என் மலர்
நீங்கள் தேடியது "menaka"
- நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
- இவர் தன்னுடைய பள்ளி தோழரை திருமணம் செய்யவுள்ளதாக வதந்தி பரவி வந்தது.
தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'சாணிக்காயிதம்' படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது. தொடர்ந்து தெலுங்கில் நானியுடன் தசரா படத்திலும் தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளன.

கீர்த்தி சுரேஷ்
இவர் அடுத்ததாக இயக்குனர் சந்துரு இயக்கத்தில் 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி பிசியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் அவரது பள்ளி தோழரை பத்தாண்டுகளுக்கு மேலாக காதலித்து வருவதாகவும் இவர்களின் திருமணம் சில ஆண்டுகளில் நடைபெறவுள்ளதாகவும் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டதாக தகவல் பரவி வந்தது.

மேனகா - கீர்த்தி சுரேஷ்
இந்நிலையில், இந்த செய்தி குறித்து கீர்த்தி சுரேஷின் தாயார் நடிகை மேனகா, "பரபரப்புக்காகக் கிளப்பி விடப்படும் செய்தி இது. இது மாதிரி வெளியாகிற எந்தச் செய்தியையும் பார்க்கக் கூட நாங்கள் விரும்புவதில்லை. கீர்த்தியின் திருமணம் தொடர்பான சோஷியல் மீடியா தீனிக்கு எங்களுடைய பதில் இதுதான்" என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
- கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார்.
- கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தியில் தெறி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். தமிழ் தெலுங்கில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தியில் தெறி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இப்படி பிசியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆண்டனி தட்டில் என்பவரை டிசம்பர் 12ந் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
15 ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்களின் திருமணத்திற்கும் இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்றும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
- முதல்முறையாக தனது காதலை கீர்த்தி சுரேஷ் உறுதி செய்துள்ளார்.
- வருங்கால கணவர் ஆண்டனியுடன் இருக்கும் புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.
தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். தமிழ் தெலுங்கில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தியில் தெறி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இப்படி பிசியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் விரைவில் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
15 ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்களின் திருமணத்திற்கும் இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்றும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் முதல்முறையாக தனது காதலை கீர்த்தி சுரேஷ் உறுதி செய்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வருங்கால கணவர் ஆண்டனியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "எங்களது 15 வருட காதல் இன்னும் தொடர்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
