என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mano"

    • தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் பிரபல பாடகராக வலம் வருபவர் மனோ.
    • பாடகர் மனோவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி ரிச்மண்ட் கேப்ரியல் பல்கலைக்கழகம் கவுரவித்துள்ளது.

    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் பிரபல பாடகராக வலம் வருபவர் மனோ. இவர் பாடகராக மட்டுமில்லாமல் நடிகர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் குரலில் வெளியான ஷெண்பகமே ஷெண்பகமே, நீ ஒரு காதல் சங்கீதம், ராசாத்தி மனசுல, நூறு வருஷம், ஒரு மைனா மைனா குருவி என பல பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் விருப்பப் பாடல்களாக இருந்து வருகிறது. மேலும் சிங்கார வேலன், எனக்கு 20 உனக்கு 18, சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் உள்ளிட்ட பல படங்களில் நடிகராக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.


    டாக்டர் பட்டம் பெற்ற பாடகர் மனோ
    டாக்டர் பட்டம் பெற்ற பாடகர் மனோ

    இந்நிலையில் பின்னணி பாடகர் மனோவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி ரிச்மண்ட் கேப்ரியல் பல்கலைக்கழகம் கவுரவித்துள்ளது. பாடகர் மனோ, 38 ஆண்டுகளில் 15 மொழிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். இதற்காக, மனோவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி ரிச்மண்ட் கேப்ரியல் பல்கலைக்கழகம் கவுரவித்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு, மனோ மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • மகன், மனைவி உட்பட குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
    • பாடகருக்குத் தனது கைக்கடிகாரத்தைப் பரிசளித்தார்.

    சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது. தற்போது சீனியர்களுக்கான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 10-வது சீசன் துவங்கி, கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் சுஜாதா, மனோ, அனுராதா மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் நீதிபதிகளாகப் பங்கேற்றுள்ளார்கள்.

    இந்த நிகழ்ச்சியில், கடந்த வாரம் பாடகர் மனோவின் 40 வருட திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில், மனோ ஸ்பெஷல் சுற்று நடத்தப்பட்டது. இதில் சூப்பர் சிங்கர் சீனியர் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும், மனோவின் பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடினர்.

     


    மனோவை கௌரவிக்கும் விதமாக, இசைத் துறையிலிருந்து இசையமைப்பாளர் சிற்பி, மால்குடி சுபா, உன்னிமேனன், கல்பனா முதல், பல இசை மேதைகள் கலந்துகொண்டனர். இதுவரை எந்த ஒரு மேடையிலும் அதிகமாகக் கலந்துகொள்ளாத, திரை ஆளுமை மனோவின் நண்பர், நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

    மனோவின் பாடல்களைக் கொண்டாடும் விதமாக சூப்பர் சிங்கர் ஜூனியர் முன்னாள், சீசன் 9 மற்றும் 10 போட்டியாளர்கள் இணைந்து, மனோவிற்காக ஒரு சிறப்புச் சங்கீத நிகழ்வை அரங்கேற்றினர். இதில் மனோவின் மகன், மனைவி உட்பட குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

    இறுதியாக பாடகர் மனோ, இது என் வாழ்வில் மிக முக்கியமான மறக்கமுடியாத சந்தோச தருணம் என்று தெரிவித்ததோடு, இந்நிகழ்ச்சியில் மிக அற்புதமாகப் பாடிய சஞ்சீவ் எனும் பாடகருக்குத் தனது கைக்கடிகாரத்தைப் பரிசளித்தார்.  

    • மருத்துவ பணிகளுக்கு நடுவே இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்.
    • இந்த ஆல்பத்தை ‘சரிகம’ நிறுவனம் வெளியிடுகிறது.

    சென்னையில் பிரபல ரோபாட்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் யு.பி. சீனிவாசன் 'ஜண்ட மட்டான்' எனும் இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இந்த ஆல்பத்தை பார்த்து பாராட்டி அதன் உரிமையை முன்னணி இசை நிறுவனமான சரிகம வாங்கியுள்ளது.

    இந்த ஆல்பம் வெளியீட்டு நிகழ்வில் இயக்குநர் சிம்புதேவன், பாடகர் மனோ, தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன், இயக்குநர் மந்திரமூர்த்தி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன், நடன இயக்குநர்கள் ஸ்ரீதர் மற்றும் கந்தாஸ், நடிகர் மகேந்திரன் மற்றும் கே.பி.ஒய். சரத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மருத்துவத்துறையில் பாரீசில் தனிப் பயிற்சி பெற்றுள்ள மருத்துவர் சீனிவாசன், கலைத்துறையிலும் ஆர்வம் உள்ளவர். இதன் காரணமாக மருத்துவ பணிகளுக்கு நடுவே இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்.

    நாகர்கோயில் வட்டார வழக்கை நன்கு அறிந்தவர் என்பதால் மருத்துவர் சீனிவாசன் 'ஜண்ட மட்டான்' பாடலை எழுதியுள்ளார். இதற்கு இசையமைப்பாளர்கள் ஹெச்.ஹூமர் எழிலன், ஹெச். சாஜஹான் ஆகியோர் இசையமைத்துள்ளனர். பெரும் பொருட்செலவில் உருவான இந்த ஆல்பத்தை 'சரிகம' நிறுவனம் வெளியிடுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×