என் மலர்
நீங்கள் தேடியது "Lord Muruga"
- பிரம்மா படைப்புத் தொழிலை துவக்க ஆணை பெற்று சென்ற திருத்தலம்.
- வேத நாயகன் விநாயகப் பெருமானும் இவனது இளவல் செவ்வேளும் வந்து பூசித்த தலம்.
பிரம்மா, விஷ்ணு, விஷ்ணு அவதார மூர்த்திகள், தருமன், காமன், அகத்தியர், கண்ணுவர், கவுடன்னியர், இலக்குமி, விசாலன், பார்க்கவி, கலைமகள் என பலர் பூசித்து முக்தி பெற்ற திருத்தலம், மயிலாடுதுறை.
திலீபன், யோக வித்தமன், சிசன்மன், சயதுங்கன், தீர்த்த கங்கை, நாதசன்மன், அனவித்தை, கங்கை முதலியோரும் யானை, குதிரைகள், கரம், கழுகு, பாம்பு, நரி, குரங்கு, பூனை, கிளி என இவ்வுயிர்கள் அனைத்தும் மாயூரநாதேஸ்சுரரை வணங்கி வழிபட்டு முக்தி நிலை பெற்றார்கள் என்று புராணம் கூறுகிறது.
சைவப் பெருமக்களின் நாயகர்களாகிய திருஞான சம்பந்தப் பெருமானும் திருநாவுக்கரசுப் பெருமானும் இத்தலத்திற்கு வந்து வாழ்த்தி வணங்கி பேறு பெற்றிருக்கின்றார்கள் என்பது வரலாற்றுச் செய்தி.
ஆயிரம் ஊரானாலும் மாயூரம் போலாகுமா? என்பார்கள். ஆக அந்த அளவிற்கு சிறப்பும் சீறும் பெற்ற திருத்தலம் மயிலாடுதுறை.
பிரம்மா படைப்புத் தொழிலை துவக்க ஆணை பெற்று சென்ற திருத்தலம்.
வேத நாயகன் விநாயகப் பெருமானும் இவனது இளவல் செவ்வேளும் வந்து பூசித்த தலம்.
நந்திதேவர் சாபம் விலகிய தலம். திருமகளும் கலைமகளும் தொழுது நின்று பேறு பெற்ற திருத்தலம். கங்கை மகள் முத்தியடைந்த திருத்தலம்.
ஐப்பசித் திங்கள் முதல் நாள் துலாக்காவேரி நீராடுவது தலை சிறந்தது.
குடகின் குளத்திலே பிறந்த காவிரிப் பெண் அகண்ட காவிரியாக அகன்று ஏறத்தாழ 17.60 அடி அகலத்தில் பரந்து விரிந்து ஓடுவதைத் திருப்பாராய்ந்துறை என்ற திருத்தலத்திலே பார்க்க முடியும்.
இத்தலத்தில் ஒவ்வொர் ஆண்டு ஐப்பசித் திங்கள் முதல் நாளன்று திருக்கோவிலிருந்து பராய்ந்துறை நாதரே அகண்ட காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தவாரி வழங்குவது இன்றைக்கும் வழக்காற்றில் உள்ளது.
என்றாலும் குடகுநாட்டின் தலைக்காவிரியலே குளிப்பதை விட, அரங்கத்து அரவணையாக கோவிலுக்கும் மேற்கே அகண்ட காவிரியிலே (திருப்பராய்ந்துறை) குளிப்பதைவிட மாயூரத்திலே குளிப்பது சிறப்பு எனச் சொல்லுவார்கள் சிலர்.
- பழனி மலையை சிவகிரி என்றும் இடும்பன் மலையை சக்தி கிரி என்றும் அழைப்பர்.
- இதன் காரணமாக சினம் கொண்ட முருகன் பழனி மலைக்கு வந்து விட்டார்.
சுமார் 450 அடி உயரம் கொண்ட பழனிமலை மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பிரிவுகளான வராகமலை, கொடைக்கானல் போன்ற மலைகள் சூழப்பட்ட செழிப்புடன் திகழ்ந்திடும் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
இயற்கை அழகுபட விளங்கும் இம்மலைக்கு எதிரே சற்று தொலைவில் இடும்பன் மலை உள்ளது.
