என் மலர்
நீங்கள் தேடியது "Navakragangal"
- சூரியனுக்கு சஞ்சிகை, சாயாதேவி, சரூசினி போன்ற மனைவியர் பலர் உண்டு எனப் புராணங்கள் கூறுகின்றன.
சூரியனுக்கு சஞ்சிகை, சாயாதேவி, சரூசினி போன்ற மனைவியர் பலர் உண்டு எனப் புராணங்கள் கூறுகின்றன.
யமன், யமுனை, அசுவினிதேவர்கள், சனி, பத்திரை, பிருகு, வால்மீகர், கர்ணன், சுக்ரீவன் போன்ற புதல்வர்கள் உண்டு.
சூரியன் வழிபட்ட சிவாலயங்கள்:
பரிதி நியமம்,
வைதீஸ்வரன் கோவில்,
தலை ஞாயிறு மயேந்திரப்பள்ளி,
மாந்துறை,
மங்கலக்குடி,
குடவாசல்,
நெல்லிக்கா,
ஆடானை,
கண்டியூர்,
சோற்றுத்துறை,
மீயச்சூர்,
மேலைத் திருக்காட்டுப்பள்ளி,
திருச்சுழியல்,
வலிவலம்,
தேவூர்,
வாய்மூர்,
திருப்புனவாயில்,
நன்னிலம்,
பூந்துருத்தி,
காஞ்சீபுரம்,
கேதாரம்
உள்பட இன்னும் பல சிவாலயங்களில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் சிவபெருமானை வழிபட்டு கிரகபதமும், ஆயிரம் கிரணங்களோடு விளங்கும் பேற்றினையும் பெற்றான்.
சூரியன் சிவபெருமானது வலது கண்ணாகவும் திகழ்பவன்.
- ஆறாம் மாதம் சனி உரோமங்கள் உருவாகின்றன.
- ஏழாம் மாதம் புதன் நரம்பு மண்டலங்கள் விருத்தி செய்கின்றன
மனிதனின் உடலில் பஞ்சபூதம் இயங்கும் ஆனால் ஒரு தாயின் கருவறையில் இருக்கும் குழந்தைக்கு நான்கு பூதம் தான் வேலை செய்யும் தாயின் கருவறையில் இருந்து குழந்தை வெளியே வந்த பின்பு தான் 5வது பூதம் தன் வேலையை செய்யும்.
இதைத் தான் ஜோதிடத்தில் குழந்தை பிறந்த நேரம் லக்கனம் எடுத்துக் கொண்டும் அன்றயை சோச்சாரப்படியும் ஜாதகம் கணிப்பார்கள்.
குழந்தை பிறந்த பின்புதான் நவகிரகங்கள் வேலை செய்யும், என்றால் இந்த கிரகங்கள் தாயின் கருவறையில் இருந்தே வேலை செய்யும். இதைத்தான் கர்பகாலம் சென்ற இருப்பு என ஜாதகத்தில் எழுதுவார்கள்.
நவகிரகங்கள் கர்ப்பகாலத்தில் எவ்வாறு தன் வேலையை செய்கிறது என்பதை பற்றி பார்ப்போம்.
கர்ப்பம்
1. முதல் மாதம் சுக்கிரனின் ஆளுகை விந்து இன்னும் திரவ நிலையிலேயே இருக்கும்.
2. இரண்டாம் மாதம் அதிபர் செவ்வாய் உருவம் பெற ஆரம்பிக்கிறது.
3. மூன்றாம் மாதத்திற்கு குரு அதிபதி ஆகிறார். அங்கங்கள் உருவாகின்றன.
4. நான்காம் மாதம் சூரியன் எலும்புகள் உருவாகின்றன.
5. ஐந்தாம் மாதம் சந்திரன் தோல் தோன்றுகிறது.
6. ஆறாம் மாதம் சனி உரோமங்கள் உருவாகின்றன.
7. ஏழாம் மாதம் புதன் நரம்பு மண்டலங்கள் விருத்தி செய்கின்றன.
8. எட்டாம் மாதம் லக்ன அதிபதி. தொப்புள் கொடி மூலம் குழந்தை உணவு எடுத்துக்கொள்கிறது.
9. ஒன்பதாம் மாதம் சூரியன்: கர்ப்பத்திலுள்ள சிசு தாகம், பசி இவைகள் உணர வைக்கிறார்.
10. பத்தாம் மாதம் சந்திரன்: பிரசவத்திற்கு தயாராக்குகிறார்
இவ்வாறு நவகிரகங்கள் தன் வேலையை கர்பகாலத்தில் செய்கின்றன.
- கர்ப்ப காலத்தில் சூரியன் பலமானால் தந்தையின் உருவ அமைப்பை பெறும்.
- சந்திரன் பலமானால் தாயின் உருவ அமைப்பு அக்குழந்தை பெற்று இருக்கும்.
கர்ப்ப காலத்தில் சூரியன் பலமானால் தந்தையின் உருவ அமைப்பையும், சந்திரன் பலமானால் தாயின் உருவ அமைப்பும் அக்குழந்தை பெற்று இருக்கும்.
