என் மலர்
நீங்கள் தேடியது "Parthiban"
- எங்கப்பா குடிச்ச பீடியின் பெயர் ‘கவர்னர் பீடி’ என்று கலாய்த்தேன்
- வாய்ப்பை ஒதுக்கி ‘சங்கீ’தம் பாடுவதை விட, கிடைத்த வாய்ப்பை செதுக்குவதே மேல்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உலக காசநோய் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கலந்துகொண்டார். விழாவில் காசநோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
விழாவில் பேசிய இயக்குனருர் பார்த்திபன், "இந்த நிகழ்ச்சிக்காக உள்ளே நுழைந்தது முதல் தமிழ் மணந்து கொண்டே இருக்கிறது. தமிழ் பாடல்கள் கேட்பது, கலாச்சாரமிக்க விளக்கு ஏற்றுவது என தமிழ் நாட்டில் தமிழ் பண்பாட்டை பாதுகாப்பதற்காக தமிழக ஆளுநருக்கு என் மரியாதையை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
நான் தமிழில் பேசுவது ஆளுநருக்கு புரியுமா என்று கேட்டேன். ஆளுநர் தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறார். அவருக்கு புரியும். அதனால் தைரியமாக தமிழில் பேசலாம் என்று திருஞானசம்பந்தம் சார் சொன்னார். அதனால் அவருக்கு தமிழ் புத்தகங்கள் எல்லாம் கொடுத்து இருக்கிறேன்.
ஆளுநரிடம் பேசிய வகையில் அவரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது" என்று தெரிவித்தார்.
ஆளுநரை பார்த்திபன் புகழ்ந்து பேசியது இணையத்தில் விமர்சனத்துக்கு உள்ளானது. விசிக துணை பொது செயலாளர் வன்னி அரசு பார்த்திபனை விமர்சித்து பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஆளுநர் சந்திப்பு குறித்து விமர்சனங்களுக்கு நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அவரது பதிவில், "நேற்றைய ஆளுனர் சந்திப்பை (நான் எதைச் சொல்ல விரும்பினேனோ அதற்கு) சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். முதலில் தமிழில் சட்டை உடுத்திக் கொண்டேன்.
உ வே சாமிநாதையரின் 'என் சரித்திரம்' புத்தகத்தை நீட்டினேன். பேச்சின் முதல் வரியாக "தமிழின் ஆளுமை சுப்ரமணிய பாரதிக்கு என் முதல் வணக்கம்" என்று துவங்கி "தமிழக ஆளுனருக்கு மரியாதை" எனத் தொடர்ந்தேன். தமிழின் பெருமையும் தமிழக பண்பாடும் காக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே எல்லா சொற்களையும் பயன்படுத்தினேன். "பையன் ரொம்ப நல்லா படிக்கிறான் போல" என்று சொல்லும் போது ஒருவேளை அப்பையன் சரியாக படிக்காதவனாயிருந்தால் உள்ளுக்குள்ள உறுத்தும்!அப்படித்தான் தமிழ் பண்பாட்டை கவர்னர் நன்றாக பாதுகாக்கிறார் என்ற வாக்கியத்தில் உள்ள உள்குத்தையும் கவனிக்க வேண்டும்! இப்படிபட்ட தொனியில் நான் பேசுவதை கேட்ட நீதியரசர் சந்துரு ஒருமுறை "இது ஒரு வகையான positive politics " என்றார்.
