என் மலர்
நீங்கள் தேடியது "mill bus glasses"
பெரியகுளம் அருகே தனியார் மில் பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது செய்யப்பட்டார்.
தேனி:
பெரியகுளம் அருகே வடுகபட்டி மறவர் தெருவைச் சேர்ந்தவர் அர்ஜூணன் (வயது 39). தனியார் மில் பஸ் டிரைவராக உள்ளார். சம்பவத்தன்று வடுகபட்டி பேரூராட்சி அலுவலகம் அருகே பஸ்சை ஓட்டிச் சென்றார். அப்போது மேல் மங்கலம் ராஜேந்திரபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் (44) என்பவர் வழி மறித்து தகராறு செய்தார். இதை அர்ஜூணன் தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் பஸ்சின் முன் பக்க கண்ணாடியை உடைத்தார். மேலும் அர்ஜூணனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.