என் மலர்
நீங்கள் தேடியது "Netflix"
- இவர் இயக்கி இருக்கும் வெப் தொடரான ஹீரமண்டி : தி டயமண்ட் பசார் நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
- பீரியட் டிராமாக்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி
ராஜா காலக்கட்டத்து கதைகள் எனப்படும் பீரியட் டிராமாக்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் இயக்கும் கதையின் கண்ணோட்டம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். அதற்கு சாட்சியான படங்கள் பஜிராவ் மஸ்தானி, பத்மாவத். இவர் இயக்கும் எல்லாப்படங்களிலும் ஒரு பிரமாண்ட நடனப் பாடல் காட்சி இடம் பெற்றிருக்கும்.
இவர் இயக்கிய கங்குபாய் கத்தியவடி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்க்கை பயணத்தை மிகவும் உணர்ச்சிகரமாக எடுத்து இருப்பார். இத்திரைப்படம் தேசிய விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு இவரே இசையமைக்கவும் செய்து இருந்தார்.
அடுத்ததாக இவர் இயக்கி இருக்கும் வெப் தொடரான ஹீரமண்டி : தி டயமண்ட் பசார் நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி ஓடிடித் தளத்திற்காக இயக்குவது இதுவே முதல்முறை. மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த சீரிஸ் மே 1 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.
சோனாக்சி சின்ஹா, மனிஷா கொய்ராலா, ஷர்மின், அதிதி ராவ், ரிச்சா சாதா, சஞ்சீதா ஷேக் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.' சுதந்திரம் பெற ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய 1940களில் நகரும் இக்கதை, லாஹோரில் இருக்கும் ஹீரமண்டியின் தவைஃப்களை மற்றும் பாலியல் தொழிலாலிகளை மையப்படுத்தியுள்ளது. தவைஃப்கள் என்பவர்கள், ஆடல், பாடலில் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், 'புஷ்பா' படத்தின் அடுத்த பாகம் தற்போது உருவாகி உள்ளது
- புஷ்பா 2 திரைப்படத்தை வருகிற ஆகஸ்ட் 15 -ந் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது
கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், 'புஷ்பா'. தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் அசத்தல் நடிப்பில், பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கிய இந்த படம் வெற்றி பெற்றதையடுத்து, இதன் அடுத்த பாகம் தற்போது உருவாகி உள்ளது.
இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் பாகத்தை விட மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படம் தயாராகி வருகிறது.
இதனையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளன்று ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் புஷ்பா 2 படத்தின் மிரட்டலான டீசரை படக்குழு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தை வருகிற ஆகஸ்ட் 15 -ந் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. புஷ்பா தி ரைஸ் படத்தின் வெற்றியை போலவே இந்தப் பாகமும் மிகப்பெரிய வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது
புஷ்பா படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் சுமார் 100 கோடி கொடுத்து வாங்கியிருந்தது. இந்நிலையில், தற்போது புஷ்பா 2 அதை விட அதிக தொகைக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
புஷ்பா 2 படத்தின் இந்தி மொழி உரிமத்தை தயாரிப்பாளர் அனில் தடானி 200 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளன. எனவே இந்தியில் மட்டுமே 500 கோடிக்கு மேல் புஷ்பா 2 வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் 275 கோடி ரூபாய் கொடுத்து அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இதற்கு முன்பு ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படமே அதிக பட்சமாக 175 கோடிக்கு 3 ஓடிடி நிறுவனங்களிடம் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டில்லு ஸ்கொயர் திரைப்படம் மாலிக் ராம் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியாகியது.
- அனுபமா பரமேஸ்வரன் இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு சித்து ஜொனலகட்டா நடிப்பில் அறிமுக இயக்குனரான விமல் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் டிஜே டில்லு.
நேஹா ஷெட்டி, பிரின்ஸ் செசில் , பிரம்மாஜி மற்றும் பலர் இப்படத்தில் நடித்து இருந்தனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். படம் வெளியாகிய போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதன் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் அடுத்த பாகமான டில்லு ஸ்கொயர் திரைப்படம் மாலிக் ராம் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியாகியது.
