என் மலர்
நீங்கள் தேடியது "Pakistan Man"
- பாகிஸ்தானை சேர்ந்த ஜாக்சி கோலி என்ற வாலிபர் கடந்த 25-ந்தேதி எல்லை தாண்டியதாக பார்மரில் பிடிபட்டார்.
- தப்பிக்க முயன்ற போது எல்லை தாண்டியதாகவும் கூறியுள்ளார்.
காதலியின் குடும்பத்தாரிடம் இருந்து தப்பிக்க ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் எல்லை தாண்டிய பாகிஸ்தானை சேர்ந்த 20 வயது வாலிபர் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த ஜாக்சி கோலி என்ற வாலிபர் கடந்த 25-ந்தேதி எல்லை தாண்டியதாக பார்மரில் பிடிபட்டார். இதைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை அன்று உள்ளூர் போலீசாரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டார்.
அப்போது நடத்தப்பட்ட விசாரணையில், ஜாக்சி கோலி தனது காதலியை ரகசியமாக சந்திக்க சென்றுள்ளார். அப்போது, காதலியின் குடும்பத்தாரிடம் சிக்கியுள்ளார். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது எல்லை தாண்டியதாகவும் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர் கூறியது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், புலனாய்வு அமைப்புகளின் கூட்டு விசாரணை தொடரும் என்றும் அதிகாரி ஒருவர் கூறினார்.