என் மலர்
நீங்கள் தேடியது "Paneer Recipes"
- பிள்ளைகளுக்கு மதிய உணவிற்கு இதை செய்து கொடுக்கலாம்.
- 20 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து முடிக்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - 2 கப்
பன்னீர் - 200 கிராம்
புதினா - 1 கட்டு
கிராம்பு - 4
பட்டை - 1 இன்ச்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 4 கப்
செய்முறை :
பன்னீரை துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
புதினாவை நன்றாக கழுவி, மிக்ஸியில் போட்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அரிசியை நன்கு கழுவி உதிரியாக வடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை 3 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதே வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வரும் வரை வதக்குங்கள்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும், அரைத்து வைத்திருக்கின்ற புதினா மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள்.
புதினா பச்சை வாசனை போனவுடன் இறுதியில் வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகள் மற்றும் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் பிரட்டி, இறக்கி விட வேண்டும்.
தற்போது சுவை நிறைந்த புதினா பன்னீர் புலாவ் ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- பனீரில் கேசின் என்ற புரதம் மிக அதிகம்.
- பனீரில் கால்சியம் சத்தும் அதிகம்
பசும்பால் அல்லது எருமைப் பாலைக் காய்ச்சி, அதில் எலுமிச்சைப்பழச் சாறோ, வினிகரோ சேர்த்துத் திரியவைத்து பனீர் தயாரிக்கிறார்கள். இது சரியான முறைதான். இதில் எந்த பிரச்சனையும் இல்லை.

பாலைத் திரித்து பனீராக மாறியதும் அதை எவ்வளவு நேரத்துக்கு அழுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அது மிக மென்மையாகவோ, மிதமான மென்மைத்தன்மையுடனோ அல்லது கடினமாகவோ வரும்.
பனீர் புதரச்சத்தும் கால்சியம் சத்தும் நிறைந்தது. தவிர அது எந்த மாதிரியான பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அதன் கொழுப்பு அளவும் வேறுபடும்.
சைவ உணவுக்காரர்களுக்கு பாலில் இருந்து பெறப்படும் பனீரின் மூலம் போதுமான புரதச்சத்து கிடைக்கும்.
பனீரில் கேசின் என்ற புரதம் மிக அதிகம். 100 கிராம் பனீரில் 12.4 கிராம் கார்போஹைட்ரேட் சத்து இருக்கும். பனீரில் கால்சியம் சத்தும் அதிகம் என்பதால் அதன் மூலம் பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. பனீரில் பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் வைட்டமின் சத்துகளும் இருக்கின்றன.

எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போருக்கும் பனீர் மிகச் சிறந்த உணவு. பனீரை கிரேவி, புலாவ், டிக்கா, புர்ஜி என விதம் விதமாகச் சமைக்க முடியும் என்பதால் குழந்தைகளுக்குப் பிடித்த வகையில் செய்து தந்து அவர்களது ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்துக்கும் பனீர் நல்லது. இத்தனை நல்ல குணங்களைக் கொண்டிருந்தாலும் பால் அலர்ஜி உள்ளவர்கள் மட்டும் பனீரை தவிர்ப்பது நல்லது.
- இதற்கு தொட்டுகொள்ள எதுவும் தேவையில்லை.
- குழந்தைகளுக்கு இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருள்கள்
சுத்திகரிக்கப்பட்ட மாவு - 3 கப்
சர்க்கரை - 1 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - 5 ஸ்பூன்
பால் - 1 கப்
உப்பு
ஸ்டப்பிங்கிற்கு
பன்னீர் - 200 கிராம்
பச்சை மிளகாய் - 4
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தலை - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
சாட் மசாலா - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1
செய்முறை
பன்னீரை துருவிக்கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து தனியே வைக்கவும்.
இப்போது ஒரு பால் ஜாடியில் பால், வெண்ணெய், சர்க்கரை, மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
தனியே எடுத்து வைத்துள்ள மாவு கலவையில், இந்த பால் கலவையை ஊற்றி நன்கு பிசையவும். மாவு மிகவும் மென்மையாக வரும் வரை பிசையவும். பிறகு, பிசைந்தது வைத்த மாவை மென்மையான மெல்லிய ஈர துணி கொண்டு 40 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
ஒரு பெரிய கிண்ணத்தில் பிசைந்து வைத்த பன்னீர், வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலா தூள், மிளகாய்த்தூள், மற்றும் சாட் மசாலாவை சேர்த்து நன்கு கலக்கி அதை தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்பொழுது பன்னீர் குல்ச்சாவிற்கு தேவையான ஸ்டப்பிங் தயாராக உள்ளது.
ஒரு உருண்டை மாவை எடுத்து சற்று தடியாக தேய்க்க வேண்டும். இப்போது செய்து வைத்துள்ள ஸ்டப்பிங் பொருள்களை வட்டத்தின் நடுவில் வைத்து மாவை மூட வேண்டும்.
பிறகு, ஸ்டப்பிங் செய்துள்ள மாவை தேய்த்து வட்ட வட்டமாக மாற்றவும். இதில் மிக கவனமாக செயல்பட வேண்டும். ஏனெனில் ஸ்டப்பிங் செய்துள்ள பொருள்கள் வெளியே பிதுங்கி வராமல் கவனமாக தேய்க்க வேண்டும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து செய்து வைத்த குல்ச்சாவை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறம் வேக வைத்து எடுக்கவும்.
அடுப்பில் இருந்து குல்ச்சாவை எடுத்த பின்னர் அதன் மீது சிறிய வெண்ணெய் தடவ வேண்டும்.
இப்பொழுது சுவையான பன்னீர் குல்ச்சா தயார்.
- நீரிழிவு உள்ளவர்களும்கூட பன்னீரை தைரியமாக சாப்பிடலாம்.
- புரதம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் பன்னீரில் அதிகம்.
தேவையான பொருட்கள்:
பன்னீா் - 500 கிராம்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 7
கறிவேப்பிலை - 2 கொத்து
பூண்டு, பூண்டு விழுது - 1 ½மேஜைக்கரண்டி
சோம்பு தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1½ மேஜைக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - 3
பொரிக்க தேவையான பொருட்கள்:
சோள மாவு - 4 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பிரெட் தூள் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பன்னீரை துருவிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்..
வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் சோம்பு, கரம் மசாலா மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
பின்னர் துருவிய பன்னீரை சேர்த்து நன்கு கிளறவும்.
மீண்டும் 5 நிமிடம் வேக வைக்கவும். பின்பு தீயை அணைத்து அதனை ஆற வைக்கவும்.
பின்பு பன்னீர் கலவையை மசித்த உருளைகிழங்குடன் சேர்த்து நன்கு பிசையவும்.
பின்பு அதனை சிறு சிறு பகுதிகளாக பிரித்து உருண்டைகளாக உருட்டி, தட்டையாக செய்து கொள்ளவும்.
பின்பு சோள மாவுடன் நீர் சேர்த்து கலவை தயாரித்து கொள்ளவும்.
கட்லெட்டுகளை சோளமாவுக் கலவையில் முக்கி பின் பிரெட் தூளில் நன்றாக பிரட்டி எடுத்து வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
இப்போது சுவையான பன்னீர் கட்லெட் தயார்.
- பஜ்ஜி என்றாலே அனைவரது நாவில் இருந்தும் நீர் ஊறும்.
- பன்னீர் பஜ்ஜி குழந்தைக்கு ஒரு சிறந்த ஸ்நாக்ஸாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 200 கிராம்
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
பன்னீரை வேண்டிய வடிவில் வெட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய பன்னீர் துண்டுகளை கடலை மாவு கலவையில் நனைத்து, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான பன்னீர் பஜ்ஜி ரெடி!!!
- இன்று பன்னீரைக் கொண்டு அட்டகாசமான போண்டா செய்யலாம்.
- இது அற்புதமான ஸ்நாக்ஸ் மட்டுமின்றி, எளிதில் செய்யக்கூடிய ரெசிபி.
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 300 கிராம்
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
புதினா - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
பேக்கிங் சோடா/சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* ஒரு பௌலில் கடலை மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதனுடன் மிளகாய் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா, சீரகப் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தேவையான அளவு நீரை ஊற்றி போண்டா பதத்திற்கு ஓரளவு கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் பன்னீர் துண்டுகள், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள போண்டா மாவை சிறிது சிறிதாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பன்னீர் போண்டா தயார்.
* அதை காரச்சட்னியுடன் சூடாக பரிமாறவும்.
பன்னீர் - 250 கிராம்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - தலா 1 டீஸ்பூன்
கிரீம் - 1/4 கப்
வெண்ணெய் - 1/2 கப்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
லவங்கம் - 1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் வறுத்துப் பொடித்தது - 1/2 டீஸ்பூன்
பொடித்த பட்டை - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 3

