search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paris Paralympics"

    • தங்கம் வென்றவர்களுக்கு ரூ.75 லட்சம் வழங்கப்பட்டது.
    • வெள்ளி வென்றவர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது.

    புதுடெல்லி:

    மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என்று மொத்தம் 29 பதக்கங்களுடன் 18-வது இடத்தை பிடித்து வரலாறு படைத்தது. பாராஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கை இது தான்.

    ஒலிம்பிக்கை முடித்துக் கொண்டு நேற்று தாயகம் திரும்பிய எஞ்சிய இந்திய அணியினருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலையை மத்திய விளையாட்டுத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா வழங்கினார்.

    தங்கம் வென்றவர்களுக்கு ரூ.75 லட்சம், வெள்ளி வென்றவர்களுக்கு ரூ.50 லட்சம், வெண்கலம் பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் வீதம் வழங்கி பாராட்டினார்.

    அவர்கள் மத்தியில் மந்திரி மன்சுக் மாண்டவியா பேசுகையில், 'பாராஒலிம்பிக்கிலும், பாரா விளையாட்டிலும் இந்தியா வளர்ந்து வருகிறது. 2016-ம் ஆண்டு பாராஒலிம்பிக்கில் 4 பதக்கம் கைப்பற்றிய இந்தியா 2021-ம் ஆண்டில் 19 பதக்கமும், இப்போது 29 பதக்கமும் வென்று இருக்கிறது. எங்களது பாரா வீரர், வீராங்கனைகளுக்கு எல்லா விதமான வசதி வாய்ப்புகளும் நாங்கள் தொடர்ந்து செய்து கொடுப்போம். 2028-ம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸ் பாரா ஒலிம்பிக்கில் நிச்சயம் இதை விட அதிக பதக்கங்கள் வெல்ல முடியும்.

    நீங்கள் தேசத்துக்காக வெற்றியை கொண்டு வந்துள்ளீர்கள். சவாலான உங்களது வாழ்க்கையில் சவால்களை வெற்றிகரமாக கடந்திருப்பதை நிரூபித்து காட்டியிருக்கிறீர்கள். விளையாடுவதை நீங்கள் இப்போது நிறுத்தி விடக்கூடாது. நாம் 2028-ம்ஆண்டு பாராஒலிம்பிக் மற்றும் அதன் பிறகு நடக்கும் 2032-ம்ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பணியை இப்போதே தொடங்க வேண்டும். அப்போது தான் நிறைய பதக்கங்களை வெல்ல முடியும். 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாராஒலிம்பிக்கை நடத்தும் வாய்ப்பு கிட்டும் போது, நமது மிகச்சிறந்த செயல்பாடு வெளிப்பட வேண்டும் என்பதே இலக்கு' என்றார்.

    • பாிஸ் ஒலிம்பிக் 2024-ல் பங்கேற்ற ஆறு பேரில், 4 பேர் பதக்கங்களுடன் திரும்பியுள்ளனர்.
    • அனைவரையும் வாழ்த்துவதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது.

    பாரிஸ் பாராலிம்பிக்ஸ்-ல் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு வௌயிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    2024ம் ஆண்டு பாரிஸில் நடந்த பாராலிம்பிக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பதக்கங்களைப் பெற்றுத் தமிழகம் திரும்பிய நமது சாம்பியன்களான துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ் மற்றும் நித்யா ஸ்ரீ சிவன் ஆகியோரை வாழ்த்தினோம்.

    பாிஸ் ஒலிம்பிக் 2024-ல் பங்கேற்ற ஆறு பேரில், 4 பேர் பதக்கங்களுடன் திரும்பியுள்ளதால், இது உண்மையிலேயே தமிழகத்திற்கு பெருமையான தருணம்.

    நம் துணை விளையாட்டு வீரர்கள் தங்கள் பயணத்தில் நம் அரசாங்கத்தின் அசைக்க முடியாத ஆதரவை ஒப்புக்கொண்டனர். முன்னோடியாக விளங்கும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் பயனாளிகளில் பெரும்பாலானோர் பாரா-தடகள வீரர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைவரையும் வாழ்த்துவதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியா இந்த முறை 12 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.
    • 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 54 வீரர்கள் சென்று 19 பதக்கங்களை இந்தியா வென்றது.

    பாரீஸ்:

    பாரீஸ் பரா ஒலிம்பிக் போட்டிகள் நாளை மறுநாள் தொடங்க உள்ளன. ஆகஸ்ட் 28 முதல் பிரான்ஸ் தலைநகரில் பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த முறை இந்தியா தரப்பில் 84 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இது இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு சாதனை என்றே சொல்லலாம். 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 54 வீரர்கள் சென்று 19 பதக்கங்களை இந்தியா வென்றது.

    இந்தியா இந்த முறை 12 விளையாட்டுகளில் பங்கேற்கிறது. குறிப்பாக தடகளத்தில் மட்டும் இந்தியாவின் 38 போட்டியாளர்கள் இருப்பார்கள். வில்வித்தை, பேட்மிண்டன், சைக்கிள் ஓட்டுதல், ஜூடோ, பாரா கயாக்கிங், பவர்லிஃப்டிங், ரோயிங், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், டெக்வாண்டோ போன்ற விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் களமிறங்குகின்றனர்.

    கடந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற சுமித் அந்தில், மாரியப்பன் தங்கவேலு, சுஹான் எல்.ஒய், கிருஷ்ணா நாகர், அவனி லேகாரா, மணீஷ் நர்வால், பவீனா படேல், நிஷாத் குமார் உள்ளிட்டோர் இந்த முறையும் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் மீண்டும் பதக்கம் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இளம் பாரா வில்வித்தை வீரரான சீதல் தேவி, இரண்டு கைகளும் இல்லாத போதிலும் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். இவர் இந்தியாவின் மிகப்பெரிய பதக்க நம்பிக்கையாக கருதப்படுகிறார்.

    பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இந்தியா மொத்தம் 9 தங்கம், 12 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 31 பதக்கங்களை வென்றுள்ளது. இந்த முறை குறைந்தது 25 பதக்கங்களை வென்று அரை சதத்தை எட்டும் ஆர்வத்தில் உள்ளது.

    முதல் முறையாக இந்தியா பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 12 விளையாட்டுகளில் தனது வீரர்களை களமிறக்குகிறது. 38 பேர் தடகளத்தில் பல்வேறு பிரிவுகளில் களமிறங்குவார்கள்.

    3 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 19 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்த முறை குறைந்தது 25 பதக்கங்கள் வெல்லும் இலக்குடன் இந்திய அணி பாரிஸ் வந்துள்ளது.

    பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கர்நாடகாவிலிருந்து 3 பேர் பங்கேற்க உள்ளனர். பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ரக்ஷிதா ராஜு, துப்பாக்கி சுடுதலில் ஸ்ரீஹர்ஷா மற்றும் பவர்லிஃப்டிங்கில் சகீனா கதுன் ஆகியோர் களமிறங்குவார்கள். கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட, தற்போது உத்தரபிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் பேட்மிண்டன் நட்சத்திரம் சுஹாஸ் யாதவ்வும் போட்டிகளில் பங்கேற்க உள்ளார்.

    ×