என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kandaswamy"

    • நான்கு திசைகளிலும் வாசல்களை கொண்டிருந்தாலும், வடக்கு வாசலைத் தவிர மற்ற மூன்று வாசல்கள்தான் பயன்பாட்டில் உள்ளன.
    • மாருதப் புரவீகவல்லி வழிபட்ட செம்பு வேல், சிவலிங்கம், தான்தோன்றி விநாயகர் ஆகிய மூன்றுமே இன்றும் ஆலயங்களில் இருக்கின்றன.

    இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ளது, மாவிட்டபுரம் கந்தசாமி திருக்கோவில். 'மாவிட்டபுரம்' என்பதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. மா + புரம் என பிரித்து பொருள் கொண்டால் மாமர வடிவிலான அசுரனை சம்காரம் செய்து அருளியத் தலம் என்பது பொருள். மாருதப்புர வீகவல்லியின் மா -குதிரை/பெருநோய், விட்ட- நீங்கிய, புரம் - தலம் என்பதால் மாவிட்டபுரம் என்று ஆனதாக மற்றொரு காரணமும் கூறப்படுகிறது.

    தல வரலாறு

    சோழ மன்னனின் மகளாக பிறந்தவள், மாருதப்புரவீகவல்லி. இவளது முற்பிறவியில் ஹயக்கிரீவ முனிவரின் சாபத்தால் குன்ம நோயும், குதிரை முகமும் தோன்றி இளவரசியை வாட்டியது. இந்த குறை தீர சோழ, பாண்டிய, சேர நாட்டு திருத்தலங்கள் பலவற்றிலும் நீராடி இறைவனை வழிபட்டு வந்தாள். தல யாத்திரையின் போது, சாந்தலிங்க முனிவரை தரிசனம் செய்தாள். அந்த முனிவர், "இலங்கை நாட்டில் அமைந்துள்ள நகுலேச்சரம் எனும் தலத் தீர்த்தமான கண்டகி தீர்த்தத்தில் நீராடினால் சாபம் நீங்கும்" என்றார்.

    இதையடுத்து கதிர்காமம் தீர்த்த யாத்திரை முடித்த நிலையில், நகுலேச்சரத்தில் நகுல முனிவரை சந்தித்தாள். அவர், "எனக்கு ஏற்பட்ட கீரி முகம், இத்தலம் நீராடிய பிறகு இயல்பான முகமாக மாறியது. அதேபோல் நளன், அர்ச்சுனன் ஆகியோரும் இங்கு நீராடி நலம் பெற்றுள்ளனர். எனவே நீயும் இத்தீர்த்தத்தில் நீராடி உன் சாபம் நீங்கப்பெறுவாய்" என்றார். அதன்படியே நீராடி கந்தனை வணங்கி வழிபட்டு வந்த மாருதப்புரவீகவல்லிக்கு, அவளது நோய் நீங்கியதுடன், குதிரை முகமும் அகன்று அழகிய முகம் கிடைத்தது. அது முதல் இந்த தலம் 'துரகானன விமோசனபுரி' என வடமொழியிலும், 'மாவிட்டபுரம்' எனத் தமிழிலும் அழைக்கப்பட்டது.

    தன் மகளின் நோய் தீர்த்த இறைவனுக்கு, சோழ மன்னன் மிகப்பெரிய ஆலயம் ஒன்றை எழுப்பினான். இவ்வாலயத்தில் அருளும் கந்தசாமி விக்ரகம் இங்கிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டது. அது சென்றடைந்த இலங்கை துறைமுகம் இன்று 'காங்கேசன் துறை முகம்' என்று அழைக்கப்படுகிறது. நகுலேச்சரம் தலத்தில் மாருதப்புரவீக வல்லியின் மீது காதல் கொண்ட உக்கிர சிங்கசேனன், இளவரசியின் தந்தையிடம் அவளை மணம் முடிக்க அனுமதி பெற்றான். அவர்களுக்கு கோவில் திருப்பணி முடிந்து குடமுழுக்கு நடைபெற்ற பின்னர் திருமணம் நடைபெற்றது.

