என் மலர்
நீங்கள் தேடியது "Kannan"
- அதற்குக் காரணம் கோபியர் கண்ணனிடம் காட்டிய பிரேமை அலாதியானது.
- கோபியர்களால் ஒரு கணம் கூட கிருஷ்ணனைப் பிரிந்து இருக்க முடியாது.
"அநுராக மனோரமம் முக்தஸங்க மனோரமம்" என்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைப் போற்றிப் பணிவர்.
அநுராக மனோரமம் என்றால் அன்பர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியை உண்டு பண்ணுகிறவன் என்று பொருள்.
முக்தஸங்க மனோரமம் என்றால் முற்றும் துறந்த பற்றற்ற பரமஞானியர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்பவன் என்று பொருள்.
ஸ்ரீமந் நாராயணனுக்கு ஆழ்வார்கள் & ஸ்ரீராமருக்கு வானரங்கள் & சிவ பெருமானுக்கு நாயன்மார்கள் என்பது போல்
ஸ்ரீ கிருஷ்ணனுக்கு கோபிகா ஸ்திரீகளும் அடியார்களைப் போல் அபரிதமான பக்தி கொண்டிருந்தனர்.
கண்ணன் மீது நீங்காத பக்தி பூண்ட கோபியர்கள் பூவுலகில் பெரும் புண்ணியத்தைச் செய்து பிறந்தவர்கள்.
கண்ணனின் மோகக் குழலோசைக்கு அந்த மோகனப் பதுமைகள் மதி மயங்கிப் போயினர்.
கோபிகாஸ்திரீகளின் பிரேமை மயக்கம் என்பது ஒரு வித்தியாசமான பக்தி.
அதற்குக் காரணம் கோபியர் கண்ணனிடம் காட்டிய பிரேமை அலாதியானது.
அற்புதமானது, ஆனந்த மயமானது.
பக்தர்களால் பகவானைத் தரிசிக்காமல் இருக்க முடியாது.
அதே போல் கோபியர்களால் ஒரு கணம் கூட கிருஷ்ணனைப் பிரிந்து இருக்க முடியாது.
ஸ்ரீ கிருஷ்ணன் மதுராபுரிக்குச் சென்றதும், அவனது பிரிவை கோபியர்களால் தாங்க முடியவில்லை.
கண்ணனிடம் பூண்டுள்ள பிரேமையை அவர்களால் மறக்க முடியவில்லை.
கோபியர், கண்ணனின் திருமேனியைத் தரிசித்து மகிழ்ந்த பக்திப் பாவையர்கள்.
அவர்கள் நிலையான பேரின்பத்தைக் கண்டவர்கள். சிற்றின்பத்தைக் காணாதவர்கள்.
கோபியர், தாங்கள் ஸ்ரீ கிருஷ்ணனிடம் கொண்டுள்ள அபரிதமான தாபத்தினால் உலகையே மறந்து விடுகிறார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணன் முக்குணங்களுக்கும் அப்பாற்பட்ட பரம்பொருள் ஆனதால் கோபியர்களின் பிரேமையும் நிர்குண சொரூபமடைந்து ஜென்ம சாபல்யம் அடைகிறது.
கோபியர் வேத சாஸ்திர இதிகாசங்களைக் கற்றுத் தெளிந்தவர்கள் அல்லர்.
ஆனால் கிருஷ்ணனிடம் பூண்டுள்ள பிரேமை எனும் பக்தியால் பேரானந்த பெருநிலையை அடைந்துவிட்ட தவமணிகள்.
அல்லும் பகலும் பக்தனைப் போல் பரந்தாமனிடம் பக்தி பூண்ட கோபியர் எங்கும், எதிலும், எப்போதும் ஸ்ரீ கிருஷ்ணனுடைய மோகனரூபத்தைக் கண்டு களித்துப் பெருமிதம் பூண்டவர்கள்.
அதனால்தான் இன்றும் ஹரிகதா காலசேபங்கள் பூர்த்தி பண்ணும் போது, "கோபிகா ஜீவன ஸ்மரணம்" என்று கூறப்படுகிறது.
கோபியர்களைப் போல் பக்திக்கு நிகரானவர்கள் எவருமே கிடையாது.
- ள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குழந்தை வடிவம் கொண்டவன்
- ஊஞ்சலின் ஆட்டம் போன்ற பார்வையை உடையவன், கண்களுக்கு இனியவன்.
கண்ணனின் புன்சிரிப்பு இனிமை மிக்கது. புன்சிரிப்பென்ற அமுதத்தால் அழகு பெற்ற தாமரை முகக்கொழுத்த மயில் இறகால் அலங்கரிக்கப்பட்ட திருமுக மனதிற்கினியதாயிருக்கும் விசாலமான கண்களையுடையது.
