என் மலர்
நீங்கள் தேடியது "Muthusamy"
- பொறுப்புடன் விளையாடிய முத்துசாமி - யான்சன் ஜோடி அதிரடியாக ரன்களை சேர்த்தது
- தென் ஆப்பிரிக்க அணி 400 ரன்களை கடந்து சிறப்பாக விளையாடி வருகிறது.
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. 124 ரன் என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 49 ரன்களும் பவுமா 41 ரன்களும் அடித்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இன்று 2 ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது முதல் பொறுப்புடன் விளையாடிய முத்துசாமி - வெரெய்ன் ஜோடி நிதானமாக ரன்களை சேர்த்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 300 ரன்களை கடந்து சிறப்பாக விளையாடி வருகிறது.
நிதானமாக விளையாடிய முத்துசாமி அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுறையில் நிதானமாக விளையாடி வரும் வெரெய்ன் 45 ரன்னில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
இதையடுத்து முத்துசாமி - யான்சன் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய முத்துசாமி சதம் விளாசினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய யான்சன் அரைசதம் அடித்தார்.
தென் ஆப்பிரிக்கா அணி 136 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 424 ரன்களை எடுத்துள்ளது. முத்துசாமி 106 ரன்களுடனும் யான்சன் 50 ரங்களுடனும் களத்தில் உள்ளனர்.
- முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 378 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் செனுரன் முத்துசாமி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது .
இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 378 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் செனுரன் முத்துசாமி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோர்ஜி சதம் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.
109 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் முத்துசாமி 5 விக்கெட்டும் ஹர்மர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தி தமிழ்நாடு வம்சாவளியை சேர்ந்த சேனுரான் முத்துசாமி அசத்தியுள்ளார்.
- புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் டெட்ரா பேக் முறையை அமல்படுத்த உள்ளோம்.
- அன்புமணி ராமதாஸ் கூறிய கருத்து மறுக்கப்படவில்லை.
ஈரோடு:
தமிழக வீட்டு வசதித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி சென்னிமலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
டாஸ்மாக் கடைகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மது பாட்டில்கள் வேண்டாம் என முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
மிக எளிதாக கலப்படம், மறு பயன்பாட்டின் போது சுத்தம் செய்வதில் குறைபாடு, சாலையோரம் மற்றும் விளை நிலத்தில் வீசி செல்வதால் விவசாயிகள் பாதிப்பு, எடுத்து செல்லும் போது பாட்டில்கள் உடைந்து விடுவது போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன.
இவற்றை தீர்க்க புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் டெட்ரா பேக் முறையை அமல்படுத்த உள்ளோம். இதன் மூலம் 99 சதவீதம் சேதாரம் இருக்காது. 2 ஆண்டுகளுக்கு உத்தரவாதம் தரப்படுகிறது.
இது குறித்து அன்புமணி ராமதாஸ் கூறிய கருத்து மறுக்கப்படவில்லை. அது குறித்து பரிசீலிக்கப்படும். தனியாக குழு ஆய்வு செய்து வருகிறது. அந்த குழு எடுக்கும் முடிவின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கள்ளச்சாராயத்தை நோக்கி யாரும் சென்றுவிடுவார்களோ என்ற அச்சம் அரசுக்கு இல்லை.
- டாஸ்மாக் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டாஸ்மாக் கடைகளை வழக்கத்தைவிட முன்கூட்டியே திறப்பதற்கு கோரிக்கைகள் வந்துள்ளதாக கூறியிருந்தேன். இதுசம்பந்தமாக நான் கூறிய கருத்தின் முழு பகுதியையும் கவனிக்காமல், அதிலுள்ள ஒரு சில பகுதியை மட்டும் கேட்டு சில அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
நான் திட்டவட்டமாக சொல்வது என்னவென்றால், டாஸ்மாக் கடைகளுக்கான நேரத்தை மாற்றுவதற்கான எண்ணம் அரசுக்கு இல்லை. இப்போதுள்ளபடி பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணிவரைதான் இயங்கும். அதில் மாற்றம் எதுவும் இல்லை.