அனுபமா பரமேஸ்வரன் இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். முதல் பாகம் வெற்றியைத் தொடர்ந்து இப்பாகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. உலகளவில் 125 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூன்றாம் பாகமும் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.
படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்லிக்ஸ் வாங்கியுள்ளனர். வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வெப் சீரிஸ் மிகவும் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது.
- 200 கோடி ரூபாய் செலவில் உருவாகி இருக்கிறது.
பாலிவுட்டின் பிரபல இயக்குநர்களில் ஒருவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர், ஹீரமண்டி: தி டைமண்ட் பஜார் என்ற இணைய தொடர் மூலம் ஓ.டி.டி. தளத்திற்கு அறிமுகமானார். இவர் இயக்கத்தில் உருவான "ஹீரமண்டி: தி டைமண்ட் பஜார்" சீரிசில் சோனாக்ஷி சின்கா, மனிஷா கொய்ராலா, ஷர்மின் சீகல், ரிச்சா சத்தா, சஞ்சீதா ஷேக், அதித்தி ராவ் ஹைதாரி மற்றும் பலர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.
சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பெண்களின் நிலை பற்றிய கதையம்சம் கொண்ட தொடராக ஹீரமண்டி உருவாகி இருக்கிறது. விலை உயர்ந்த நகைகளில் துவங்கி, ஆடம்பர செட் என இந்த வெப் சீரிஸ் மிகவும் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில், ஹீரமண்டி வெப் சீரிசில் பிரபலங்கள் வாங்கிய சம்பலம் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி ஹீரமண்டி வெப் சீரிசில் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் செலவில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.
ஹீரமண்டி வெப் சீரிஸ் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ரூ. 60 இல் இருந்து ரூ. 70 கோடி வரை சம்பளமாக பெற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இவரைத் தொடர்ந்து சோனாக்ஷி சின்காவுக்கு ரூ. 2 கோடியும், மனிஷா கொய்ராலா மற்றும் ரிச்சா சத்தா ஆகியோருக்கு தலா ரூ. 1 கோடியும், அதித்தி ராவுக்கு ரூ. 1.5 கோடி வரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதே போன்று சஞ்சிதா ஷேக் ரூ. 40 லட்சமும், ஷார்மின் சீகல் ரூ. 30 லட்சமும், வாலி முகமது ரூ. 75 லட்சம் வரை சம்பளமாக பெற்றுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விடாமுயற்சி படத்தை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடித்து வருகிறார்.
- சில தினங்களுக்கு முன் போஸ்டர் வெளியிடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது.
நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் அஜர்பைஜான் நாட்டின் படமாக்கப்பட்டன.
இந்த நிலையில் குட் பேட் அக்லி (Good bad Ugly) படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தின் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அத்துடன் சண்டை காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது. தொடர்ந்து மூன்று கட்டங்காளக படப்பிடிப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குட் பேட் அக்லி படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை 95 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு டிஜிட்டல் உரிமைக்கான தொகை இது என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் இப்படத்தில் அஜித் மூன்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
மேலும், விடாமுயற்றி படத்தையும் பெரும் தொகை கொடுத்து நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உலகளவில் ஓடிடி தளங்களில் முதன்மையாக விளங்குவது நெட்பிளிக்ஸ் ஆகும்.
- இந்தியாவிலிருந்து வரும் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் 2023 ஆம் ஆண்டில் நெட்பிளிக்ஸ் தளத்தில் உலகம் முழுவதும்1 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன
உலகளவில் ஓடிடி தளங்களில் முதன்மையாக விளங்குவது நெட்பிளிக்ஸ் ஆகும். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட முக்கியமாக இளைஞர்களை அதிகமாகக் கொண்ட இந்தியாவில் நெட்பிளிஸ் தளத்துக்கு கணிசமான சாப்ஸ்க்ரைபர்கள் இருக்கின்றனர். பல்வேறு ஜானர்களில் எடுக்கப்படும் சீரிஸ்களுக்கும், படங்களுக்கும் பெயர் பெற்றது நெட்பிளிக்ஸ்.

