என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pa Ranjith"

    • 'சந்தோஷ்' படம் இங்கிலாந்து சார்பாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்ட்டது.
    • 'சந்தோஷ்' படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை வாரியம் (CBFC) தடை விதித்துள்ளது.

    பிரிட்டிஷ்-இந்திய திரைப்பட இயக்குநர் சந்தியா சூரி இயக்கிய திரைப்படம் 'சந்தோஷ்' . கடந்த ஆண்டு இந்த படம் வெளிநாடுகளில் வெளியானது.

    வட இந்தியாவில் நடக்கும் கதையான இந்தப் படம், கணவன் இறந்த பிறகு அவருக்குப் பதிலாக காவல் பணியில் சேரும் ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது. பின்னர் அந்தப் பெண் போலீசிடம் ஒரு தலித் பெண்ணின் கொலை வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. வட இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை ஆகியவற்றை பற்றி இப்படம் பேசுகிறது.

    இங்கிலாந்து சார்பாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்ட்ட 'சந்தோஷ்' படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை வாரியம் (CBFC) தடை விதித்துள்ளது.

    இந்நிலையில், இந்தியாவில் வெளியிட முடியாமல் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் சந்தோஷ் திரைப்படத்தை அனுமதியின்றி வெளியிடுவோம் என்று இயக்குநர் பா. ரஞ்சித் பேசியுள்ளார்.

    இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா. ரஞ்சித், "சந்தோஷ் திரைப்படத்தை வெளியிடுவதற்காக ஜெயிலுக்கு போகவும் தயார்" என்று தெரிவித்தார். 

    • இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கிய தங்கலான் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது.
    • நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பா. ரஞ்சித். இவர் திரைப்படங்களை இயக்குவது மட்டுமின்றி அவற்றை தயாரிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். இதற்காக பா. ரஞ்சித் நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

    நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இதுவரை ஜே பேபி, புளூ ஸ்டார், பாட்டில் ராதா, பொம்மை நாயகி என பல திரைப்படங்களை பா. ரஞ்சித் தயாரித்துள்ளார். இந்த நிலையில், நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

     


    அதன்படி 25 முதல் 50 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் 5 முதல் 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் புதிய படத்தில் நடிக்க விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்போர் மாநிறமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நடிப்பதற்கான தேர்வில் கலந்து கொள்ள விரும்புவோர் விண்ணப்பத்துடன் புகைப்படங்கள் மற்றும் 1 நிமிட சுய விளக்க வீடியோவை அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் 'தங்கலான்'.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    'பொன்னியின் செல்வன்' படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, நடிகர் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கும் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.


    தங்கலான்

    இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது.


    விக்ரம்

    இந்நிலையில், நடிகர் விக்ரம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'பெரிய தாடியுடன் பெரிய பொறுப்பும் வருகிறது. தங்கலான்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இதனுடன் சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் அதிகம் லைக் செய்து வருகின்றனர்.



    • இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் ‘தங்கலான்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    'பொன்னியின் செல்வன்' படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, நடிகர் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கும் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.


    தங்கலான்

    இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு ஒகேனக்கலில் நடைபெற்றுள்ளது.


    தங்கலான்

    இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழுவினருடன் நடிகர் விக்ரம் ஒகேனக்கல் ஆற்றில் குளித்து விளையாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து "இன்று ஒகேனக்கல் அருகில் தங்கலான் படப்பிடிப்பு. கடினமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தண்ணீர் வா வா என்று அழைத்தது.'பேக் அப்' என்று கேட்டதும் ஒரே குதி.. தண்ணீரில். என் நண்பர்களை விடுவேனா என்ன? அய்யோ வேண்டாம் என்று பதறிய சிலர் கடைசியல் தண்ணீரை விட்டு வர மறுத்ததுதான் மிச்சம்" என்று பதிவிட்டுள்ளார்.



    • பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படம் ‘தங்கலான்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கும் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார்.


    தங்கலான்

    இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழுவினருடன் நடிகர் விக்ரம் ஒகேனக்கல் ஆற்றில் குளித்து விளையாடும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.


    விக்ரம் - பா.இரஞ்சித்

    இந்நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. விக்ரமும் பா.இரஞ்சித்தும் இடம்பெறும் இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    • பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படம் 'தங்கலான்'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    தங்கலான்

    தங்கலான்

    சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழுவினருடன் நடிகர் விக்ரம் ஒகேனக்கல் ஆற்றில் குளித்து விளையாடும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

     

    விக்ரம்

    விக்ரம்

    இந்நிலையில் நடிகர் விக்ரம் கேஜிஎஃபில் வாழும் தமிழர்களை சந்தித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


    • இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் தற்போது விக்ரம் நடிப்பில் 'தங்கலான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவர் நீலம் பண்பாட்டு மையம் என்ற அமைப்பின் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக 'மார்கழியின் மக்களிசை' எனும் இசை விழாவை நடத்தி வருகிறார்.


    யுவன் ஷங்கர் ராஜா - பா.இரஞ்சித்

    இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா விரைவில் பா.இரஞ்சித்துடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து விரைவில் பா.இரஞ்சித் - யுவன் கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    யுவன் ஷங்கர் ராஜா தற்போது 'ஏழு கடல் ஏழு மலை', 'கஸ்டடி' உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் பா.இரஞ்சித் தற்போது 'தங்கலான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இவர் நடத்தும் 'மார்கழியின் மக்களிசை' நிகழ்ச்சியில் யுவன் ஷங்கர் ராஜா கலந்து கொண்டார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் தற்போது விக்ரம் நடிப்பில் 'தங்கலான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவர் நீலம் பண்பாட்டு மையம் என்ற அமைப்பின் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக 'மார்கழியின் மக்களிசை' எனும் இசை விழாவை நடத்தி வருகிறார்.


