என் மலர்
நீங்கள் தேடியது "malavika menon"
- மலையாள படங்களில் பெரியளவில் கவர்ச்சியாக நடிக்க முடியாது.
- ஆனால், தமிழ், தெலுங்கில் அப்படி நடிக்கலாம்.
சென்னை:
மலையாளத்தில் முன்னணி நடிகையாக ஜொலிக்கும் மாளவிகா மேனன், தமிழில் 'இவன் வேற மாதிரி', 'விழா', 'பிரம்மன்', 'வெத்துவேட்டு', 'நிஜமா நிழலா', 'பேய் மாமா', 'அருவா சண்ட' போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை மாளவிகா மேனன் சினிமா வாழ்க்கை பற்றிப்பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
'நான் முதன்முதலில் நடித்தது 'நித்ரா' என்ற மலையாள படத்தில்தான். அப்போது எனக்கு 14 வயது. சின்ன பெண்ணாக இருப்பதால் என்னை இயக்குனர் ஹீரோயினுக்கு தங்கையாக நடிக்க வைத்துவிட்டார்.
பின்னர், '916' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனேன். அதில் நிறைய சவாலான காட்சிகளில் நடிக்க வேண்டியது இருந்தது. சிரமம்தான் இருந்ததே தவிர, பெரியளவில் கேலி பேச்சுகள் வரவில்லை. மலையாள படங்களில் பெரியளவில் கவர்ச்சியாக நடிக்க முடியாது. அப்படிப்பட்ட கதாபாத்திரங்களும் வராது. ஆனால், தமிழ், தெலுங்கில் அப்படி நடிக்கலாம்.
இதுவரை முத்தக்காட்சிகளில் நடித்தது கிடையாது. ஆனால் அப்படி நடிக்க கேட்டிருக்கிறார்கள். கதைக்கு மிகவும் அவசியப்பட்டால், அது பேசப்படும் காட்சியாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன். அதில் ஒன்றும் தவறு இல்லை. அப்படி ஒரு படம் வரட்டும் பார்க்கலாம். இவ்வாறு கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
https://iflicks.in/
- வலைத்தளத்தில் கண்ணியமற்ற முறையில் அவதூறு பரப்புகின்றனர்.
- நான் அணியும் ஆடைகள் பற்றியும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள்.
மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் மாளவிகா மேனன், தமிழில் 'இவன் வேற மாதிரி, பிரம்மன் வெத்து வேட்டு, விழா, பேய் மாமா, அருவா சண்ட' உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.மாளவிகா மேனனுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இதற்கு மாளவிகா மேனன் கண்டனம் தெரிவித்தார்.
அவர் கூறும்போது, ''வலைத்தளத்தில் கண்ணியமற்ற முறையில் அவதூறு பரப்புகின்றனர். யாரை பற்றியும் இழிவாக பேசலாம் என்று நினைக்கிறார்கள். நான் அணியும் ஆடைகள் பற்றியும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள்'' என்றார்.
மேலும் வலைத்தளத்தில் தனக்கு எதிராக அவதூறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேரள சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளித்தார். கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவதூறு பதிவு வெளியிட்டவரை கைது செய்து விசாரணை நடத்துகிறார்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.