பேச்சின் இடையே எங்கப்பா குடிச்ச பீடியின் பெயர் 'கவர்னர் பீடி' என்று கலாய்த்தேன் , சபை சலசலப்பை உருவாக்கி குலுங்கியது. அவர் புரியாமல் பார்த்தார் sorry to say this எனக் கூறி அதையே ஆங்கிலத்தில் கூற அவருக்கு புரிந்திருக்கும், புகைந்திருக்கும்! தொடர்ந்து எங்ப்பாவை பீடி குடிக்கிறதை நிறுத்துங்கன்னு சொன்னா"கவர்னரே பீடி குடிக்கும் போது நான் குடிச்சா என்னன்னு" கேப்பாரு என்று கேட்பாரற்று பேச காட்டாறாக சிரிப்பொலி. பீடிக்கு கவர்னர் பீடி என பெயர் வைத்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றேன். காச நோயை கூட குணப்படுத்திவிடலாம் இந்த காசுநோய் உயிர் கொல்லி என்றேன். பணக்காரன் ஏழைக்கு உதவுவதை விட, ஏழைக்கு ஏழைதான் அதிகமாக உதவுகிறான். என்பதாக கூறி "கவர்னருக்கு கொஞ்சம் தமிழ் புரியும் மேலும் தமிழை அவர் கற்று வருகிறார் என்று அவர் P A கூறினார் எனவே அவர் தமிழன் பெருமை உணர தமிழின் செழுமையை வாசிக்க புத்தகம் வழங்கினேன். தமிழ்நாட்டில் தமிழ் பண்பாட்டை காப்பதற்கு நன்றி" எனக் கூறி விடை பெற்றேன். இந்(தி)த கோட்டைக்குள் சென்று ஆனந்தமாய்
1-தமிழ்
2-தமிழ்
3-தமிழ்
என செம்மொழியில் கர்ஜித்து விட்டே வந்தேன். வாய்ப்பை ஒதுக்கி 'சங்கீ'தம் பாடுவதை விட, கிடைத்த வாய்ப்பை செதுக்குவதே மேல். இதற்கு மேல் முறையீடு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
பின்குறிப்பு:
பத்ம விருதோ, கட்டு கட்டாக காந்திகளோ- ஏன் ? ஒரு கட்டு கவர்னர் பீடியோ கூட தட்சனையாகப் பெறவில்லை. மாறாக நான் என் பணத்தையும் நேரத்தையும் செலவிட்டு அம்மாளிகையில் தமிழ் கொடியேற்றி விட்டு வந்தேன்!
ஒவ்வொருவருக்கும் சொல்லும் பாணியென்று ஒன்று உண்டு. அதனால் மட்டுமே அவரை வசைமொழியில் சங்கீ'தமாய் பாடக்கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.
- ஆளுநரின் தமிழர் விரோத மற்றும் தமிழ் பண்பாட்டு விரோதப்போக்கை அடுக்கிக்கொண்டே போகலாம்
- ஆளுநரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது என்று பார்த்திபன் பேசினார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உலக காசநோய் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கலந்துகொண்டார். விழாவில் காசநோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
விழாவில் பேசிய இயக்குனருர் பார்த்திபன், "இந்த நிகழ்ச்சிக்காக உள்ளே நுழைந்தது முதல் தமிழ் மணந்து கொண்டே இருக்கிறது. தமிழ் பாடல்கள் கேட்பது, கலாச்சாரமிக்க விளக்கு ஏற்றுவது என தமிழ் நாட்டில் தமிழ் பண்பாட்டை பாதுகாப்பதற்காக தமிழக ஆளுநருக்கு என் மரியாதையை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
நான் தமிழில் பேசுவது ஆளுநருக்கு புரியுமா என்று கேட்டேன். ஆளுநர் தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறார். அவருக்கு புரியும். அதனால் தைரியமாக தமிழில் பேசலாம் என்று திருஞானசம்பந்தம் சார் சொன்னார். அதனால் அவருக்கு தமிழ் புத்தகங்கள் எல்லாம் கொடுத்து இருக்கிறேன்.
ஆளுநரிடம் பேசிய வகையில் அவரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது" என்று தெரிவித்தார்.
கவர்னரை புகழ்ந்த பார்த்திபனுக்கு வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.
அவரது பதிவில், "பெருமதிப்புக்குரிய இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் பார்த்திபன் அவர்களுக்கு வணக்கம்.
