என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KGF"

    • பிரபல தென் கொரிய நடிகர் டான் லீ [மா- டோங் -ஸோக்] சலார் 2 படத்தில் இணைந்துள்ளார்.
    • சலார் 2 படத்தில் நடிப்பதைத் தனது இன்ஸ்ட்டாகிராம் ஸ்டோரி மூலம் உறுதி செய்தார்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில்  'சலார்' திரைப்படத்தில் நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வசூலை குவித்தது.

    இந்நிலையில் சலார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகமான சலார்- Ceasefire கதை இரண்டாம் பாகத்தில் வர இருக்கும் வெயிட்டான சம்பவத்திற்கான முன்கதை போலவே அமைத்திருந்தது. இதற்கு மேலும் ஹைப் கொடுக்கும் அளவுக்கு மாஸ் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

    அதவாது பிரபல தென் கொரிய நடிகர் டான் லீ [மா- டோங் -ஸோக்] சலார் 2 படத்தில் இணைந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில் வெளியான தி கேங்ஸ்டர் - காப் - அண்ட் தி டெவில் படதின்மூலம் உலக அளவில் அறியப்பட்ட டான் லீ ரியல் கேங்ஸ்டர் கதாபாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய நடிப்பை வெளிப்படுத்துபவர்.

    சலார் படமும் கேங்ஸ்டர் கதைக் களத்துடன் நகரும் படம் என்பதால் டான் லீ வருகை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சலார் 2 படத்தில் நடிப்பதைத் தனது இன்ஸ்ட்டாகிராம் ஸ்டோரி மூலம் டான் லீ தற்போது உறுதி செய்துள்ளார். 

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக உருவாகி வருகிறது
    • மரங்கள் வெட்டப்பட்டது சாட்டிலைட் படங்கள் மூலம் உறுதியாகி உள்ளது.

    இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் படத்தின் மூலம் பான் இந்தியா நட்சத்திரமாக உருவெடுத்தவர் கன்னட நடிகர் யாஷ். கேஜிஎப் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது டாக்ஸிக் [TOXIC] என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகையும் இயக்குனருமான கீத்து மோகன்தாஸ் இயக்கி வருகிறார் . இவர் ஹிந்தியில் நவாஸுதீன் சித்திக்கை வைத்து இயக்கிய லையர்ஸ் டைஸ் 2 தேசிய விருதுகளை வென்றது.

    இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி பூஜை யுடன் தொடங்கப்பட்டது. இப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.

     

    இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக கர்நாடக தலைநகர் பெங்களூரு அருகே உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது ஹிந்துஸ்தான் மெசின் டூல் இடத்தில் நடைபெற்றுள்ளது. இது சாட்டிலைட் படங்கள் மூலம்  உறுதியாகி உள்ளது.

    இதனைத் தொடர்ந்து அம்மாநில வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே ஆய்வு செய்த நிலையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவத்தார்.

    அதன்படி தற்போது டாக்ஸிக் படத்தின் தயாரிப்பாளர்,ஹிந்துஸ்தான் மெசின் டூல் மேலாளர் ஆகியோர் மீது கர்நாடக வனத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மேற்கொண்டு படப்பிடிப்பு நடத்துவதில் தடை ஏற்பட்டதுடன் படக்குழுவுக்கும் சிக்கல்  ஏற்பட்டுள்ளது.  

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் நீல் பிரசாத் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான திரைப்படம் கேஜிஎப்.
    • இந்த படத்தில் நடிகர் அவினாஷ் கேங்க்ஸ்டராக நடித்துள்ளார்.

    இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் கதாநாயகனாக நடித்து இரண்டு பாகங்களாக வெளியாகிய திரைப்படம் கேஜிஎப். பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகிய இந்தபடம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    இப்படத்தில் நடிகர் அவினாஷ் கேங்க்ஸ்டராக நடித்துள்ளார். இவர் பெங்களூரில் தனது பென்ஸ் காரில் ஜிம்மிற்கு சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.


    அவினாஷ் - யஷ்

    இந்த விபத்தில் காயமின்றி உயிர் தப்பித்துள்ள நடிகர் அவினாஷ் இது குறித்த பதிவு ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "நான் ஜிம்மை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது ​​​​அனில் கும்ப்ளே சர்க்கிள் அருகே சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தது. ஆனால் காலியான சாலையில் சிவப்பு சிக்னலைத் தாண்டி வேகமாக வந்த ஒரு கண்டெய்னர் என் கார் மீது மோதியது. அதன் தாக்கம் என் கார் பானட் கிழியும் அளவுக்கு இருந்தது. விபத்தில் எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை, காருக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டது" என பதிவிட்டுள்ளார்.