    ஆலய அமைப்பு

    நான்கு திசைகளிலும் வாசல்களை கொண்டிருந்தாலும், வடக்கு வாசலைத் தவிர மற்ற மூன்று வாசல்கள்தான் பயன்பாட்டில் உள்ளன. மேற்கு வாசலில் 80 அடி உயர ராஜகோபுரம் கலைநயத்துடன் விண்ணை முட்டி நிற்கிறது. அருகே வேட்டை மண்டபம் உள்ளது. நான்கு மாட வீதிகளும், மூன்று பிரகாரங்களுமாக ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் வில்லு மண்டபம், தட்டி மண்டபம், ராஜகோபுரம், வசந்த மண்டபம், துவார கோபுரம், ஸ்தம்ப மண்டபம், ஸ்நபன மண்டபம், மகா மண்டபம் , அந்தாரள மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகியவை முறைப்படி கட்டப்பட்டுள்ளன. இளவரசியின் குதிரையின் முகம் மற்றும் அழகு முகம் கொண்ட சிற்பங்கள் ஸ்நபன மண்டபத்தில் காணப்படுகின்றன.



    ஆலயத்தில் விநாயகர், சந்தான கோபாலர், மகாலட்சுமி, நாகராஜர், சண்முகர், முத்துக்குமாரசாமி, சுப்பிரமணியர், சந்திரசேகரர், மாயூரர் ஆகிய திருமேனிகள் ஒருங்கே அமைந்துள்ளன. இரண்டாம் பிரகாரத்தின் மேற்கே பழனி தண்டாயுதபாணி, வடக்கே திருச்செந்தூர் செந்தில் ஆண்டவன், கிழக்கே நவக்கிரகங்கள் மற்றும் பைரவர் சன்னிதிகள் இருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் நடுநாயகமாக கருவறையில் வள்ளி - தெய்வானை சமேத கந்தசுவாமி நின்ற கோலத்தில் அருள் வழங்குகிறார். இவர்களின் பின்புறம் காவலாக மயில் அழகுடன் காட்சி தருகிறது. இந்த வடிவம் சோழர் காலத்தைச் சேர்ந்தது என்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

    மாருதப் புரவீகவல்லி வழிபட்ட செம்பு வேல், சிவலிங்கம், தான்தோன்றி விநாயகர் ஆகிய மூன்றுமே இன்றும் ஆலயங்களில் இருக்கின்றன. இந்த மூன்றிற்கும் முதல் மரியாதை செய்த பிறகே, பிற தெய்வங்களுக்கு பூஜைகள் நடைபெறும். ஆலயத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், கிழக்கே 127 அடி உயரத்தில் 11 நிலைகள் கொண்ட இலங்கையின் மிக உயரமான ராஜகோபுரம் எழுப்பப்பட்டு வருகிறது. இவ்வாலயத்தைப் பற்றி அருணகிரிநாதர் புகழ்ந்து பாடியிருக்கிறார்.

    இது தவிர யாழ்ப்பாண வைணவ வைபவ மாலை, தட்சிணக் கயிலாய புராணம், கயிலாயம் மாலை, நகுலாசல புராணம், நகுல மலைக் குறிஞ்சி, நகுல மலைச் சதகம், நகுலகிரி புராணம், நகுலேஸ்வரர் வினோத வித்யா கவி பூங்கொத்து முதலிய பழமையான நூல்கள் பலவும் இத்தலத்தை விரிவாக புகழ்ந்து உரைக்கின்றன. யாழ்ப்பாண நல்லூர் சரவணமுத்து புலவர் இயற்றிய ஊஞ்சல் பாக்கள், சுண்ணாகம் முத்துக்குமார் கவிராசர் இயற்றிய மாவை சுப்பிரமணியர் தோத்திரம், மாவை கலிவெண்பா, புன்னை நகர் கணேச ஐயர் இயற்றிய மாலை சுப்பிரமணியன் தோத்திர விருத்தம் போன்ற ஏராளமான இலக்கியங்கள் மாவைக் கந்தனை புகழ்கின்றன.