திரைத்துறையில் தங்களுக்கென புதிய_பாதை அமைத்து வெற்றி பெற்றவர். வசனங்களிலும் உரையாடலிலும் சமூக அக்கறையோடும் தமிழ் பண்பாட்டை காக்கும் பொறுப்புணர்வோடும் செயல்பட்டவர்.
அந்த ஒத்தசெருப்பு ஒன்றே போதும் தங்களுடையை தனித்துவத்துக்கும் பண்பாட்டுக்கும் சான்று.
மிகுந்த நம்பிக்கையொளியோடு தமிழ்நாட்டு மக்களை ஈர்த்தவர். ஆனால், நேற்றைய ஆளுனர் மாளிகை விழாவில் பங்கேற்று ஆற்றிய உரை அந்த நம்பிக்கையை நொறுக்கி விட்டது.
ஆளுனர் தமிழ் பண்பாட்டை அழகாக பாதுகாக்கிறாரா? அல்லது இழிவு படுத்துகிறாரா? இதே ஆளுனர் மாளிகையில் பல நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில்லை. அதை திட்டமிட்டே அவமானப்படுத்துகிறார். கடந்த சட்டப்பேரவையிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போதே அவமதித்து வெளியேறியவர் திரு.ரவி அவர்கள்.
இது தான் தமிழ் பண்பாட்டை பாதுகாக்கும் அழகா? அதே போல,"குழந்தை திருமணம் நல்லது.
நானும் கூட குழந்தை திருமணம் செய்தவன் தான்" என கடந்த கடந்த மார்ச் 12,2023 அன்று பெருமையோடு பிதற்றினார். இது தமிழ் பண்பாடா?
அதே போல, கடந்த அக்டோபர் 4,2023 அன்று சிதம்பரத்தில் தலித்துகளுக்கு பூணூல் போடும் விழாவை நடத்தினார். சனாதனத்துக்கு எதிராக புரட்சியாளர் அம்பேத்கர் வழியில் செயல்படுவோரை நயவஞ்சகமாக அதிகாரத்தின் மூலமாக ஏமாற்றி பூணூல் அணிவிப்பது தமிழ் பண்பாடா?
தமிழ்நாடு என்பதை தமிழகம் என மாற்றி அறிவித்தாரே இது தமிழ்நாட்டு பண்பாடா? இப்படி ஆளுனரின் தமிழர் விரோதப்போக்கையும் தமிழ் பண்பாட்டு விரோதப்போக்கையும் ஆதாரங்களுடன் அடுக்கிக்கொண்டே போகலாம். தமிழ்நாட்டின் மீதும் தமிழ் மக்கள் மீதும் வெறுப்பை உமிழ்ந்து வரும் ஆளுனர் ரவி போன்றோரை புகழ்வதற்கு தங்களுக்கு உரிமை உண்டு.
ஆனால்,தமிழ் பண்பாட்டை அழித்தொழிக்க முயற்சிக்கும் ஆளுனருக்கு தங்களைப்போன்ற
புகழ் பெற்ற ஆளுமைகள் பயன்படுவது தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகமில்லையா?" என்று பதிவிட்டுள்ளார்.
- இந்த நிகழ்ச்சிக்காக உள்ளே நுழைந்தது முதல் தமிழ் மணந்து கொண்டே இருக்கிறது.
- ஆளுநரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உலக காசநோய் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கலந்துகொண்டார். விழாவில் காசநோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
விழாவில் இயக்குனருர் பார்த்திபன் பேசியதாவது:-
இந்த நிகழ்ச்சிக்காக உள்ளே நுழைந்தது முதல் தமிழ் மணந்து கொண்டே இருக்கிறது. தமிழ் பாடல்கள் கேட்பது, கலாச்சாரமிக்க விளக்கு ஏற்றுவது என தமிழ் நாட்டில் தமிழ் பண்பாட்டை பாதுகாப்பதற்காக தமிழக ஆளுநருக்கு என் மரியாதையை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
நான் தமிழில் பேசுவது ஆளுநருக்கு புரியுமா என்று கேட்டேன்.