பழனி மலையை சிவகிரி என்றும் இடும்பன் மலையை சக்தி கிரி என்றும் அழைப்பர்.
தமிழகத்தில் உள்ள முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக உள்ள ஆவினன்குடி பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
இத்தலத்தைச் சுற்றிலும் உள்ள நகரப் பகுதியே ஆவினன்குடி என்றும், மலை பழனிமலை என்றும் அழைக்கப்பட்டது. ஆனால் தற்போது நகரம் மற்றும் மலை ஆகியவற்றைச் சேர்த்துப் பழனி என்று வழங்கப்படுகிறது.
"பழனி" என்பது "பழம் நீ" என்பதன் திரிப்பு என்று தலபுராணம் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.
ஒரு சமயம் நாரத முனிவர் தன்னிடம் வழங்கிய ஞானப்பழத்தை அம்மையப்பர் தன் இளைய புதல்வனான முருகனுக்குத் தராமல் மூத்த புதல்வன் விநாயகருக்கு அளித்து விட்டார்.
இதன் காரணமாக சினம் கொண்ட முருகன் பழனி மலைக்கு வந்து விட்டார்.
அம்மையப்பர் இம்மலையில் எழுந்தருளி சினம் கொண்டிருந்த தம் புதல்வனிடம் "முருகா! பழம் நீ! பழமாக நீயே இருக்கும் போது உனக்கு எதற்கு வேறு பழம்?"
என்று ஆறுதல் கூறியதாகவும் அம்மையப்பரால் அருளப்பட்ட "பழம் நீ" என்னும் சொற்றொடரே இத்தலத்தின் பெயராக அமைந்தது என்றும் கூறப்படுகிறது.
- முருகப் பெருமானின் அருளால் அவை இரண்டும் அவ்விடங்களியே பொருந்தியது.
- குமரக்கடவுளுக்கும் அசுரனுக்கும் கடும்போர் நடந்தது.
ஒரு சமயம் கைலாயத்தில் பழனி மலையும், இடும்பன் மலையும் சிவகிரி, சத்திகிரி என்ற இரு பிரிவுகளாக இருந்தவனாம்.
இறைவன் இவ்விரு மலைகளையும் அகத்தியருக்குத் தந்தருளினார்.
தனக்களித்த இருமலைகளையும் பொதிகைக்குக் கொண்டு வருமாறு அகத்தியர் பெருமான் இடும்பாகரனுக்குக் கட்டளையிட அவற்றை இடும்பன் கொண்டு சென்றான்.
இவ்வாறு சிவகிரியையும், சக்திரியையும் அவன் தூக்கிச் செல்லும்போது களைத்து இப்போது பழனி மலையும், இடும்பன் மலையும் இருந்திடும் இடங்களில் அவற்றை வைத்தான்.
முருகப் பெருமானின் அருளால் அவை இரண்டும் அவ்விடங்களியே பொருந்தியது.
மீண்டும் அவற்றை தூக்க முற்பட்டபோது இடும்பனால் அவற்றை தூக்கவோ நகர்த்தவோ இயலாமல் போனது.
இந்நிலையில் குமரப் பெருமான் அம்மையப்பன் தனக்கு ஞானப்பழத்தைத் தராமையால் சினங்கொண்டு சிவகிரி மலை மீது எழுந்தருளினார்.
பாலகனான குமரன் குராமரத்தினடியில் தோன்றினான்.
இதுகண்ட இடும்பாசுரன் தன்னால் மலைகளை மீண்டும் தூக்கிட இயலாமல் போனதற்குக் குமரனே காரணம் என்று எண்ணி கடும் கோபம் கொண்டவனாய் அவரை எதிர்த்துப் போரிடத் துவங்கினான்.
குமரக்கடவுளுக்கும் அசுரனுக்கும் கடும்போர் நடந்தது.
முடிவில் அசுரன் குமரனால் வதைப்பட்டான்.
