என் மலர்
நீங்கள் தேடியது "Nayanthara"
- சுந்தர்.சி எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும்.
- நயன்தாரா கடந்த காலத்தில் நடித்த ஒரு கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்து வருகிறார்.
நயன்தாரா 'மூக்குத்தி அம்மன் 2-'ம் பாகத்தில் நடித்து வருகிறார். சுந்தர்.சி இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் உதவி இயக்குனர் ஒருவர் நயன்தாராவிடம் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை விளக்கி சொன்னதாகவும் அப்போது நயன்தாரா இடைமறித்து உதவி இயக்குனரிடம் சில கேள்விகளை கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல் பரவியது.
இந்த மோதலை தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும், நயன்தாராவுக்கு பதில் தமன்னாவை நடிக்க வைக்க யோசனை நடப்பதாகவும் பேசப்பட்டது. இதற்கு படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் குஷ்பு வெளியிட்ட அறிக்கையில், "சுந்தர்.சியின் நலம் விரும்பிகளுக்கு தெரிவிப்பது, மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து தேவையற்ற வதந்திகள் பரவி வருகின்றன. அது உண்மையல்ல.
படப்பிடிப்பு திட்டமிட்டபடி சுமூகமாக நடந்து வருகிறது. சுந்தர்.சி எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். நயன்தாரா திறமையான நடிகை. அதை அவரே நிரூபித்து இருக்கிறார்.
நயன்தாரா கடந்த காலத்தில் நடித்த ஒரு கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்து வருகிறார். தற்போது பரவும் வதந்திகள் திருஷ்டி எடுத்த மாதிரி. நடப்பதெல்லாம் நல்லதுக்கே. உங்களின் ஆசிர்வாதம், அன்பை நம்புகிறோம். அடுத்த வெற்றிப்படத்துக்கு காத்திருங்கள்'' என்று கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் விக்னேஷ் பிரதீப் ரங்கநாதனை வைத்து 'எல்ஐகே' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
- விக்னேஷ் சிவன் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதி 'ரவுடி பிக்சர்ஸ்' என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி அலங்காரப் பொருட்கள், நாப்கின் விற்பனை உள்பட பல்வேறு தொழில்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து நயன்தாரா- விக்னேஷ் தம்பதி கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை தேனாம்பேட்டையில் புதிதாக ஹோம் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கி உள்ளனர். சுமார் 7 ஆயிரம் சதுர அடி பரப்பில் இருந்த பங்களாவை ஸ்டுடியோவாக மறுகட்டமைபு செய்து உள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரும் வியக்க வைத்தது.
இதனிடையே, நயன்தாரா தற்போது 'டெஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் பிரதீப் ரங்கநாதனை வைத்து 'எல்ஐகே' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படி நடிப்பு, இயக்கம் என பிசியாக இருக்கும் இந்த நட்சத்திர தம்பதி தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிடும் தொடர்பான வீடியோவையும் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்ற கோ பூஜையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கலந்து வழிபாடு செய்தார். பின்னர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார். இதன்பின் கோவிலின் கலைநயத்தை புகைப்படம் எடுத்துக்கொண்ட விக்னேஷ் சிவன் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
- நம் நாட்டில் கிரிக்கெட் என்பது வாழ்க்கை.
- டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிப்பது எளிது கிடையாது.
மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் இணைந்து சஷிகாந்த் இயக்கிய 'டெஸ்ட்' படத்தில் நடித்துள்ளனர். இதில் சித்தார்த் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
இதுகுறித்து சித்தார்த் கூறும்போது, "நம் நாட்டில் கிரிக்கெட் என்பது வாழ்க்கை. யாரைக் கேட்டாலும் கிரிக்கெட் பிடிக்கும் என்பார்கள். நானும் அதில் ஒருவன். தினமும் பல மணி நேரம் கிரிக்கெட் பார்த்து, விளையாடி பலரும் அந்த விளையாட்டுடன் பழக்கமாகி இருப்பார்கள். அதனால், கிரிக்கெட் வீரராக வெறுமனே நடித்து ஒப்பேத்த முடியாது.
டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிப்பது எளிது கிடையாது. நிறைய பேரிடம் இருந்து இன்ஸ்பையர் ஆகித்தான் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கிரிக்கெட் பார்க்கும்போது வரும் பதற்றம் இந்தப் படம் பார்க்கும்போதும் உங்களுக்கு வந்தால் அதுவே எங்களுக்கு வெற்றிதான். எனக்கு கிரிக்கெட் வீரர்களில் ராகுல் டிராவிட் பிடிக்கும்'' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் 'TEST
- திரைப்படம் வருகிற ஏப்ரல் 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது.
விக்ரம் வேதா', 'இறுதிச்சுற்று', 'மண்டேலா' போன்ற படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் 'TEST. இந்தப் படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதற்கு முன் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் ஆகியோர் ஆய்த எழுத்து, ரங் தே பசந்தி ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி உள்ளது.
இந்தத் திரைப்படம் வருகிற ஏப்ரல் 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட டெஸ்ட் திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சித்தார்த் ஒரு கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார். நயன் தாரா , மாதவனின் மனைவி குமுதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது.
- தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
- நயன்தாரா மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்து 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' நடித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார் நயன்தாரா. அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
2019 ஆம் ஆண்டு தியான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த படம் 'லவ் ஆக்ஷன் டிராமா'. ஷான் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். படம் வெளியாகிய போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்பொழுது நயன்தாரா மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்து 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் இயக்கியுள்ளனர்.
பாலி ஜூனியர் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
மேலும் நயன் தாரா , மாதவன் மற்றும் சித்தார்த் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த டெஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இப்படத்தின் மொத்தப்பாடல்களும் இன்றளவும் ரசிப்பட்டு வருகிறது.
- ஆர்யா - சந்தானம் காம்போவில் உருவான இப்படத்தின் காமெடி ட்ராக்குக்கு என தனி ரசிகர் பட்டாளம் இன்றளவும் உள்ளது.
ஆர்யா, சந்தானம், நயன்தாரா நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'. 'சிவ மனசுல சக்தி' திரைப்படத்தின் இயக்குனர் எம்.ராஜேஷின் இரண்டாவது படமாகும்.
'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் விஜயலட்சுமி, சித்ரா லட்சுமணன், ஷகிலா, மொட்டை ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் ஆர்யா - சந்தானத்தின் காமெடி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியை பெற்றது.
யுவன் சங்கர் ராஜா இசையில் சூப்பர் ஹிட் பாடல்களுடன் வெளிவந்த இப்படத்தின் மொத்தப்பாடல்களும் இன்றளவும் ரசிப்பட்டு வருகிறது. மேலும் நடிகர் ஆர்யாவின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான வெற்றித்திரைப்படமாக இது அமைந்தது. தல தளபதி சலூன்கடை ஓனராக வந்த சந்தானத்தின் காமெடி வொர்க் அவுட்டானது. குறிப்பாக ஆர்யா - சந்தானம் காம்போவில் உருவான இப்படத்தின் காமெடி ட்ராக்குக்கு என தனி ரசிகர் பட்டாளம் இன்றளவும் உள்ளது. படத்தின் மிகப்பெரும் தூணாக இந்த காமெடி ட்ராக் அமைந்தது.
இந்நிலையில் ஆர்யா நடிப்பில் வெளியான 'பாஸ் என்கிற பாஸ்கரன்' திரைப்படம் கோடை காலத்தில் மீண்டும் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 7000 சதுர அடியில் சுமார் 100 கோடி செலவில் 3 தளங்களுடன் கலைநயத்தோடு ஸ்டூடியோ போன்று வீட்டை உருவாக்கி இருக்கிறார்.
- வீட்டின் புகைப்படங்களை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்களது வலைதள பக்கங்களில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளனர்.
தமிழ், திரை உலகில் பிரபல கதாநாயகியான நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவருக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்பு கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா, தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் 'மூக்குத்தி அம்மன்-2' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சினிமா நடிப்பை விட குடும்பத்திற்காக அதிக முக்கியத்துவத்தை கொடுத்து வரும் நயன்தாராவுக்கு போயஸ் கார்டனில் வீடு வாங்க வேண்டும் என்பது பல வருட கனவு. அந்த கனவு ஒரு வழியாக சில வருடங்களுக்கு முன்பு நிறைவேறி இருக்கிறது.

