என் மலர்
நீங்கள் தேடியது "Kidambi Srikanth"
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் சாய்னா நேவால் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார். #DenmarkOpen #SainaNehwal
ஓடென்ஸ்:
டென்மார்க் நாட்டின் ஓடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் பட்ட போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாய்னா நேவால் ஜப்பானின் நசோமி ஒகுஹராவுடன் காலிறுதி போட்டியில் விளையாடினார்.
இதில் முதல் செட்டை ஒகுஹராவிடம் பறிகொடுத்த நேவால் மீண்டு வந்து அடுத்த 2 செட்களிலும் கவனமுடன் விளையாடி தனது ஆதிக்கத்தினை செலுத்தி போட்டியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
இந்த போட்டியில் 21-17, 16-21, 12-21 என்ற செட் கணக்கில் ஒகுஹராவை நேவால் வீழ்த்தினார். இந்த போட்டி 58 நிமிடங்கள் நீடித்தது. #DenmarkOpen #SainaNehwal
டென்மார்க் நாட்டின் ஓடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் பட்ட போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாய்னா நேவால் ஜப்பானின் நசோமி ஒகுஹராவுடன் காலிறுதி போட்டியில் விளையாடினார்.
இதில் முதல் செட்டை ஒகுஹராவிடம் பறிகொடுத்த நேவால் மீண்டு வந்து அடுத்த 2 செட்களிலும் கவனமுடன் விளையாடி தனது ஆதிக்கத்தினை செலுத்தி போட்டியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
இந்த போட்டியில் 21-17, 16-21, 12-21 என்ற செட் கணக்கில் ஒகுஹராவை நேவால் வீழ்த்தினார். இந்த போட்டி 58 நிமிடங்கள் நீடித்தது. #DenmarkOpen #SainaNehwal
சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் டென்மார்க் வீரர் ராஸ்மஸ் கெம்கியை தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். #ChinaOpen2018 #KidambiSrikanth
சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்தும், டென்மார்க் நாட்டை சேர்ந்த ராஸ்மஸ் கெம்கியும் இன்று மோதினர்.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஸ்ரீகாந்த் சிறப்பாக விளையாடினார். இதையடுத்து, 21-9 என்ற கணக்கில் முதல் சுற்றை கைப்பற்றினார்.
இதையடுத்து இரண்டாவது சுற்றில் டென்மார்க் வீரர் கெம்கி கடும் நெருக்கடி கொடுத்தார். ஆனால் கிடாம்பி ஸ்ரீகாந்த் பொறுப்புடன் விளையாடி 21-19 என்ற கணக்கில் இரண்டாவது சுற்றையும் கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில், 21-9, 21-19 என்ற நேர் செட்களில் வென்ற கிடாம்பி ஸ்ரீகாந்த், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில், இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் ஹாங் காங் வீரர் லாங் அங்கசிடம் 21-16, 21-12 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தார். #ChinaOpen2018 #KidambiSrikanth
ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஸ்ரீகாந்த் சிறப்பாக விளையாடினார். இதையடுத்து, 21-9 என்ற கணக்கில் முதல் சுற்றை கைப்பற்றினார்.
இதையடுத்து இரண்டாவது சுற்றில் டென்மார்க் வீரர் கெம்கி கடும் நெருக்கடி கொடுத்தார். ஆனால் கிடாம்பி ஸ்ரீகாந்த் பொறுப்புடன் விளையாடி 21-19 என்ற கணக்கில் இரண்டாவது சுற்றையும் கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில், 21-9, 21-19 என்ற நேர் செட்களில் வென்ற கிடாம்பி ஸ்ரீகாந்த், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில், இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் ஹாங் காங் வீரர் லாங் அங்கசிடம் 21-16, 21-12 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தார். #ChinaOpen2018 #KidambiSrikanth
உலக பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். #SainaNehwal
நான்ஜிங்:
24-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நான்ஜின் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், 72-ம் நிலை வீராங்கனை அலியே டெமிர்பாக்கை (துருக்கி) சந்தித்தார்.
38 நிமிடம் நடந்த இந்த மோதலில் சாய்னா 21-17, 21-8 என்ற நேர்செட்டில் டெமிர்பாக்கை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். சாய்னா அடுத்து தாய்லாந்து வீராங்கனை ராட்சனோக் இன்டானோனை எதிர்கொள்கிறார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-15, 21-16 என்ற நேர்செட்டில் 87-ம் நிலை வீரர் ஹட் நுயேனை (அயர்லாந்து) விரட்டியடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 37 நிமிடம் தேவைப்பட்டது. 2-வது சுற்று ஆட்டத்தில் ஸ்ரீகாந்த், ஸ்பெயின் வீரர் பாப்லோ அபியானை சந்திக்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத்தை எதிர்த்து விளையாட வேண்டிய தென்கொரியா வீரர் சன் வான் ஹோ காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகியதால், சாய் பிரனீத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு 2-வது சுற்றை எட்டினார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 21-19, 12-21, 21-19 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் மார்கஸ் எல்லிஸ்-கிறிஸ் லாங்கிரிட்ஜ் இணையை வீழ்த்தியது.
