என் மலர்
நீங்கள் தேடியது "NOTA"
விஜய்சேதுபதியின் ‘96’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’ படங்கள் ரிலீசால் மற்ற படங்களுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #96TheMovie #NOTA
தமிழ் திரையுலகில் புதிய படங்களை திரையிடுவதில் ஒழுங்கற்ற நிலை இருந்தது. பெரிய படங்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்ததால் சிறு பட்ஜெட் படங்களை வெளியிடுவதில் சிரமங்கள் இருந்தன. அந்த படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் மாதக்கணக்கில் முடங்கின. இந்த குளறுபடிகளை தீர்க்க தயாரிப்பாளர்கள் சங்கம் படங்களை வெளியிடுவதில் புதிய வரைமுறைகளை வகுத்தது.
ஒவ்வொரு படத்துக்கும் சங்கமே தேதிகளை வெளியிட்டு ஒதுக்கி கொடுத்தது. இதன்படி வாரத்துக்கு 2, 3 படங்கள் திரைக்கு வந்தன. பெரிய நடிகர்கள் படங்களை வாரத்தின் முதல் இரண்டு வாரத்திலும், கடைசி வாரத்திலும் திரையிட தேதிகள் ஒதுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளதால் அந்த படங்களை வெளியிடுவதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசித்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்த வாரம் 5-ந் தேதி உதயா நடித்துள்ள உத்தரவு மகாராஜா, சமுத்திரக்கனியின் ஆண்தேவதை, ஜெய் நடித்துள்ள ஜருகண்டி, விஷ்ணு விஷாலின் ராட்சசன், விவேக்கின் எழுமின் ஆகிய 5 படங்களையும் திரைக்கு கொண்டுவர அனுமதி வழங்கி அவற்றுக்கு தியேட்டர்களும் ஒதுக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் விஜய்சேதுபதி-திரிஷா நடித்துள்ள ‘96’, விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘நோட்டா’ ஆகிய படங்களும் 5-ந் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டும் பெரிய படங்கள் என்பதால் மற்ற 5 படங்களுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்காமல் அவற்றை தள்ளிவைக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன. இந்த படங்களின் தயாரிப்பாளர்கள் சங்கத்தில், புகார் அளித்தனர்.
இதற்கிடையே விவேக்கின் எழுமின் படம் அக்டோபர் 18-ஆம் தேதிக்கும், உதயாவின் உத்தரவு மகாராஜா படம் அக்டோபர் 26-ஆம் தேதிக்கும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. #96TheMovie #NOTA #ProducersCouncil
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி இருக்கும் நோட்டா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சத்யராஜ், தனது லொள்ளு பேச்சால் அரங்கில் இருப்பவர்களை சிரிப்பலையில் மூழ்கடித்தார். #NOTA #Sathyaraj
ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நோட்டா.’ ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா இந்த படத்தின் மூலம் நாயகனாக தமிழில் அறிமுகமாகிறார். நாயகியாக மெஹ்ரீன் பிர்சாடா, சன்சனா நடராஜன் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் சத்யராஜ். நாசர், எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள இந்தப்படத்தை அரிமாநம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சத்யராஜ் பேசும் போது,
“நடப்பு அரசியலை அதிரடியாக படமாக எடுக்கும் தைரியம் இயக்குனர் மணிவண்ணனுக்கு மட்டுமே இருந்தது. அமைதிப்படை, கோ என அரசியல் படங்களில் புதிய பாணியை புகுத்தியது போல இந்தப்படத்திலும் புகுத்தியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் சங்கர். எனக்கு பொதுவாகவே வேறு மொழியில் டப்பிங் பேசுவது தான் கொஞ்சம் கஷ்டமான விஷயம். நண்பன் படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்காக தெலுங்கை தமிழில் எழுதி வைத்துக்கொண்டு ஈஸியாக பேசிவிடலாம் என நினைத்தேன். ஆனால் ஒருநாள் முழுதும் முயன்றும் என்னால் ஒரிஜினல் தெலுங்கில் பேசமுடியவே இல்லை. ஆனால் இந்தப்படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டா, அழகான தமிழ் உச்சரிப்புடன் நாலு பக்க வசனங்களை ஞாபகமாக வைத்து பேசுவது கண்டு பிரமித்து போனேன்.