ஆளுநர் தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறார். அவருக்கு புரியும். அதனால் தைரியமாக தமிழில் பேசலாம் என்று திருஞானசம்பந்தம் சார் சொன்னார்.
அதனால் அவருக்கு தமிழ் புத்தகங்கள் எல்லாம் கொடுத்து இருக்கிறேன்.
ஆளுநரிடம் பேசிய வகையில் அவரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது. காதல் அப்படிதான்.
என் முதல் புத்தகம் கிறுக்கல்கள். என்னுடைய அடுத்த புத்தகம் வழிநெடுக காதல் பூக்கும். அடிக்கடி ஒவ்வொரு மொமெண்ட்லும் ஒரு காதல் மலரும்.
அப்படி எனக்கு அவர் மீது காதல் மலர்ந்தது. இது தொடரணும். இன்னும் அவர் செய்யும் நிறைய நல்ல விஷயங்களுக்கு நானும் உடந்தையாக கூட இருக்க வேண்டும் என்று மகிழ்ச்சியாக இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பார்த்திபன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'.
- இப்படம் தமிழக முதல்வர் உள்பட பலரின் பாராட்டுக்களை பெற்றது.
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் 'ஒத்த செருப்பு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்றது. இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இரவின் நிழல்
'இரவின் நிழல்' திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இப்படத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், திரைப்பிரபலங்கள் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துனர்.

பார்த்திபன்
இந்நிலையில் இப்படம் ஓடிடியில் வெளியாக தாமதம் ஏற்பட்டதால் இது குறித்து பார்த்திபன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மன்னிக்க நானும் ஆவலுடனே காத்திருக்கிறேன், but some technical issues it's taking time-ன்னு Amazon-ல சொல்றாங்களாம். மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்திக் கொண்டு தெரிவிக்கிறேன். அதுவரை பொறுத்தருள்க திரையரங்கில் நீங்கள் எனக்களித்த வரவேற்பே என்னைத் திக்குமுக்காட வைத்தது. நான் பெரிதும் மதிக்கும் நீங்கள் ஒடிடி-யில் வர காத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளித்தாலும், தாமதமாவதற்கு மீண்டும் ஒரு முறை மன்னிப்புக் கேட்டு, ஓடிடியில் வருகையில் பேராதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
- பார்த்திபன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'.
- இப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் 'ஒத்த செருப்பு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்றது. இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இரவின் நிழல்
'இரவின் நிழல்' திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இப்படத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், திரைப்பிரபலங்கள் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இரவின் நிழல்
தொடர்ந்து இப்படம் ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் என பார்த்திபன் தெரிவித்திருந்ததையடுத்து படம் வெளியாக தாமதம் ஏற்பட்டதால் மன்னிப்புக் கேட்டு பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்நிலையில், 'இரவின் நிழல்' அடுத்த வாரம் ஓடிடியில் வெளியாகும் என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இரவின் நிழல்
இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "அமேசானில் இன்று முதல்'பொன்னியின் செல்வன்'எனவே,வரும் வாரம் வருமாம் 'இரவின் நிழல்'-செய்தி பெருமழையில் தேங்கிவிடுகிறது சிறு தொழில் செய்வோரின் வியாபாரம். அன்றைய உணவிற்கு அன்றன்று உழைக்கும் மக்கள் நிலையே கவலைக்கிடம்.

இரவின் நிழல்
இடர் காலங்களில் ஒருவருக்கொருவர் கடுகளவு உதவுவதும் பெருங்கொடை! பெருங்கொடை!குடையாக விரியும் அரசின் உதவிகள்,அடுத்த சீசனில் மழைக்கும்முன் இடும் கூடுதல் திட்டமிடலால் மக்கள் நலம் கூடும். மழைசாரல் பட சூடான தேனீரோடு துவங்குவோம் இந்நாளை!" என்று பதிவிட்டுள்ளார்.