தன் கணவன் உயிர் நீத்ததைக் கண்டு வருந்திய இடும்பன் மனைவியான இடும்பி குமரக்கடவுளிடம் தன் கணவனை மீண்டும் உயிர்ப்பித்துத் தருமாறு வேண்ட, அவரும் அவ்வாறே செய்தருளினார்.
உயிர் பிழைத்தெழுந்த இடும்பன் குமரப் பெருமானிடம் இரு வரங்களைக் கேட்டான்.
அவை முருகப் பெருமானின் சன்னதியில் காவலிருக்கத் தனக்கு ஓர் இடம் வேண்டுமென்பதும், தான் இரு மலைகளையும் தூக்கி வந்தது போன்ற இத்தலத்திற்கு பக்தர்கள் இரு காவடிகளுடன் வரும்போது அவர் தம் பிரார்த்தனை நிறைவேறிட வேண்டும் என்பதாகும்.
இடும்பனின் வேண்டுதல்படியே குமரப் பெருமானும் வரங்களைத் தந்தருளினார்.
- பழனி மலை 450 அடி உயரம் கொண்டது. இதன் மீது ஏறிச் சென்றிட 697 படிகள் உள்ளன.
- மலை மீது உட்பிரகாரத்தில் மேற்கு மூலையில் போகர் சன்னதி உள்ளது.
இத்தலத்தின் மலை மீதிருக்கும் திருக்கோயிலில் உள்ள மூலவர் தண்டாயுதபாணியின் திருமேனி நவபாஷாணங்களை கொண்டு போகரால் உருவாக்கப்பட்டதாகும்.
பழனி மலை 450 அடி உயரம் கொண்டது. இதன் மீது ஏறிச் சென்றிட 697 படிகள் உள்ளன.
மலை மீதிருக்கும் தண்டாயுதபாணியை வழிபடும் முன்பாக மலையடிவாரத்தில் வீற்றிருக்கும் பாத விநாயகரை வணங்கிய பின் அடுத்து கிரிவலம் வரவேண்டும்.
கிரிவல சுற்று சுமார் அரை கிலோ மீட்டர் சுற்றளவுடையது. இதன் இருபுறமும் கடம்ப மரங்களும், பிற மரங்களும் உள்ளன.
மலை மீது உட்பிரகாரத்தில் மேற்கு மூலையில் போகர் சன்னதி உள்ளது.
இங்குதான் போகர் சமாதி நிலையில் இருந்தாராம்.
இங்கிருந்து முருகப் பெருமானின் சன்னதிக்கு சுரங்கப்பாதை ஒன்று உள்ளது.
இறுதியாக இதனுள் சென்ற போகர் மீண்டு வரவேயில்லை. .
இப்போதும்அவர் அச்சுரங்கப் பாதையினுள் தான் உள்ளார்.
அவர் பூஜித்து வந்த புவனேஸ்வரியம்மன் சிலை இன்னும் பூஜை செய்யப்பட்டு வருகிறது.
- மருதமலை மூன்று புறங்களிலும் மலையரண்களால் சூழப்பெற்றுள்ளது.
- தமிழ் கடவுளாம் முருகப் பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் உள்ளன.
தமிழ் கடவுளாம் முருகப் பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் உள்ளன.
இதில் 7வது படைவீடாக மருத மலை முருகன் கோவில் தனிச் சிறப்புடன் திகழ்ந்து வருகிறது.
கோவை மாநகரின் மேற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் அமைப்பில் இக்கோவில் அமைந்துள்ளது.
மருதமலை மூன்று புறங்களிலும் மலையரண்களால் சூழப்பெற்றுள்ளது.
இந்த கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலைகளின் இயற்கை அமைப்புகளுடன் சேர்ந்து பார்க்கும்போது மயிலை தோகை விரித்தாற் போல் காட்சி அளிக்கிறது.
இதனால் முருகன் மயில் மீது அமர்ந்த தோற்றம் நம் கண் முன்னால் வருகிறது.
