என் மலர்
நீங்கள் தேடியது "manobala"
- மனோபாலா உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.
- சென்னை வளசரவாக்கத்தில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். 69 வயதாகும் இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இவரது மறைவுக்கு திரைபிரலங்கள், அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் என பலரும் நேரிலும் சமூக வலைத்தளத்தின் வாயிலாகவும் அஞ்சலி செலுத்தினர். மனோபாலாவின் இறுதி ஊர்வலம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து புறப்பட்டு வளசரவாக்கம் மின்மயானத்தை சென்றடைந்தது.

அங்கு அவரின் உடலுக்கு குடும்ப வழக்கப்படி இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. இறுதி சடங்குகளை அவரது மகன் செய்தார். அங்கு கூடியிருந்த குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் இறுதி மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் மனோபாலாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. மனோபாலாவின் உடலுக்கு உறவினர்கள் கண்ணீர் மல்க விடைகொடுத்தனர்.
- விஜய் நடிக்கும் ‘வாரிசு’ திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
- விஜய்யுடனான சந்திப்பு குறித்து நடிகர் மனோபாலா சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. மேலும், 'வாரிசு' திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், இப்படத்தின் முதல் பாடல் அப்டேட் தீபாவளியன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாரிசு
இந்நிலையில், நடிகர் மனோபாலா, விஜய் குறித்து பகிர்ந்துள்ள பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "வாரிசு படப்பிடிப்பு தளத்தில் தளபதி விஜய்யை சந்தித்தேன். அவர் அப்படியே இருக்கிறார். நடனம் ஆடும் போது அதிக உத்வேகம். ௧௫ நிமிட சந்திப்பு புத்துணர்ச்சியையும் உத்வேகத்தையும் எனக்கு கொடுத்தது" என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
Met thalapathi VIJAY n varisu set...it was amazing ...he s still d same...lots of energy while dancing ...15mts talk...gave me freshness and energy for me too...
— Manobala (@manobalam) October 20, 2022
இந்த படத்தில் அவரது பேரன் கபிலேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு எதிர்மறை நாயகனாக அவரது தம்பி மகன் பால சபரீஸ்வரன் அறிமுகமாகிறார். கதாநாயகியாக பிரார்த்தனா நடிக்கிறார். இவர் மலையாளத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். மனோபாலா, லிவிங்ஸ்டன், பாவா லட்சுமணன், நளினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - சந்துரு, இசை - மகேந்திரன், தயாரிப்பு - வீர ஸ்ரீ சந்தன கருப்பராயன் புரொடக்ஷன்ஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஈரோடு செளந்தர்.

படம் பற்றி இயக்குநர் கூறியதாவது,
10-ஆம் வகுப்பு பள்ளிக்கூட கதை என்பதால் இந்த கதைக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் தனது பேரன் சரியாக இருப்பான் என்பதால் நாயகனாக அறிமுகப்படுத்துகிறேன்.
மாணவர்களின் எதிர்காலம் என்பது 10-ஆம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு கால கட்டம் தான். அதை மட்டும் மனதில் வைத்து மாணவர்கள் செயல்பட்டால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். கொஞ்சம் தடம் மாறினாலும் அவர்கள் வாழ்க்கை திசை மாறி விடும் என்கிற கருத்தை சொல்கிற படமாக இது உருவாகிறது என்றார். படப்பிடிப்பு 4ம் தேதி ஈரோட்டில் துவங்கிறது.
So happy to have you in our team sir & Loved your work in Lucifer 😃😃😃 https://t.co/xCFJe2d6DB
— SaiDhanshika (@SaiDhanshika) April 21, 2019











Team #KaatrinMozhiFromTomorrow is thankful to @vidya_balan mam @tanuj_garg for this wonderful wish to our film. Thank you both 🙏🙏🙏💐💐 pic.twitter.com/0fsARUFSJx
— Dhananjayan BOFTA (@Dhananjayang) November 15, 2018
