என் மலர்
நீங்கள் தேடியது "MBBS"
- மாணவர்கள் விரும்பிய இடங்களில் சேருவதை தடுக்கும் என்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கருத்து கூறுகின்றனர்.
- சீட் வேண்டாம் என நிராகரிக்கும் மாணவர் வைப்பு தொகையை இழக்க நேரிட்டாலும், அடுத்த சுற்றுகளில் அனுமதிக்கப்படுவார்.
சென்னை:
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு காத்திருக்கும் மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க நேற்று முதல் இணையதள பக்கம் திறக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர். அதன்பின்னர் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சீட்டுகள் சுழற்சி அடிப்படையில் நிறைவேற்றப்படும்.
இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். படிப்புக்கு விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமான அனைத்து கல்லூரிகளையும் முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில், ஒரு கல்லூரியை விட்டு வெளியேறினால், அதற்கு அடுத்த கட்ட கவுன்சிலிங்கில் அவர்கள் வேறு கல்லூரிகளில் சேர முடியாமல் போய்விடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது ஒரு சுயநிதி கல்லூரியை மாணவர் தேர்வு செய்யவில்லை என்றால், அடுத்தடுத்து வரும் சுற்றுகளில் அவர் வேறு எந்த சுயநிதி கல்லூரிக்கும் விண்ணப்பிக்க முடியாது. இதே நிலை அரசு கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை பல்கலை கழகங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த முறை மாணவர் சேர்க்கை தாமதத்திற்கு வழிவகுக்கும் என்றும், மாணவர்கள் விரும்பிய இடங்களில் சேருவதை தடுக்கும் என்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கருத்து கூறுகின்றனர்.
இதுகுறித்து மாணவர் ஆலோசகர் மாணிக்கவேல் ஆறுமுகம் கூறுகையில், மாணவர்கள் விருப்பபடி கல்லூரிகளை தேர்வு செய்யவில்லை என்றால் அவர்கள் முதல் சுற்றில் வெளியேறுவார்கள். ஆனால் தற்போது அனைத்து கல்லூரிகளையும் தேர்வு செய்ய சொல்லி இருக்கிறார்கள். இதனை தவிர்த்து மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை மட்டும் தேர்வு செய்ய சொன்னால் நன்றாக இருந்திருக்கும். உதாரணமாக 2-ம் கட்ட கவுன்சிலிங்கில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேரும் விண்ணப்பதாரர்கள், அவர்கள் வேறு தரமான கல்லூரிக்கு செல்ல விரும்பினாலும், அடுத்த சுற்று கவுன்சிலிங்கில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் சீட் வேண்டாம் என நிராகரிக்கும் மாணவர் வைப்பு தொகையை இழக்க நேரிட்டாலும், அடுத்த சுற்றுகளில் அனுமதிக்கப்படுவார். கடந்த முறையும் இதேதான் நடந்தது. ஆனால் முடிவில், நிர்வாக பிரிவில் எம்பிபிஎஸ் கல்லூரியை 2-ம் கட்ட கவுன்சிலிங்கில் தேர்வு செய்த மாணவனின் மதிப்பெண்ணானது, அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவனின் மதிப் பெண்ணை விட அதிகமானதாக தோன்றும். இது நியாயம் இல்லாதது என்றார்.