கிருஷ்ணனின் கண் தாமரை மொட்டு போன்றது, அவனுடைய கன்னப்பிரதேசம் கண்ணாடி போல் வழவழப்பும் மென்மையும் உடையது.
அவனுடைய முகம் தாமரை போன்றது, வேணுகானமாகிற தேன் நிரம்பியது.
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குழந்தை வடிவம் கொண்டவன், அழகிய திருமேனியை உடையவன்,
அவனுடைய குழலோசை இனியது, அந்த ஓசையால் பூரிப்படைந்த சந்திரனைப் போன்ற முகம் அவனுடையது.
கண்ணனின் முகம் லட்சுமி தேவியின் கையில் விளையாட்டாக இருந்து கொண்டிருக்கும் தாமரை போன்ற முகம்.
சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருப்பவன், ரகசியமான பாவனைகளைப் புல்லாங்குழலின் துவாரங்களில் நுழைத்து வாசிப்பவன்,
ஊஞ்சலின் ஆட்டம் போன்ற பார்வையை உடையவன், கண்களுக்கு இனியவன்.
அவனது சிரிப்பு வெட்கத்துடன் கூடியது போலும், அது அழகானது, தேனால் நனைக்கப்பட்டது போன்ற கீழுதடு, அது காந்தியால் பிரகாசிப்பது.
பூர்ண சந்திரனே கொண்டாடுகிற (சந்திர) முகத்தையுடையவன்.
சூரியனுடைய கிரகணங்கள் பனியை விரட்டியடிப்பவை இக்கிரகணங்களால் மெதுவாகத் தொடப்பட்டது.
அழகுடன் கூடியது, மிக்க மகிழ்ச்சி தருவது, அப்படிப்பட்ட புஷ்பத்துக்கு சமமான கண்கள் கிருஷ்ணனுடையவை,
கோகுலப் பெண்களுடன் விளையாட்டாகச் சண்டை போட்டான்.
ஜெயித்தவன் அவனே, இந்த லீலையால் கர்வமடைந்து மகிழ்கிற சந்திரனைப் போன்ற முகத்தையுடையவன்.
கண்ணனுடைய புல்லாங்குழலின் நாதம், அவனுடைய கை விரல்களால் அது மீட்டப்படுகிறது.
அந்த விரல் தாமரையின் இதழ் போன்றவை.
அந்த இனிமையான நாதத்தில் பெருகுகிற அமுதம் நிறைந்த தடாகம் போன்றவன் அவன்.
அவனுடைய புன்முறுவல் இயற்கையான ஆனந்த ரசம் நிரம்பியது.
அந்த ரசத்தை எப்போதும் தாங்குகிற கீழுதடு ரத்னம் போன்றது.
தன்னைத் தானாகவே கோகுலத்தில் பிறப்பை எடுத்துக் கொண்டவன்,
ஆனால் சர்வ வியாபகனான பகவான் அவன், அதிசயமான வேஷதாரியானவன், சம்கார பயத்திற்கு ஒரே மருந்தானவன்.
காதுகளில் தொங்கட்டான், பூக்கொத்தினுடைய இதழ்கள் அவனுடைய கன்னப் பிரதேசத்தை சிவப்பாகச் செய்கின்றன.
பரிசுத்தமானவன், வேத வாக்கியங்களுக்கும் எட்டாதவன்.
கண்ணனின் கண்கள் நீலோத்பலம் போன்றவை. அவனுடைய உதடுகள் இரு பாதியாக பிரிக்கப்பட்ட அரும்பு போன்றவை.
அவனுடைய கைவிரல் நுனிகள் வேகமாகப் புல்லாங்குழலின் மேல் அசையும், அக்குழலின் இனிமையை அவன் அனுபவிக்கிறான்.
ஸத்த, சித்து, ஆனந்தம் ஆகியவையே ரூபமாக உடையவன், எல்லா மாயையையும் ஒழித்தவன்,
சத்தியமென்ற தனத்துக்கு சகாயமாயிருப்பவன், மனத்திடனடக்கமும், புலன்களின் அடக்கமும் சாந்தமும் கூடுமிடம், எல்லா விக்கனங்களும் நீங்கிய இடம், நல்ல இதயம் படைத்த ஜனங்களின் ஆஸ்தியானவன்.
சிரசில் மயிலிறகு, நெற்றித் தலத்தில் கஸ்தூரி, திலகம், இரு காதுகளிலும் பச்சிலைகள், மூக்கில் முத்து, கழுத்தில் தொங்கும் முத்து மாலை, மந்தாரப்பூ மாலையின் வாசனையுடன் விளங்குவது.