நான் இந்த படத்தில் ஜாலியாக நடித்திருக்கிறேன் என்று நாசர் சொன்னார். என்னுடைய 41 வருட சினிமா வாழ்க்கையில், சின்ன மேக்கப் கூட இல்லாமல் நான் நடித்த முதல் படம் இது தான். விக் இல்லாமல் கூட நடித்திருக்கிறேன். ஆனால், ரொம்ப நாளாகவே எந்த மேக்கப்பும் இல்லாமல் இயல்பான கெட்டப்பில் நடிக்கவேண்டும் என்கிற ஆசை இருந்தது. அந்த ஆசையை இதில் நிறைவேற்றி வைத்துவிட்டார் ஆனந்த் சங்கர். #NOTA #Sathyaraj #VijayDevarakonda
சத்யராஜ் பேசிய வீடியோவை பார்க்க:
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நோட்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் விஜய் தேவரகொண்டா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்திற்காக நானும் மரண வெயிட்டிங் என்று கூறினார். #NOTA #VijayDevarakonda
ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நோட்டா.’ ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். நாயகியாக மெஹ்ரீன் பிர்சாடா, சன்சனா நடராஜன் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் சத்யராஜ். நாசர், எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள இந்தப்படத்தை அரிமாநம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.
சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், சன்சனா மற்றும் பிக்பாஸ் புகழ் யாஷிகா, நாசர், எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் ஆனந்த் சங்கர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., படத்தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேசும்போது, “ஆனந்த் சங்கரை பொறுத்தவரை பாடல்களை குறைத்து பின்னணி இசையில் கவனம் செலுத்துவார். எனக்கும் அதே அலைவரிசை என்பதால் எளிதாக செட்டாகி விட்டோம். இந்தப்படத்தின் பின்னணி இசையை கவனிப்பவர்கள், இவர் வித்தியாசமான முயற்சிகளை பண்ணுவார் என என்மீது நம்பிக்கை வைக்க ஆரம்பிப்பார்கள். நாம் எதிர்கொண்ட, நம்மை பாதித்த விஷயங்களை இதில் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் சொல்லியிருக்கிறார் இயக்குனர்” என்றார்.

நாயகன் விஜய் தேவரகொண்டா பேசும்போது, “முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மற்றவர்கள் பேசுவது எதுவும் புரியாத நிலையில் அதை கவனிக்காமல், எண்ணித் துணிக கருமம் என்கிற திருக்குறளை திரும்பத் திரும்ப மனப்பாடம் பண்ணிக்கொண்டு இருந்தேன். ஆனால் இப்போது தமிழில் நானே திருக்குறள் ஒப்பிக்கும் அளவுக்கு வந்துவிட்டேன். இயக்குனர் ஆனந்த் சங்கருடன் பணியாற்றியது ரொம்ப ஈஸியாக இருந்தது. இந்தப்படம் குறித்து டிவிட்டரில் அடிக்கடி மரண வெயிட்டிங் என கமெண்ட் போடப்பட்டு இருந்தது. அதேபோல நானும் இந்தப்படத்திற்காக மரண வெயிட்டிங். இந்த படத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதை வெல்ல வேண்டும் என்பதுதான் என் ஆசை.” என்றவர் ‘சொன்னது போலவே திருக்குறள் ஒன்றை அழகாக உச்சரித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
இந்தப்படம் வரும் அக்-5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. #NOTA #VijayDevarakonda
விஜய் தேவரகொண்டா பேசிய வீடியோவை பார்க்க:
அர்ஜுன் ரெட்டி நாயகன் விஜய் தேவரகொண்டா தமிழிலில் அறிமுகமாகும் நோட்டா படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #NOTA #VijayDevarakonda
ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் படம் ‘நோட்டா’. ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் மூலம் அர்ஜுன் ரெட்டி நாயகன் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்சாடாவும், முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் அரசியல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இப்படத்தின் டிரைலரை செப்டம்பர் 6ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சாம்.சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 4-ல் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #NOTA #VijayDevarakonda #MehreenPirzada
அர்ஜுன் ரெட்டி நாயகன் நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழிலில் அறிமுகமாகும் நோட்டா படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால், படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபடவிருப்பதாக தெரிவித்துள்ளார். #NOTA #VijayDevarakonda
ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் படம் ‘நோட்டா’.
‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் மூலம் அர்ஜுன் ரெட்டி நாயகன்விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்சாடாவும், முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் அரசியல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படத்தின் விளம்பர பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது. அதற்காக தனது பிரசாரத்தை இன்று முதல் துவங்க இருப்பதாக விஜய் தேவரகொண்டா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Two important announcements.
— Vijay Deverakonda (@TheDeverakonda) September 2, 2018
1) Happy birthday Kalyan Sir.
2) I start Campaigning tomorrow.
சாம்.சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்தை வருகிற அக்டோபர் 4-ல் ரிலீஸ் செய்ய படக்குழு யோசித்து வருகிறது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான கீதா கோவிந்தம் படம் ரூ.100 கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #NOTA #VijayDevarakonda #MehreenPirzada
பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் நோட்டா வாக்குகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. #RSpolls #NOTA #SC
புதுடெல்லி:
இந்திய தேர்தல் முறையில் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் ‘நோட்டா’ என்ற வாய்ப்பை கையாள அனுமதிக்கப்பட்டுள்ளது.