கருவுற்ற தாய் மார்கள் சுகபிரசவம் பெற வர்மக்கலை மருத்துவத்தில் வர்மப்புள்ளிகள் உள்ளன.
இந்த வர்மப்புள்ளிகளை சரியான காலத்தில் சரியான முறைப்படி தூண்டுவதன் மூலம் 100சதவீதம் சுகபிரசவம் பெற முடியும்.
குழந்தை பாக்கியம் பெறும் தம்பதியர்களுக்கு மலச்சிக்கலோ, மனச்சிக்கலோ, தோல் நோய்கலோ இருந்தால் அது பிறக்கும் குழந்தைக்கு எதாவது ஒரு நோய் ஏற்படுத்தும்.
ஆகவே குழந்தை பாக்கியம் பெற விரும்பும் தம்பதியர்கள் இவ்வாறு நோய்கள் இல்லாமல் இருந்தால் அது பிறக்கும் குழந்தையையும் பாதிக்காமல் இருக்கும்.
- நவக்கிரக பாதிப்பிற்கு நம்முடைய கர்மவினைகள் தான் காரணமாக அமைகிறது.
- 18 வாரங்கள் காளியம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் நவக்கிரகங்களின் அமைப்பு ஒவ்வொரு மாதிரி இருக்கும். அந்த நவக்கிரகங்களின் அமைப்பிற்கு ஏற்றார் போல் தான், நம்முடைய வாழ்க்கையும் அமையும்.
இந்த நவக்கிரகங்களின் அமைப்பு ஏற்படுவதற்கு நம்முடைய கர்மவினைகள் தான் காரணமாக திகழ்கிறது. நம்முடைய கர்ம வினைகளை நீக்குவதற்கும், அதே சமயம் நவகிரகங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறைவதற்கும் செய்யக்கூடிய காளியம்மன் வழிபாடு குறித்து பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகமும் எந்தெந்த இடத்தில் அமைந்தால் நற்பலன்கள் கிடைக்கும், நன்மை தடைபடும். தோஷம் உண்டாகும். துன்பங்கள் அதிகரிக்கும். என்று பல விதிமுறைகள் ஜோதிடத்தில் இருக்கிறது.

எப்பேர்ப்பட்ட கிரகமாக இருந்தாலும் அது எந்த கிரகத்தைப் பார்த்தாலும் அந்த கிரகத்திற்குரிய பாதிப்பை கண்டிப்பான முறையில் நாம் அனுபவித்து தான் தீர வேண்டும். இந்த நவக்கிர கங்களின் பாதிப்பால் நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களில் இருந்து வெளியே வருவதற்கு காளியம்மனை எப்படி வழிபாடு செய்வது என்று பார்ப்போம்.
செவ்வாய்க்கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய காளியம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு செல்வதற்கு முன்பாக அங்கு தீபம் ஏற்றுவதற்கு தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தீபம் ஏற்றுவதற்கு வேப்ப எண்ணெய் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் மஞ்சள் நிற காட்டன் துணியை வாங்கி வந்து, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அந்த பாத்திரத்தை இறக்கி வைத்து நாம் வாங்கிவைத்திருக்கும் மஞ்சள் துணியை அதில் மூழ்கும்படி வைத்து விட வேண்டும். சிறிது நேரம் கழித்து அதை எடுத்து நன்றாக தண்ணீரை பிழிந்து காய வைத்து எடுக்க வேண்டும். பிறகு சுத்தமான பன்னீரில் நனைத்து காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த துணியில் தான் நாம் திரியை தயார் செய்து தீபம் ஏற்ற வேண்டும். எவ்வளவு பெரிய திரி வேண்டுமோ அவ்வளவு பெரியதாக அதை வெட்டி திரியாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதேபோல் காளியம்மனுக்கு தங்க அரளிப் பூவை பறித்து மாலையாக தொடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அருகில் இருக்கக்கூடிய காளியம்மன் ஆலயத்திற்கு தொடுத்து வைத்திருந்த தங்க அரளிப்பூ, வேப்ப எண்ணெய், மஞ்சள் திரி, மூன்று அகல் விளக்குகளையும் வாங்கிக்கொண்டு செல்லவேண்டும்.
மலரை அம்மனுக்கு சாற்றச் சொல்லி கொடுத்து விட வேண்டும். அம்மனுக்கு முன்பாக மூன்றாக விளக்குகளை வைத்து அதில் வேப்ப எண்ணெய்யை ஊற்றி நாம் தயார் செய்துவைத்திருக்கும் திரியை போட்டு மூன்று திரிகளும் ஒன்றாக இருப்பது போல் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.
இப்படி தொடர்ந்து 18 வாரங்கள் நாம் காளியம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட நம்முடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய நவகிரகங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறைய ஆரம்பிக்கும்.
மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமான காளியம்மனை முழு மனதுடன் நம்பி இந்த வழிபாட்டை மேற்கொண்டால் நவக்கிரக பாதிப்பில் இருந்து விடுபடலாம்.