மஞ்சள் பட்டாடையுடனும் புல்லாங்குழலுடனும் உள்ள கண்ணனை கோகுலப் பெண்கள் சூழ்ந்திருக்கின்றனர்.
அவ்வாறானவன் நம்மை ரட்சிக்கட்டும்.
- பக்தியுடன் இந்த விரதத்தைச் செய்தால் தீராத வினைகளெல்லாம் தீரும்.
- அளவிட முடியாத ஐஸ்வர்யங்கள் வந்து சேரும்.
புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தசியன்று அனந்த பத்மநாதனைத் தியானித்துக் கடைப்பிடிக்கவேண்டிய விரதம், அனந்த விரதம்.
விரத நாளன்று காலையில் நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, பூஜைக்குரிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மொழுகி, ஐந்து விதமான வண்ணங்களில் கோலம் போட்டு, தீர்த்தக் கலசம் வைத்து அனந்த பத்மநாபனைத் தியானித்து பூஜை செய்ய வேண்டும்.
பூஜையின்போது, ஐந்து படி கோதுமை மாவில் வெல்லம் சேர்த்து, 28 அதிரசங்கள் செய்ய வேண்டும்.
இவற்றில் 14 அதிரசங்களை வேதியர்களுக்குத் தந்து, தாம்பூலம் மற்றும் தட்சிணையும் வழங்க வேண்டும்.
மீதியை நாம் உண்ண வேண்டும்.
அதேபோன்று, பூஜைக்குரிய பொருள்கள் அனைத்தும் 14 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.
பக்தியுடன் இந்த விரதத்தைச் செய்தால் தீராத வினைகளெல்லாம் தீரும்.
அளவிட முடியாத ஐஸ்வர்யங்கள் வந்து சேரும்.
14 வருடங்கள் இந்த விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து வழிபடும் அன்பர்களுக்கு நல்லன யாவும் வசமாகும்.
அவருக்குத் தோல்வி என்பதே இல்லை என்கின்றன ஞான நூல்கள்.
மிக அற்புதமான இந்த விரதத்தைக் கண்ண பரமாத்மா, பாண்டவர்களுக்கு உபதேசித்தார்.
கண்ணன் சொன்ன விரதம் இது. இதன்படி விரதம் இருந்து, சகல பாக்கியங்களையும் பாண்டவர்கள் பெற்றார்கள்.
இதை அனந்த சதுர்த்தசி விரதம் என்றும் சொல்வார்கள்.
- இந்தப் போர் தொடங்கும் முன் இவர் அர்ஜூனனிடம் மேற்கொண்ட உரையாடலே பகவத் கீதை ஆனது.
- பின்னர் துவாரகையில் தன் மனைவியான ருக்மணியுடன் வாழ்ந்து யாதவர்களின் அரசராக விளங்கினார்.
அரக்க குணம் கொண்ட கம்சனை அழிக்கவும், குருச்சேத்திர போர் மூலம் 100 கவுரவர்களையும் அவர்களுக்கு உதவியவர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும் கண்ணன் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
தன் தங்கை தேவகிக்கும், வசுதேவருக்கும் திருமணம் முடிந்ததும், அவர்களை தேரில் வைத்து ஊர்வலமாக சென்று கொண்டிருந்தான் கம்சன்.
அப்போது, 'உன் தங்கைக்கு பிறக்கப்போகும் எட்டாவது ஆண் குழந்தையால் உன் உயிர் போகும்' என்று ஒரு அசரீரி ஒலித்தது.
தன் உயிர் போகும் என்ற வார்த்தையைக் கேட்டதும், பாசம் வைத்திருந்த தங்கையின் மீது வாளை வீசும் முடிவுக்கு கம்சன் வந்தான்.
'கம்சா! தேவகிக்கு பிறக்கப்போகும் எட்டாவது மகனால்தானே உனக்கு அழிவு.
அவளுக்கு பிறக்கும் அத்தனை குழந்தைகளையும் உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன்.
தேவகியை விட்டு விடு!' என்று வாசுதேவர் கூறவே, தேவகியை கொல்லும் எண்ணத்தை கைவிட்டான் கம்சன்.
உடனே வசுதேவரையும் தேவகியையும் சிறையில் அடைத்து, தன் கண்காணிப்பிலேயே வைத்துக் கொண்டான்.
தேவகிக்கு பிறந்த குழந்தைகளை தொடர்ச்சியாக கொன்றுவிட்டான் கம்சன்.
8வது குழந்தையின் கருவை தன் வயிற்றில் சுமந்திருந்தாள் தேவகி.
இந்த குழந்தையும் தன் அண்ணனின் கையால் இறக்கப்போவதை எண்ணி, கர்ப் பவதியான தேவகி கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாள்.
ஒரு நள்ளிரவு நேரத்தில் தேவகிக்கு எட்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது.