செய்முறை :
வெங்காயத்தையும், தக்காளியையும் தனித்தனியாக அரைத்து கொள்ளவும்.
பன்னீரை துண்டுகளாக வெட்டி, கொதிக்கும் நீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து
கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு சூடானதும் அதில் சீரகம், பட்டை, லவங்கம் போட்டு தாளித்த பின்னர் அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பச்சை வாசனை போன பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அடுத்து அதில் தனியாத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சர்க்கரை, உப்பு சேர்த்து வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும், முந்திரி விழுதையும் சேர்த்து கிரேவியாக வரும்போது பன்னீரை கிரேவியில் சேர்த்து ஒரே கொதி வந்ததும் இறக்கி கிரீம் சேர்த்து பரிமாறவும்..
பன்னீர் - கால் கிலோ
பச்சை மிளகாய் - 2
தக்காளி - கால் கிலோ
வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
தக்காளி கெட்சப் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தக்காளியை போட்டு வேக வைத்து எடுத்து அதன் தோலை நீக்கி மசித்து விடவும்.
பன்னீரை சிறிய துண்டுகளாக நறுக்கி வாணலியில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவேண்டும்.
வாணலியில் வெண்ணெய் போட்டு உருகியதும் மசித்த தக்காளி விழுதினை ஊற்றி நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி கெட்சப், உப்பு, சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறவும்.
அதில் பொரித்து வைத்திருக்கும் பன்னீரை போட்டு ஒரு முறை பிரட்டி இறக்கவும்.
சுவையான தக்காளி பன்னீர் ரெடி.
பாசுமதி அரிசி - 2 கப்
பன்னீர் - 200 கிராம்
புதினா - 1 கட்டு
கிராம்பு - 4
பட்டை - 1 இன்ச்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
பன்னீரை துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
புதினாவை நன்றாக கழுவி, மிக்ஸியில் போட்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அரிசியை நன்கு கழுவி உதிரியாக வடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை 3 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதே வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வரும் வரை வதக்குங்கள்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும், அரைத்து வைத்திருக்கின்ற புதினா மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள்.
புதினா பச்சை வாசனை போனவுடன் இறுதியில் வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகள் மற்றும் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் பிரட்டி, இறக்கி விட வேண்டும்.
பனீர் துண்டுகள் - 250 கிராம்
தயிர் - 1/4 கப்
துருவிய இஞ்சி - 1 மேசைக்கரண்டி
தனியா தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கிரேவிக்கு :
தக்காளி - 3
பச்சைமிளகாய் - 4
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
தனியா தூள் 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
தயிர் - 3 மேசைக்கரண்டி
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி

செய்முறை :
பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தக்காளியையும் பச்சைமிளகாயையும் மிக்சியில் நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு பாத்திரத்திரத்தில் பன்னீர் துண்டுகள், தயிர், துருவிய இஞ்சி, தனியா தூள், மிளகாய் தூள் சிறிது உப்பு போட்டு நன்றாக கலந்து ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த பன்னீர் மசாலா துண்டுகளை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த விழுதினை சேர்த்து கிளறவேண்டும்.
அடுத்து அதனுடன் மஞ்சள்தூள், தனியா தூள், கரம்மசாலா, பெருங்காயத்தூள், சீரகம், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும்.
கடைசியில் தயிரையும் சர்க்கரையும் சேர்த்து இறக்கவேண்டும்.
இறக்கிய பின் வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்க்க கலந்து பரிமாறவும்.
பன்னீர் - 250 கிராம்,
வெங்காயம் - 2,
மிளகாய் வற்றல் - 2
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சை சாறு - 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்,
கடுகு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
எள் - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
அரைக்க:
வேர்க்கடலை, தேங்காய்த் துருவல் - தலா 4 டேபிள்ஸ்பூன்,
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
தனியா, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்,
பட்டை - சிறிய துண்டு,

செய்முறை:
அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர்… நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது, அரைத்த மசாலா, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும்.
சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
இப்போது பன்னீரை சேர்த்து மிதமான தீயில் சமைக்கவும்.
பச்சை வாசனை போனதும், நெயில் எள் தாளித்து சேர்த்து, இறக்கிப் பரிமாறவும்.
பன்னீர் - 200 கிராம்
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கறிவேப்பில்லை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1/4 - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
கரம்மசாலா தூள் - கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1

செய்முறை :
பன்னீரை துருவிக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு பொரிந்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு தக்காளி சேர்த்து குலையும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம்மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின் கடைசியாக துருவிய பன்னீர் சேர்த்து கிளறவும்.
இப்போது பன்னீர் பூரணம் தயார்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து மாவை தோசைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறம் வேக விடவும்.
தோசை வெந்த பிறகு பன்னீர் பூரணத்தை தோசைக்கு நடுவில் வைத்து இரண்டாக மடக்கி எடுத்து பரிமாறவும்.