என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Military Plane"

    • என்ஜின்களில் ஒன்று தீப்பிடித்து விபத்தில் சிக்கியது.
    • டேக் ஆஃப் ஆன சமயத்தில் விபத்தில் சிக்கியது.

    15 பேருடன் புறப்பட்ட ரஷிய ராணுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் டேக் ஆஃப் ஆன போது விபத்தில் சிக்கியது. இல்யூஷின் 76 என்ற விமானம் மாஸ்கோவில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இவானோவோ என்ற பகுதியில் சென்ற போது, என்ஜினில் தீப்பிடித்து விபத்தில் சிக்கியது.

    "IL-76 ராணுவ போக்குவரத்து விமானம் இவானோவோ பகுதியில் விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் விமான பணியாளர்கள் எட்டு பேரும், ஏழு பயணிகளும் இருந்தனர்," என்று ரஷிய பாதுகாப்பு துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

     


    விமானத்தின் என்ஜின்களில் ஒன்றில் ஏற்பட்ட தீ காரணமாக விமானம் விபத்தில் சிக்கியது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளான சம்பவ இடத்திற்கு ராணுவ குழு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. விபத்தில் சிக்கிய பயணிகள் மற்றும் பணியாளர்களின் நிலை என்னவென்று இதுவரை எந்த தகவலும் இல்லை. 

    • மோசமான வானிலை காரணமாக விமானம் திரும்பி செல்ல வலியுறுத்தப்பட்டது.
    • மாயமான விமானத்தை தேட அண்டை நாடுகளிடம் உதவி கோரப்பட்டுள்ளது.

    கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான மலாவியின் துணை அதிபர் சௌலோஸ் கிளாஸ் சிலிமா பயணம் செய்த விமானம் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. துணை அதிபர் சௌலோஸ் மற்றும் ஒன்பது பேர் பயணம் செய்த ராணுவ விமானம் மலாவி தலைநகர் லிலோங்கில் இருந்து காலை 9.17 மணிக்கு புறப்பட்டது.

    லிலோங்கில் புறப்பட்ட ராணுவ விமானம் சூசு விமான நிலையத்தில் காலை 10.02 மணிக்கு தரையிறங்கி இருக்க வேண்டும். எனினும், மோசமான வானிலை காரணமாக விமானம் தலைநகருக்கே திரும்பி செல்ல வலியுறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து விமானம் ரேடாரில் இருந்து மாயமாகி இருக்கிறது.

    மாயமான விமானத்தை தேடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாயமான விமானத்தை தேடுவதற்கு அண்டை நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், நார்வே மற்றும் இஸ்ரேல் உள்ளிட்டவைகளிடம் உதவி கோரப்பட்டுள்ளது.

    மாயமான விமானம் கிடைக்கும் வரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று மலாவி அதிபர் லசாரஸ் சக்வெரா தெரிவித்தார். 

    • மலாவியின் துணை அதிபர் சௌலோஸ் கிளாஸ் சிலிமா பயணம் செய்த விமானம் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • மாயமான விமானம் மலைப்பகுதிகளில் மோதி நொறுங்கியதாக தகவல் வெளியானது.

    கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான மலாவியின் துணை அதிபர் சௌலோஸ் கிளாஸ் சிலிமா பயணம் செய்த விமானம் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

    மலாவி துணை அதிபர் சௌலோஸ் மற்றும் ஒன்பது பேர் பயணம் செய்த ராணுவ விமானம் மலாவி தலைநகர் லிலோங்கில் இருந்து காலை 9.17 மணிக்கு புறப்பட்டது.

    லிலோங்கில் புறப்பட்ட ராணுவ விமானம் சூசு விமான நிலையத்தில் காலை 10.02 மணிக்கு தரையிறங்கி இருக்க வேண்டும். எனினும், மோசமான வானிலை காரணமாக விமானம் தலைநகருக்கே திரும்பி செல்ல வலியுறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து விமானம் ரேடாரில் இருந்து மாயமாகி இருக்கிறது. மாயமான விமானம் மலைப்பகுதிகளில் மோதி நொறுங்கியதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், மலாவியின் துணை அதிபர் மற்றும் அவருடன் பயணம் செய்த 9 பெரும் விமான விபத்தில் மரணமடைந்ததாக அந்நாட்டு அதிபர் லாசரஸ் சக்வேரா தெரிவித்துள்ளார்.

    • ஓம்துர்மானில் உள்ள கராரி மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் வீடு ஒன்றின் மேல் விமானமானது மோதி விபத்துள்ளது.
    • நாடு முழுவதிலும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள், திட்டமிட்ட இனப்படுகொலைகள் உள்ளிட்ட போர் குற்றங்கள் நடந்து வருகிறது.

    சூடானில் ராணுவ விமான விழுந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 46 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். ஓம்துர்மான் (Omdurman) நகருக்கு கிழக்கே உள்ள வாடி சாயிட்னா (Wadi Sayidna) ஏர் பேஸில் இருந்து ஆன்டோனோவ் ஏர்கிராப்ட் நேற்று (செவ்வாய்க்கிழமை) டேக் ஆப் செய்யப்பட்டு வானில் பறந்துகொண்டிருந்தது.

    ஓம்துர்மானில் உள்ள கராரி மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் வீடு ஒன்றின் மேல் விமானமானது மோதி வெடித்து விபத்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை. இதில் விமானத்தில் பயணித்த ராணுவ வீரர்கள் மற்றும் வீடு உள்ள பகுதியிலிருந்த பொதுமக்கள் உட்பட 46 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதாக அரசு அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

    சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு பாராளுமன்ற படைகளுக்கும், ராணுவ படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் இருந்து உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது. இதனால் நாடு முழுவதிலும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள், திட்டமிட்ட இனப்படுகொலைகள் உள்ளிட்ட போர் குற்றங்கள் நடந்து வருகிறது. 

    ×