மாநில சட்டசபை உறுப்பினர்கள் வாக்களித்து பாராளுமன்ற மேல்சபையான மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதிலும் இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.

மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய வாக்களிக்கும்போது ‘நோட்டா’ முறையை பின்பற்றினால் குதிரை பேரத்துக்கும் ஊழலுக்கும் வசதியாகி விடும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, தங்களது பிரதிநிதிகளை பொதுமக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் தேர்தல்களில் பயன்படுத்த மட்டும்தான் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது.
‘நோட்டா முறையை அங்கீகரித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பின்னர் கடந்த 2014-ம் ஆண்டு மாநிலங்களவை தேர்தலில் முதன்முறையாக வாக்குச்சீட்டுகளில் நோட்டா முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு தங்களுக்கு வசதியாக இருந்ததால் இதுதொடர்பாக எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை’ என தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைதொடர்ந்து, இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் நோட்டா வாக்குகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. #RSpolls #NOTA #SC
இந்திய தேர்தல் முறையில் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் ‘நோட்டா’ என்ற வாய்ப்பை கையாள அனுமதிக்கப்பட்டுள்ளது.
மாநில சட்டசபை உறுப்பினர்கள் வாக்களித்து பாராளுமன்ற மேல்சபையான மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதிலும் இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இதை எதிர்த்து குஜராத் மாநில சட்டசபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் கொறடா ஷைலேஷ் மனுபாய் பார்மர் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய வாக்களிக்கும்போது ‘நோட்டா’ முறையை பின்பற்றினால் குதிரை பேரத்துக்கும் ஊழலுக்கும் வசதியாகி விடும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, தங்களது பிரதிநிதிகளை பொதுமக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் தேர்தல்களில் பயன்படுத்த மட்டும்தான் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது.
மாநிலங்களவை தேர்தலிலும் நோட்டாவை அனுமதித்தால் யாருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்பதை ஊக்குவிப்பதைப் போல் ஆகிவிடும் என சுட்டிக்காட்டியதுடன் இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டிருந்தது.
‘நோட்டா முறையை அங்கீகரித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பின்னர் கடந்த 2014-ம் ஆண்டு மாநிலங்களவை தேர்தலில் முதன்முறையாக வாக்குச்சீட்டுகளில் நோட்டா முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு தங்களுக்கு வசதியாக இருந்ததால் இதுதொடர்பாக எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை’ என தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைதொடர்ந்து, இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் நோட்டா வாக்குகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. #RSpolls #NOTA #SC
நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் கதாநாயகியாக நடித்த மெஹ்ரீன், தற்போது ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக ரெயிலில் செல்லும் போது அவதிப்பட்டிருக்கிறார். #Mehreen
நயன்தாரா, காஜல் அகர்வால், திரிஷா, ஹன்சிகா, சமந்தா என்று முன்னணி நடிகைகள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடிப்பதால் சென்னை, ஐதராபாத், மும்பை என்று படப்பிடிப்புகளுக்காக விமானத்திலேயே பறந்தபடி இருக்கிறார்கள்.
கேரளாவில் நடிகையை காரில் கடத்திய சம்பவத்துக்கு பிறகு கதாநாயகிகளுக்கான பாதுகாப்பில் அக்கறை எடுக்கும்படி நடிகர் சங்கம் தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் நடிகை மெஹ்ரீன் ரெயில் பயணத்தில் குடிபோதையில் இருந்த ஒருவரால் அவதிப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
மெஹ்ரீன் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது தமிழில் தயாராகும் நோட்டா படத்துக்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கிறார்.

நோட்டா படத்தில் நடிப்பதற்காக ஐதராபாத்தில் இருந்து மெஹ்ரீன் சென்னை புறப்பட்டார். ஆனால் அவருக்கு விமானம் கிடைக்கவில்லை. இதனால் ரெயிலில் பயணமானார். அப்போது அவரது இருக்கையை வேறு ஒருவர் ஆக்கிரமித்து உட்கார்ந்து இருந்தார். அவர் மது அருந்தி போதையில் இருந்ததால் மெஹ்ரீனுக்கு பயம் ஏற்பட்டது.
நீண்டநேரம் ரெயிலில் நின்று கொண்டே பயணித்தார். பின்னர் தனது இயக்குனருக்கு போன் செய்து நிலைமையை விளக்கினார். அந்த இயக்குனர் காருடன் ரசிகர்களையும் அனுப்பி வைத்தார். அந்த ரசிகர்கள் மெஹ்ரீனை காரில் ஏற்றி சென்னை வரை வந்து பத்திரமாக இறக்கி விட்டு சென்றனர்.