பலதரப்பட்ட கலாச்சாரங்கள் மற்றும் ஊர்களின் இருப்பிடமான இந்தியாவில் கதைகளுக்கு பஞ்சம் இல்லை. அந்த வகையில் இந்தியாவிலிருந்து வரும் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் 2023 ஆம் ஆண்டில் நெட்பிளிக்ஸ் தளத்தில் உலகம் முழுவதும்1 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் ஜூலை முதல் டிசம்பர் காலகட்டத்தில் இந்த புதிய மைல் கல்லை நெட்பிளிக்ஸ் எட்டியுள்ளது. சுஜோய் கோசின் "ஜானே ஜான்" 20.2 மில்லியன் பார்வைகளுடன் நெட்பிளிக்ஸ் இல் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய திரைப்படமாக உள்ளது, ஷாருக்கானின் "ஜவான்" 16.2 மில்லியன் பார்வைகளுடனும் விஷால் பரத்வாஜின் "குஃபியா" 12.1 மில்லியன் பார்வைகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

"OMG 2" (11.5 மில்லியன் வியூஸ்), "லஸ்ட் ஸ்டோரீஸ் 2" (9.2 மில்லியன் வியூஸ்), "டிரீம் கேர்ள் 2" (8.2 மில்லியன் வியூஸ்) மற்றும் கேரள பெண் சீரியல் கில்லரைப் பற்றிய ஆவணப்படமான "கர்ரி அண்ட் சயனைட்" (8.2 மில்லியன் வியூஸ்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பயனர்களுக்கு நெட்ப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது.
- புதிய சலுகைகளில் தினமும் 2.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
வோடபோன் ஐடியா நிறுவனம் நெட்ப்ளிக்ஸ் உடன் இணைந்து புதிய பிரீபெயிட் சலுகைகளை வழங்குகிறது. முன்னதாக வி பிரீபெயிட் சலுகைகளில் வி மூவிஸ் & டி.வி., 13 ஓ.டி.டி. சந்தா, 400-க்கும் அதிக லைவ் டி.வி. சேனல்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தும் வசதியை வழங்கி வந்தது.
தற்போது நெட்ப்ளிக்ஸ் கூட்டணியை தொடர்ந்து வி பிரீபெயிட் பயனர்கள் தங்களது மொபைல், டி.வி. மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களில் நெட்ப்ளிக்ஸ் பயன்படுத்தலாம். ரூ. 1000-க்கும் குறைந்த விலையில் நெட்ப்ளிக்ஸ் சந்தாவை வழங்கும் ஒரே டெலிகாம் நிறுவனமாக வி இருக்கிறது.

அந்த வகையில் வி ரூ. 998 மற்றும் ரூ. 1399 பிரீபெயிட் சலுகைகளில் நெட்ப்ளிக்ஸ் பேசிக் சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளில் முறையே 70 நாட்கள் மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன. இவற்றில் முறையே தினமும் 1.5 ஜி.பி. மற்றும் 2.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. மும்பை மற்றும் குஜராத்தில் வசிக்கும் பயனர்கள் 70 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை ரூ. 1099 விலையில் வாங்க வேண்டும்.
- ராஜா காலக்கட்டத்து கதைகள் எனப்படும் பீரியட் டிராமாக்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி.
- இந்த தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாகியதில் இருந்து பலரும் அதிகமாக பார்க்கப்பட்ட வெப் சீரிஸாக ஹீரமண்டி தொடர் இடம் பெற்றுள்ளது.
ராஜா காலக்கட்டத்து கதைகள் எனப்படும் பீரியட் டிராமாக்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் இயக்கும் கதையின் விஷ்வல்ஸ் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். அதற்கு சாட்சியான படங்கள் பஜிராவ் மஸ்தானி, பத்மாவத்.