- கடந்த ஆண்டுகளை விட கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
- தனியார் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ரூ.4 லட்சத்து 35 ஆயிரம் முதல் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு கடந்த 27-ந்தேதி தொடங்கியது. வருகிற 28-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் ஆவலோடு விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்தும் மருத்துவக் கல்வி இயக்ககம், 2023-24-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகளை வெளியிட்டு இருக்கிறது. அதில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேருபவர்களுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயித்து அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டுகளை விட கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருபவர்கள் ஆண்டு ஒன்றுக்கு ரூ.18 ஆயிரத்து 73-ம், பி.டி.எஸ். படிப்பில் சேருபவர்களுக்கு ரூ.16 ஆயிரத்து 73-ம், இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் சேருவோருக்கு ரூ.1 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு வரை அரசு கல்லூரி எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு ரூ.13 ஆயிரத்து 610-ம், பி.டி.எஸ். படிப்பில் சேர ரூ.11 ஆயிரத்து 610-ம் கட்டணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், தனியார் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ரூ.4 லட்சத்து 35 ஆயிரம் முதல் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதில் வேலூர் கிறிஸ்தவ கல்லூரியில் ரூ.53 ஆயிரம் கட்டணமாக உள்ளது. இவர்களுக்கான கட்டணமும் குறைந்தது ரூ.50 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
மேலும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு வரை தனியார் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் ஓராண்டுக்கு கட்டணமாக பெறப்பட்டு வந்தது. இந்த ஆண்டு ரூ.13 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கும் கடந்த ஆண்டைவிட ரூ.1 லட்சம் அதிகமாக உயர்த்தி, ரூ.24 லட்சத்து 50 ஆயிரமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
மருத்துவ படிப்புக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது தொடர்பாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'மாணவர்களின் கல்வி நலன் பாதிக்காத வகையில் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.
மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மருத்துவப் படிப்புக்கான கல்வி கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- கடந்த ஆண்டைவிட இந்த வருடம் கூடுதலாக மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
- மருத்துவ துணை படிப்புகளுக்கு இதுவரையில் 69 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு 29-ந்தேதி தொடங்கியது.
கடந்த ஆண்டைவிட இந்த வருடம் கூடுதலாக மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 500 பேருக்கு மேல் மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட உள்ளது.
மாணவ-மாணவிகள் அந்தந்த இடஒதுக்கீடு அடிப்படையில் விண்ணப்பித்து வருகின்றனர். இன்று காலை வரையில் 30 ஆயிரம் பேர் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பிக்க 10-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
கால அவகாசம் அதற்கு மேல் நீட்டிக்க வாய்ப்பு இல்லை. வருகிற 15-ந்தேதி அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான மருத்துவ கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. அதனால் மாணவர்கள் தாமதமின்றி உடனே விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்து சீட் மேட்ரிக்ஸ் தயாரிக்கப்பட்டு ரேங்க் பட்டியல் வெளியிடப்பட வேண்டும். அதற்கான பணிகள் நிறைவடைய ஒரு வாரம் ஆகலாம். அதனால் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ கலந்தாய்வு மாத இறுதியில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க தகுதி சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்படுவதால் கலந்தாய்வுக்கு முன்னதாக சான்றிதழ் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணைய போர்ட்டலில் பதிவு செய்ய முடியாத நிலை தற்போது உள்ளதால் கலந்தாய்விற்கு முன்னதாக ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதிச்சான்றிதழ் ஒப்படைப்பதில் தளர்வு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல மருத்துவ துணை படிப்புகளுக்கு இதுவரையில் 69 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 59 ஆயிரம் பேர் பணம் கட்டி சமர்ப்பித்தனர்.
- சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகளை மருத்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தொடங்கியுள்ளது.
- மொத்தம் 40 ஆயிரத்து 199 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
சென்னை:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு நடப்பாண் டில் 40 ஆயிரத்து 199 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 4 ஆயிரம் கூடுதலாகும். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகளை மருத்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தொடங்கியுள்ளது. அடுத்த 3 நாட்களில் அந்தப் பணிகள் நிறைவடைந்து வருகிற 16-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு, நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப் பிக்கும் நடை முறை கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கி நேற்றுடன் (புதன்கிழமை) நிறைவடைந்தது.
இந்நிலையில், விண்ணப்பங்களின் நிலவரம் குறித்து மருத்துவக் கல்வி தேர்வுக்குழுச் செயலர் ஆர்.முத்துச்செல்வன் கூறியதாவது:-
நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 26 ஆயிரத்து 805 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13 ஆயிரத்து 394 பேரும் என மொத்தம் 40 ஆயிரத்து 199 பேர் விண்ணப்பித்து உள்ளனர். கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 36 ஆயிரமாக இருந்தது.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டதும், தமிழகத்தில் கலந்தாய்வு குறித்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 300 முதல் 720 வரையிலான மதிப்பெண் பெற்றவர்கள் ஏறத்தாழ 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர்.
