என் மலர்
நீங்கள் தேடியது "Michel Temer"
பிரேசிலில் 2016 முதல் 2018 வரை அதிபராக இருந்தவர் மிச்சல் டெமர் (வயது 47). இவர் தன்னுடைய பதவி காலத்தில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மிச்சல் டெமர் மீதான ஊழல் வழக்குகள் குறித்து விசாரிக்க மார்சிலோ பிரெட்ஸ் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், அணுசக்தி ஆலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு ஒதுக்கி 2 லட்சத்து 62 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடியே 80 லட்சம்) லஞ்சம் பெற்ற வழக்கில் மிச்சல் டெமரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
மேலும் இதே வழக்கில் மிச்சல் டெமரின் மந்திரி சபையில் நிலக்கரி மற்றும் எரிசக்தித்துறை மந்திரி பதவி வகித்த மோரிரா பிராங்கோ, டெமரின் நெருங்கிய நண்பரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான லீமா பில்கோ ஆகியோர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
டெமருக்கு முன் பிரேசில் அதிபராக பதவி வகித்த லூயிஸ் இனாசியோ, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது 12 ஆண்டு சிறைவாசம் அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Brazil #MichelTember #Corruption
சாவ்பாங்லோ:
பிரேசில் நாட்டின் தொழில் நகரம் சாவ்பாவ்லோ. இங்கு லாரி மற்றும் வாகனங்களின் வேலைநிறுத்த போராட்டம் 5 நாட்கள் நடக்கிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து இப்போராட்டம் நடத்தப்படுகிறது.
லாரிகள் இயக்காமல் நடுரோடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சரக்குகள் ஏற்றிச் செல்லப்படாததால் பொருட்களுக்கு கட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே நிலைமையை சமாளிக்க சாவ்பாவ்லோ நகரில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை பிரேசில் அதிபர் மைக்கேல் டெமர் பிறப்பித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து ரோடுகளில் நிறுத்தப்பட் டுள்ள லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசரநிலை பிரகடனம் குறித்து அதிபர் டெமர் டி.வி.யில் உரை நிகழ்த்தினார். #MichelTemer #Lorrystrike