என் மலர்
நீங்கள் தேடியது "KC Rao"
- தெலுங்கானாவில் வரும் 30-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
- பி.ஆர்.எஸ்., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
ஐதராபாத்:
தெலுங்கானாவில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பி.ஆர்.எஸ்., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அனைத்து கட்சிகளின் தலைவர்களும் தெலுங்கானாவில் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் பூத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல் மந்திரியும், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
காங்கிரசும், பா.ஜ.க.வும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.
பிரதமர் மோடிக்கு 100 கடிதங்கள் எழுதியும் அவர்கள் எங்களுக்கு ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட தரவில்லை.
பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பது வீண். காங்கிரசுக்கு வாக்களிப்பது அதைவிட பெரிய வீண் என தெரிவித்தார்.