    இந்த ஆலயத்தில் அமாவாசை தோறும் கண்டகி தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது சிறப்பு. தைப்பூசம் லட்சார்ச்சனை, ஆனி மற்றும் ஆடியில் 25 நாட்கள் மகோற்சவம் நடைபெறுகிறது. இவ்விழாவில் இலங்கையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். இது தவிர ஐப்பசி சுக்ர வாரம், நவராத்திரி , கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவாரம், மார்கழி திருவெம்பாவை என விழாக்கள் குறைவின்றி நடைபெறுகின்றன.

    மாவை ஆதீனத்தால் சிறப்புடன் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த ஆலயத்தில் 6 கால பூஜைகள் நடைபெறுகிறது. இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    இலங்கை நாட்டின் வடபகுதியான யாழ்ப்பாண மாவட்டத்தில், தெல்லிப்பிழை வட்டத்தில், காங்கேசன் துறைமுகத்தில் இருந்து தெற்கே 5 கிலோமீட்டர் தூரத்திலும், யாழ்ப்பாணத்திற்கு வடக்கே 17 கிலோமீட்டர் தொலைவிலும், பலாலி விமான நிலையத்திற்கு மேற்கே 2 கிலோமீட்டர் தொலை விலும் மாவிட்டபுரம் திருத்தலம் அமைந்துள்ளது. மாவிட்ட புரத்திற்கு பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உள்ளன.

    • ஒரு கட்சி வளர்ச்சிப் பாதையில் செல்ல முக்கிய பதவிகளில் இளைஞர்களுக்கு, புதியவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
    • அரசு ஊழியர் வயதாகி விட்டால் பணி ஓய்வு கொடுத்து அனுப்புகின்றனர். வயதானவுடன் சிந்தனை ஓட்டம் மாறிவிடும்.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டு வட்டார காங்கிரஸ் சார்பில் ஒற்றுமை நடைபயணம் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    முன்னாள் அமைச்சர் ஷாஜகான் தலைமை வகித்தார். மாநில தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன், எம்.எல்.ஏ. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், பாலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதில் முன்னாள் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-

    ஒரு கட்சி வளர்ச்சிப் பாதையில் செல்ல முக்கிய பதவிகளில் இளை ஞர்களுக்கு, புதியவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும். கட்சியில் மூத்தவர்கள் முன்வந்து சிலவற்றை விட்டுக் கொடுக்க வேண்டும்.

    ஒரு கட்சி நிலைத்து நிற்க வேண்டுமென்றால் கட்சி தொண்டன் வாழ வேண்டும்.

    காங்கிரஸ் கட்சியில்தான் ஒரு தொண்டன் எம்.எல்.ஏ., அமைச்சர், முதல்- அமைச்சர் பதவியில் அமர முடியும். ஆனால் சிலர் கட்சிப்பத விகளில் இளைஞர்கள் தொண்டர்கள் வருவதை தடுக்கின்றனர்.

    காங்கிரசில் வல்சரா ஜிக்கு அடுத்து நான்தான் சீனியராக உள்ளேன். நான் தலைவர் பதவிக்கு வரக்கூடாது என முக்கிய நபர் தடுக்கிறார்.

    கட்சிக்காக கடுமையாக உழைக்க, செலவிட தயாராக உள்ளேன். இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதற்கு சோனியாகாந்தியே முன்மா திரியாக உள்ளார்.

    அரசு ஊழியர் வயதாகி விட்டால் பணி ஓய்வு கொடுத்து அனுப்புகின்றனர். வயதானவுடன் சிந்தனை ஓட்டம் மாறிவிடும். ஒரு பணியை சிறப்பாக செய்ய முடியாது. ஆனால் அரசியலில் 70 வயதானலும் போகமாட்டேன் என சிலர் அடம்பிடிக்கின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×