இவர் இயக்கிய கங்குபாய் கத்தியவடி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக இவர் இயக்கி இருக்கும் வெப் தொடரான ஹீரமண்டி : தி டயமண்ட் பசார் நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் மே 1 ஆம் தேதி வெளியாகியது. சஞ்சய் லீலா பன்சாலி ஓடிடித் தளத்திற்காக இயக்குவது இதுவே முதல்முறை. மிகப் பெரிய பொருட்செலவில் இந்த நெப் சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது. சீரிஸ் வெளியாகி மக்களிடையே நல்லம் வரவேற்பை பெற்றது.
சோனாக்சி சின்ஹா, மனிஷா கொய்ராலா, ஷர்மின், அதிதி ராவ், ரிச்சா சாதா, சஞ்சீதா ஷேக் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.' சுதந்திரம் பெற ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய 1940களில் நகரும் இக்கதை, லாஹோரில் இருக்கும் ஹீரமண்டியின் தவைஃப்களை மற்றும் பாலியல் தொழிலாலிகளை மையப்படுத்தியுள்ளது. தவைஃப்கள் என்பவர்கள், ஆடல், பாடலில் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாகியதில் இருந்து பலரும் அதிகமாக பார்க்கப்பட்ட வெப் சீரிஸாக ஹீரமண்டி தொடர் இடம் பெற்றுள்ளது. 43 நாடுகளில் ஹீரமண்டி தொடர் அதிகமாக மக்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து ஹீரமண்டி சீசன் -2 வை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவுள்ளார். லாஹுரில் இருந்து வெளியேறிய பெண் திரைத்துறை உலகத்திற்கு வருகிறாள். லாஹூர் பிரிவினைக்கு பிறகு பஸாரில் உள்ள பெரும்பாலான பெண்கள் மும்பை மற்றும் கொல்கத்தா திரைத்துறைக்குதான் வந்தடந்தனர், இங்கு நவாபுகளுக்கான ஆடிய பெண்கள் திரைத்துறையில் தயாரிப்பாளர்களுக்காக ஆடினார்கள் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை அதனால் அதை மையமாக வைத்து ஹீரமண்டி சீசன் 2 வை இயக்கவுள்ளதாக சஞ்சய் கூறியுள்ளார். இதனால் ஹீரமண்டி தொடரின் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பீக்கி பிளைன்டர்ஸ் என்ற பெயரில் கடந்த 2022 முதல் 2022 வரை 6 சீசன்களாக வெளிவந்த வெப் சீரிஸ் மாபெரும் ஹிட்டானது.
- பிபிசியுடன் நெட்ப்ளிஸ்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த திரைப்படத்தில் சிலியன் மர்பி மீண்டும் ஆர்தர் செல்பி அவதாரம் எடுக்க உள்ளார்.
இங்கிலாந்தில் 1919 முதலாம் உலகப்போர் உலகப் போர் முடிந்த சமயத்தில் பீக்கி பிளைன்டர்ஸ் என்ற கிரைம் கேங் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு இங்கிலாந்து நிழலுலகில் ஆதிக்கம் செலுத்தியது. பிரிம்மிங்கம் நகரில் குடும்பமாக இயங்கிய இந்த கேங் இங்கிலாந்து முழுவதும் புகழ்பெற்று விளங்கியது. இவர்களின் கதையை மையமாக வைத்து பீக்கி பிளைன்டர்ஸ் என்ற பெயரில் கடந்த 2022 முதல் 2022 வரை 6 சீசன்களாக வெளிவந்த வெப் சீரிஸ் மாபெரும் ஹிட்டானது.