மருத மரங்கள் அதிகமாக காணபடுவதால் இந்த மலை மருதமால்வரை, மருதவரை, மருதவேற்பு, மருதக்குன்று , மருத லோங்கல், கமற் பிறங்கு, மருதாசலம் வேள் வரை என்றெல்லாம் பேரூர் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
மருதமலை ஆண்டவன் என்று அழைக்கப்படுவதற்கு காரணம், மருத மரங்கள் நிறைந்த இந்த மலைக்கு தலைவன் என்பதாகும்.
மருதமலையான், மருதப்பன், மருதாசல மூர்த்தி போன்ற திருப்பெயர்களாலும் இம்மலையில் எழுந்தருளியுள்ள முருகன் அழைக்கப்படுகிறார்.
- அசலம் என்ற வடசொல்லுக்கு தமிழில் மலை என்பது பொருளாகும்.
- அந்த மரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பீறிட்டு கிளம்பியது.
முன்னொரு காலத்தில் முருக பக்தரான சித்தர் ஒருவர் மருதமலை பகுதிக்கு வந்தார்.
அதிக தாகத்தாலும் களைப்பாலும் துன்புற்று மருத மரத்தின் அடியில் இளைப்பாறினார்.
அந்த மரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பீறிட்டு கிளம்பியது.
இந்த அதிசயம் கண்ட சித்தர் மகிழ்ச்சி அடைந்தார்.
முருகனின் திருவருளே அதற்கு காரணம் என்று மகிழ்ந்த சித்தர் முருகப் பெருமானை "மருதம்+ சலம்(நீர்) ஆகியவற்றின் தலைவா" என வாழ்த்தி பாடினார்.
அதுவே காலப் போக்கில் மருதாசலபதி என மருவி அழைக்கப்படுகிறது என்பர்.
அசலம் என்ற வடசொல்லுக்கு தமிழில் மலை என்பது பொருளாகும்.
எனவே மருத மரங்கள் அடர்ந்த மலை என்ற பொருளில் மருதாசலம் என்று பெயர் ஏற்பட்டது என்றும் கருதலாம்.
எனவே கி.பி.12&ம் நூற்றாண்டில் மருதமலை கோவில் அமைக்கப்பட்டது என்றும் கொங்கு நாட்டின் 24 பிரிவுகளுள் ஒன்றான ஆறை நாட்டின் எல்லையாக மருதமலை இருந்தது என்றும் அறியலாம்.
பேரூர் புராணம், காஞ்சி புராணம், அருணகிரி நாதரின் திருப்புகழ் முதலிய நூல்களில் மருதமலை சிறப்பித்து கூறப்பட்டுள்ளது.
- இந்த விநாயகரின் விக்ரகம் இயற்கை அமைப்பு மிக அழகு உடையது.
- விநாயகரை வணங்கி சென்றால் சரியாக 18 படிகளை கொண்ட பதினெட்டாம்படி உள்ளது.
மருதமலை அடிவாரத்தில் படிக்கட்டு பாதையின் தொடக்கத்தில் தான்தோன்றி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
இந்த விநாயகரின் விக்ரகம் இயற்கை அமைப்பு மிக அழகு உடையது.
பிற தலங்களில் காண்பதற்கு அரிதாகும்.
விநாயகரின் அழகையும் பெருமைகளையும் மருதமலை தான்தோன்றி பதிகத்தில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் கூறியுள்ளார்.
தான் தோன்றி விநாயகரை வணங்கி சென்றால் சரியாக 18 படிகளை கொண்ட பதினெட்டாம்படி உள்ளது.
சபரிமலைக்கு சென்று அய்யப்பனை வழிபட இயலாதவர்கள் இந்த பதினெட்டாம்படிக்கு வந்து வணங்கி செல்கிறார்கள்.
- இடும்பனை வணங்கினால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கிறது
- அடிவாரத்தில் படிகளின் வழியாக செல்லும் வழியில் இந்த சன்னதி அமைந்துள்ளது.
மருதமலை முருகன் கோவிலில் இடும்பன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
அடிவாரத்தில் படிகளின் வழியாக செல்லும் வழியில் இந்த சன்னதி அமைந்துள்ளது.