- கட்-ஆப் மார்க் அதிகரிப்பதால் எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேர கடுமையான போட்டி நிலவும் என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
சென்னை:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தர வரிசை பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் அரசு மற்றும் தனியார் சுய நிதி கல்லூரிகளில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை மாணவ-மாணவிகள் கணக்கிட்டு வருகின்றனர்.
இது தவிர நிர்வாக ஒதுக்கீட்டிலாவது இடம் கிடைக்குமா என்ற எதிர் பார்ப்பிலும் காத்து இருக்கின்றனர்.
மேலும் அரசு பள்ளியில் படித்த ஏழை, எளிய மாணவிகளுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற ஆவலில் உள்ளனர். மருத்துவ கலந்தாய்வு 25-ந் தேதி தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. மருத்துவ கனவில் இருக்கும் மாணவ-மாணவிகள் யார் யாருக்கு இந்த ஆண்டு வாய்ப்பு கிடைக்கும் என்பதை கலந்தாய்வு தொடங்கிய பிறகு தான் தெரிய வரும்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு இந்த ஆண்டில் கட் ஆப் மதிப்பெண்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் 25 முதல் 40 மதிப்பெண்கள் வரை உயரும் என எதிர் பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை ஒப்பீடும் போது நீட் தேர்வில் இந்த வருடம் மாணவர்கள் மதிப்பெண்களை குவித்தனர். 300க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை 37,672 ஆக அதிகரித்து உள்ளது. 300 முதல் 720 வரையிலான மதிப்பெண் பெற்றவர்கள் ஏறத்தாழ 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர்.
இந்த ஆண்டு பொதுப் பிரிவுக்கு தோராயமாக 600-602 என கட்-ஆப் மார்க் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
கடந்த ஆண்டு அது 580 என்ற அளவில் இருந்தது. இதே போல இந்த முறை பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு 554-557 என்றும், பிற்படுத்தப்பட்ட (முஸ்லீம்) பிரிவுக்கு 530-534 எனவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 528-531 எனவும் எஸ்.சி. மாணவர்களுக்கு 420-429 எனவும் மார்க் உயர வாய்ப்பு உள்ளது. எஸ்.டி. பிரிவுக்கு 320-338 ஆகவும் அதிகரிக்கலாம்.
நீட் தேர்வை பொறுத்த வரை நடப்பு ஆண்டில் தேசிய அளவில் முதல் 10 இடங்களில் 4 தமிழக மாணவர்கள் இடம் பெற்று உள்ளனர். அதே போல முதல் 50 இடங்களில் 6 மாணவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்து இருந்தால் அவர்கள் விரும்பிய இடங்கள் தமிழகம் உள்பட நாட்டின் எந்த கல்லூரியிலும் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அதற்கு அந்த மாணவர்கள் முன்வரும் பட்சத்தில் அந்த 6 இடங்களும் அதற்கடுத்த நிலையில் உள்ள தமிழக மாணவர்களுக்கு மாநில ஒதுக்கீட்டின் கீழ் கிடைக்கும்.
கட்-ஆப் மார்க் அதிகரிப்பதால் எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேர கடுமையான போட்டி நிலவும் என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
- நீட் தேர்வில் டாப் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் அகில இந்திய அளவில் இடங்களை தேர்வு செய்து சேருவார்கள்.
- நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் இக்கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 6326.
இதே போல அரசு பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த பி.டி.எஸ். இடங்கள் 1768 ஆகும்.
அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதற்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து உத்தேசமாக 25-ந்தேதி கலந்தாய்வு தொடங்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு தொடங்குவதை பொறுத்து தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்கும். அதனால் அந்த தேதி உறுதி செய்யப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கு நேற்று முன்தினம் கலந்தாய்வு தொடங்கியது. இன்று இடங்கள் தேர்வு செய்யப்படுகிறது. தமிழகத்தில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 822 இடங்கள் போகிறது.
அரசு மருத்துவ கல்லூரிகளில் இருந்து 762 எம்.பி.பி.எஸ். இடங்களும், இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் இருந்து 23 இடங்களும், அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் இருந்து 37 இடங்களும் கொடுக்கப்படுகிறது.