பீக்கி பிளைன்டர்ஸின் தலைவராக விளங்கிய டாமி செல்பி கதாபாத்திரத்தில் பிரிட்டிஷ் நடிகர் சிலியின் மர்பி கதாபாத்திரத்தோடு ஒன்றும் வகையில் தத்ரூபமாக நடித்திருந்தார். பீக்கி பிளைன்டர்ஸ் வெப் சீரிஸ் உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தியே உருவாக்கி வைத்திருக்கிறது. இந்நிலையில் பீக்கி பிளைண்டர்ஸ் திரைப்படப்பாக தயாராக உள்ளதகாக பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது. பிபிசியுடன் நெட்ப்ளிஸ்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த திரைப்படத்தில் சிலியன் மர்பி மீண்டும் ஆர்தர் செல்பி அவதாரம் எடுக்க உள்ளார்.
சீரிஸை இயக்கிய டாம் ஹார்ப்பரும், ஸ்டீவன் கிநைட்டும் இந்த திரைப்படத்தை இயக்க உள்ளனர். 6 சீசன்களாக உள்ள கதை ஒரே படத்தில் எப்படி கூறப்பட உள்ளது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .

இதற்கிடையில் உலகப் புகழ் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஓப்பன்ஹைமர் திரைப்படத்தில் இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய மக்கள் கொத்துக்கொத்தாக சாக காரணமான அணுகுண்டைக் கண்டுபித்த ஓப்பன்ஹைமரின் கதாபாத்திரத்தினுடைய அறச் சிக்கலை நேர்த்தியாக திரையில் வரித்துக்காட்டி சிலியன் மர்பி ஆஸ்கார் வென்றது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- இப்படம் 1800-ம் ஆண்டு மும்பையில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
- இப்படம் ஜூன் 14ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.
அமீர்கானின் மகன் ஜுனைத் கான் 'மகராஜ்' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். யாஷ் ராஜ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஜூன் 14ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.
சித்தார்த் மல்ஹோத்ரா இயக்கியுள்ள இப்படம் 1800-ம் ஆண்டு மும்பையில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்திற்கு பஜ்ரங் தளம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜூன் 3 ஆம் தேதி படத்தின் தயாரிப்பாளர் யாஷ் ராஜ் மற்றும் ஓடிடி தளமான நெட்பிலிக்ஸ் ஆகியவற்றிற்கு பஜ்ரங் தளம் கடிதம் எழுதியுள்ளது.
அக்கடிதத்தில், தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் போஸ்டர்கள் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், எனவே படத்தை ரிலீஸுக்கு முன்பு எங்களுக்கு காட்ட வேண்டும் என்று பஜ்ரங் தளம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதே நேரத்தில், பஜ்ரங் தளத்தின் தலைவர் கவுதம் ரவ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மும்பையில் உள்ள யாஷ் ராஜ் அலுவலகம் முன் பஜ்ரங் தள உறுப்பினர்களுடன் போராட்டம் நடத்திய வீடியோவை பகிர்ந்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரம்மாண்ட இயக்குனர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எஸ்.எஸ்.ராஜமவுலி.
- ஸ்டூடண்ட் நம்பர்-1 என்ற படத்தின் மூலம் இயக்குனராக தன் திரை வாழ்வை ஆரம்பித்த ராஜமவுலி
தெலுங்கில் மட்டுமல்லாது இந்தியளவில் பிரம்மாண்ட இயக்குனர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. 2001-ம் ஆண்டு ஸ்டூடண்ட் நம்பர்-1 என்ற படத்தின் மூலம் இயக்குனராக தன் திரை வாழ்வை ஆரம்பித்த ராஜமவுலி தொடர்ந்து சிம்ஹத்ரி, சை, சத்ரபதி உள்ளிட்ட படங்களை இயக்கி கமர்சியல் இயக்குனராக வெற்றி பெற்றார்.