அக்குழந்தையைப் பார்த்ததும் வசு தேவருக்கும், தேவகிக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சி, மறுகணமே மறைந்து போனது.
பொழுது விடிந்ததும் கம்சன் வந்து குழந்தையை கொண்டுபோய்விடுவான் என்பதால் அவர்கள் கலக்கம் கொண்டிருந்தனர்.
அப்போது குழந்தை, மகாவிஷ்ணுவாக சுய உருகொண்டு பேசத் தொடங்கியது.
'உங்களது முற்பலனால் நான் உங்கள் மகனாக பிறந்துள்ளேன். என்னை கோகுலத்திற்கு கொண்டு செல்லுங்கள்.
அங்கு வசுதேவரின் நண்பரான நந்தகோபருக்கு பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்து விடுங்கள்.
யாசோதை என்னை வளர்க்கட்டும். உரிய நேரத்தில் எல்லாம் நல்ல விதமாக நடக்கும்'
என்று கூறிய விஷ்ணு பகவான், மறுகணமே சாதாரண குழந்தையாக மாறினார்.
குழந்தையை மாற்றுவதற்கு தோதாக, சிறையின் வாயில்கள் தானாக திறந்தன. காவலர்கள் மயக்கமுற்றனர்.
வசுதேவர் சற்றும் தாமதிக்காமல், குழந்தையை ஒரு கூடையில் எடுத்து வைத்தபடி கோகுலம் சென்றார்.
குழந்தையை மாற்றிக் கொண்டு, பெண் குழந்தையை கொண்டு வந்தார்.
காலையில் தேவகிக்கு குழந்தை பிறந்த செய்தி கேட்டு வந்த கம்சன், பெண் குழந்தையைப் பார்த்ததும் வியப்படைந்தான்.
ஆண் குழந்தைதானே பிறந்திருக்க வேண்டும் என்று எண்ணியவன் இறுதியில் எந்தக் குழந்தையாக இருந்தாலும் அதை அழித்து விடுவது என்ற முடிவில், பெண் குழந்தையை வாளால் வெட்ட ஓங்கினான்.
ஆனால் அந்தக் குழந்தை மேல் நோக்கி பறந்தது. துர்க்கையாக வடிவெடுத்தது.
'ஏ! கம்சா! உன்னைக் கொல்லப்போகிறவன், வேறொரு இடத்தில் பத்திரமாக இருக்கிறான். உரிய நேரத்தில் அவன் உன்னை அழிப்பான்' என்று கூறி மறைந்தது.
அந்த குழந்தைதான் பின்னாளில் பவானி அம்மனாக அவதாரம் எடுத்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்பட்டுள்ளது.
மாயமாய் மறைந்த பெண் குழந்தை சொன்னதைக் கேட்டு கம்சன் மேலும் அதிர்ச்சி அடைந்தான்.
தனது பணியாட்களை அனுப்பி விசாரித்தான். அப்போது கோகுலத்தில் வளரும் கிருஷ்ணர் தான் தேவகி பெற்ற 8 வது குழந்தை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து கம்சன் தனது வீரர்களை அனுப்பி கிருஷ்ணனை கொல்ல முயன்றான்.
அந்த அசுரர்கள் அனைவரையும் கிருஷ்ணர் வதம் செய்தார்.
இளவயதில் பிருந்தா வனத்தில் இருந்த பெண்களின் மனதில் கிருஷ்ணர் இடம் பிடித்தார்.
இவர்களுள் ஒருவரான ராதையுடன் தெய்வீகக் காதல் புரிந்தார்.
பிறகு மதுரா சென்று கம்சனை வென்று தன் தாத்தாவான உக்கிர சேனரிடம் ராஜ்யத்தை ஒப்படைத்தார்.
தனது அத்தை மகன்களான பாண்டவர்களுடன், குறிப்பாக அர்ஜூனனுடன் நட்பு கொண்டார்.
பின்னர் துவாரகை எனும் ஊருக்கு மதுரா மக்களுடன் குடிபெயர்ந்தார்.
பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே நடந்த குருசேத்திரப் போரில், தனது சேனையை கவுரவர்களிடம் கொடுத்து விட்டு தான் அர்ஜூனனின் தேரோட்டியாக பணிபுரிந்தார்.
இந்தப் போர் தொடங்கும் முன் இவர் அர்ஜூனனிடம் மேற்கொண்ட உரையாடலே பகவத் கீதை ஆனது.
பின்னர் துவாரகையில் தன் மனைவியான ருக்மணியுடன் வாழ்ந்து யாதவர்களின் அரசராக விளங்கினார்.
அவரது அவதார தினம்தான் உலகம் முழுவதும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.
- வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் பிஞ்சு பாத தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள்.
- இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும்.
பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும்.
அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து அரிசி மாவில் கோலமிட்டு பூக்கள், மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர்.
வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் பிஞ்சு பாத தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள்.
ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டிற்குள் தத்தித் தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.
கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து மாலைகளும், மலர்களும் சூடி அவனுக்கு பிடித்தமான வெண்ணெய், இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கல், பால் பாயாசம் போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து பக்தி பாமாலைகள் பாடி வழிபட வேண்டும்.
அந்த நீலவண்ண கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் தனது திருப்பாவையில் இவ்வாறு பாடியருளியுள்ளார்.
'மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயை குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகு தருவானின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.'
கிருஷ்ணனை இவ்வாறு பாடி வழிபட்டால் எல்லா விதமான தடைகளும், பிழைகளும் தீயினில் பட்ட தூசாக அழியும் என்று தனது திருப்பாவை பாசுரத்தில் கூறியுள்ளார்.
பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும்.
இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும்.
கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள்.
வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி மகிழ்வது சிறப்பு.
- கண்ணன் அந்த ஆடைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு அருகில் இருந்த மரத்தின் மேல் ஏறிக் கொண்டான்.
- பின்னர் அம்மனங்களைத் தனது தெய்வீகச் சக்தியால் நிரப்பி விடுவார்.
ஆயர்பாடியில் உள்ள கோபியர் கண்ணபிரானிடம் கொண்ட வேட்கை மிகுதியால் அவன் தம்மைக் காதலிக்க வேண்டி நோன்பு நோற்றனர்.
முடிவில் யமுனையில் நீராடச் சென்றனர். அங்கே அவர்கள் சேலைகளைக் கரையில் வைத்து விட்டு நீராடினர்.
கண்ணன் அந்த ஆடைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு அருகில் இருந்த மரத்தின் மேல் ஏறிக் கொண்டான்.
சிறிது நேரம் அவர்களை அலைக்கழித்தான்.
பின்பு அவர்கள் கைகூப்பி வணங்கிக் கேட்க, ஆடைகளைத் திருப்பி கொடுத்தான்.
ஸ்ரீகிருஷ்ணர், கோபிகைகளின் மேல் வைத்திருந்த தீராத அன்பின் காரணமாக அவர்களின் வீடுகளுக்குச் சென்று வெண்ணையினைத் திருடி ஆசை தீர உண்பார்.
ஆனால் அவர் உண்மையிலேயே திருடியது தனது பக்தர்களின் மனங்களில் உள்ள கெட்ட குணங்களைத் தான்.
பின்னர் அம்மனங்களைத் தனது தெய்வீகச் சக்தியால் நிரப்பி விடுவார்.
அதன் பயனாக அவர்கள் உவகை மறந்து ஸ்ரீகிருஷ்ணரிடமே அதிதீவிர பக்தி பூண்டு, அவரது பாதாரவிந்தத்தையே நினைத்துக் கொண்டிருந்தனர். அதனால் அவர்கள் எல்லையற்ற பேரானந்தத்தை அடைந்தனர்.
ஸ்ரீகிருஷ்ணரின் தனிப்பட்ட ஆத்மா, உலக உயிர்களிலெல்லாம் வாசம் செய்கின்றது என்பது இதன் மூலம் தெளிவாக விளங்குகின்றது.
- குழந்தைகளின் பாத வடிவ சுவடு பார்ப்பதற்கு எட்டு (8) போன்ற வடிவுடன் இருக்கும்.
- அதற்கு மேல் 5 விரல் பதிவுகள் இருக்கும்.
கிருஷ்ணர் ஆயர்பாடி பெண்கள் வைத்துள்ள வெண்ணையை திருடும்போது வெண்ணை கீழே சிந்தி அதில் அவன் பாதங்கள் பதிந்து வீடு முழுவதும் கண்ணன் வந்து போனதற்கான கால் தடங்கள் இருக்கும்.
இதை வைத்தே கண்ணன் வெண்ணை திருடியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்வார்களாம்.
இருப்பினும், கோபப்பட மாட்டார்கள்.
கண்ணன் வந்து போனால் அவர்கள் வீட்டு பசுக்கள் நிறைய பால் சொறியும்.
செல்வம் பொங்கும் என்பது அவர்களது நம்பிக்கை.
இந்த தாத்பரியத்திற்காகவே நம் முன்னோர்கள் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று தங்கள் வீடுகளில் வெண்ணையினால் கண்ணன் பாதங்கள் போடுவதை வழக்கமாக கொண்டனர்.
கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தை பாத சுவட்டை மாக்கோலமாக வரைவது நாடெங்கும் எல்லா இடங்களிலும் மரபுவழி பழக்கமாக உள்ளது.