    யுவன் ஷங்கர் ராஜா - பா.இரஞ்சித்

    இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கலந்து கொண்டார். இதில், பேசிய இயக்குனர் பா.இரஞ்சித் கூறியதாவது, "இளைய ராஜா எனக்கு உணர்வு. நமக்கு உடம்பில் கிள்ளினால் வலிப்பது போன்று தான் இளையராஜா எனக்கு. அவது பாடல்களை கேட்கும் பொழுது மிகவும் எமோஷனலாக இருக்கும்.


    யுவன் ஷங்கர் ராஜா - பா.இரஞ்சித்

    அது போன்று தான் நான் யுவன் ஷங்கர் ராஜாவை பார்க்கிறேன். இவரது இசை பல நேரங்களில் என்னை ஊக்குவித்துள்ளது. என்னோட வலியை இசையோடு கலந்து அதிலிருந்து வெளியே வந்திருக்கிறேன். இந்த மேடையில் யுவன் ஷங்கர் ராஜா வந்து நிற்பது மிகவும் பெருமையாக இருக்கிறது" என்று கூறினார்.

    • வேங்கை வயல் பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • டீக்கடையில் இரட்டைக்குவளை முறை பயன்பாட்டில் இருந்தை பார்த்து அந்த கிராமத்தில் தீண்டாமை வன்கொடுமை இருப்பதை கலெக்டர் உறுதி செய்தார்.

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் இறையூர் கிராமத்தில் உள்ள வேங்கை வயல் பகுதியில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு கடந்த 27-ந்தேதி அந்த கிராமத்தில் ஆய்வு செய்தார். அப்போது பட்டியலினத்தை சேர்ந்த மக்களை அங்குள்ள அய்யனார் கோவிலில் வழிபட அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. பின்னர் அவர்களை கலெக்டர் கவிதா ராமு கோவிலுக்கு அழைத்து சென்று சாமி தரிசனம் செய்ய வைத்தார்.

    அப்போது அதனை விமர்சித்து சாமியாடியவாறு சிங்கம்மாள் என்ற பெண் அவதூறாக பேசினார். இதே போல் அங்குள்ள டீக்கடையில் இரட்டைக்குவளை முறை பயன்பாட்டில் இருந்தை பார்த்து அந்த கிராமத்தில் தீண்டாமை வன்கொடுமை இருப்பதை கலெக்டர் உறுதி செய்தார்.

    இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இறையூர் கிராமத்தைச் சேர்ந்த சிங்கம்மாள் மற்றும் டீக்கடை உரிமையாளர் மூக்கையா ஆகியோர் சாதிய பாகுபாடு காட்டியதாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரினர். அதனை நீதிபதி சத்தியா தள்ளுபடி செய்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது போன்ற சாதிய கொடுமைகளில் ஈடுபடுபவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இயக்குனர் பா.இரஞ்சித் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "வன்கொடுமைகள் எதிர்க்கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனத்தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள்!

    தொடரூம் சமூக அநீதி! புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரணை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனங்கள்!! "என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 



    • பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படம் ‘தங்கலான்’.
    • இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


    தங்கலான்

    சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், நடிகர் விக்ரம் கேஜிஎஃபில் வாழும் தமிழர்களை சந்தித்த புகைப்படமும் வைரலானது. இந்நிலையில், நடிகர் விக்ரம் 'தங்கலான்' கெட்டப்பில் புதிய புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. 


    • பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’.
    • இப்படத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்திருந்தார்.

    பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'. கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நடித்த பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.


    சார்பட்டா பரம்பரை

    1960- களில் வடசென்னையில் உள்ள இடியாப்ப பரம்பரை மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய இரண்டு குழுக்களுக்கும் இடையிலான மோதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் அந்த பகுதியில் உள்ள குத்துச்சண்டை கலாச்சாரத்தையும் அதில் உள்ள அரசியலையும் காட்டியிருந்தனர்.


    சார்பட்டா பரம்பரை

    மேலும், சார்பட்டா பரம்பரை பட காட்சிகளை வைத்து பல மீம்களும் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'சார்பட்டா பரம்பரை' இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. பா.இரஞ்சித் இயக்கும் இப்படத்தை நாட்ஸ் ஸ்டுடியோஸ், நீலம் புரொடக்ஷன்ஸ், தி ஷோ பீபுள் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.


    சார்பட்டா பரம்பரை -2 போஸ்டர்

    இதனை நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளத்தில் 'Match பாக்க ready-யா? ரோஷமான ஆங்கில குத்துச்சண்ட Round 2' என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.


    • இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


    பா.இரஞ்சித்

    சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், நடிகர் விக்ரம் கேஜிஎஃபில் வாழும் தமிழர்களை சந்தித்த புகைப்படமும் வைரலானது. சில தினங்களுக்கு முன்பு நடிகர் விக்ரம் 'தங்கலான்' கெட்டப்பில் இருக்கும் புதிய புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.


    பா.இரஞ்சித்

    இதையடுத்து 'தங்கலான்' படத்தில் ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் இணைந்துள்ளதாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்தது. இந்நிலையில் நடிகர் விக்ரம் 'தங்கலான்' என குறிப்பிட்டு பா.இரஞ்சித் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் லைக் செய்து வருகின்றனர்.


    ×