இங்கு காவடியை சுமந்து கொண்டு இருக்கும் தோற்றத்தில் பெரிய உருண்டை வடிவமான பெரிய பாறையில் காவடியை சுமந்து கொண்டிருக்கும் தோற்றத்தில் இடும்பன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
இடும்பனை வணங்கினால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.
இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இடும்பனை வணங்கி செல்கிறார்கள்.
மேலும் இங்கு குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டி ஏராளமான பெண்கள் இன்றும் வழிபட்டு செல்கிறார்கள்.
- முருகப்பெருமான் பாம்பாட்டி சித்தரிடம் மருத மலையில் அருள் விளையாட்டுகள் செய்தார்.
- பதினெட்டு சித்தர்களுள் பாம்பாட்டி சித்தரும் ஒருவர்.
பதினெட்டு சித்தர்களுள் பாம்பாட்டி சித்தரும் ஒருவர்.
இறைவனை இடைவிடாது நினைத்து நினைத்து அகக்கண்ணால் கண்டு ஆத்ம சக்தியால் செயற்கரிய செயல்களை செய்து மருத்துவம், ஜோதிடம், இரச வாதம் ஆகியவற்றில் கை தேர்ந்தவர்களை சித்தர்கள் என்பார்கள்.
பாம்பாட்டி சித்தர் பாண்டிய நாட்டில் காடுகளில் காணப்பட்ட பாம்புகளை பிடித்து ஆட்டியும், தன் சொல்படி நடக்க செய்தும் வந்தார்.
ஒருமுறை "நவரத்னம்" என்னும் பாம்பை ஆட்ட முயற்சித்த போது சட்டை முனிவரை சந்தித்து யோக நெறியில் சமாதி கூடும் நிலை பெற்றாராம்.
பாம்பாட்டி சித்தர் ஒரு முறை இறந்து போன மன்னன் உடலில் கூடு விட்டு கூடு பாயும் வித்தை மூலம் புகுந்தாராம்.
இவ்வாறு பல சித்துகளை செய்த இவர் இந்த பாம்பை ஆட்டுவித்ததால் பாம்பாட்டி சித்தர் என்று அழைக்கப்பட்டார்.
முருகப்பெருமான் பாம்பாட்டி சித்தரிடம் மருத மலையில் அருள் விளையாட்டுகள் செய்தார்.
ஒரு காலத்தில் உயரமான குன்று உருண்டோடி வர சித்தர் தம் அருட் சக்தியால் பாறையின் முகட்டிலேயே நிற்கும்படி செய்தார் என்பர்.
- முருகன் அருள் பெற்று பிணி நீங்கி சித்தர் மருதமலையில் வாழ்ந்துள்ளார்.
- அங்குள்ள பாறையானது பாம்பு போன்ற அமைப்பில் இயற்கையாகவே அமைந்துள்ளது.
மருதமலை முருகன் கோவிலில் பாம்பாட்டி சித்தர் குகை உள்ளது.
இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து பாம்பாட்டி சித்தரை வணங்கி தியானம் செய்து வழிபட்டு செல்கிறார்கள்.
கோவில் தென்புறத்தில் படிக்கட்டுகள் வழியாக கீழ் இறங்கி கிழக்கு திசை நோக்கி சென்றால் அங்கு பாம்பாட்டி சித்தர் சன்னதி உள்ளது.
அங்குள்ள பாறையானது பாம்பு போன்ற அமைப்பில் இயற்கையாகவே அமைந்துள்ளது.
பாம்பாட்டி சித்தருக்கும் கோவிலுக்கும் ஆதி மூலஸ்தானத்துக்கும் இடையே சுரங்க வழி உள்ளது.
அதன் வழியாக தான் சித்தர் ஆதி மூலஸ்தானத்தில் உள்ள வள்ளி தெய்வானையுடன் அமர்ந்திருக்கும் முருகப்பெருமானை தினமும், காலை , மாலை நேரத்தில் தரிசித்து வருவதாக நம்பப்படுகிறது.
