என் மலர்
நீங்கள் தேடியது "Paris Para Olympics"
- தமிழகத்தில் இருந்து 6 பேர் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்கள்.
- இந்திய அணி 12 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.
புதுடெல்லி:
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சமீபத்தில் முடிவடைந்தது. இதல் 117 பேர் கொணட இந்திய அணி 16 விளையாட்டுகளில் பங்கேற்றது. இந்தியாவுக்கு 1 வெள்ளி, 5 வெண்கலம் ஆக மொத்தம் 6 பதக்கம் கிடைத்தது.
ஒலிம்பிக் முடிவடைந்ததை தொடர்ந்து பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுகிறது. வருகிற 28-ந்தேதி முதல் செப்டம்பர் 8-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. 22 விளையாட்டுகளில் 549 பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது.
பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 84 பேர் கொண்ட இந்திய அணி இந்த போட்டிக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளது. 52 வீரர்கள், 32 வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்திய அணி வில் வித்தை, தடகளம், பேட்மின்டன், சைக்கிளிங், ஜூடோ, வலு தூக்குதல், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ உள்பட 12 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.
தமிழகத்தில் இருந்து 6 பேர் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்கள். அதன் விவரம்:-
டி.மாரியப்பன் (உயரம் தாண்டுதல்), துளசிமதி, முருகேசன், மனிஷா ராமதாஸ், நித்யா ஸ்ரீசிவன், சிவராஜன் சோலைமலை (நால்வரும் பேட்மின்டன்), கஸ்தூரி ராஜாமணி (வலு தூக்குதல்)

29 வயதான தங்கவேலு மாரியப்பன் பாரா ஒலிம் பிக்கில் 2 பதக்கம் பெற்றுள்ளார். 2016 ரியோவில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் தங்கமும், 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடை பெற்ற பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார். தொடர்ந்து 37-வது முறையாக பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் பதக்கம் பெறுவாரா? என்ற எதிர்பாரப்பு அதிகமாக உள்ளது.
இந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் மாரியப்பன் தங்கம் வென்று இருந்தார். மற்ற தமிழக வீரர், வீராங்கனைகள் முதல் முறையாக பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்கள். இதில் துளசிமதி, மனிஷா, நித்யா ஆகியோர் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்று இருக்கிறார்கள்.
கடந்த 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் 54 பேர் கொண்ட இந்திய அணி 9 விளையாட்டுகளில் பங்கேற்றது. இதில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் ஆகி மொத்தம் 19 பதக்கம் கிடைத்தது.
தற்போது அதைவிட கூடுதலாக பாரீஸ் பாரா ஒலிம்பிக்கில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை பங்கேற்றவர்களில் 19 பேர் இந்த தடவை இடம் பெற்றுள்ளனர்.
- பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா 29 பதக்கங்கள் வென்றது.
- டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 22 பதக்கங்கள் வென்ற நிலையில் பாரிஸில் ஏழு பதக்கங்கள் அதிகம்.
பாரிஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 6 பதக்கங்கள் மட்டுமே வென்றது. டோக்கியோவில் ஒரு தங்கத்துடன் 7 பதக்கம் வென்ற நிலையில், பாரிஸில் ஒரு வெள்ளியுடன் 6 பதக்கமாக குறைந்தது.
அதேவேளையில் பாரா ஒலிம்பிக்கில் டோக்கியோவில் பெற்ற பதக்கங்களை விட ஏழு பதக்கங்கள் அதிகமாக பெற்று 29 பதக்கங்கள் வென்றது. அத்துடன் புள்ளிகள் பட்டியலில் 18-வது இடத்தை பிடித்தது.
அவானி லெகானா, மோனா அகர்வால் ஆகியோர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் முறையே தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்றனர். லெகானா அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் முதல் நாள் தங்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
மணிஷ் நர்வால் ஆண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டர் (எஸ்.ஹெச்.1) பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பெண்களுக்கான 100மீ T35 பிரிவில் பிரீத்தி பால் வெண்கல பதக்கம் வென்றார். பின்னர் 200 மீட்டர் போட்டியிலும் வெண்கபல பதக்கம் வென்றார்.
5-வது நாளில் மட்டும் 8 பதக்கம் வென்றது இந்தியா. இந்த 8-ல் ஐந்து பதக்கங்கள் பேட்மிண்டனில் வந்தது. நிதிஷ் குமார் தங்கம் வென்றார். சுஹாஸ் யதிராஜ், துலசி முருகேசன் வெள்ளி வென்றனர்.
ஈட்டி எறிதலில் சுமித் அன்டில் தங்கப்பதக்கம் வென்றார். ஹர்விந்தர் சிங் வில்வித்தை போட்டியில் தங்கம் வென்று, சாதனைப் படைத்தார். வில்வித்தையில் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆண்களுக்கான கிளப் த்ரோ F51 பிரிவில் தரம்பிர் நைன் மற்றும் பிரனவ் சூர்மா முறை தங்கம், வெள்ளி வென்றனர்.
ஜூடோவில் ஆண்களுக்கான 60 கிலோ J1 பிரிவில் கபில் பர்மார் வெண்கல பதக்கம் வென்றார். ஜூடோவில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.
தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். ஈட்டி எறிதல் போட்டியில் நவ்தீப் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். பின்னர் ஈரான் வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட வெள்ளி தங்க பதக்கம் ஆனது. இதனால் இந்தியா 29 பதக்கங்கள் வென்றது.