என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naxals"

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுண்டரில் 3 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #NaxalsGunnedDown #Chhattisgarh
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். தேடுதல் வேட்டையின்போது நடந்த மோதல்களில் நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.

    இந்நிலையில், தண்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதையடுத்து அப்பகுதியில் நக்சலைட்டுகள் இருப்பதை உறுதி செய்த காவல்துறையினர் அவர்களை பிடிக்க முற்பட்டனர்.

    போலீசாரை கண்ட நக்சலைட்டுகள் அவர்களிடம் இருந்து தப்புவதற்காக துப்பாக்கியால் சுட்டனர். இதனால் ஒரு போலீஸ் அதிகாரி காயமடைந்தார். இதையடுத்து, போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் 3 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். காயமடைந்த போலீஸ் அதிகாரி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #NaxalsGunnedDown #Chhattisgarh
    சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் துணை ராணுவ முகாமின் அருகே இன்று மாலை அரசு பேருந்தை வழிமறித்த நக்சலைட்கள் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்தை தீயிட்டு எரித்தனர். #Naxalstorchbus #bustorchedinBijapur
    ராய்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம், ஜகதல்பூரில் இருந்து பசகுடா பகுதியை நோக்கிச் சென்ற பேருந்தை பிஜப்பூர் மாவட்டம், திமாபூர் அருகே இன்று மாலை 6 மணியளவில் சுமார் 25 நக்சலைட்கள் வழிமறித்தனர்.

    பயணிகளை அனைவரையும் கீழே இறக்கிவிட்டு பேருந்தை தீயிட்டு எரித்தனர். இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் துணை ராணுவப்படை முகாம் உள்ளது குறிப்பிடத்தக்கது. #Naxalstorchbus #bustorchedinBijapur
    சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் உள்ள ரெயில்வே பாதையை நக்சல்கள் சேதப்படுத்தியதால் அந்த தடத்தில் வந்த சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. #Chhattisgarh
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து இரும்புத் தாது ஏற்றிக் கொண்டு விசாகப்பட்டினம் சென்ற சரக்கு ரயில் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய பாலத்தை கடக்கும்போது இஞ்சின் உட்பட 8 பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



    இந்த விபத்து நள்ளிரவு 1 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல் அதிகாரி கம்லோசன் காஷியப் கூறுகையில், சிறிய ஓடையின் மீது அமைக்கப்பட்டிருந்த ரெயில் பாலத்தை நக்சலைட்டுகள் நாசப்படுத்தியதாகவும், அதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, விபத்து ஏற்பட்ட சுற்றுவட்டாரங்களில் நக்சலைட்டுகளை பிடிக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். #Chhattisgarh
    சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    ராய்பூர்:

    மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.

    பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்ட காட்டுப் பகுதிக்குள் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையில் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

    தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கட்டாபாட் மற்றும் டோக்கான்பல்லி இடையிலான காட்டுப்பகுதியில் சில நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அப்பகுதியில் நேற்றிரவில் இருந்து நக்சல் ஒழிப்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, காட்டுக்குள் நக்சலைட்கள் ரோந்துப் படையினர் மீது துப்பாக்கிகளால் சுட்டு அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இன்று காலை சுமார் 10 மணியளவில் மூன்று நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். எஞ்சியிருந்த நக்சலைட்கள் தப்பியோடி விட்டனர்.
    ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 நக்சல்கள் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Jharkhandencounter #Naxals
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள சட்டார்பூர் காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர், நக்சல் தடுப்பு மற்றும் போலீசார் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், இன்று காலை போலீஸ் படையை கண்ட நக்சலைட்கள் அவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். போலீசாரும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தினர். நக்சல்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் மூன்று நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவருடையை உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் இரண்டு நக்சலைட்டுகள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும், ஏகே-47 உட்பட பல துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. #Jharkhandencounter #Naxals
    சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Naxals
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் அதிக அளவில் உள்ளன. நக்சல்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் நடைபெறும் சண்டையில் பலர் கொல்லப்படுவர். மேலும், நக்சல்கள் தாக்குதல் நடத்த பல இடங்களில் குண்டுகளை மண்ணில் புதைத்து வைத்திருப்பர்.

    இந்நிலையில், இன்று காலை சுமார் 7.45 மணியளவில் சுக்மா மாவட்டதின் புஸ்வாடா கிராமத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். கான்ஸ்டபிள் மானிக் தின்பார் படுகாயமடைந்தார்.

    படுகாயமடைந்தவர்களுக்கு ராய்ப்பூரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நக்சல்களை பிடிக்க போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்புப்படை வீரர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Naxals

    ×