இதே போல் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி 19-21, 21-10, 21-17 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் சியாங் காய் சின்-ஹூங் ஷி ஹான் இணையை சாய்த்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
கலப்பு இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-அஸ்வினி பொன்னப்பா இணை 21-9, 22-20 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் மார்க் லாம்ஸ்புஸ்-இசபெல் ஹெர்ட்ரிச் ஜோடியை வெளியேற்றியது. #SainaNehwal
24-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நான்ஜின் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், 72-ம் நிலை வீராங்கனை அலியே டெமிர்பாக்கை (துருக்கி) சந்தித்தார்.
38 நிமிடம் நடந்த இந்த மோதலில் சாய்னா 21-17, 21-8 என்ற நேர்செட்டில் டெமிர்பாக்கை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். சாய்னா அடுத்து தாய்லாந்து வீராங்கனை ராட்சனோக் இன்டானோனை எதிர்கொள்கிறார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-15, 21-16 என்ற நேர்செட்டில் 87-ம் நிலை வீரர் ஹட் நுயேனை (அயர்லாந்து) விரட்டியடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 37 நிமிடம் தேவைப்பட்டது. 2-வது சுற்று ஆட்டத்தில் ஸ்ரீகாந்த், ஸ்பெயின் வீரர் பாப்லோ அபியானை சந்திக்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத்தை எதிர்த்து விளையாட வேண்டிய தென்கொரியா வீரர் சன் வான் ஹோ காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகியதால், சாய் பிரனீத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு 2-வது சுற்றை எட்டினார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 21-19, 12-21, 21-19 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் மார்கஸ் எல்லிஸ்-கிறிஸ் லாங்கிரிட்ஜ் இணையை வீழ்த்தியது.
இதே போல் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி 19-21, 21-10, 21-17 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் சியாங் காய் சின்-ஹூங் ஷி ஹான் இணையை சாய்த்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
கலப்பு இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-அஸ்வினி பொன்னப்பா இணை 21-9, 22-20 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் மார்க் லாம்ஸ்புஸ்-இசபெல் ஹெர்ட்ரிச் ஜோடியை வெளியேற்றியது. #SainaNehwal
இந்தோனேசியா ஒபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த கிதாம்பி முதல் சுற்றிலேயே கடும் சவாலை சந்திக்க இருக்கிறார். #Srikanth
கடந்த வாரம் மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளில் யாரும் அரையிறுதியை தாண்டவில்லை.
ஆண்களுக்கான அரையிறுதி ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி, ஜப்பானைச் சேர்ந்த கென்டோ மொமோட்டாவை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் கிதாம்பி நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

இந்நிலையில் நாளை இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் ஜகர்த்தாவில் நடக்கிறது. இதில் ஸ்ரீகாந்த் கிதாம்பியும், கோன்டே மொமோட்டாவும் முதல் சுற்றிலேயே பலப்பரீட்சை நடத்த காத்திருக்கிறார்கள்.
மலேசிய ஓபனில் அடைந்த தோல்விக்கு ஸ்ரீகாந்த் பதிலடி கொடுப்பாரா? என்று பார்ப்போம். சாய்னா நேவால் இந்தோனேசியாவின் டினர் டியா அயுஸ்டைனை எதிர்கொள்கிறார்.
ஆண்களுக்கான அரையிறுதி ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி, ஜப்பானைச் சேர்ந்த கென்டோ மொமோட்டாவை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் கிதாம்பி நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

இந்நிலையில் நாளை இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் ஜகர்த்தாவில் நடக்கிறது. இதில் ஸ்ரீகாந்த் கிதாம்பியும், கோன்டே மொமோட்டாவும் முதல் சுற்றிலேயே பலப்பரீட்சை நடத்த காத்திருக்கிறார்கள்.
மலேசிய ஓபனில் அடைந்த தோல்விக்கு ஸ்ரீகாந்த் பதிலடி கொடுப்பாரா? என்று பார்ப்போம். சாய்னா நேவால் இந்தோனேசியாவின் டினர் டியா அயுஸ்டைனை எதிர்கொள்கிறார்.
மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் கிதாம்பி தோல்வியடைந்து கோப்பையை வெல்லும் வெற்றி வாய்ப்பை இழந்தனர். #MalaysianOpenBadminton #Pvsindhu #KidambiSrikanth
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் அரையிறுதி போட்டி கோலாலம்பூரில் இன்று நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து, உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீனாவின் தை டுசு யிங் மோதினர். மிகவும் சிறப்பாக விளையாடிய சீன வீராங்கனை சிந்துவை தோற்கடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார். சிந்து சிறப்பாக விளையாடினாலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இது தையுடன் மோதி சிந்து தோல்வியடையும் 5 வது போட்டி இதுவாகும்.
