணியில் கேமரா வைக்கப்பட்டு இருப்பதை உற்று நோக்கி இது புதிய படத்திற்கான புரமோஷனாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் ஜெய் அடுத்து நடித்துள்ள திரைப்படம் பேபி& பேபி.
- இத்திரைப்படத்தை பிரதாப் இயக்கியுள்ளார்.
இந்தாண்டு நடிகர் ஜெய் நடிப்பில் தீரா காதல் மற்றும் பார்ட்டி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தன . நடிகர் ஜெய் அடுத்து நடித்துள்ள திரைப்படம் பேபி& பேபி. இத்திரைப்படத்தை பிரதாப் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ஜெய்யுடன், யோகி பாபு, சத்யராஜ், கீர்த்தனா, சாஇ தன்யா, பிரக்யா நக்ரா, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தங்கதுரை, ராமர், ராஜேந்திரன், சேஷு, பிரத்தோஷ் மற்றும் பலர் என நகைச்சுவை நடிகர்களின் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
இப்படத்திற்கு டி,இமான் இசையமைத்துள்ளார். யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. திரைப்படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். படத்தின் டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இத்திரைப்படம் ஒரு குழந்தையை சுற்றியே நடக்கிறது. டீசரில் அனைவரும் ஒரே கேள்வியைதான் கேட்கிறார்கள். யாரோட குழந்தை டா இது ? என்று. டீசர் திரைப்படத்தின் மீது ஒரு எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் ஜெய் அடுத்து நடித்துள்ள திரைப்படம் பேபி& பேபி.
- இத்திரைப்படத்தை பிரதாப் இயக்கியுள்ளார்.
கடந்த ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் தீரா காதல் மற்றும் பார்ட்டி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தன . நடிகர் ஜெய் அடுத்து நடித்துள்ள திரைப்படம் பேபி& பேபி. இத்திரைப்படத்தை பிரதாப் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ஜெய்யுடன், யோகி பாபு, சத்யராஜ், கீர்த்தனா, சாஇ தன்யா, பிரக்யா நக்ரா, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தங்கதுரை, ராமர், ராஜேந்திரன், சேஷு, பிரத்தோஷ் மற்றும் பலர் என நகைச்சுவை நடிகர்களின் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
இப்படத்திற்கு டி,இமான் இசையமைத்துள்ளார். யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. திரைப்படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். படத்தின் டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இத்திரைப்படம் ஒரு குழந்தையை சுற்றியே நடக்கிறது. டீசரில் அனைவரும் ஒரே கேள்வியைதான் கேட்கிறார்கள். யாரோட குழந்தை டா இது ? என்று. டீசர் திரைப்படத்தின் மீது ஒரு எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் படத்தின் முதல் பாடலான ஆரா அமுதே பாடலில் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை யுகபாரதி வரிகளில் சைந்தவி பாடியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் ஜெய் அடுத்ததாக நடித்துள்ள திரைப்படம் பேபி& பேபி.
- இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
நடிகர் ஜெய் அடுத்ததாக நடித்துள்ள திரைப்படம் பேபி& பேபி. இத்திரைப்படத்தை பிரதாப் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ஜெய்யுடன், யோகி பாபு, சத்யராஜ், கீர்த்தனா, சாய் தன்யா, பிரக்யா நக்ரா, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தங்கதுரை, ராமர், ராஜேந்திரன், சேஷு, பிரத்தோஷ் மற்றும் பலர் என நகைச்சுவை நடிகர்களின் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. திரைப்படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். படத்தின் டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
படத்தின் அடுத்த பாடலான தென்பாண்டி முத்துபோல வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை யுகபாரதி வரிகளில் திவாகர் மற்றும் மீனாட்சி இளையராஜா இணைந்து பாடியுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நகைச்சுவை நடிகர்களின் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.
- யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
நடிகர் ஜெய் நடித்துள்ள திரைப்படம் பேபி& பேபி. இத்திரைப்படத்தை பிரதாப் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ஜெய்யுடன், யோகி பாபு, சத்யராஜ், கீர்த்தனா, சாய் தன்யா, பிரக்யா நக்ரா, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தங்கதுரை, ராமர், ராஜேந்திரன், சேஷு, பிரத்தோஷ் மற்றும் பலர் என நகைச்சுவை நடிகர்களின் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. திரைப்படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், 'என்ன தவம்' என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்பாடலை யுகபாரதி வரிகளில் அரிஷ் ராகவேந்திரா மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.