நீட் தேர்வில் டாப் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் அகில இந்திய அளவில் இடங்களை தேர்வு செய்து சேருவார்கள்.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கியதை தொடர்ந்து தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. வருகிற 25-ந்தேதி முதல் பொது கலந்தாய்வு ஆன்லைன் வழியாக தொடங்குகிறது. நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் இக்கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித் துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள் ஆகியோருக்கான சிறப்பு கலந்தாய்வு சென்னையில் நேரடியாக நடத்தப்படும்.
அவை எந்தெந்த தேதியில் நடைபெறும் என்ற விவரங்கள் மருத்துவ கல்லூரி இணைய தளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.
- நிர்வாக ஒதுக்கீட்டில் நீட் மார்க் 715 முதல் 107 வரை உள்ள மாணவர்கள் முதல் சுற்றில் பங்கேற்க தகுதி உடையவர்கள்.
- சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாக இருப்பதால் வங்கி வரைவோலை எடுப்பதில் சிரமம் உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ இடங்கள் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
இதற்கான முதல்கட்ட பொது கலந்தாய்வு கடந்த 25-ந்தேதி தொடங்கியது. 27-ந்தேதி சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கு சென்னையில் நேரடி கலந்தாய்வு நடத்தப்பட்டது.
பொது கலந்தாய்வில் பங்கேற்கின்ற மாணவ-மாணவிகள் 25-ந்தேதி காலை 10 மணி முதல் 31-ந்தேதி வரை மாலை 5 மணி வரை இடங்களை தேர்வு செய்து லாக் செய்வதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரேங்க் பட்டியலில் 1-ல் இருந்து 25,856 வரை உள்ள நீட் மார்க் 720-ல் இருந்து 107 வரை உள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
இதேபோல நிர்வாக ஒதுக்கீட்டில் நீட் மார்க் 715 முதல் 107 வரை உள்ள மாணவர்கள் முதல் சுற்றில் பங்கேற்க தகுதி உடையவர்கள்.
இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு முடிவு தாமதம் ஆகிறது. இன்று வரவேண்டிய முடிவு தள்ளிப்போவதால் அதில் இடம் கிடைக்காதவர்கள் தமிழக மாநில ஒதுக்கீட்டு இடங்களை பெற வரக்கூடும்.
அதனால் தமிழக மாணவர்களின் நலன் கருதி இடங்களை தேர்வு செய்வற்கு மேலும் 3 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
31-ந்தேதி மாலை வரை இடங்களை தேர்வு செய்ய கொடுக்கப்பட்ட வாய்ப்பு ஆகஸ்டு 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
3-ந்தேதி மாலை 5 மணி வரை கூடுதலாக அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாக இருப்பதால் வங்கி வரைவோலை எடுப்பதில் சிரமம் உள்ளது. அதனை கருத்தில் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் முத்துசெல்வன் தெரிவித்துள்ளார்.
- அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் அந்த கல்லூரிகளில் இடங்கள் பெற்றவர்களின் நிலை கேள்விக் குறியாகி உள்ளது.
- சேர்வதற்கு வாய்ப்பு உள்ளதா, இல்லையா? எனத் தெரியாமல் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் இருவேறு தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்கை நடத்த தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி.) தடை விதித்து உள்ளது. நடப்பாண்டில் 400 எம்.பி.பி.எஸ். இடங்களை நிரப்ப முடியாத நிலை எழுந்து உள்ளது.
