search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை கோவிலில் 8 அஷ்டதிக்கு பாலகர்களுக்கு பாலாலய பூஜை
    X

    திருவண்ணாமலை கோவிலில் 8 அஷ்டதிக்கு பாலகர்களுக்கு பாலாலய பூஜை

    • 5-ம் பிரகாரத்தில் பலி பீடம் வைக்கப்படுகிறது
    • சிவாச்சாரியர்கள் பங்கேற்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றி மாடவீதிகளில் 8 திசைகளில் 8 பலிபீடங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இவை அஷ்டதிக்கு பாலகர்களாக இருந்து வருகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் பத்து நாள் கார்த்திகை தீப உற்சவம் விழா காலங்கள் மற்றும் பல்வேறு திருவிழாக் காலங்களிலும் கோவிலை சுற்றியுள்ள 8 அஷ்டதிக்கு பாலகர்களுக்கு முதலில் சாமி வருவதற்கு முன்பு பூஜை செய்து அன்னம் இடுவது வழக்கம்.

    அதன்பிறகுதான் சாமி மாட வீதி உலா நடைபெற்று வருகின்றன. தற்போது மாடவீதி சுற்றிலும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு சிமெண்ட் சாலை அமைப்பதற்காக பணியை தொடங்கி வைத்து உள்ளார்.

    இப்பணி தற்போது நடைபெற்று வருவதால் மாடவீதியை சுற்றியுள்ள 8 பலி பீடங்களையும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் இன்று காலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் சாமி சன்னதி முன்பு 8 கலசங்கள் வைக்கப்பட்டு சிவாச்சாரியர்கள் பாலாலய பூஜை செய்தனர்.

    இதன்பிறகு பலிபீடங்களை கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் வைக்கப்படுவதாக கூறப்படுகின்றன.

    Next Story
    ×