இவையனைத்தும் எஸ்.எஸ்.ராஜமவுலியை சாதாரண இயக்குனராகவே அடையாளப்படுத்தியது. ஆனால், 2012-ம் ஆண்டு இவர் இயக்கிய 'நான் ஈ' திரைப்படம் கதை ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் நாடு முழுவதும் பேசப்பட்டது. தமிழிலும் அப்படம் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
இதன் வெற்றியைக் கணக்கில் வைத்த ராஜமவுலி இனிமேல் குறைந்த பட்ஜெட்டில் கமர்சியல் கதைகளை இயக்கவே கூடாது என்கிற முடிவில் 3 ஆண்டுகள் கடின உழைப்பால் 2015-ம் ஆண்டு இந்தியாவே திரும்பிப்பார்த்த பாகுபலி திரைப்படத்துடன் வந்தார். உலகளவிலும் இந்தியாவிலிருந்து இப்படி ஒரு படம் வந்திருக்கிறதா என வியக்கும் அளவுக்கு அதன் கதாபாத்திர வடிவமைப்புகளும் வி.எப்.எக்ஸ் காட்சிகளும் பேசப்பட்டன. இதன் இரண்டாம் பாகமான பாகுபலி - 2 வெளியாகி உலகளவில் ரூ.1850 கோடியை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. இறுதியாக, ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் ரூ.1350 கோடி வரை வசூலித்து ராஜமவுலியை இந்தியத் திரை வரலாற்றில் முக்கியமான ஆளுமையாகக் காட்டியது.
இந்த நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் சினிமாவில் ராஜமவுலியின் பங்களிப்பை கூறும் விதமாக, அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிலிம் கம்பானியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து "மார்டர்ன் மாஸ்டர்ஸ் (modern masters)" என்கிய பெயரில் அவர் குறித்த ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளனர். இதனை, ராகவ் கண்ணா இயக்கியுள்ளார். மேலும், இந்த ஆவணப்படம் ராஜமவுலியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகிறது.
இந்த ஆவணப்படத்தில் ராஜமவுலியின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்தும், திரைத்துறை வாழ்க்கை குறித்தும் பேச இருக்கிறது. பிரபல இயக்குனர்களான ஜேம்ஸ் காமரூன், ஜோ ரஸ்ஸோ மற்றும் கரன் ஜோஹர் இவரைப் பற்றி பேசியுள்ளனர்.
ராஜமவுலியின் திரைத்துறை நண்பர்களான பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர், ராணா தகுபதி மற்றும் ராம் சரண் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜமவுலி தற்பொழுது வெளியாகி கோடிகளை அள்ளும் கல்கி 2898 ஏ.டி திரைப்படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.
மேலும் மகேஷ் பாபு நடிப்பில் ஒரு மாபெரும் படைப்பை அடுத்து இயக்கவுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- புது சலுகை பல்வேறு பலன்களை வழங்குகிறது.
- இந்த சலுகை போஸ்ட்பெயிட் பயனர்களுக்காக வழங்கப்படுகிறது.
வோடபோன் ஐடியா நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் பயனர்களுக்காக புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை பயனர்களுக்கு சீரான கனெக்டிவிட்டி, ஓடிடி சந்தா என பல்வேறு பலன்களை வழங்குகிறது.
ரூ. 1201 விலையில் கிடைக்கும் வோடபோன் ரெட்எக்ஸ் சலுகையில் நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ் மற்றும் சன் நெக்ஸ்ட் என ஐந்து ஓடிடி தளங்களுக்கான சந்தா வழங்கப்படுகிறது.
இத்துடன் ஸ்விக்கி ஒன் சந்தா, ரூ. 2999 மதிப்புள்ள சர்வதேச ரோமிங் பேக், 12 மாதங்களுக்கு நார்டான் மொபைல் செக்யூரிட்டி சேவை மற்றும் வோடபோன் ஐடியாவின் பிரீமியம் வாடிக்கையாளர் சேவை மைய வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
புதிய ரெட்எக்ஸ் சலுகையை தேர்வு செய்வோர் ஆறு மாதங்களுக்குள் வேறு சலுகையை தேர்வு செய்யும் பட்சத்தில் ரூ. 3 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். எனினும், பயனர்கள் பழைய ரெட்எக்ஸ் சலுகையில் இருந்து புதிய சலுகையை பயன்படுத்த எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.