இதற்கிடையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி தோல்வியடைந்தார். இவர் ஜப்பானின் கெண்டோ மோமட்டவை எதிர்க்கொண்டார். ஸ்ரீகாந்த் 13-21, 13-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதன் மூலம் இந்தியாவைச் சேர்ந்த இருவரும் இறுதி போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தனர். #MalaysianOpenBadminton #Pvsindhu #KidambiSrikanth
மலேசிய ஓபன் பேட்மிண்டன் அரையிறுதி போட்டி கோலாலம்பூரில் இன்று நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து, உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீனாவின் தை டுசு யிங் மோதினர். மிகவும் சிறப்பாக விளையாடிய சீன வீராங்கனை சிந்துவை தோற்கடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார். சிந்து சிறப்பாக விளையாடினாலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இது தையுடன் மோதி சிந்து தோல்வியடையும் 5 வது போட்டி இதுவாகும்.
இதற்கிடையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி தோல்வியடைந்தார். இவர் ஜப்பானின் கெண்டோ மோமட்டவை எதிர்க்கொண்டார். ஸ்ரீகாந்த் 13-21, 13-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதன் மூலம் இந்தியாவைச் சேர்ந்த இருவரும் இறுதி போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தனர். #MalaysianOpenBadminton #Pvsindhu #KidambiSrikanth
மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிவி சிந்து ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். #MalaysiaOpenbadminton #PVSindhu #KidambiSrikanth
கோலாலம்பூர்:
மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் கோலாலம்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான இரண்டாவது சுற்று போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், தாய்வானின் வாங் சூ-வேவை எதிர்கொண்டார். இதன் முதல் செட்டை ஸ்ரீகாந்த் 22-20 என போராடி கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடிய ஸ்ரீகாந்த் 21-12 என எளிதாக கைப்பற்றினார். இதன்மூலம் 22-20, 21-12 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற ஸ்ரீகாந்த் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். அவர் காலிறுதி போட்டியில் பிரான்சின் ரிரைஸ் லெவர்டெசை எதிர்கொள்ள இருக்கிறார்.
பெண்கள் பிரிவில் நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டி ஒன்றில் மூன்றாம் நிலை வீராங்கனையான பிவி சிந்து, மலேசியாவில் லீ யிங் யிங்கை எதிர்கொண்டார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சிந்து முதல் இரண்டு செட்டையும் 21-8, 21-14 என்ற நேர் செட்களில் கைப்பற்றி வெற்றி பெற்றார். அவர் காலிறுதி போட்டியில் ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொள்கிறார்.
சாய்னா நேவால், பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், எச்.எஸ். பிரனோய் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனையான சாய்னா நேவால், ஹாங்காங் வீராங்கனையான யிப் புய் யின்னை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய சாய்னா முதல் செட்டை 21-12 என எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் இரண்டாவது செட்டையும் 21-16 என கைப்பற்றினார்.
இறுதியில் 21-12, 21-16 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற சாய்னா நேவால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். சாய்னா தனது இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இரண்டாம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகனே யமகுச்சியை எதிர்கொள்கிறார். #MalaysiaOpenbadminton #PVSindhu #KidambiSrikanth
கோலாலம்பூரில் நடைபெற்று வரும் மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேறினார். #Srikanth
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-18, 21-9 என்ற நேர்செட்டில் டென்மார்க் வீரர் ஜான் ஜோர்ஜென்செனை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 26-24, 21-15 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 12-21, 7-21 என்ற நேர்செட்டில் சீன தைபே வீரர் வாங் சு வெய்யிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.
மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-18, 21-9 என்ற நேர்செட்டில் டென்மார்க் வீரர் ஜான் ஜோர்ஜென்செனை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 26-24, 21-15 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 12-21, 7-21 என்ற நேர்செட்டில் சீன தைபே வீரர் வாங் சு வெய்யிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.
எம்எஸ் டோனியின் கையெழுத்திட்ட பேட்டை வாங்கிய சந்தோசத்தில் முன்னணி பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி மிகுந்த சந்தோசத்தில் திளைக்கிறார். #MSDhoni
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி. இவருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீபத்தில் எம்எஸ் டோனி அணியும் 7-ம் எண் ஜெர்ஸியில் வீரர்கள் கையெழுத்திட்டு வழங்கியது. இதனால் ஸ்ரீகாந்த் கிதாம்பி மிகுந்த சந்தோசம் அடைந்தார்.

இந்நிலையில் டோனி கையெழுத்திட்டு வழங்கிய பேட்டை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ஸ்ரீகாந்த் கிதாம்பி மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் ‘‘மிகவும் அற்புதமான பரிசை அளித்ததற்காக எம்எஸ் டோனிக்கு நன்றி. நான் எப்படி சந்தோசம் அடைகிறேன் என்பதை என்னால் சொல்ல முடியவில்லை’’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் டோனி கையெழுத்திட்டு வழங்கிய பேட்டை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ஸ்ரீகாந்த் கிதாம்பி மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் ‘‘மிகவும் அற்புதமான பரிசை அளித்ததற்காக எம்எஸ் டோனிக்கு நன்றி. நான் எப்படி சந்தோசம் அடைகிறேன் என்பதை என்னால் சொல்ல முடியவில்லை’’ என்று பதிவிட்டுள்ளார்.