    யஷ் கதாநாயகனாக நடிக்கும் கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இந்திரா காந்தி வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
    கன்னடத்தில் உருவாகி தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் கடந்த ஆண்டு வெளியான படம் கேஜிஎப். யஷ் கதாநாயகனாக நடித்து இருந்த இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. 

    படம் 1970 -1980களில் நடக்கும் கதை என்பதால் படத்தில் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரமும் வருகிறது. இதில் நடிப்பதற்கு பொருத்தமான நடிகையை தேடி வந்தனர். தற்போது இந்த வேடத்தில் பிரபல இந்தி நடிகை ரவீணா டாண்டன் நடித்து வருகிறார்.



    ரவீணா டாண்டன் தமிழில் அர்ஜூனுடன் ‘சாது’, கமலுடன் ‘ஆளவந்தான்’ படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பிராஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் - ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கும் கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. #KGF #Yash
    பிராஷாந்த் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் யஷ் நடிப்பில் கே.ஜி.எஃப் படம் இரண்டு பாகங்களாக உருவாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கே.ஜி.எஃப் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கன்னட சினிமா மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் படம் வசூல் குவித்துள்ளது.

    கன்னடத்தில் ரூ.100 கோடி வசூலை தாண்டிய முதல் படம் என்ற பெருமை கே.ஜி.எஃப் படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிட்டார்.



    இந்த நிலையில், கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியிருக்கிறது. பூஜையில் பிரசாந்த் நீல், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். #KGF #Yash #SrinidhiShetty

    கே.ஜி.எஃப் படத்தில் நடித்த நடிகர் யஷ் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறப்படும் நிலையில், யஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில், கொலை செய்யும் அளவுக்கு தனக்கு எதிரிகள் யாரும் இல்லை என்று கூறினார். #Yash
    கன்னட நடிகர் யஷ் நடிப்பில் சமீபத்தில் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியான கேஜிஎப் படம் பெரிய வெற்றி பெற்றது. விஷால், ஆர்யா உள்ளிட்டவர்களுக்கும் யஷ் நண்பர் ஆவார். கேஜிஎப் படத்தை விஷால் தமிழில் ரிலீஸ் செய்தார்.

    2 ஆண்டுகளுக்கு முன்பு, தனக்கு ஒரு மர்மக் கும்பலிடமிருந்து தொடர் கொலை மிரட்டல்கள் வருவதாக யஷ் போலீசில் புகார் அளித்தார். கடந்த ஆண்டு மற்றொரு கன்னட நடிகரான அர்ஜுன் தேவ், தனக்கும் கொலை மிரட்டல்கள் வருவதாகப் புகார் அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, அந்த புகார்கள் விசாரிக்கப்பட்டன.

    கடந்த 7-ந் தேதி கர்நாடக போலீசாரால், பாரத் என்கிற ‘ஸ்லம்‘ பாரத் என்ற ரவுடி உள்பட நான்கு ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். ஒரு வழக்கில் கைதான இவர்களை, 3 நாள்களாக போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரித்து வருகிறார்கள். விசாரணையின் போது பாரத், தனது கும்பல் விரைவில் ஒரு கன்னட நடிகரைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக வாக்குமூலம் கொடுத்துள்ளான்.



    இந்தத் தகவல் வெளியானதும், பழைய வழக்குகளைக் கருத்தில் கொண்டு, அது யஷ் அல்லது அர்ஜுன் தேவாக இருக்கலாம் என போலீசார் யூகித்தனர். இந்தச் செய்தி வெளியானதும், கன்னட சினிமா துறையினரும், யஷ் ரசிகர் மன்ற உறுப்பினர்களும் கொந்தளித்தனர்.

    ரசிகர்களில் சிலர், யஷுக்கு திரையுலகில் போட்டியாக இருக்கும் நடிகர்களைக் குற்றம்சாட்டத் தொடங்கினர். இதுகுறித்து யஷ், சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியபோது, “எனக்கு இதுவரை எந்தக் கொலை மிரட்டலும் வரவில்லை. நான் பாதுகாப்பாக உள்ளேன்,” என்றார். மேலும், “திரையுலகில் யாரும் எனக்கு எதிரி கிடையாது. இங்கே இருப்பது ஆரோக்கியமான போட்டி. கொலை செய்யும் அளவுக்கு கீழ்த்தரமாக யாரும் நடந்து கொள்ளப் போவதில்லை. அதனால், என் ரசிகர்கள் பிற நடிகர்களைக் குறைசொல்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்,” என்றும் அவர் கேட்டுக்கொண்டார். #Yash

    பிராஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாவது பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சய் தத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. #KGF #Yash #SanjayDutt
    பிராஷாந்த் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான கே.ஜி.எஃப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கன்னட சினிமா மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் படம் வசூல் குவித்துள்ளது.