இப்படி பாதம் வரைவதில் சைவ வைணவ ஒற்றுமை இருப்பதாக சொல்கிறார்கள்.
குழந்தைகளின் பாத வடிவ சுவடு பார்ப்பதற்கு எட்டு (8) போன்ற வடிவுடன் இருக்கும்.
அதற்கு மேல் 5 விரல் பதிவுகள் இருக்கும்.
அதாவது ஓம் "நமோ நாராயணா" என்ற எட்டு எழுத்து மந்திரமும் "நமசிவாய" என்ற ஐந்தெழுத்து மந்திரமும் ஒருங்கிணைந்து இருப்பதை திருப்பாதம் பிரதிபலிக்கிறது.
16,108 ராணிகளுடன் துவாரகையில் கண்ணன் அரசாட்சி செய்தான்.
அப்போது நாரத முனிவர், அரசிகள் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோர் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார்.
அதேபோல் பிருந்தாவனத்தில் நடந்த "ராஸ லீலை'யிலும் ஒவ்வொரு கோபிகைக்கும் ஒவ்வொரு கண்ணன் கூட இருந்து ஆடிப் பாடினார். இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து ஆனந்தப்பட்டிருக்கிறார்.
"இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்க வல்ல மகிமை வாய்ந்த தெய்வக் குழந்தை கண்ணன்' என்பதைக் குறிப்பிடவே ஒவ்வொருவர் வீட்டிலும் கிருஷ்ண ஜெயந்தியன்று "திருவடிக் கோலம்' இடப்படுகிறது. அன்று எல்லோர் இல்லத்திலும் ஒரே நேரத்தில் "கிருஷ்ணரின் அருளாட்சி' இருக்கும்.
அதாவது கண்ணனின் அருட்சக்தி அங்கே கொலு வீற்றிருக்கும்.
- இந்தப் படம் விஜய் ஆண்டனியின் 25-வது படமாகும்.
- அருவி, வாழ் படத்தின் இயக்குனரான அருண் பிரபு இந்தப் படத்தை இயக்குகிறார்.
சென்னை:
இயக்குனர் இமயம் பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகர் கண்ணன். இவர் காதல் ஓவியம் படத்தின் மூலம் மறக்கமுடியாத நடிகராக அறியப்பட்டவர்.
இந்நிலையில், 'சக்தி திருமகன்' படத்திற்காக அழுத்தமான கதாபாத்திரத்தின் மூலம் மீண்டும் பெரிய திரைக்கு மறுபிரவேசம் செய்கிறார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது comeback இந்தப் படத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது.
இதில் வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன், திருப்தி ரவீந்திர, கிரண், ரியா ஜித்து, ஷோபா விஸ்வநாத் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் கேசவ் என பலரும் நடித்துள்ளனர்.
அருவி மற்றும் வாழ் படத்தின் இயக்குனரான அருண் பிரபு 'சக்தி திருமகன்' படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவாளர் ஷெல்லி காலிஸ்ட், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, எடிட்டர் ரேமண்ட் டெரிக் கிராஸ்தா, நடன இயக்குனர் ராஜசேகர் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் உள்ளனர்.
இந்தப் படம் விஜய் ஆண்டனியின் 25-வது படமாகும். இந்தப் படத்தை மீரா விஜய் ஆண்டனி என்ற பெயரில் விஜய் ஆண்டனி பிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரித்துள்ளது.
அழுத்தமான கதைசொல்லல் மற்றும் உணர்ச்சிகரமான நடிப்பால் இந்த படம் பார்வையாளர்களை நிச்சயம் ஈர்க்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஸமஸ்த கோபநதனம் ஹ்ருதம்புஜைகமோஹனம்
நமாமி குஞ்ஜமத்யகம் ப்ரஸன்ன பானுசோபனம்
நிகாமகாம தாயகம் த்ருகந்தசாருஸாயகம்
ரஸாலவேணுகாயகம் நமாமி குஞ்ஜநாயகம்
பொதுவான பொருள்: “தாமரை போன்ற இதயத்தால் அனைவரையும் வசீகரிப்பவரும், சூரியனை போன்று பிரகாசிப்பவரும், பக்தர்களுக்கும் இன்ன பிற மக்களுக்கும் அனைத்தையும் தந்து, அருள்புரியும் கண்ணா, உன் கடைக்கண் பார்வையால் எங்கள் அனைவரையும் கடைதேற்றுவாயாக” என்பது இந்த கண்ணன் ஸ்லோகத்தின் பொதுவான பொருளாகும்.