அமேசானில் இன்று முதல்'பொன்னியின் செல்வன்'எனவே,வரும் வாரம் வருமாம்
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 4, 2022
'இரவின் நிழல்'-செய்தி
பெருமழையில் தேங்கிவிடுகிறது சிறு தொழில் செய்வோரின் வியாபாரம்.
அன்றைய உணவிற்கு அன்றன்று உழைக்கும் மக்கள் நிலையே கவலைக்கிடம்.இடர் காலங்களில் ஒருவருக்கொருவர் கடுகளவு உதவுவதும் பெருங்கொடை!conti
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் கமல்ஹாசன்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு இன்று 68-வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி இன்று மக்கள் நீதிமய்யம் கட்சியினர் தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கமல்ஹாசன்
இவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பார்த்திபன், கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில், "கலைகளில் மரணமே இல்லாதவனின் ஜனன நாள் வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

பார்த்திபன் - கமல்ஹாசன்
மேலும், "நீங்க படிக்க நான் சில புத்தகம் தருவதிலிருந்தே நீங்க புரிஞ்சிக்கலாம்,நான் இன்னும் உங்களை முழுசா படிச்சி முடிக்கலன்னு! சொல்லிக் கொடுத்தேன். அள்ளிக்கொடுத்தார் அன்பை!" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
கலைகளில் மரணமே இல்லாதவனின் ஜனன நாள் வாழ்த்துகள்! pic.twitter.com/iA2cvSPWhU
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 6, 2022
- பார்த்திபன் இயக்கத்தில் 'இரவின் நிழல்' திரைப்படம் அண்மையில் வெளியானது.
- நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் 'ஒத்த செருப்பு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்றது. இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இரவின் நிழல்
'இரவின் நிழல்' திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இப்படத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், திரைப்பிரபலங்கள் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து 'இரவின் நிழல்' திரைப்படம் கடந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் என பார்த்திபன் தெரிவித்திருந்தார். ஆனால் வெளியாகவில்லை. இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "அமேசானில் இன்று முதல்'பொன்னியின் செல்வன்'எனவே,வரும் வாரம் வருமாம் 'இரவின் நிழல்'-செய்தி" என்று பதிவிட்டிருந்தார்.

இரவின் நிழல் போஸ்டர்
இந்நிலையில் 'இரவின் நிழல்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளதாக பார்த்திபன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மகிழ்ச்சியை கூட… அறிவித்து அனுபவிக்க முடியவில்லை. அமேசானில் 'இரவின் நிழல்' எனக்கேத் தெரியாமல்! ப்ளீஸ் நேரம் ஒதுக்கி முழுமையாய் பாருங்கள்(single shot) ஆதரவை தர வேண்டுகிறேன்! நன்றியுடன்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.
மகிழ்ச்சியை கூட…
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 12, 2022
அறிவித்து அனுபவிக்க முடியவில்லை.
அமேசானில் 'இரவின் நிழல்' எனக்கேத் தெரியாமல்!
Please
நேரம் ஒதுக்கி முழுமையாய் பாருங்கள்(single shot)
ஆதரவை தர வேண்டுகிறேன்!
நன்றியுடன் pic.twitter.com/aX02ySAJNb
- 'மோனிஷா என் மோனலிசா' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மும்தாஜ்.
- இவர் 23 வருடங்களுக்கு முன்பு நடிகர் பார்த்திபன் தனது கஷ்டத்திற்காக கொடுத்த கடனை திருப்பி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான 'மோனிஷா என் மோனலிசா' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மும்தாஜ். தொடர்ந்து, மலபார் போலீஸ், குஷி, சாக்லேட் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றார்.
