என் மலர்
நீங்கள் தேடியது "North Carolina"
அமெரிக்காவில் ஏ.வி-8 பி ஹாரியர் கடற்படை விமானம் ஹேவ்லாக் என்ற இடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
வாஷிங்டன்:
அமெரிக்க கடற்படை விமானம், ஏ.வி-8 பி ஹாரியர். இந்த விமானம், அங்கு வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள செர்ரி பாயிண்ட் கடற்படை விமான தளத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. இந்த விமானம், ஹேவ்லாக் என்ற இடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. உடனடியாக மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விமானி பத்திரமாக வெளியேற்றப்பட்டார்.
அவர் நியூபெர்ன் நகரில் உள்ள கரோலினா கிழக்கு மருத்துவ மையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்தில் உள்ளூர்வாசிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை. சம்பவ இடத்தை ராணுவம் சுற்றி வளைத்து விசாரணை நடத்துகிறது. விபத்துக்கான காரணம், உடனடியாக தெரியவரவில்லை.
அமெரிக்க கடற்படை விமானம், ஏ.வி-8 பி ஹாரியர். இந்த விமானம், அங்கு வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள செர்ரி பாயிண்ட் கடற்படை விமான தளத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. இந்த விமானம், ஹேவ்லாக் என்ற இடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. உடனடியாக மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விமானி பத்திரமாக வெளியேற்றப்பட்டார்.
அவர் நியூபெர்ன் நகரில் உள்ள கரோலினா கிழக்கு மருத்துவ மையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்தில் உள்ளூர்வாசிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை. சம்பவ இடத்தை ராணுவம் சுற்றி வளைத்து விசாரணை நடத்துகிறது. விபத்துக்கான காரணம், உடனடியாக தெரியவரவில்லை.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காங்கோவைச் சேர்ந்த 5 குழந்தைகள் உயிரிழந்தனர். #NorthCarolina #apartmentfire
வாஷிங்டன்:
அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காங்கோவைச் சேர்ந்த 5 குழந்தைகள் உயிரிழந்தனர்.
காங்கோவில் இருந்து அகதிகளாக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த குடும்பம் ஒன்று வடக்கு கரோலினா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தது. அவர்கள் தங்கியிருந்த வீட்டில் அதிகாலை 4 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். அந்த தீயில் சிக்கி 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் அந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த 5 குழந்தைகளும் 8 வயதுக்கும் குறைவானவர்கள் என்று கூறப்படுகிறது. #NorthCarolina #apartmentfire