என் மலர்
நீங்கள் தேடியது "Jet Airway"
டெல்லியில் ‘ஜெட் ஏர்வேஸ்’ ஊழியர்கள் தங்களது பாதிப்பை வெளிப்படுத்தும் விதமாக ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். #JetAirwaysEmployees #Strike
புதுடெல்லி:
கடன்சுமை காரணமாக ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனம் விமான சேவையை நிறுத்தி உள்ளது. இதனால் விமான பயணிகள் மட்டுமின்றி அந்த நிறுவனத்தின் ஊழியர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தங்களது பாதிப்பை வெளிப்படுத்தும் விதமாக ‘ஜெட் ஏர்வேஸ்’ ஊழியர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண் விமானிகள், பெண் ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போராட்டம் குறித்து நிறுவன அதிகாரி அசோக் குப்புசாமி கூறுகையில், “ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறோம். சில காரணங்களால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலாத சூழல் ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்துக்கு ஏற்பட்டது. இதை சமாளிக்க வங்கிகளிடம் கடன் தொகை கோரப்பட்டது. ஆனால் கடன் கிடைக்கவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு கடன் கிடைக்க உதவி செய்ய வேண்டும்” என்றார். #JetAirwaysEmployees #Strike
கடன்சுமை காரணமாக ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனம் விமான சேவையை நிறுத்தி உள்ளது. இதனால் விமான பயணிகள் மட்டுமின்றி அந்த நிறுவனத்தின் ஊழியர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தங்களது பாதிப்பை வெளிப்படுத்தும் விதமாக ‘ஜெட் ஏர்வேஸ்’ ஊழியர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண் விமானிகள், பெண் ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போராட்டம் குறித்து நிறுவன அதிகாரி அசோக் குப்புசாமி கூறுகையில், “ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறோம். சில காரணங்களால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலாத சூழல் ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்துக்கு ஏற்பட்டது. இதை சமாளிக்க வங்கிகளிடம் கடன் தொகை கோரப்பட்டது. ஆனால் கடன் கிடைக்கவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு கடன் கிடைக்க உதவி செய்ய வேண்டும்” என்றார். #JetAirwaysEmployees #Strike
நிதி நெருக்கடி காரணமாக சென்னையில் இருந்து இயக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் மறுஅறிவிப்பு வரும்வரை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. #JetAirways
சென்னை:
கடன் சுமை, நிதி நெருக்கடி காரணமாக இந்தியா முழுவதும் ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமான சேவை பெரும் அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து நள்ளிரவு 1.15 மணிக்கு பாரீஸ், காலை 11.25 மணி, மாலை 4.50 மணிக்கு மும்பைக்கும் என 3 விமானங்களை அந்த நிறுவனம் இயக்கி வந்தது.
இந்தநிலையில் அந்த நிறுவன விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவதை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்திவிட்டன. இதையடுத்து சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 3 விமானங்களையும் மறுஅறிவிப்பு வரும்வரை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுபற்றி முன்கூட்டியே பயணிகளுக்கு தகவல் தரப்பட்டு, மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். #JetAirways
கடன் சுமை, நிதி நெருக்கடி காரணமாக இந்தியா முழுவதும் ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமான சேவை பெரும் அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து நள்ளிரவு 1.15 மணிக்கு பாரீஸ், காலை 11.25 மணி, மாலை 4.50 மணிக்கு மும்பைக்கும் என 3 விமானங்களை அந்த நிறுவனம் இயக்கி வந்தது.
இந்தநிலையில் அந்த நிறுவன விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவதை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்திவிட்டன. இதையடுத்து சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 3 விமானங்களையும் மறுஅறிவிப்பு வரும்வரை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுபற்றி முன்கூட்டியே பயணிகளுக்கு தகவல் தரப்பட்டு, மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். #JetAirways