    கன்னடத்தில் ரூ.100 கோடி வசூலை தாண்டிய முதல் படம் என்ற பெருமை கே.ஜி.எஃப் படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிட்டார்.



    இந்த நிலையில், கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பை விரைவில் துவங்கவிருக்கின்றனர். இந்த பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முன்னதாக கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் நடிக்கவே சஞ்சய் தத்திடம் பேசினார்கள். தேதி ஒதுக்க முடியாத காரணத்தால் முதல் பாகத்தில் சஞ்சய் தத்தால் நடிக்க முடியவில்லை.

    இப்படி இருக்க இரண்டாவது பாகத்தில் ஒப்பந்தமாகிறாரா என்பது விரைவில் தெரிய வரும். சஞ்சய் ஒப்பந்தமாகும் பட்சத்தில் தென்னிந்திய சினிமாவில் அவர் அறிமுகமாகும் முதல் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. #KGF #Yash #SanjayDutt

    பிராஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற கே.ஜி.எஃப் படத்தை பார்த்த நடிகர் விஜய், படக்குழுவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். #KGF #Yash #Vijay
    பிராஷாந்த் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான கே.ஜி.எஃப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கன்னட சினிமா மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் படம் வசூல் குவித்துள்ளது.

    கன்னடத்தில் ரூ.100 கோடி வசூலை குவித்த படம் என்ற பெருமை கே.ஜி.எஃப் படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிட்டார்.



    படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தை பார்த்த நடிகர் விஜய் படக்குழுவை பாராட்டியுள்ளார். கே.ஜி.எஃப் படம் எடுக்கப்பட்ட விதம் பிரம்மாண்டமாகவும், நடிகர்களின் நடிப்பு நேர்த்தியாக அமைந்துள்ளதாகவும் விஜய் பாராட்டிய]ள்ளார். விஜய்யின் பாராட்டால், கே.ஜி.எஃப் படக்குழுவினர் மகிழ்ச்சியின் உள்ளனர். #KGF #Yash #Vijay

    பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் - ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் `கே.ஜி.எஃப்' படத்தின் விமர்சனம். #KGFTamil #KGF #KGFTamilReview #Yash #SrinidhiShetty
    கர்நாடகாவில் தனது நோய்வாய்ப்பட்ட தாயுடன் வசித்து வருகிறார் யஷ். சிகிச்சை செய்ய பணமில்லாமல் யஷ்ஷின் தாய் இறந்துவிடுகிறார். இறக்கும் தருவாயில், நீ சாகும் போது பணக்காரனாக தான் சாக வேண்டும் என்று சொல்லிவிட்டு சாகிறார்.

    தனது தாய்யின் கட்டளையை நிறைவேற்ற என்ன செய்வது என்று தெரியாமல் மும்பை செல்லும் யஷ்ஷிடம் பிச்சைக்காரர் ஒருவர் சில்லறை கொடுக்க, நோட்டாக தரச் சொல்லி யஷ் கேட்கிறார். கையேந்தினால் சில்லறை தான் கிடைக்கும், கையை ஓங்கினால் தான் நிறைய கிடைக்கும் என்று அந்த பிச்சைக்காரர் சொல்கிறார்.



    இனி தனக்கான பாதை என்னவென்பதை யஷ் தீர்மானிக்கிறார். இந்த நிலையில், மும்பையில் அட்டகாசம் செய்து வந்த போலீஸை ஒருவரை அடித்து தனக்கென்று ஒரு பிராண்ட்-ஐ உருவாக்குகிறார். தொடர்ந்து மும்பையில் அட்டூழியம் செய்து வரும் பெரிய தலைகளை குறிவைக்கும் யஷ், வேகமாக மும்பையில் ஒரு மான்ஸ்டராக உருவாகிறார்.

    இந்த நிலையில், கர்நாடகாவில் இருக்கும் தங்கச் சுரங்கமான கே.ஜி.எஃப்.பின் தலைவரை கொலை செய்ய நிறைய பேர் முயன்றும் முடியாததால், யாராலும் நெருங்க முடியாத அவரை தான் எதிர்ப்பதாக யஷ் கர்நாடகாவுக்கு செல்கிறார். அங்கு நாயகி ஸ்ரீநிதி ஷெட்டியை பார்த்த உடனே காதல் வர, தனது காதலையும் ஸ்ரீநிதியிடம் சொல்லிவிடுகிறார்.