ஒரு கட்டத்தில் திரையுலகில் இருந்து விலகி இருந்த மும்தாஜ், கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு குறைவான வாக்குகளுடன் வெளியேறினார். இந்நிலையில், நடிகை மும்தாஜ் 23 வருடங்களுக்கு முன்பு நடிகர் பார்த்திபன் தனது கஷ்டத்திற்காக கொடுத்த கடனை திருப்பி கொடுத்துள்ளார்.

மும்தாஜ்
மேலும், "நான் பிரபலமாக இல்லாத போது சரியான நேரத்தில் செய்த உதவிக்கு நன்றி. பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்ற எண்ணம் எவ்வளவோ நல்லதாக இருந்தாலும், அதை செய்வதில் தவறிழைத்து, காலப்போக்கில் மறந்துவிட்டேன். பார்த்திபன் சார், இந்த சினிமாத் துறையில் நான் கண்ட மிகச் சில கண்ணியமான மனிதர்களில் நீங்களும் ஒருவர். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இறைவன் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் தந்தருள்வானாக" என்று தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து நடிகர் பார்த்திபன் தனது இணையப் பக்கத்தில், "கற்றது:பிரதிபலன் நோக்காமல் இயன்றதை செய்தல் மற்றது:செய்த உதவியை நோகாமல் மறந்துவிடல். திருப்பித் தருவது-திருப்தி தருவது என்பதை உணர்த்தியவரின் இப்பதிவில் 'நாளை'என்பதன் தத்துவத்தை உணர்த்துகிறார்.தொடர்ந்தால் யாவும் ஒருவேளை முடிந்தால் சாவும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்பதை ஆழமாக சொல்கிறார்.

பார்த்திபன்
மனிதர்களை நேசிப்பதோடு வாசிக்கவும் செய்பவன் நான் என்பதால் எனக்கு தெரிவதை, தெளிவதை யாவருக்கும் சொல்ல விரும்புகிறேன்! தினமும் ஒரு நல்லது செய்ய முயற்சிக்கிறேன். இன்றும் செய்தேன். அதையெல்லாம் நான் சொல்வதில்லை. அவையாவும் அகத்தின் வாக்கம் கிளீனர். பெருமையேத் தவிற, தற்பெருமையோ தம்பட்டமோ அல்ல அப்படியிருக்க இதில்… நான்/நாம் கற்றுக்கொள்ளும் மனித வாழ்வின் உன்னதமே!" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.
>1/2/தெளிவதை யாவருக்கும் சொல்ல விரும்புகிறேன்!தினமும் ஒரு நல்லது செய்ய முயற்சிக்கிறேன்.இன்றும் செய்தேன்.அதையெல்லாம் நான் சொல்வதில்லை.அவையாவும் அகத்தின் vacuum cleaner.பெருமையேத் தவிற, தற்பெருமையோ தம்பட்டமோ அல்ல அப்படியிருக்க இதில்…நான்/நாம் கற்றுக்கொள்ளும் மனித வாழ்வின் உன்னதமே! pic.twitter.com/O9Iy7tD3Uq
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 28, 2022
- புதிய பாதை படத்தில் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் பார்த்திபன்.
- இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.
1989-ம் ஆண்டு புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் பார்த்திபன். அதன்பின்னர் பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, ஹவுஸ் ஃபுல், கதை திரைக்கதை வசனம் உள்ளிட்ட பல படங்கை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.