அனைத்து அம்சங்களையும் தன்னுள் முழுமையாக கொண்ட திருமாலின் ஒன்பதாவது அவதாரமான கண்ணனை போற்றும் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினந்தோறும் எப்போது வேண்டுமானாலும் 108 முறை துதிப்பது நல்லது. புதன், சனிக்கிழமைகளிலும், மாதத்தில் வரும் ஏகாதசி தினங்களிலும் காலையில் எழுந்து குளித்து முடித்தவுடன் உங்கள் பூஜையறையில் இருக்கும் கண்ணனின் படத்திற்கு சில துளசி இலைகளை சமர்ப்பித்து, இந்த ஸ்லோகத்தை 27 முறை அல்லது 108 முறை துதித்து வர உயர்ந்த சிந்தனைகளும், எண்ணங்களும் மனதில் தோன்றும். உங்களிடமிருக்கும் எதிர்மறை குணங்கள் நீங்கும். ஆக்கபூர்வமான ஆற்றல்கள் பெருகும்.
அதை அவர்கள் கிருஷ்ணரிடம் கேட்கவும் செய்தனர். ‘பரந்தாமா! இன்னும் சில காலத்தில் துவார யுகம் முடிந்து கலியுகம் தொடங்க உள்ளது. அந்த கலியுகம் எப்படி இருக்கும்?’ என்று கேட்டனர்.
அதற்கு கிருஷ்ணர், ‘கலியுகம் பற்றி சொல்வது என்ன? அது எப்படியிருக்கும் என்று உங்களுக்கு நேரடியாகவே காட்டுகிறேன்’ என்றார்.
பின்னர் நான்கு அம்புகளை எடுத்து, நான்கு திசைகளில் எய்தார். இப்போது நால்வரிடமும் திரும்பி, நீங்கள் நான்கு திசைக்கு ஒருவராக சென்று, அங்குள்ள அம்புகளைக் கொண்டு வாருங்கள் என்று ஆணையிட்டார். அதன்படியே நால்வரும் திசைக்கு ஒருவராகச் சென்றனர்.
முதலில் பீமன், தான் சென்ற திசையில் இருந்த அம்பை எடுத்துக் கொண்டு திரும்பும் போது ஒரு காட்சியைக் கண்டான். அங்கு ஐந்து கிணறுகள் இருந்தன. மத்தியில் ஒரு கிணறு, அதைச் சுற்றி நான்கு கிணறுகள். சுற்றியுள்ள நான்கு கிணறுகளில் சுவைமிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்துகொண்டே இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிணற்றில் மட்டும் நீர் வற்றி இருந்தது. இதனால் பீமன் சற்று குழம்பி, யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.
அடுத்து அர்ச்சுனன் தான் சென்ற திசையில் இருந்த அம்பை எடுத்தான். அப்போது ஒரு குயிலின் அற்புதமான இசைக் குரலைக் கேட்டான். அந்த ஒலி வந்த திசையில் பார்த்தபோது திடுக்கிட்டான். அங்கு இனிய குரல் கொண்ட குயில், ஒரு வெண் முயலை கொத்தி தின்றுகொண்டிருந்தது. முயலோ வலியால் துடித்து கொண்டிருந்தது. ‘மெல்லிசை கொண்டு மனதை மயக்கும் குயிலுக்கு இவ்வளவு கொடிய குணமா?’ என்ற குழப்பத்தோடு அங்கிருந்து நகர்ந்தான்.
அடுத்தது சகாதேவன். அவனும் கிருஷ்ணர் எய்த ஒரு அம்பை எடுத்தபடி திரும்புகையில் ஒரு காட்சியைக் கண்டான். பசு ஒன்று அழகிய கன்றை ஈன்றெடுத்தது. தன் நாவால் கன்றை வருடி சுத்தம் செய்தது. கன்று முழுமையாக சுத்தம் ஆகியும் நாவால் வருடுவதை, தாய் பசு நிறுத்தவில்லை. சுற்றியிருந்த பலர் கன்றை பசுவிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்தனர். அப்போது கன்றின் உடலில் காயங்கள் உண்டாகியிருந்தது. ‘தாய் எப்படி பிள்ளையை காயப்படுத்த முடியும்?’ என்ற குழப்பத்தோடு சகாதேவனும் கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.
இறுதியாக நகுலன் தனக்கான அம்பை எடுப்பதற்காகச் சென்றான். அந்த அம்பு ஒரு பெரிய மலையின் அருகில் கிடந்ததைக் கண்டான். அதை எடுக்க முன்னேறியபோது, மலையின் மீது இருந்து ஒரு பெரிய பாறை வேகமாக உருண்டு கீழே வந்தது. வழியில் இருக்கும் அனைத்து மரங்களையும், தடைகளையும் இடித்து உடைத்து தள்ளி விட்டு அது வேகம் பிடித்து வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு சிறிய செடியில் மோதி அந்தப் பாறை நின்று விட்டது. நகுலனுக்கு மிகப்பெரிய ஆச்சரியம். ‘சிறிய செடி எப்படி இந்த பாறையைத் தாங்கி நிறுத்தியது?’ என்ற குழப்பத்தோடு கிருஷ்ணரிடம் வந்தான்.