    சாதாரணமாக பின்னர், யாராலும் எளிதில் நுழைய முடியாத கே.ஜி.எஃப். சுரங்கத்திற்குள் செல்லும் யஷ் கே.ஜி.எஃப். தலைவரை கொன்றாரா? தான் ஒரு மான்ஸ்டர் என்பதை நிரூபித்தாரா? ஸ்ரீநிதியுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    யஷ் தனி ஒருவனாக படத்தை தன் தோள் மேல் சுமந்து செல்கிறார். யாருக்கும் பயப்படாத மான்ஸ்டராக, மாஸ் ஹீரோவாக படத்தின் ஓட்டத்தை வேகப்படுத்துகிறார். ஸ்ரீநிதி ஷெட்டி அழகான தேவதையாக வந்து ரசிக்க வைக்கிறார். அச்சுகுமார், அனந்த் நாக், அர்ச்சனா ஜோஸ், அய்யப்பா ஷர்மா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் திரைக்கதையின் ஓட்டத்திற்கு உதவியிருக்கிறார்கள்.



    ஒரு சிறிய குழுவை வைத்து ஒரு மாஸ் படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கியிருக்கிறார் பிரஷாந்த் நீல். தனக்கென்று யாருமே இல்லாத ஒருவன், தனது தாயின் சொல்லிற்காக பணக்காரனாக அவன் எடுக்கும் முடிவுகளும், அதன்மூலம் என்னவாகிறான் என்பதையே படமாக உருவாக்கி இருக்கிறார். கதை பெரிதும் நாயகனையே மையப்படுத்தியே நகர்கிறது. படத்தின் கதை விறுவிறுப்பாக நகர்ந்தாலும், ஆங்காங்கு இடம்பெறும் சில காட்சிகள் படத்திற்கு முட்டுக்கட்டை போடும்படியாக இருக்கிறது. மற்றபடி கன்னட சினிமாவில் இது ஒரு நல்ல முயற்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. படத்தின் கலை பணிகளில் ஷிவ குமார் மெனக்கிட்டிருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலமான சண்டைக்காட்சிகளில் அன்பறிவ் மாஸ் காட்டியிருக்கின்றனர். வசனங்கள் படத்திற்கு பெரிய பலம்.

    ரவி பஸ்ரூரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். புவன் கவுடாவின் ஒளிப்பதிவு அபாரம். கர்நாடகா, மும்பை, கே.ஜி.எஃப் சுரங்கம் என சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

    மொத்தத்தில் `கே.ஜி.எஃப்' பார்க்க வேண்டிய இ(ப)டம். #KGFTamil #KGF #KGFTamilReview #Yash #SrinidhiShetty

    பிரஷாந்த் நீள் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கே.ஜி.எஃப் படத்தின் டிரைலரை வெளியிட்ட விஷால் இந்த படத்தின் தமிழ் பதிப்பை தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். #KGF #KGFTrailer #Yash
    பிராஷாந்த் நீள் இயக்கத்தில் கன்னடத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் கே.ஜி.எஃப். ராக்கிங் ஸ்டார் யாஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக அறிமுகமாகிறார். வசிஸ்டா என்.சிம்ஹா, ரம்யா கிருஷ்ணன், மாளவிகா அவினாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    பாகுபலி, 2.0 படங்களுக்கு பிறகு கே.ஜி.எஃப் படமும் இந்திய அளவில் பேசப்படும் படமாக இருக்கும் என்றும், கன்னட சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடந்தது. இதில் படக்குழுவினர் மற்றும் திரையுலகினர் பங்கேற்றனர்.

    கன்னடத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது. தமிழில் இந்த படத்தை நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படத்தின் தமிழ் பதிப்பின் டிரைலரை வெளியிட்ட விஷால் பேசும் போது,

    இந்த படத்தின் மூலம் கன்னட சினிமா அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்பதில் சந்தேகமில்லை. இந்த மாதிரியான ஒரு படத்தில் தானும் ஒரு பங்காக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த படத்தை வாங்கி வெளியிடுகிறேன். 



    1951-ல் நடந்த இந்த கதை தங்கச் சுரங்கத்தை கண்டுபிடிப்பதை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. மும்பையில் வளரும் யாஷ், தங்கச் சுரங்கத்திற்குள் சென்று அங்கு அடிமையாய் இருக்கும் மக்களை காப்பாற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    ஹோம்பேல் பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படம் ரூ.80 கோடியில் உருவாகி இருக்கிறது. படத்தை வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. #KGF #KGFTrailer #Yash

    கே.ஜி.எஃப் படத்தின் டிரைலர்:


    ×