பார்த்திபன்
இந்நிலையில் பார்த்திபன் விமர்சனங்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது கவனிக்க வைத்துள்ளது. அதில், அரிசியில் பொறுக்கி கல் ஒதுக்கிவிட்டு சமைப்போம், அப்படி சமூக வளைத்தளங்களிலும் சில (முகம் முழுக்க அசிங்கத்தை முகமுடியாய் அணிந்தபடி) அருவருப்பான வார்த்தைகளை பிரயோகிக்கும் போது ஒதுக்கிவிடுகிறேன் நான். அவர்களுக்கு "பிடிக்கவில்லை" என்ற கருத்தை வரவேற்கிறேன். ஆனால் அதை கெட்ட வார்த்தைகளால் எழுதும்போதுதான் மனம் வலிக்கிறது. என் வளர்ச்சிக்காக, முழுமனதாக, அழகாக, கவிதையாக, வாழ்த்துவதாக எழுதும் பல நல்ல உள்ளங்கள் அதை (கேடுகெட்ட negativity) எப்படி தவிர்க்கிறீர்கள்/தவிக்கிறீர்கள் என்பதை நினைக்கவே மனம் கூசுகிறது! என்று பதிவிட்டுள்ளார்.
அரிசியில் பொறுக்கி கல் ஒதுக்கிவிட்டு சமைப்போம்,அப்படி சமூக வளைத்தளங்களிலும் சில -……… (முகம் முழுக்க அசிங்கத்தை முகமுடியாய் அணிந்தபடி)அருவருப்பான வார்த்தைகளை பிரயோகிக்கும் போது ஒதுக்கிவிடுகிறேன் நான். அவர்களுக்கு "பிடிக்கவில்லை"என்ற கருத்தை வரவேற்கிறேன்.ஆனால் அதை கெட்ட conti… pic.twitter.com/lWUPLUav3H
— Radhakrishnan Parthiban (@rparthiepan) December 4, 2022
- பார்த்திபன் இயக்கி நடித்த திரைப்படம் ‘இரவின் நிழல்’.
- இப்படம் பலரின் பாராட்டுகளை பெற்றது.
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் 'ஒத்த செருப்பு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்றது. இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இரவின் நிழல்
'இரவின் நிழல்' திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இப்படத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், திரைப்பிரபலங்கள் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். சமீபத்தில் இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இரவின் நிழல்
இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை நடிகர் பார்த்திபன் தனது யூ-டியூபில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
- நடிகர் ரஜினி நேற்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
- இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்தனர்.

ரஜினி
இந்நிலையில், ரஜினிக்கு நடிகர் பார்த்திபன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "12/12-க்குள் பிறந்த நாளை அடங்கிவிடலாம்.ஆனால் வாழ்த்துவது 22,23,24,25,26 ,27,28,29 என 100 வரை தொடர்ந்துக் கொண்டேயிருக்கும்.அவரது இடத்தை நெருங்கலாம்,தொடலாம் தாண்டலாம் ஆனால் அவரது தன்னடக்கத்தை,தன்னைத்தாழ்த்தி கொண்டு,தகுதியுள்ளோரை வாழ்த்தும் தனித்தன்மையை யாரும் தொடக்கூட முடியாது.

பார்த்திபன் - ரஜினி
ரஜினி சாரை ரசிப்பவர்கள் (ஜப்பான் உட்பட)பல கோடி இருக்கலாம் ஆனால்,அவரே ரசிகராக மாறும்போதும், அடுத்தவரின் படைப்பை பாராட்டும் போதும் குழந்தையாக மாறி குதூகலமாகிவிடுவதில் அவருக்கு இணை அவரே. சிம்ம ராசி, மகர லக்னம், திருவோண நட்சத்திரம் என்பது அவரின் ஜாதகம்.ஆனால் சினிமா ராசி, ரசிக luckனம், திரையுலக உச்ச நட்சத்திரம் என்பதே அவருக்கு சாதகம்!!! வாழ்த்துகள் - நேற்று ஒருநாள் மட்டுமல்ல!" என்று பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1/3
— Radhakrishnan Parthiban (@rparthiepan) December 13, 2022
சிம்ம ராசி,
மகர லக்னம்,
திருவோண நட்சத்திரம்
என்பது அவரின் ஜாதகம்.ஆனால்
சினிமா ராசி,
ரசிக luckனம்,
திரையுலக உச்ச நட்சத்திரம்
என்பதே அவருக்கு சாதகம்!!!
