என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "novel"

    • ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவு மக்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.
    • இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவு மக்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து ஷங்கர் ராம் சரணின் கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் 3 ஆகிய திரைப்படங்களில் இயக்கி வருகிறார்.

    இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் " பல திரைப்படங்களில் சு.வெங்கடேசனின் "வீரயுக நாயகன் வேள்பாரி" நாவலின் முக்கிய காட்சிகள் திருடப்பட்டு அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதை கண்டு, அந்த நாவலின் உரிமத்தைப் பெற்றவனாக கலக்கமடைகிறேன். சமீபத்தில் வெளியான ஒரு டிரைலரில் நாவலின் முக்கியமான காட்சியைக் கண்டு மிகவும் வருத்தமடைந்தேன். திரைப்படங்கள். வெப் சீரிஸ் என எதிலும் நாவலின் காட்சிகளை பயன்படுத்துவதை தயவுசெய்து தவிர்கவும். படைப்பாளிகளின் உரிமைகளை மதியுங்கள் அல்லது சட்ட நடவடிக்கையை எதிர் கொள்ள நேரிடும்" என கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் வசுந்தரா நடிப்பில் தென்மேற்கு பருவகாற்று திரைப்படம் வெளியானது
    • அடுத்ததாக சுனில் இயக்கும் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    2010 ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் வசுந்தரா இருவரும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது தென்மேற்கு பருவக்காற்று. இப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வசுந்தரா வென்றார்.

    இதைத் தொடர்ந்து போராளி, துணிக துணிக,தலைக்கூத்தல், கண்ணை நம்பாதே போன்ற திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார், கடைசியாக சூர்யா நடித்த கங்குவா திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். அடுத்ததாக சுனில் இயக்கும் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    இந்த நிலையில் வசுந்தரா நடிகை அவதாரத்தில் இருந்து எழுத்தாளர் அவதாரம் எடுத்துள்ளார். தற்பொழுது தி அக்கியூஸ்ட் என்ற கிரைம் நாவலை எழுதியுள்ளார். அடுக்குமாடியில் நடந்த மர்மமான கொலையை பற்றி மையமாக வைத்து இந்த கிரைம் நாவல் எழுதப்பட்டுள்ளது.

    வசுந்தரா எழுதிய (The Accused) நாவலை வாங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    மலையாள எழுத்தாளர் ஹரீஷ் எழுதிய ‘மீஷா’ புத்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்துள்ளது. #Meesha
    புதுடெல்லி:

    மலையாள எழுத்தாளரான ஹரீஸ், மாத்ரூபூமி இதழில் ‘மீஷா’ என்ற தொடரை எழுதி வந்தார். சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக இந்த தொடர் நிறுத்தப்பட்டது. பின்னர், இந்த தொடர் புத்தகமாக வெளிவந்தது. இந்த புத்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என டெல்லியை சேர்ந்த ராதா கிருஷ்ணன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    புத்தகத்தில் கோயில் பூசாரிகள் மற்றும் இந்துப் பெண்களின் நிலை குறித்து மோசமாக சித்தகரித்து இருப்பதால் இந்த புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்த காலத்தில் இது போன்ற விசயங்களை பெரியதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் எழுத்தாளர்களின் கற்பனைத் திறனுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது அதே போல் இலக்கியப் படைப்புகளை தடை செய்யவும் இயலாது என்று கூறி உத்தரவிட்டனர்.

    இதுவரை ராசவித்யாயுடே சரித்ரம், ஆதாம், அப்பன் என்ற மூன்று புத்தகங்களை வெளியிட்டுள்ள ஹரீஸ், ஆதாம் புத்தகத்துக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×