என் மலர்
நீங்கள் தேடியது "Kiran bedi"
புதுவை நேரு வீதி, ரங்கப்பிள்ளை வீதிகளில் குப்பைகளை கொட்டாமல் இருக்க அங்குள்ள கடைக்காரர்களுக்கு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் குப்பை கூடை வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பேடி கலந்து கொண்டு கடைக்காரர்களுக்கு குப்பை கூடைகளை வழங்கினார்.
இதில், சிவா எம்.எல்.ஏ., மாநில வணிகர்கள் கூட்டமைப்பு சங்க தலைவர் சிவசங்கர் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு நூற்றாண்டு காலமாக மனிதர்களுக்குள் இருந்த தவறான பிரிவினை நீக்கப்பட்டு உள்ளது.
ஆண், பெண் இருபாலருக்கு இடையே பாகுபாடு இருக்கக்கூடாது. சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பானது ஆண்-பெண் இருவருக்கும் சம உரிமை என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.
மேலும் தகாத உறவு குற்றம் அல்ல என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிலும் ஆண்-பெண் இருவருக்கும் சமஉரிமை என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #SabarimalaVerdict #Kiranbedi
புதுச்சேரி:
உலகில் மிகப் பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டமாக “ஆயுஷ்மான் பாரத்” என்னும் தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டம் அனைத்து மாநிலங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதுவை தலைமை செயலகத்தில் காப்பீட்டு திட்ட தொடக்க விழா நடந்தது.
கவர்னர் கிரண்பேடி திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார். தலைமை செயலாளர் அஸ்வினி குமார், சுகாதார துறை செயலாளர் கந்தவேலு, இயக்குனர் ராமன், அரசு மருத்துவ கண்காணிப்பாளர் மோகன்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த திட்டத்துக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1000 முதல் ரூ.1200 வரை காப்பீட்டு தொகை செலுத்தும். மத்திய அரசு 60 சதவீத நிதியும், மாநில அரசு மீதி தொகையையும் ஏற்கும்.
ஏழை குடும்பத்தினர் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெறலாம். இது முற்றிலும் பணமற்ற திட்டமாகும். இதய அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, ஸ்டென்டிங் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் பெற முடியும்.
கடந்த 2013-ம் ஆண்டு சமூக பொருளாதார மற்றும் ஜாதி வாரியாக மக்கள் கணக்கெடுப்பின்படி இந்த திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். புதுவையில் 1 லட்சத்து 3 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #KiranBedi #AyushmanBharat #PMModi
புதுவை கவர்னர் கிரண்பேடி ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கடந்த வாரம் (சனிக்கிழமை) மாணவர்களுடன் சைக்கிளில் ராஜ்நிவாசில் இருந்து அரியாங்குப்பத்துக்கு பேரணியாக சென்றார்.
அதுபோல் இன்று காலை 7 மணிக்கு கவர்னர் கிரண்பேடி அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் 50 பேருடன் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிளில் தவளக்குப்பத்துக்கு பேரணி சென்றார்.
பின்னர் அங்குள்ள அரவிந்தர் கண் ஆஸ்பத்திரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கவர்னர் கிரண்பேடி பின்னர் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கலந்துரையாடினார்.

இதனைத்தொடர்ந்து வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த குமார் பேசும் போது, விபத்தில் உயிர் இழப்புகளை தடுக்க இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது அவசியமானதுதான்.
அதே வேளையில் இதனை வாய்ப்பாக பயன்படுத்தி பலர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுகிறார்களே. இதனை தடுக்கவும், முறைப்படுத்தவும் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று கவர்னரிடம் சரமாரி கேள்வி எழுப்பினார்.
ஆனால், இதற்கு கவர்னர் கிரண்பேடி பதில் ஏதும் கூறாமல் நிகழ்ச்சியை முடித்து கொண்டு மாணவர்களுடன் அங்கிருந்து ராஜ்நிவாசுக்கு திரும்பினார்.
இந்த நிகழ்ச்சியின் போது வணிகவரித்துறை ஆணையர் ஸ்ரீநிவாஸ், அரவிந்தர் கண் ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். #PondicherryGovernor #Kiranbedi
சேதராப்பட்டு:
புதுவை ஆலங்குப்பத்தில் கால்பந்து விளையாட்டில் மாணவர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் தினமும் அங்குள்ள அரசு பள்ளி மைதானத்தில் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இன்று காலை 7 மணிக்கு கவர்னர் கிரண்பேடி ஆலங்குப்பத்துக்கு சென்றார்.
அங்கு கால்பந்து வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ரோட்டரி சங்கம் வழங்கிய கால்பந்து விளையாட்டு உபகரணங்களை கவர்னர் கிரண்பேடி வீரர்களுக்கு வழங்கினார்.
