என் மலர்
நீங்கள் தேடியது "Lakshmi Kataksham"
- காலையில் எழுந்து அப்படியே வெளியில் சென்று கோலம் போடக்கூடாது.
- புள்ளிகள் வைக்கும்போது, ஏணியில் ஏறுவது போல் ஏறுவரிசையில் வைக்க வேண்டும்.
* அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து கோலமிடுவது மிகவும் நல்லது. அதிகாலையில் கோலம் போடுவதால் கஷ்டங்கள் விலகும். காலை 6 மணிக்குள் கோலம் போட வேண்டும்.
* காலையில் எழுந்து அப்படியே வெளியில் சென்று கோலம் போடக்கூடாது. முகம் கழுவி, திலகம் வைத்துக்கொண்டு வெளியில் சென்று கோலம் போட வேண்டும்.
* கோல மாவுடன் பச்சரிசி மாவு கலந்து கோலம் போடலாம். வெறும் பச்சரிசி மாவிலும் கோலம் போடலாம்.
* வாசலில் கோலமிடுவது, அழகுக்கு மட்டுமல்ல. தீய சக்திகள் நம் வீட்டுக்கு உள்ளே நுழையாமல் தடுக்கவும் தான் கோலமிடுகிறோம்.
* உட்கார்ந்தபடி போடக்கூடாது. வலக்கையால் தான் கோலமிட வேண்டும்.
* புள்ளிகள் வைக்கும்போது, ஏணியில் ஏறுவது போல் ஏறுவரிசையில் வைக்க வேண்டும். கோடுகளையும் அப்படியே போட வேண்டும். மேலிருந்து கீழாக போடக்கூடாது.
* ஈரிழைக் கோலம் மங்கலத்தைக் கொடுக்கும், ஒரு கோடு, மூவிழைக் கோலம் அமங்கலத்தைக் குறிக்கும். விழாக்காலத்திற்கு நாலிழைக் கோலம் நல்லது.