என் மலர்
நீங்கள் தேடியது "kavin"
- இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘டாடா’.
- இப்படத்திற்கு பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சரவணன் மீனாட்சி' சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், 'நட்புன்னா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். இதன் பின்னர் வெளியான'லிஃப்ட்' திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

டாடா
இதையடுத்து நடிகர் கவின் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'டாடா' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் பாக்யராஜ், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படம் பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

டாடா
மேலும், இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் 'டாடா' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "டாடா படம் பார்த்தேன். உணர்வு ரீதியாக அப்படம் என்னைத் தொட்டது. அனைவரும் திரையரங்கிற்கு சென்று பார்க்கும் விதமான குடும்ப திரைப்படம். இயக்குனர் கணேஷ் கே பாபு மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
I watched dada movie and I'm emotionally touched. A perfect family film for everyone to watch at the theatres. My best wishes to producer @ambethkumarmla sir. A well written and executed film by director @ganeshkbabu! Great performances by @Kavin_m_0431 @aparnaDasss ??
— Raghava Lawrence (@offl_Lawrence) February 16, 2023
- கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘டாடா’.
- இப்படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
சரவணன் மீனாட்சி' சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், 'நட்புன்னா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். இதன் பின்னர் வெளியான'லிஃப்ட்' திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

டாடா
இதையடுத்து நடிகர் கவின் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'டாடா' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் பாக்யராஜ், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படம் பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

டாடா
இந்நிலையில், 'டாடா' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கிலேச காதலா' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது.
- கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘டாடா’.
- இப்படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த திரைப்படம் 'டாடா'. இதில் பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை பார்த்த திரையுலகினர் பலரும் தங்களின் பாராட்டுக்களை சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் டாடா படத்தை பார்த்த தனுஷ், கவின் மற்றும் அபர்ணா தாஸ் இருவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். தனுஷ் உடனான தொலைபேசி உரையாடல் குறித்து இருவரும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து தங்களின் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
A fine moment to cherish forever :)
— Kavin (@Kavin_m_0431) February 21, 2023
Thanks a lot @dhanushkraja sir ??♥️ pic.twitter.com/XDqI9HV1jh
- கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘டாடா’.
- இப்படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த திரைப்படம் 'டாடா'. இதில் பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

டாடா
இப்படத்தை பார்த்த திரையுலகினர் பலரும் தங்களின் பாராட்டுக்களை சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு டாடா படத்தை பார்த்த தனுஷ், கவின் மற்றும் அபர்ணா தாஸ் இருவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினார்.

டாடா
இந்நிலையில் டாடா படத்தில் இடம்பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தாயாக நான் என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த திரைப்படம் 'டாடா'.
- இந்த படத்தில் நடிகர் கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த திரைப்படம் 'டாடா'. இதில் பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை பார்த்த திரையுலகினர் பலரும் தங்களின் பாராட்டுக்களை சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு டாடா படத்தை பார்த்த தனுஷ், கவின் மற்றும் அபர்ணா தாஸ் இருவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினார்.

இந்நிலையில், நடிகர் கார்த்தி இப்படத்தை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இணையப்பக்கத்தில், "இறுதியாக 'டாடா' படத்தைப் பார்த்துவிட்டேன். என்ன ஒரு அற்புதமான படம். சிறப்பான எழுத்து மற்றும் படத்தின் உருவாக்கத்தைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். கவின் முழுமையான அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள். உங்களைக்கண்டு பெருமைப்படுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் கவின், "அது ஒரு ஐந்து நிமிட போன் கால். நீங்கள் என்னிடம் சொன்ன எல்லாவற்றிலும், 'இந்தப் படத்தை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்' என சொன்னதை மட்டும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
It was a five minute call. Amongst the everything you told me, I can only remember this one thing forever - "I will remember this film"
— Kavin (@Kavin_m_0431) March 1, 2023
And I want to let you know that I will never forget this, @Karthi_Offl sir ♥️??#VaazhgaValamudanVandhiyatheva ? https://t.co/ifyhLUtswS pic.twitter.com/arLCZjs9Br
- இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த திரைப்படம் 'டாடா'.
- இப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த திரைப்படம் 'டாடா'. இதில் பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

டாடா போஸ்டர்
இப்படத்தை பார்த்த திரையுலகினர் பலரும் படக்குழுவிற்கு தங்களின் பாராட்டுக்களை சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'டாடா' திரைப்படம் வருகிற மார்ச் 10-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
explore the complexities of family, love and choices with this heartfelt story? #DadaOnPrime, Mar 10 pic.twitter.com/qEqqXSPruk
— prime video IN (@PrimeVideoIN) March 7, 2023
- நடிகர் கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘டாடா’.
- இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த திரைப்படம் 'டாடா'. இதில் பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிவிமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

டாடா
இதைத்தொடர்ந்து கவின் நடிக்கும் அடுத்த படத்தில் நடிகை பிரியங்கா மோகன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் கவின் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா மோகனிடன் படக்குழு பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பிரியங்கா மோகன்
நடிகை பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர், டான் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘டாடா’.
- இப்படம் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்து சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த திரைப்படம் 'டாடா'. இதில் பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

டாடா திரைப்படம் இப்போதும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படம் 50 நாட்களை கடந்துள்ளதை நடிகை அபர்ணா தாஸ் விமான நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
- நடிகர் கவின் நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
- இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த மார்ச் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'அயோத்தி'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பற்றி பேசிய இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.

அயோத்தி
இப்படத்தில் நடித்த நடிகை ப்ரீத்தி அஸ்ராணியின் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர். இவர் 2020-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'ப்ரஷர் குக்கர்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அயோத்தி படமே இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
இந்த நிலையில், நடிகை ப்ரீத்தி அஸ்ராணி அடுத்ததாக கவினுடன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் கவின் நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அயோத்தி
இந்த படத்தில் கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ராணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 'கிஸ்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பு நடிக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கவின் நடிக்கிறார்.
- இப்படத்தின் நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ், முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார். டாடா பட வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்.

இப்படத்தின் மூலம் அனிருத் முதல் முறையாக கவினுடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நடைபெறவுள்ளது. இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கவின் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பில் கவின் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
டாடா பட வெற்றியை தொடர்ந்து கவின், நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இப்படத்தின் மூலம் அனிருத் முதல் முறையாக கவினுடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

நடிகர் கவின் நேற்று தனது பிறந்தநாளை கொண்டினார். இவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் கவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
- நடிகர் முகேன் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
- இந்த படத்தை இயக்குனர் கவின் இயக்குகிறார்.
'வேலன்' பட வெற்றி மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் கவின் இயக்கத்தில் முகேன் மீண்டும் இணைந்துள்ளார். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். மேலும், 'கோல்டன் ரெட்ரீவர்' வகை நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. கிரைம் த்ரில்லர் கதையாக உருவாகவுள்ள இத்திரைப்படத்திற்கு 'பார்க்கிங்' திரைப்பட புகழ் ஜிஜூ சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். 'டாடா' புகழ் ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார்.

G. மணிக்கண்ணன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் புதிய படத்தின் பூஜை சென்னையில் துவங்கியது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம் மற்றும் வாகமன் பகுதிகளில் நடைபெறவுள்ளது. அடுத்த வாரத்தில் தொடங்கும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்படிப்பை, ஒரே கட்டமாக தொடங்கி நிறைவு செய்ய திரைப்படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.