இப்போது பாண்டவர்களில் நான்கு பேரும் கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தனர். அவரவர் தாங்கள் கண்ட காட்சிகளையும், அவற்றால் மனதில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தையும் கிருஷ்ணரிடம் கூறினார்கள். அதற்கு தகுந்த விளக்கத்தை அளிக்கும் படியும் கேட்டுக் கொண்டனர்.
அனைத்தும் அறிந்த கிருஷ்ண பகவான், மெல்லிய சிரிப்போடு அவர்கள் நான்கு பேரும் கண்ட காட்சிகளைப் பற்றி விளக்கத் தொடங்கினார்.
முதலில் பீமனிடம் இருந்து தொடங்கினார். ‘பீமா! கலியுகத்தில் செல்வந்தர்களும், ஏழைகளும் வாழ்வார்கள். செல்வந்தர்களோ மிகவும் செழிப்பாக வாழ்வார்கள். தம்மிடம் உள்ள செல்வம் அபரிமிதமாக இருந்தாலும் கூட, அதில் ஒரு சிறு பகுதியை கூட ஏழைகளுக்கு கொடுத்து உதவ மாட்டார்கள். தங்களிடம் மேலும் மேலும் செல்வம் சேரவேண்டும் என்று நினைத்து பல தவறான வழியில் செல்வத்தை ஈட்டி சேமித்து வைப்பார்கள். நீ கண்ட கிணறுகளைப் போல. ஒரு பக்கம் செல்வந்தர்கள் நாளுக்கு நாள் செல்வந்தர்களாக மாறிக் கொண்டே இருக்க, மற்றொரு பக்கம் ஏழைகள் ஏழைகளாகவே வருந்துவார்கள்.’
அடுத்தது அர்ச்சுனன் கண்ட காட்சிக்கான விளக்கத்தைக் கூறினார். ‘அர்ச்சுனா! கலியுகத்தில் போலி மத குருக்கள், ஆசாரியர்கள் போன்றவர்கள் இனிமையாக பேசும் இயல்பும், அகன்ற அறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள். இருப்பினும் நீ கண்ட குயிலைப் போல, இவர்கள் மக்களை ஏமாற்றி, சுரண்டி பிழைக்கும் கள்வர்களாகவே இருப்பார்கள்.’
இப்போது சகாதேவனுக்கான விளக்கத்தை கூறினார் கிருஷ்ணர், ‘சகாதேவா! கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது மிகுந்த கண் மூடித்தனமான பாசத்தோடு இருப்பார்கள். பிள்ளைகளின் மீது உள்ள அளவற்ற பாசத்தால், அவர்கள் தவறு செய்தாலும் அதை பொருட்படுத்தாமல், பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்விற்கு தாங்களே காரணமாவார்கள். இதனால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை துன்பத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளும் என்பதை மறப்பார்கள். பிள்ளைகளும் தீயவினைகளால் துன்பம் அனுபவிப்பார்கள். நீ கண்ட பசு- கன்றைப் போல, பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவார்கள்.’
இறுதியாக நகுலனுக்கான விளக்கம். ‘நகுலா! கலியுகத்தில் மக்கள் சான்றோர்களுடைய நற்சொற்களைப் பேணாமல், நாளுக்கு நாள் ஒழுக்கத்தில் இருந்தும், நற்குணத்தில் இருந்தும் விலகுவார்கள். யார் நன்மைகளை எடுத்து கூறினாலும், அதை அவர்கள் பொருட்படுத்தமாட்டார்கள். எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி செயல்படுவார்கள். இப்படிப்பட்டவர்களை, பாறையை நிறுத்திய சிறிய செடியைப் போல, இறைவனால் மட்டுமே தடுத்துநிறுத்தி, நிதானப்படுத்தி அறிவுடன் செயல்படுத்த முடியும்.’
கலியுகம் எப்படி இருக்கும் என்பதை தங்கள் கண்களால் பார்க்க வைத்து, அதற்கு சரியான விளக்கத்தையும் அளித்த கிருஷ்ணனை, நான்கு பேரும் வணங்கி நின்றனர்.
வீடுகளின் பின்பக்கத்தில் துளசிமாடம் அமைப்பதும் இதனால்தான். பூச்சிகள் நுழையாமல் தடுக்க, நம் முன்னோர்கள் வீட்டின் பின்புறத்தில் துளசிமாடம் வைத்து, அதனை வழிபட்டார்கள்.