டாஸ்மாக் மது விற்பனையில் உள்ள சில சிக்கல்களை ஒதுக்கித்தள்ள முடியவில்லை. மற்ற நேரத்தில் தவறான இடத்தில் மது வாங்குவதை தவிர்த்துவிட்டு, டாஸ்மாக் கடை திறந்திருக்கும் நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கடை நேரத்தை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர்களுக்கு ஆலோசனை வழங்கி உள்ளோம்.
மது பாட்டில்களை வெளியே போட்டுச் செல்வது உள்பட பல பிரச்சினைகள் உள்ளன. அவை தொடர்பாக தொழிற்சங்கங்கள் உள்பட பல தரப்பினரும் பேசுகிறோம். அரசின் கொள்கைக்கு முரணானவற்றை ஒதுக்கிவிட்டு மற்ற கருத்துகள் பற்றி ஆய்வு செய்கிறோம். மற்ற மாநிலங்களுடனும் ஒப்பிட்டு பார்த்து வருகிறோம். 'டெட்ரா பேக்' குடுவைகளுக்கும் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
90 மி.லி. 'மினி குவார்ட்டர்' மது விற்பனை செய்தால், குறைவான பணம் வைத்திருப்பவரும் அதை வாங்கி அருந்த வாய்ப்பு ஏற்படுமே என்று கேட்டால், இதுசம்பந்தமாக அனைத்து தரப்பினரின் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் முடிவு எடுக்க இருக்கிறோம். 90 மி.லி. அளவில் மதுவை விற்பனை செய்ய வேண்டும் என்பது அரசின் விருப்பம் அல்ல.
ஆனால் அளவுக்கு அதிகமாக (90 மி.லி.க்கு மேல்) சிலர் மது அருந்தும் தவறுகளும் நடக்கிறது. அந்த கோணத்தில் சிந்தித்தோம். ஆனால் அது வேறு விளைவுகளை ஏற்படுத்துவதான சூழ்நிலை வந்தால் அதை கைவிட்டுவிடுவோம்.
கல்வி நிறுவனங்கள், கோவில் அருகில் உள்ள மதுக்கடைகள் பற்றி மீண்டும் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதுபோன்ற கடைகளை கண்டறிந்து மூடி விடுவோம். மூடப்பட்டுள்ள கடைகளின் முன்னாள் வாடிக்கையாளர்கள் போதைக்காக தவறான இடங்களுக்கு சென்றுவிடக்கூடாது என்பதுதான் அரசின் எண்ணம். அதற்கு வாய்ப்பு அளித்துவிடக்கூடாது. 24 மணி நேரமும் மது தொடர்பாகவே அதிகாரிகள், போலீசார் கவனித்துக் கொண்டிருக்க முடியாது.
கள்ளச்சாராயத்தை நோக்கி யாரும் சென்றுவிடுவார்களோ என்ற அச்சம் அரசுக்கு இல்லை. மது என்பது மக்களிடையே மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயமாக இருப்பதால் இப்படியோ அல்லது அப்படியோ போக முடியவில்லை. எனவே இதில் அனைவரையும் வைத்து பேசி முடிவு எடுக்க உள்ளோம்.
பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கும் பிரச்சினை இன்னும் தொடர்கிறதா? என்று கேட்டால், சில இடங்களில் அப்படி நடந்தது பெரிதாக்கப்பட்டு விட்டது. இப்போதுகூட இரண்டொரு இடங்களில் நடக்கிறது. 100 சதவீதம் இல்லை என்று சொல்ல மாட்டேன்.
அங்கும் நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகளை செய்திருக்கிறோம். இந்த பிரச்சினை கட்டுப்படுத்தப்படும். சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் சம்பந்தப்பட்டவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
டாஸ்மாக் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அவற்றை தீர்க்க தொழிற்சங்கங்களுடன் பேசி இருக்கிறோம். இதில் என்னென்ன நிவாரணம் செய்யப்படலாம் என்பது பற்றிய அறிவுரைகளை அதிகாரிகள் அளித்துள்ளனர். இன்னும் 10 நாட்களில் தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுவால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே டாஸ்மாக் கடையிலேயே ஏற்படுத்த இருக்கிறோம். கடையின் கண்காணிப்பாளருக்கும், விற்பனையாளருக்கும் இதுசம்பந்தமான சுற்றறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது.
டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த கேமரா மூலம் சென்னையில் இருந்தபடியே அதிகாரிகள், கடையை கண்காணிக்கலாம். உள்ளூர் போலீசும் கண்காணிப்பார்கள். கடையின் அளவு மிகச் சிறியதாக உள்ளது. இனி கடைகளை 500 சதுரஅடிக்கு மேலான இடங்களில் வைக்க முடிவு செய்துள்ளோம்.
அப்படி இடம் அமையும்போது பில் போட தனி இடம் இருக்கும். தற்போது 500 சதுரஅடிக்கு மேலான இடங்களில் உள்ள கடைகளை கண்டறிந்து அங்கு பில் எந்திரம் வைக்க முடிவு செய்துள்ளோம். மற்ற கடைகளை மாற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்வோம். பில் வழங்கும் முறையை கொண்டு வருவோம். கேரளாவில் இந்த நிலை உள்ளது. ஆனால் அங்கு கடை ஆயிரம் சதுரஅடிக்கு மேல் உள்ளது.
இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.
- கள் விற்பனை குறித்து மிகப்பெரிய ஆய்வு செய்து மேற்கொள்ள வேண்டிய பணிகள்.
- சிலர் செய்யும் தவறை மொத்தமாக சொல்லும் போது மற்றவர்களுக்கும் வேதனை அடைவார்கள்.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்களுடன் முதல்வர் திட்டம் அரசியல் நோக்கமோ அல்லது விளம்பரம் நோக்கத்திற்காகவோ செய்யவில்லை. மக்கள் தங்கள் கோரிக்கை மனு மீதான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற வகையில் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
பொது இடங்களில் மது அருந்தும் சம்பவம் குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சில இடங்களில் மது அருந்துவதால் நிகழும் குற்ற சம்பவங்கள் குறித்து அரசு மீது சொல்லும் குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல.
தனிப்பட்ட முறையில் நிகழும் குற்ற சம்பவத்தில் போலீசார் விசாரணையில் தான் தெரியும் வரும். மது அருந்த வருபவர்களை எப்படியாவது குடிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசு இலக்கு நிர்ணயம் செய்யவில்லை. தவறான வழியில் சென்று தவறு நிகழக்கூடாது என்பதை சரி பார்ப்பதற்கான முயற்சியாக தான் இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது.
மது விற்பனை அதிகப்படுத்தும் நோக்கம் இல்லை. அதிலிருந்து மது அருந்துபவர்கள் விடுபட வேண்டும் என்ற நோக்கில் அரசின் சார்பில் போதுமான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. கள் விற்பனை குறித்து மிகப்பெரிய ஆய்வு செய்து மேற்கொள்ள வேண்டிய பணிகள். ஒரே நாளில் கள் குறித்து நடவடிக்கை எடுக்க முடியாது.
அரசு மதுபான கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்வது குறித்து தெளிவான புகார் வந்தால் பணியாளர்கள் கைது மற்றும் பணியிடை நீக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்க அரசு தயாராக உள்ளது.
25 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ள நிலையில் சிலர் செய்யும் தவறை மொத்தமாக சொல்லும் போது மற்றவர்களுக்கும் வேதனை அடைவார்கள். 99 சதவீதம் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்வது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தண்ணீர் திறப்பதற்கு முன்பாக இவர்களுக்கு வழங்க வேண்டிய நிதி வழங்கப்படும்.