பெரும் தொகை கொடுத்து போயஸ் கார்டனில் வாங்கிய வீட்டை நயன்தாரா இடித்து விட்டு தனது கனவுபடி அங்குலம் அங்குலமாக அழகாக வடிவமைத்து ரசித்து கட்டி இருக்கிறார். 7000 சதுர அடியில் சுமார் 100 கோடி செலவில் 3 தளங்களுடன் கலைநயத்தோடு ஸ்டூடியோ போன்று வீட்டை உருவாக்கி இருக்கிறார்.
வீட்டின் புகைப்படங்களை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்களது வலைதள பக்கங்களில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளனர். சினிமாவை மிஞ்சும் வகையில் பழங்கால பொருட்கள், தோட்டம், அருங்காட்சியகம் போன்று பழங்கால தாழி, காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி ஊடுருவும் வகையில் கட்டமைப்போடு வீட்டை உருவாக்கி இருக்கின்றனர்.
முதல் தளத்தில் கணவர், மகன்களுடன் நயன்தாரா வசிக்கிறார். 2-வது தளத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கு தனி அறை என கண்களை கவரும் கனவு இல்லமாக கட்டி இருக்கிறார் நயன்தாரா.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் 'TEST.
- இந்தப் படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது.
விக்ரம் வேதா', 'இறுதிச்சுற்று', 'மண்டேலா' போன்ற படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் 'TEST. இந்தப் படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதற்கு முன் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் ஆகியோர் ஆய்த எழுத்து, ரங் தே பசந்தி ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி உள்ளது. இதில் சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும், மாதவன் பயிற்சியாளராகவும் நடித்து உள்ளதாக தெரிகிறது.
இந்தப் படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தத் திரைப்படம் வருகிற ஏப்ரல் 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட டெஸ்ட் திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் கதாப்பாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டு வருகிறது. சித்தார்த் ஒரு கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார். நயன் தாரா , மாதவனின் மனைவி குமுதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது.
- இவர்கள் இருவரும் 2016-ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்துள்ளனர்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியது. அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்தது.

