என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KV School"

    • அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியோ, சமஸ்கிருதமோ தேசிய மொழி என்று வரையறுக்கப்பட்டுள்ளதா?
    • பாஜக கட்டமைக்க விரும்பும் தேசியம் என்பது இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பது தானா ?

    தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் (கே.வி) தமிழ் கற்பிப்பதற்கு தமிழாசிரியர்களே இல்லை என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கனிமொழி எம்பி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர ஆசிரியர்களின் எண்ணிக்கை என்ன என்ற கேள்விக்கு ஒன்றிய அரசு அளித்துள்ள பதில் "0". ஆனால், இந்தி கற்பிக்க 86 ஆசிரியர்களும், சமஸ்கிருதம் கற்பிக்க 65 ஆசிரியர்களும் இருப்பதாகக் கூறுகிறது ஒன்றிய பாஜக அரசு.

    அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியோ அல்லது சமஸ்கிருதமோ தேசிய மொழி என்று வரையறுக்கப்பட்டுள்ளதா? அல்லது பாஜக கட்டமைக்க விரும்பும் தேசியம் என்பது அதுதானா?

    கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் வழியாக எந்த தாய்மொழியைக் காக்கிறீர்கள் அல்லது கற்றுக்கொடுக்கிறீர்கள்? மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இப்படி இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பதைத்தான் காலம் காலமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கிறது.

    இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருத இறைவணக்கத்துக்கு எதிரான வழக்கின் மீதான விசாரணையை அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார். #KVSchool #SanskritHymns #SupremeCourt
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் விநாயக் ஷா என்பவர், கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் காலையில் கட்டாயம் சமஸ்கிருதத்தில் இறைவணக்கம் செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்தார். இது மாணவர்களின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளை அவமதிப்பதுடன், அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை நீதிபதிகள் பாலிநாரிமன், வினீத் சரண் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதி பாலிநாரிமன், இந்த பிரச்சினை மிகவும் முக்கியமானது. எனவே இதுகுறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு விசாரணை நடத்தும் என்று வழக்கை அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
    ×