இரு கல்லூரிகளுமே நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தில் உள்ளதால் மாநில ஒதுக்கீட்டு இடங்கள் ஏதும் அதில் இல்லை. அதே வேளையில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் அந்த கல்லூரிகளில் இடங்கள் பெற்றவர்களின் நிலை கேள்விக் குறியாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள வேல்ஸ் மருத்துவ கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டில் 100 இடங்களுக்கு மட்டுமே என்.எம்.சி. அனுமதி அளித்தது. ஆனால் 150 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடை பெற்றதாகவும் அதனால் நடப்பாண்டில் அங்கு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் என்.எம்.சி. இணையப்பக்கத்தில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதே போல் காஞ்சிபுரம் ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரிக்கும் நடப்பாண்டில் தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரம் வழங்கவில்லை. அந்த கல்லூரியில் 250 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. தற்போது அங்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படாது என்றும் அகில இந்திய கலந்தாய்வில் மாணவர்கள் அந்த கல்லூரியை தேர்வு செய்ய வேண்டாம் என்றும் மத்திய மருத்துவ கலந்தாய்வுக் குழு அண்மையில் அறிக்கை வெளியிட்டது.
ஏற்கனவே அங்கு இடங்களை தேர்வு செய்திருந்தாலும் அவர்களுக்கு மாற்று தேர்வு இடங்கள் வழங்கப்படும் என்றும் கூறி இருந்தது. இதன் காரணமாக அகில இந்திய ஒதுக்கீட்டின் முதல் சுற்று கலந்தாய்வில் மீனாட்சி மருத்துவ கல்லூரியின் எம்.பி.பி.எஸ். இடங்கள் எந்த மாணவருக்கும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
அதே வேளையில் என்.எம்.சி.யின் அறிக்கை வெளியாவதற்கு முன்பே கலந்தாய்வில் வேல்ஸ் கல்லூரியில் சில மாணவர்கள் எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிகிறது.
இதனால் அங்கு சேர்வதற்கு வாய்ப்பு உள்ளதா, இல்லையா? எனத் தெரியாமல் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில சுகாதார அமைச்சகங்களுக்கு மாணவர்கள் தரப்பில் இருந்து விளக்கம் கோரி கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
- பொது கலந்தாய்வில் விருப்ப இடங்களை தேர்வு செய்வதற்கான அவகாசம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது.
- இடஒதுக்கீடு இறுதி முடிவு நாளை வெளியிடப்பட உள்ளது.
சென்னை:
2023-24-ம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் (ஜூலை) 25-ந் தேதி தொடங்கியது.
பொது கலந்தாய்வில் விருப்ப இடங்களை தேர்வு செய்வதற்கான அவகாசம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது. கலந்தாய்வில் பங்குபெற்று விருப்ப இடங்களை 20 ஆயிரத்து 83 மாணவ-மாணவிகள் தேர்வு செய்து இருக்கின்றனர்.
இடஒதுக்கீடு இறுதி முடிவு நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட உள்ளது.
- அரசு பள்ளியில் படித்த 606 மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- மருத்துவ படிப்பில் சேரும் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள்.
சென்னை:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கியது. பொது கலந்தாய்வில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர். 20 ஆயிரத்து 83 பேர் மருத்துவ இடங்களை தேர்வு செய்தனர்.
இட ஒதுக்கீடு இறுதி முடிவு நாளை வெளியிடப்பட உள்ளது. இடங்களை தேர்வு செய்தவர்கள் ஒதுக்கீட்டு ஆணை நாளை (6-ந்தேதி) முதல் பதிவிறக்கம் செய்யலாம்.
ஒதுக்கீட்டு கடிதம் பெற்ற மாணவ-மாணவிகள் 11-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு பள்ளியில் படித்த 606 மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் பெற்றுள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு மாணவ-மாணவிகளிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என அரசு அறிவித்துள்ளது.
அதனை அனைத்து மருத்துவக் கல்லூரி டீன்கள் மற்றும் முதல்வர்கள் பின்பற்ற வேண்டும் என தற்போது அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் சாந்தி மலர் அனைத்து அரசு, சுயநிதி மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
7.5 சதவீத அரசு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் இடங்களை பெற்றுள்ள மாணவ-மாணவிகளிடம் கல்வி கட்டணம், சிறப்பு கட்டணம், விடுதி, உணவு கட்டணம், புத்தகம், வெள்ளை கோட், ஸ்டெதஸ்கோப், பல்கலைக்கழக பதிவு கட்டணம், இன்சூரன்ஸ் கட்டணம் உள்பட எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது.
கடந்த ஆண்டை போலவே இந்த வருடமும் பின்பற்ற வேண்டும்.