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க பல்வேறு விதிமுறைகள் இருக்கும் நிலையில், இந்த விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. இதுகுறித்து நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதையடுத்து 4 பேர் கொண்ட சுகாதாரத்துறை குழுவினர் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து விசாரணைக் குழுவிடம் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதற்கான ஆதாரங்களை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியது. அதில் 6 ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும் கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற பதிவு செய்து விட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது என்றும் அது தங்களை கட்டுப்படுத்தாது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதனிடையே காதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாவது, "நயன்தாரா விவகாரத்தில் 4 பேர் கொண்ட குழுவை நியமித்திருக்கிறோம். அந்த குழு விசாரித்து கொண்டிருக்கிறார்கள். முழு அறிக்கை கிடைக்கபெற்ற பின்னர் எந்த மாதிரியான விதிமீறல் நடைபெற்றிருக்கிறது. விதிமீறலின் தன்மை சட்டத்திற்கு உட்பட்டதா? இல்லையா? என்று முழுவிவரமும் அறிவிக்கப்படும்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று விசாரணைக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையின் படி, நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் முறையாக குழந்தை பெற்றுள்ளதாகவும் எந்தவொரு விதிமீறலிலும் அவர்கள் ஈடுபடவில்லை என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 2016-ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்துள்ளனர். இது தொடர்பான சான்றிதழையும் சமர்ப்பித்துள்ளனர். இந்த சான்றிதழ் பத்திரப்பதிவு துறையின் சார்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இயக்குனர் அஹமத் தற்போது இயக்கி வரும் படம் ‘இறைவன்’.
- இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.
'வாமனன், 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹமத். இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படம் 'இறைவன்'. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஜெயம் ரவி - அஹமத்
இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில், 'இறைவன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதனை இயக்குனர் அஹமத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

இறைவன் படக்குழு
மேலும், இந்த படம் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. 'தனி ஒருவன்' படத்தைத் தொடர்ந்து 'இறைவன்' படத்தில் ஜெயம் ரவி - நயன்தாரா இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
And it's a WRAP !! #iraivan 🙌 pic.twitter.com/YtzLJ6b6wj
— Director Ahmed (@Ahmed_filmmaker) November 1, 2022
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ஹன்சிகாவின் திருமணம் டிசம்பர் 4-ந் தேதி நடைபெறவுள்ளது.
- திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை பெரிய தொகைக்கு ஓ.டி.டி.க்கு ஹன்சிகா விற்றுவிட்டதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.
தமிழில் விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, உதயநிதி ஸ்டாலின், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலருடன் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்த ஹன்சிகா, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். ஹன்சிகாவுக்கு தற்போது திருமணம் முடிவாகி உள்ளது.

தனது நீண்ட கால நண்பரும், தொழில் பங்குதாரருமான மும்பையை சேர்ந்த சோஹேல் கதுரியா என்பவரை மணக்கிறார். இவர்கள் திருமணம் அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனையில் நடக்க உள்ளது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள். ஹன்சிகாவின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை பெற பிரபல ஓ.டி.டி. தளம் விலை பேசி வந்தது.

இந்நிலையில் பெரிய தொகைக்கு ஓ.டி.டி.யில் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை ஹன்சிகா விற்றுவிட்டதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. இவர்களின் திருமணம் ஒளிபரப்பாகவுள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.
ஏற்கனவே நயன்தாராவும் தனது திருமண ஒளிபரப்பு உரிமையை ஓ.டி.டி.க்கு விற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா 'கனெக்ட்' படத்தில் நடித்துள்ளார்.
- 'கனெக்ட்' படத்தின் டீசர் நயன்தாரா பிறந்தநாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா 'கனெக்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்குச் சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கனெக்ட்
'கனெக்ட்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த ஆண்டு நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் தேதியை புதிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படத்தின் டீசர் நயன்தாராவின் 38-வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற நவம்பர் 18-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2015-ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான 'மாயா' திரைப்படத்தை அஸ்வின் சரவணன் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
This Friday comes with a few surprises and scares. #CONNECT Teaser from November 18th. Stay CONNECTed!✨@VigneshShivn #Nayanthara @AnupamPKher #Sathyaraj #VinayRai @haniyanafisa @Ashwin_saravana @mk10kchary @prithvi_krimson @ARichardkevin @Kavitha_Stylist @kabilanchelliah pic.twitter.com/CKvYbBY1Ks
— Rowdy Pictures (@Rowdy_Pictures) November 15, 2022