என் மலர்
நீங்கள் தேடியது "live-in"
- பாலின சம உரிமை, பெண்களுக்கு சொத்தில் சம பங்கு ஆகியவை இதில் அடங்கும்
- இருதார முறை தடை செய்யப்படும் என தெரிகிறது
நவம்பர் 12, நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு ஒரு வாரத்தில் சட்டசபையின் சிறப்பு தொடர் கூட்டப்பட உள்ளது.
இந்த கூட்டத்தொடரிலேயே பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) அமல்படுத்தும் முயற்சி எடுக்கப்பட உள்ளதாகவும், அதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மசோதாவிற்கான வரைவில் இடம்பெறும் பல அம்சங்கள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
அனைத்து மதங்களுக்கும் பொதுவான பாலின சம உரிமை, பூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உட்பட திருமணம், விவாகரத்து, பரம்பரை சொத்துரிமை, தத்து எடுத்தல் ஆகிய முக்கிய விஷயங்கள் இந்த சட்டத்தின் மைய பொருளாக இருப்பதாக தெரிகிறது.
பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18லிருந்து 21 என அதிகரிக்கப்படும் என முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், திருமண வயது 18 என்பதில் இந்த சட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தற்போது தெரிகிறது.
இருதார மற்றும் பலதார தடை, 'லிவ்-இன்' வாழ்கை முறையை கட்டாய பதிவு செய்தல் ஆகியவை இதில் அடங்கும் என்பதால் இந்த மசோதா சட்டமாவதற்கு முன் பல காரசார விவாதங்களுக்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.
- உத்தரகாண்டில் லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- 21 வயதுக்கு உள்பட்டவர்கள் லிவ் இன் உறவில் வாழ்ந்தால் அவர்கள் தங்களது பெற்றோரிடம் இதற்கு ஒப்புதல் பெறவேண்டும்.
இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தரகாண்ட் பெற்றுள்ளது.
திருமணம், விவகாரத்து உள்ளிட்டவை அனைத்து மதத்தினருக்கும் பொது என்பதே இந்த சட்டத்தின் நோக்கம் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
அதனபடி பலதார மணம், குழந்தை திருமணம், முத்தலாக் போன்ற முறைகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது சிவில் சட்டத்தின்படி திருமணம், விவாகரத்து, லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ்தல் போன்றவற்றிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ்பவர்கள் இது தொடர்பாக பதிவு செய்யவில்லை என்றால் 6 மாத சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று பொது சிவில் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 21 வயதுக்கு உள்பட்டவர்கள் லிவ் இன் உறவில் வாழ்ந்தால் அவர்கள் தங்களது பெற்றோரிடம் இதற்கு ஒப்புதல் பெறவேண்டும்.
இந்நிலையில், உத்தராகண்டில் பொது சிவில் சட்டத்தின்படி ஒருவரின் லிவ்-இன் உறவு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுவரை இது தொடர்பாக 5 விண்ணப்பங்கள் வந்துள்ளது என்றும் 1 மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மற்ற 4 விண்ணப்பங்களும் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.