search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Non Vegetarian"

    • அடுப்பில் மண் சட்டியை வைத்து அதில் நண்டை போடவும்.
    • ஒரு கிணத்தில் ஊற்றி மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.

    தேவையான பொருட்கள்:

    கடல் நண்டு - 5

    மிளகு தூள் - 1 ஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்

    இஞ்சி பூண்டு பேஸ்ட்- தேவையான அளவு

    பிரிஞ்சி இலை - 1

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    தக்காளி - 2

    வெங்காயம் - 1

    உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லி- தேவையான அளவு


    செய்முறை:

    * முதலில் நண்டை கழுவி இடித்து தனியாக தண்ணீர் ஊற்றி வைத்துக்கொள்ளலாம்.

    * இப்போது அடுப்பில் மண் சட்டியை வைத்து அதில் நண்டை போடவும்.

    * அதில் வெங்காயம் தக்காளி, பச்சை மிளகாய், பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு இடித்து போட்டாலும் சரி பேஸ்ட் போட்டாலும் உங்கள் வசதிக்கு ஏற்றது போல் சேர்த்துக்கொள்ளவும்.

    * பின்பு அதில் கருவேப்பிலை, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், இப்போது அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றவும்.

    * பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மிதக்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். அதனை மூடி வைத்து கொதிக்கவிடவும்.

    * இது அனைத்தும் நன்கு வெந்தவுடன் ஒரு சூப் போல் இருக்கும் அதனை எடுத்து ஒரு கிணத்தில் ஊற்றி மிளகு தூள், கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி அசைவத்தில் இருந்து சைவ உணவுக்கு மாறியதற்கு அவர் பாசமாக வளர்த்த நாய் இறந்ததே காரணம். #DMKLeader #Karunanidhi #BlackDog
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி அசைவ பிரியராக இருந்தார். தினமும் அவரது உணவில் ஏதாவது அசைவ உணவு இருக்கும்.

    அந்த அளவுக்கு அசைவ உணவை விரும்பி சாப்பிட்டு வந்தார். திடீரென்று கருணாநிதி அசைவத்தில் இருந்து சைவ உணவுக்கு மாறினார். அதற்கு அவர் பாசமாக வளர்த்த நாய் இறந்ததே காரணமாகும்.

    கருணாநிதி, தொண்டர்கள் மீது மட்டுமல்ல வளர்ப்பு பிராணிகள் மீதும் அதிக பாசம் வைத்திருந்தார். வீட்டில் நிறைய நாய்களை வளர்த்து வந்தார்.

    கருப்பு நிறம் கொண்ட நாய் மீது கருணாநிதி அதிக பிரியம் செலுத்தி வந்தார். அவர் என்ன உணவு சாப்பிடுகிறாறோ அதை அந்த நாய்க்கும் கொடுப்பார். அவரிடம் நாய் துள்ளி குதித்து மடியில் ஏறி விளையாடும்.

    அந்த நாய் திடீர் என்று இறந்து விட்டது. இதனால் கருணாநிதி துயரம் அடைந்தார். அதன் பிறகு அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு சைவ உணவுக்கு மாறினார்.


    இதுகுறித்து கனிமொழி கூறுகையில், “கருப்பு நாய் மீது அதிகம் பாசம் வைத்திருந்த கலைஞர் அது இறந்ததால் சோகம் அடைந்தார். அதன் உடலை ஆலிவர் சாலையில் இருந்த வீட்டின் பின்புறம் புதைத்தோம். அது நினைவாக ஒரு மரக்கன்று நட்டு வைத்தோம்.

    நாய் திடீரென்று இறந்தது கலைஞரை மிகவும் பாதித்தது. அதனால் அவர் அசைவ உணவு சாப்பிடுவதை 2 ஆண்டுகள் நிறுத்தி விட்டார். மருத்துவ காரணங்களுக்காக அசைவ உணவு சாப்பிட டாக்டர்கள் அறிவுரை வழங்கினார்கள்” என்றார்.

    கவிஞர் இளையபாரதி கூறுகையில், “ஒருமுறை ராஜாத்தி அம்மாள் கீழே கிடந்த உலர் திராட்சையை மிதித்து வழுக்கி விழுந்து காலில் காயம் அடைந்தார். அன்று முதல் அந்த கருப்பு நிற நாய் உலர்திராட்சையை வீசினாலும் சாப்பிடாது. அந்த அளவுக்கு பாசத்துடன் இருந்தது” என்றார். #DMKLeader #Karunanidhi
    ×