மருத்துவ படிப்பில் சேரும் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள். அதனால் அவர்களது விண்ணப்பத்தை உயர்கல்வி துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் அரசு பள்ளி மாணவர்கள் கல்வி கற்பிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களிடம் எவ்வித கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் அந்த கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நீட் மார்க் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் அவர்கள் விரும்பிய கல்லூரிகளை தேர்வு செய்தனர்.
- முதல்கட்ட கலந்தாய்வில் 80 முதல் 90 சதவீத இடங்கள் நிரம்பி விட்டதாக மருத்துவ சேர்க்கை செயலாளர் டாக்டர் முத்து செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீடு கொண்ட சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள 6226 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 1767 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்காக கடந்த 25-ந் தேதி முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கியது. ஆன்லைன் வழியாக நடந்த இக்கலந்தாய்வில் 40 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்.
அரசின் சிறப்பு பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் முதலில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. பொது கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்து லாக் செய்தனர். நீட் மார்க் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் அவர்கள் விரும்பிய கல்லூரிகளை தேர்வு செய்தனர். அவர்களுக்கு நேற்று இடங்கள் ஒதுக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து ஒதுக்கீட்டு கடிதத்தை பதிவிறக்கம் செய்து அந்தந்த கல்லூரிகளில் சேர வேண்டும். கல்லூரிகளில் சேருவதற்கு 11-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்கட்ட கலந்தாய்வில் 80 முதல் 90 சதவீத இடங்கள் நிரம்பி விட்டதாக மருத்துவ சேர்க்கை செயலாளர் டாக்டர் முத்து செல்வன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-
அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அனைத்து அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரம்பி விட்டன. அதே போல் அரசு கல்லூரிகளில் உள்ள பி.டி.எஸ். இடங்களும் நிரம்பின. சுயநிதி கல்லூரிகளில் பி.டி.எஸ். இடங்கள் கொஞ்சம் காலியாக உள்ளன.
என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் சுயநிதி கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பவில்லை. 11-ந் தேதி மாலைவரை கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.
அதன் பிறகு தான் எத்தனை பேர் கல்லூரிகளில் சேரவில்லை என முழுமையாக தெரியவரும்.
அதில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழக மாணவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியை தேர்வு செய்துள்ளார். இது போல் ஏற்படும் காலி இடங்கள் பட்டியல் எடுக்கப்பட்டு 2-வது கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் மொத்தம் 4 கட்டமாக கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும்.
இந்த மாதம் இறுதிக்குள் பெரும்பாலான மருத்துவ இடங்கள் நிரம்பி விடும். செப்டம்பர் 1-ந் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவா்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, மருத்துவ மாணவா்கள் கல்லூரிகளில் சோ்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- கல்விக் கட்டணம் செலுத்த அவகாசம் வேண்டும் என பெற்றோா் கோரிக்கை வைத்தனா்.
சென்னை:
தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டுக்கான முதல்கட்ட மாணவா் சோ்க்கை நிறைவடைந்து உள்ளது. இதில், சிறப்பு ஒதுக்கீட்டு இடங்கள் தவிர, மற்ற இடங்கள் இணைய வழியில் நடைபெற்றது. அதன்படி, அனைத்து இடங்களும் தகுதியான மாணவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவ இடங்கள் பெற்று சோ்க்கை ஆணை பெற்றவா்கள் நேற்று மாலைக்குள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும். அவ்வாறு சேராத இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு, 2-ம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, மாணவா்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, மருத்துவ மாணவா்கள் கல்லூரிகளில் சோ்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவ மாணவா் தோ்வுக்குழு செயலா் முத்துசெல்வன் கூறுகையில், கல்விக் கட்டணம் செலுத்த அவகாசம் வேண்டும் என பெற்றோா் கோரிக்கை வைத்தனா்.
அதை ஏற்று, மருத்துவ இடங்களைப் பெற்ற மாணவா்கள் கல்லூரிகளில் சேருவதற்கான கால அவகாசம் வருகிற 14-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்பின், கல்லூரிகளில் சேராதவா்களின் இடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு, 2-ம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என்றாா்.