முருகன் அருள் பெற்று பிணி நீங்கி சித்தர் மருதமலையில் வாழ்ந்துள்ளார்.
இவர் வாழ்ந்த குகையில் ஒரு பாம்பு, பாலும் பழமும் உண்டு செல்வதாக சொல்லப்படுகிறது.
தற்போது பக்தர்கள் பாம்புக்கு பாலும் பழமும் அளித்து வருகிறார்கள்.
பாம்பாட்டி சித்தரை வழிபடும் பக்தர்களுக்கு நஞ்சினால் ஏற்படும் நோய்கள் நீங்கும்.
இந்த சித்தரை வழி பட்டால் அமைதியின்றி வாழ்வோர் அமைதியான வாழ்க்கையான பெறுவர்.
இங்கு தியானம் செய்வது மன அமைதியை தரும்.
- கற்கள் மீது கற்கள் வைத்து வழிபட்டால் முருகப்பெருமான் கருணை தம் மீது விழும்.
- மருதமலை முருகன் கோவிலுக்கு வேறெங்கும் இல்லாத தனி சிறப்பு உள்ளது.
மருதமலை முருகன் கோவிலுக்கு வேறெங்கும் இல்லாத தனி சிறப்பு உள்ளது.
மருதமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் பல்வேறு நேர்த்தி கடனை செலுத்தி வருகிறார்கள்.
அந்தளவுக்கு முருகப் பெருமான் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி வைக்கிறார்.
புதுவீட்டில் குடியேறலாம்
குறிப்பாக இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலையடிவார படிக்கட்டுகளில் இருந்து கற்கள் மேல் கற்கள் வைத்து அடுக்கி கொண்டு வழிபட்டு செல்கிறார்கள்.
அதென்ன.. புதுவித வழிபாடாக உள்ளதே? என்று கேட்கிறீர்களா.!
ஆம்! கற்கள் மீது கற்கள் வைத்து வழிபட்டால் முருகப்பெருமான் கருணை தம் மீது விழும்.
இதனால் கற்களை எப்படி பக்தர்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்தார்களோ, அதுபோல் புது வீடு கட்டி குடியேறுவார்கள் என்று இன்றளவும் பக்த கோடிகளால் நம்பப்பட்டு வருகிறது.
மருதமலை முருகன் கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வருகிறார்கள்.
இங்கு முருகப் பெருமானை மனமுருக வேண்டி படிக்கட்டுகளில் கற்களை அடுக்கி வைத்து வழிபட்டு செல்கிறார்கள்.
இதனால் பக்தர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து முருகப்பெருமான் நிவர்த்தி செய்கிறார்.
விரைவிலேயே பக்தர்கள் வேண்டிய வரங்களை அளித்து அவர்களின் வாழ்க்கையில் செல்வத்தை வாரி வழங்குகிறார் என்பது ஐதீகம்.
- கல்யாண உற்சவம் நடத்தினால் கட்டாயம் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
- அமெரிக்கா, மலேசியா, நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
முருகப் பெருமானின் பிரசித்தி பெற்ற தலங்களில் மருதமலை முருகன் கோவிலும் ஒன்றாகும்.
இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்து செல்கிறார்கள்.
முருகனை மனமுறுகி வேண்டினால் வேண்டும் வரத்தை தந்தருளுவார் என்பதால் தமிழகம் மட்டுமின்றி
அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் திருமணத் தடை ஏற்படுவோர் இக்கோவிலில் சுவாமிக்கு பொட்டுத்தாலி, வஸ்திரம் வைத்து
கல்யாண உற்சவம் நடத்தினால் கட்டாயம் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
குழந்தை இல்லாத தம்பதியினர் 5 வாரம் வெள்ளிக்கிழமை தோறும் வழிபாடு செய்தாலும்
சஷ்டி தோறும் விரதம் இருந்து மருதாசல மூர்த்தியை வழிபட்டாலும் நிச்சயம் முருகனின் அருள் கிடைக்கும் என்பதும் தொன்று தொட்டு இருந்து வரும் ஐதீகமாகும்.