search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karthika Deepa Festival"

    • கார்த்திகை தீப திருநாளையொட்டி பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது.
    • மல்லிகை ரூ.2,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரை என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக மல்லிகைப்பூ தான். நகரின் எந்த பகுதியில் வாங்கினாலும் கட்டிய மல்லிகைப் பூவுக்கு தனி மவுசு உண்டு. இடைவெளியின்றி கலர் பூ சேர்த்து விற்கப்படும் மல்லி கைப்பூ உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்து வருப வர்களையும் விநாடியில் ஈர்த்துவிடும் தன்மை வாய்ந் தது.

    அந்த வகையில் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் அனைத்து வித மான பூக்களும் மதுைரை, விருதுநகர், தேனி, திண்டுக் கல் உள்ளிட்ட மாவட்டங்க ளில் இருந்து கொண்டு வரப்பட்டு சந்தைப்படுத்தப் படுகிறது. திருவிழாக்கள், சுபமுகூர்த்த தினங்கள், பண்டிகைகள் உள்ளிட்ட நாட்களில் மல்லிகைப்பூவின் விலை புதிய உச்சம் தொடு வது வழக்கம்.

    இந்த நிலையில் திருக் கார்த்திகை தீபத்திருநாளான இன்று பூக்கள் விலை கடு மையாக உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் நேற்று ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப்பூ இன்று ரூ.400 உயர்ந்து ரூ.2,200-க்கு விற்பனையானது.

    அதேபோல் முல்லைப்பூ நேற்று ரூ.800-க்கு விற்கப் பட்ட நிலையில் இன்று 1000 ரூபாய்க்கு விற்பனையாகி றது. கனகாம்பரம் பூ நேற்று ரூ.800-க்கு விற்பனை செய் யப்பட்ட நிலையில் இன்று ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பிச்சிப்பூ ரூ.900 என்ற நேற்றைய விலையில் இருந்து மாறி இன்று ரூ.ஆயிரத்திற்கும், சம்மங்கிப்பூ ரூ.150-க்கும், மெட்ராஸ் மல்லி ரூ.800-க்கும், அரளிப் பூ ரூ.400-க்கும், பட்டன் ரோஸ் 200 ரூபாய்க்கும், செண்டுமல்லி 200 ரூபாய்க் கும் விற்பனை செய்யப்பட் டது.

    • 5-ம் பிரகாரத்தில் பலி பீடம் வைக்கப்படுகிறது
    • சிவாச்சாரியர்கள் பங்கேற்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றி மாடவீதிகளில் 8 திசைகளில் 8 பலிபீடங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இவை அஷ்டதிக்கு பாலகர்களாக இருந்து வருகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் பத்து நாள் கார்த்திகை தீப உற்சவம் விழா காலங்கள் மற்றும் பல்வேறு திருவிழாக் காலங்களிலும் கோவிலை சுற்றியுள்ள 8 அஷ்டதிக்கு பாலகர்களுக்கு முதலில் சாமி வருவதற்கு முன்பு பூஜை செய்து அன்னம் இடுவது வழக்கம்.

    அதன்பிறகுதான் சாமி மாட வீதி உலா நடைபெற்று வருகின்றன. தற்போது மாடவீதி சுற்றிலும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு சிமெண்ட் சாலை அமைப்பதற்காக பணியை தொடங்கி வைத்து உள்ளார்.

    இப்பணி தற்போது நடைபெற்று வருவதால் மாடவீதியை சுற்றியுள்ள 8 பலி பீடங்களையும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் இன்று காலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் சாமி சன்னதி முன்பு 8 கலசங்கள் வைக்கப்பட்டு சிவாச்சாரியர்கள் பாலாலய பூஜை செய்தனர்.

    இதன்பிறகு பலிபீடங்களை கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் வைக்கப்படுவதாக கூறப்படுகின்றன.

    ×