என் மலர்
நீங்கள் தேடியது "liquor seized"
- போலி மதுபான பாட்டில்கள், காலி பாட்டில்கள், போலி லேபிள்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
- அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மும்பை:
மும்பை தாராவி பகுதியில் வெளிநாட்டு பிராண்டுகளின் பெயரில் போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கலால்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கலால்துறை அதிகாரிகள் தாராவி சந்த் கக்கையா மார்க், சிவசக்தி நகர் தெருவில் உள்ள குடோனுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் வாலிபர் ஒருவர் வெளிநாட்டு காலி பாட்டில்களில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மதுபானத்தை நிரப்புவதை கண்டனர். இதனையடுத்து அதிகாரிகள் வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், கைதான வாலிபர் அதேபகுதியை சேர்ந்த அனிகேத் திலிப் காசித்(வயது23) என தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அங்கிருந்த போலி மதுபான பாட்டில்கள், காலி பாட்டில்கள், போலி லேபிள்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாலிபரிடம் நடத்திய விசாரணையில், கும்பர்வாடா சாலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மகேந்திர வகேலா என்பவரிடம் தான் காலி பாட்டில்கள், லேபிள்களை பெற்றதாக தெரிவித்தார்.
இதையடுத்து கலால்துறை அதிகாரிகள் கும்பர்வாடா பகுதிக்கு சென்று அங்குள்ள குடோனில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பல்வேறு கம்பெனி பெயரில் போலியாக சீல் வைக்கப்பட்ட 33 மதுபான பாட்டில்கள், காலி பாட்டில்கள், லேபிள்கள், பேக்கேஜிங் பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சத்து 32 ஆயிரம் ஆகும். இதையடுத்து தலைமறைவான மகேந்திர வகேலாவை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த போலி மதுபானங்கள் மதுபிரியர்களின் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கக்கூடியது என கூறப்படுகிறது.
இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கம்பம் மெட்டு ராஜகுமாரி பகுதியில் ரகசியமாக சாராயம் விற்பனை செய்யப்படுவதாக இடுக்கி கலால்துறை துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- தப்பி ஓடிய சஜீவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கூடலூர்:
தமிழக-கேரள எல்லையான கம்பம் அருகே கம்பம் மெட்டு ராஜகுமாரி பகுதியில் ரகசியமாக சாராயம் விற்பனை செய்யப்படுவதாக இடுக்கி கலால்துறை துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது அறிவுறுத்தலின் பேரில் கலால் சிறப்பு படை உதவி கலால் ஆய்வாளர் தாமஸ்ஜான், தலைமை நிர்வாக அதிகாரி மரியாஆல்பின் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அப்பகுதியில் தொடர்ந்து ரகசிய விசாரணை நடத்தினர். அதில் ராஜாக்காடு, கச்சிரபாலம், சஜீவன் என்பவர் சாராயம் காய்ச்சி அப்பகுதியில் உள்ள ரிசார்ட்ஸ் மற்றும் சிறு வியாபாரிகள் மூலம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரது தோட்டத்து வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பண்ணை வீட்டு கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த 400 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 17 லிட்டர் சாராயம், இதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் கலால்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய சஜீவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மதுவிலக்கு சட்டம் நடைமுறையில் உள்ள பீகார் மாநிலத்தில் தடையை மீறி மதுபானங்களை விற்பனை செய்யும் நபர்கள், மதுபான கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுபான கடத்தலை தடுப்பதற்காக தொடர்ந்து வாகன சோதனை நடத்தப்படுகிறது.
அவ்வகையில், வைசாலி மாவட்டத்தின் மஹுவா - தாஜ்பூர் சாலையில் நேற்று இரவு சிமெண்ட் ஏற்றி வந்த லாரியை காவல்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சிமெண்ட் மூட்டைகளுக்கு நடுவே வைத்து மறைத்து 1000 அட்டைப்பெட்டிகளில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக பல்கர் சிங், குர்பிரீத் சிங் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மது கடத்தலில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பிடிக்கும் தீவிர முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பீகாரில் இதுபோன்ற மதுபானம் மற்றும் போதை பொருட்களின் கடத்தல் சமீப காலங்களில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. #liquorseized #bihar