வாழ்த்துகள் - நேற்று ஒருநாள் மட்டுமல்ல! pic.twitter.com/2JzqZ3iHRA
- சென்னை 20-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த வியாழக்கிழமை நிறைவுற்றது.
- இதில் இரவின் நிழல் திரைப்படத்திற்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டன.
சென்னை 20-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 15-ம் தேதி தொடங்கியது. 51 நாடுகளில் இருந்து 102 படங்கள் திரையிடப்பட்ட இந்த விழாவானது வியாழக்கிழமை நிறைவு பெற்றது. இதில் நடிகர் பார்த்திபன் இயக்கிய'இரவின் நிழல்' திரைப்படத்திற்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை 20-வது சர்வதேச திரைப்பட விழா
இந்நிலையில் விருது குறித்து பார்த்திபன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "எத்தனை குழந்தைங்க? இத்தனை குழந்தைங்க "no no! பெரிய குழந்தைங்க மட்டும் தான் கணக்கு. சின்னக் குழந்தைங்க,நேத்து பொறந்த குழந்தையெல்லாம் கணக்கில் சேத்துக்க முடியாது" குழந்தைன்னா எல்லாமே குழந்தை தானே?

சென்னை 20-வது சர்வதேச திரைப்பட விழா
சட்டையில கூட மேல் பட்டனை மட்டுந்தான் போடுவேன். நடு பட்டனையும் கீழ் பட்டனையும் போடமாட்டேன் என அடம் பிடிப்பவரின் மனநிலை என்னவாக இருக்கக் கூடும்? Chennai international film festival-விருதை நாம் மதிக்கிறோமா? இல்லையா? சென்னையில் பொழப்பை நடத்தி,அதல் வரும் ஃபூவா(Bhuvah)வை தின்று கொழுத்து, தமிழக அரசு அங்கீகரித்து வழங்கும் உதவியில் 20 வருடங்களாக கௌரவமாக நடத்தும் விழாவில் வழங்கும் விருதினை சிறிதென கேவலமாக நினைக்கிறோமா?

சென்னை 20-வது சர்வதேச திரைப்பட விழா
Oscars, golden globe,அல்லாத ஆயிரம் international விருது இங்குண்டு! International விருதுகளையும்,inter அல்லாத national விருதுகளையும்,சான்றோர்கள் ஒரு அட்டையில் ஒட்டித்தரும் சான்றிதழ்களையும், ஏன் ரசிகர்களின் கைதட்டல்களையும் கூட… பெற்ற தாயாய், பெற்ற பிள்ளையாய், பெற்ற பெருமையாய் மதிப்பவன் நான்.
ஒவ்வொரு வருடமும் festival படங்களை முடிந்தவரை இம்முறை'Triangle of sadness'அதில் "what u doing?" "Selling shit"என்பான் பேசி கெட்டவன். கேட்டவன் அதிர்ந்து "what?" "Fertilisers"எனச் சிரிப்பான். எதையும் விற்று பிழைக்கலாம்.அதில் எதிர்மறை எண்ணங்களும் அடங்கும்! Negativity-ஐ nativity ஆக கொண்டவர்களுக்கு அதுவே வினையாற்றும்!" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
"எத்தனை குழந்தைங்க?"
— Radhakrishnan Parthiban (@rparthiepan) December 24, 2022
"இத்தனை குழந்தைங்க"
"no no! பெரிய குழந்தைங்க மட்டும் தான் கணக்கு.சின்னக் குழந்தைங்க,நேத்து பொறந்த குழந்தையெல்லாம் கணக்கில் சேத்துக்க முடியாது"
குழந்தைன்னா எல்லாமே குழந்தை தானே?
சட்டையில கூட மேல் பட்டனை மட்டுந்தான் போடுவேன்.நடு பட்டனையும் கீழ் பட்டனையும்>> pic.twitter.com/gdwDsh8YH0