மேலும் வீரர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடிய கவர்னர் கிரண்பேடி அவர்களுடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டார்.
பின்னர் விளையாட்டு வீரர்கள் மத்தியில் கிரண்பேடி பேசியதாவது:-
படிப்பிலும், விளையாட்டிலும் மாணவர்கள் அக்கறை செலுத்த வேண்டும், இதன் மூலம் வாழ்க்கையில் முன்னேறலாம். இன்று அரசியல்வாதிகள், அரசு பதவிகளில் உள்ளவர்கள் உயர்ந்த இடத்தில் இருப்பதற்கு அவர்கள் ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ந் தேதி விவேகானந்தர் பிறந்த நாளை தேசிய இளைஞர் தினமாக கொண்டாடி வருகிறோம். வருகிற ஜனவரி 12-ந் தேதி விவேகானந்தர் பிறந்த நாளை கால்பந்து தினமாக கடைபிடிக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
எனவே, நகரம் மற்றும் கிராமங்களில் மாணவர்கள் கால்பந்து ஆர்வத்துடன் விளையாட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது கவர்னருடன் வந்த கலெக்டர் அபித்ஜித் சிங், படிக்கும் போது விளையாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டும். அப்போது தான் தேர்வில் குறைந்தமதிப்பெண் எடுத்து தோல்வி அடைந்தாலும் தோல்வியை சகஜமாக எடுத்து கொள்ள முடியும் என்றார்.
புதுச்சேரியில் கவர்னர் கிரண் பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையிலான அதிகார மோதல் தீவிரமடைந்துள்ளது. மத்திய அரசின் நம்பிக்கையை இழந்த பிறகு கவர்னராக கிரண்பேடி தொடரக்கூடாது என்றும், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

இதுவரை 3 முறை கவர்னரின் முடிவுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதால், இதன் பிறகும் கவர்னராக கிரண்பேடி பதவியில் தொடர்வதா? என்பது குறித்து கிரண்பேடிதான் முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
நாராயணசாமியின் இந்த கருத்துக்கு கவர்னர் கிரண் பேடி டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.
‘நான் ராஜினாமா செய்ய வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்துகிறார். ஒருவர் வேலையில் இருந்து விலகலாம், ஆனால் கொள்கையில் இருந்து விலக முடியாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்’ என கிரண் பேடி கூறியுள்ளார். தான் புதுச்சேரியின் வளர்ச்சிக்காக பாடுபடுவதாகவும் கிரண்பேடி கூறியுள்ளார். #KiranBedi
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை கவர்னருக்கு என தனியாக அதிகாரம் கிடையாது. அவர் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. அமைச்சரவையின் பரிந்துரைகளையே அவர் ஏற்க வேண்டும் என நான் பலமுறை கூறியுள்ளேன்.
இதுதொடர்பாக கவர்னருக்கு கடிதமும் அனுப்பி உள்ளேன். இருப்பினும் கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து அதிகாரிகளை அழைத்து பேசுவது, அவர்களுக்கு நேரிடையாக உத்தரவிடுவதும், தன்னுடைய முடிவை செயல்படுத்தும்படி வலியுறுத்தியும் வருகிறார்.
வாரிய தலைவர்களை மாநில அரசு நியமனம் செய்ய பரிந்துரை செய்த போது அதற்கு தடை ஏற்படுத்தினார். அப்போது மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டு வாரிய தலைவர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என கூறியது. இதையடுத்து வாரிய தலைவர்களுக்கு சில நிபந்தனைகளை கவர்னர் விதித்தார். நிபந்தனைகளை விதிக்க கவர்னருக்கு அதிகாரம் கிடையாது. இது சம்பந்தமாகவும் மத்திய உள்துறைக்கு கடிதம் அனுப்பினேன்.
தற்போது மத்திய உள்துறை வாரிய தலைவர்கள் தங்களுடைய வாரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்றும் வாரிய தலைவர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் விளக்கமளித்துள்ளது.
ஏற்கனவே விவசாயிகள் கடன் ரத்து கோப்புக்கு அனுமதி அளிக்காமல் கவர்னர் அலைகழித்தார். இது தொடர்பாகவும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பினோம். இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் விவசாயிகள் கடனை ரத்து செய்வதற்கு அனுமதி அளித்துள்ளது. ஆக இதுவரை 3 முறை கவர்னரின் முடிவுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதன் பிறகும் கவர்னராக கிரண்பேடி பதவியில் தொடர்வதா? என்பது குறித்து கிரண்பேடிதான் முடிவு செய்ய வேண்டும். மத்திய அரசின் நம்பிக்கையை இழந்த பிறகு கவர்னராக கிரண்பேடி தொடர்வதா?.
சமீபத்தில் கூட டெல்லி கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல் கிரண்பேடி தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.