- பவானி ஆற்றில் கூடுதலாக வரக்கூடிய ஒன்றரை டி.எம்.சி தண்ணீரை இந்த திட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
ஈரோடு:
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறித்து அதிகாரியுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, டி.ஆர்.ஓ சாந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் அமைச்சர் முத்துசாமி அத்திக்கடவு -அவிநாசி திட்டம் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அத்திகடவு-அவிநாசி திட்டம் மிகப்பெரிய திட்டம். இந்த திட்டத்தை முடிக்க அதிகாரிகள் இரவு பகலாக வேலை செய்துள்ளனர். கலெக்டர் வார வாரம் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற போது இந்த திட்டத்தை வேகப்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தினார். அதே நேரத்தில் 6 பம்பிங் நிலையங்களில் முதல் 3 நீரேற்று நிலையங்களுக்கு இடையே உள்ள நிலம் பயன்பாட்டிற்கு எடுப்பதில் தொய்வு ஏற்பட்டு பணிகள் நடைபெறவில்லை.
இந்த பகுதிகளில் நிலம் கையகப்படுத்த 3 பம்பிங் நிலையங்களுக்கு இடையே உள்ள நிலங்களை கையகப்படுத்த அரசின் சார்பில் நேரடியாக விவசாயிகளிடம் பேசி விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று பேசி நிலத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி பெற்றோம். திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர தி.மு.க. அரசு தான் காரணம்.
விவசாயிகளிடம் நிலத்தை பெற்ற பிறகு தண்ணீர் பற்றாக்குறையால் திட்டத்தை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டது. பீடர் லைன் மூலம் 1045 குளங்கள் நிரப்பப்பட வேண்டும். அதை பயன்படுத்தாமல் இருந்ததால் தயார்படுத்த காலதாமதம் ஏற்பட்டது. கடந்த ஆட்சியில் முதலிலேயே நிலத்தை விவசாயிகளிடம் பெற்றிருந்தால் இத்தனை பிரச்சனை ஏற்பட்டு இருக்காது.
பவானி ஆற்றில் கூடுதலாக வரக்கூடிய ஒன்றரை டி.எம்.சி தண்ணீரை இந்த திட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும். கூடுதலாக தண்ணீர் வரும் போது திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும். அப்போது திட்டம் தொடங்கி வைக்கப்படும். முதல் கட்டத்திலேயே விவசாயிகளிடம் பேசி நிலம் எடுத்திருந்தால் இத்தனை பிரச்சனை வந்திருக்காது.
1416 விவசாயிகளின் நிலத்தை இந்தத் திட்டத்திற்கு பயன்படுத்தி உள்ளோம். அவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வருகிறது. இதில் தற்போது 100 விவசாயிகளுக்கு மட்டுமே நிலத்திற்கான தொகை வழங்க வேண்டிய உள்ளது. அவர்களிடமும் பேசிவிட்டோம் அந்தப் பணியும் விரைவில் முடிந்துவிடும்.
தண்ணீர் திறப்பதற்கு முன்பாக இவர்களுக்கு வழங்க வேண்டிய நிதி வழங்கப்படும். தற்பொழுது போதுமான அளவு தண்ணீர் இல்லை. இருப்பு உள்ள தண்ணீரை வைத்து இந்த திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியாது. கீழ்பவானி கால்வாயில் ஆகஸ்ட் 15-ம் தேதி தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்பட்ட பிறகு உபரி நீரை கொண்டு அத்திகடவு திட்டத்தை செயல்படுத்துவதற்காக தேதி நிர்ணயம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணாமலை அத்திக்கடவு அவிநாசி திட்ட விவகாரத்தில் அரசியல் செய்கிறாரா என்ற கேள்விக்கு, பதில் அளித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, இந்த விவாகரத்தில் அவர் அரசியல் செய்கிறார் என்று நான் பார்க்கவில்லை. அவர் கூறிய கருத்துக்கள் நியாயமானது தான். அவர் விவரம் தெரியாமல் கூட பேசி இருக்கலாம். திட்டம் தாமதத்திற்கான காரணத்தை கூறிவிட்டோம். இதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன் என்றார்.
- ஈரோடு சோலாரில் ஒரு விளையாட்டு அரங்கம் உருவாக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல் தந்துள்ளார்.
- உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்கப்படாத மனைகள் மற்றும் கட்டிடங்களை வரைமுறைப்படுத்த சில நிபந்தனை விதித்துள்ளது.
ஈரோடு:
ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் வரும் 24-ந் தேதி வரை 5 பிரிவுகளின் கீழ் நடைபெறுகின்றது. போட்டியில் தமிழகம் முழுவதும் 11.56 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் 21,626 பேர் பதிவு செய்துள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கையில் போட்டிகளை தொடங்கி வைத்துள்ளார். முதலமைச்சர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர்.
ஈரோடு சோலாரில் ஒரு விளையாட்டு அரங்கம் உருவாக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல் தந்துள்ளார். அதற்கான பணிகள் தொடக்கப்பட்டுள்ளன. சி.என்.சி. கலை அறிவியல் கல்லூரியில் ஒரு உள் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டு துறை அமைச்சர் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஒரு விளையாட்டு அரங்கம் அமைக்க திட்டமிட்டுள்ளார்.
மதுவிலக்கை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஒரு மாநாட்டை நடத்துகிறார். மதுவிலக்கு கொள்கை தளர்த்தப்பட்டது. இந்த அரசு காலத்தில் அல்ல அது பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இதனால் கூட்டணியில் இருந்து கொண்டு அவர் தி.மு.க.வை எதிர்ப்பதாக கருதக்கூடாது.
அவர் அவரது கருத்தை, கோரிக்கைகளை தெரிவிக்க மாநாட்டை நடத்துகிறார். மதுவிலக்கு பிரசாரத்திற்கு 5 கோடி ரூபாய் இந்த அரசு ஒதுக்கி உள்ளது. இது படிப்படியாக தேவையான அளவிற்கு நிதி ஒதுக்கப்படும்.
உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்கப்படாத மனைகள் மற்றும் கட்டிடங்களை வரைமுறைப்படுத்த சில நிபந்தனை விதித்துள்ளது. அதன்படி விண்ணப்பங்கள் மட்டும் தற்போது பெற உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகள், கட்டிடங்கள் குறித்து கண்டறிய மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கீகரிக்கப்படாத பள்ளி கட்டிடங்கள் வரைமுறைப்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது நல்ல செய்தி. இது ஒரு மகிழ்ச்சியான செய்தி.
- முதலமைச்சர் டெல்லி செல்வது என்பது வேறொரு நிகழ்ச்சிக்காக.
கோவை:
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமின் அளித்து உத்தரவிட்டது.
செந்தில்பாலாஜிக்கு ஜாமின் கிடைத்ததை தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இது தொடர்பாக கோவையில் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது நல்ல செய்தி. இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று. சுப்ரீம் கோர்ட்டு இதில் சரியாக ஒரு நல்ல முடிவாக கொடுத்துள்ளது.
நிச்சயமாக இதனை நாங்கள் மிகப்பெரிய மகிழ்ச்சிக்குரிய செய்தியாக தான் எடுத்துக் கொள்கிறோம். இதற்கு முன்னால் பல சிரமங்களும், தேவை இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் இன்றைக்கு அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
முதலமைச்சர் டெல்லி செல்வது என்பது வேறொரு நிகழ்ச்சிக்காக. இதற்கும், தற்போது வந்த தீர்ப்புக்கும் சம்பந்தமில்லை. செந்தில்பாலாஜிக்கு ஜாமின் கிடைத்துள்ளதை ஒரு வெற்றி, மகிழ்ச்சியான செய்தியாக கருதுகிறோம்.
அவருக்கான அமைச்சர் பொறுப்பு குறித்து தலைமை தெரிவிக்கும். எங்களைப் பொறுத்தவரை இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக வந்துள்ளது. தொடர் நடவடிக்கை என்ன என்பது குறித்து தலைமையும், முதல்-அமைச்சரும் முடிவெடுப்பார்கள்.
விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் மாநாடு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நன்றாக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






